அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 28 ஏப்ரல், 2010

தப்லீக் தஃலீம் தொகுப்பின் அபத்தங்கள்:

பாவங்களைப் பார்த்த பெரியார்:
கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த நல்லோர்களைப் பற்றி பொய்களையும் மிகையான புகழுரைகளையும் தப்லீகின் தஃலீம் தொகுப்பில் ஏராளமான நாம் காண முடிகிறது.  இந்த வகையிலமைந்த பொய் ஒன்றைக் காண்போம்.
உளூ செய்பவர் கழுவப்பட வேண்டிய உறுப்புக்களை கழுவும் போது அவ்வுறுப்புகளால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன.  நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதால் உண்மை முஸ்லிம்களுக்கு இதில் எந்த சந்தேகமும் ஏற்படப் போலதில்லை.  இது பற்றி வந்துள்ள ஹதீஸ்களை விளக்கவுரை ஏதுமின்றி மொழிமாற்றம் செய்தாலே உளூவின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
    ஸகரிய்யா சாஹிப் இது பறிற வந்துள்ள ஒரு ஹதீஸை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை என்ற பெயரில் கரையளந்திருக்கிறார்.
    'கஷ்ப் என்னும் அகப்பார்வை உடைய பெரியோர்களுக்கு உறுப்புகளிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படுகிறது.  இன்ôம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய சம்பவம் பிரபலமானதாகும்.  உளூச்செய்யும் போது அதன் மூலம் எந்தப்பாவம் கழுவப்பபடுகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.'
                    பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம்(27)
    உளூவின் சிறப்பு பற்றி விளக்குவதற்கு இந்த இடத்தில் இந்தக் கதை அவசியமில்லாமலிருந்தும் வûக்கட்டாயமாக இந்த இடத்தில் நுழைக்கப்படுகிறது.  இதை நாம் பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க வேண்டியது அவசியம்.
    ஸகரிய்யா சாஹிப் கூறுவது போல் கஷ்பு எனும் அகப்பார்வை என்று ஒன்று உண்டா:


இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியவர்:
பெரியார்கள் மேல் அளவுக்கதிமான மதிப்பையும், மலைப்பையும் ஏற்படுத்தும் மற்றொரு கதையைப் பாருங்கள்.
முஹம்மதுப்னு ஸிமாஆ (ரஹ்) என்ற பெரியார் சிறந்த ஆலிமாக இருந்தார்கள்.  இவர் இமாம் அபூயூசுப் (ரஹ்), இன்ôம் முஹம்மது (ரஹ்) ஆகிய இரு இமாம்களின் மாணவராவார்.  அன்னார் தங்களுடைய நூற்றி முப்பதாவது வயதில் காலமாகும் வரை ஒவ்வொரு நாளும் இரு நூறு ரக்அத்கள் நபில் கூறுகிறார்கள்:   நாற்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து வந்திருக்கிறேன் ஒரே நேரத்தைத் தவிர                 பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம் (86)

கப்ரில் தொழுத பெரியார்:
தாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன்.  அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துஹ்ôரம் ஏற்பட்டது.  அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன்.  அருகிலிருந்தவர்கிளடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன்.  அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.
பார்க்க தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம்(129)
இரவில் உறங்காத பெரியார்:
அபூ இதாப் ஸல்மீ (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இúந்தார்கள் பகல் முழுவதும் நோன்பு வைத்திருந்தார்கள்.                                பக்கம்; (132)
இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்அத்கள் நபில் தொழுபவர்களாக இருந்தார்கள்.            பக்கம்(132)
இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி தெரியும்,  அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன.  அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாறும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள்.                                                                பக்கம்(130)
பணக்காரராகும் வழி என்ன?
அல்லாஹ்வுடைய தனித்தன்மையைப் பெரியார்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதன்ôகவும், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தில் மற்றவர்களையும் பங்காளிகளாக்கும் விதமாகவும் பல்வேறு கப்ஸாக்களை தப்லீக்கின் தஃலீம் தொகுப்பில் நாம் காணமுடிகின்றது.  இந்த வகையில் அமைந்த கப்ஸா ஒன்றைக் காணுங்கள்.
ஹஜ்ரத் ஷகீக் பல்கீ (ரஹ்) என்பவர்கள் பிரபலமான சூபியும் பெரியாருமாவார்கள்.  அவர்கள் கூறியதாவது:  நாம் ஐந்து விஷயங்களைகத் தேடினோம்.  அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக் கொண்டோம்.
இரணத்தில் பரக்கத்து, லுஹாத் தொழுகையில் கிடைத்தது.
கப்ருக்கு ஒளி, தஹஜ்ஜீத் தொழுகையில் கிடைத்தது.
முன்னகர் நகீரின் கேள்விக்கு பதில், கிராஅத்தில் கிடைத்தது,
சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக்கடப்பது நோன்பிலும் சதகாவிலும் கிடைத்தது.
அர்ஷீடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம்(37)

சொர்க்கத்தில் தொழுகையா?
    ஹஜ்ரத் முஜத்திக் அல்பதானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது.  அவர்களுடைய கலீபாக்களில் ஒருவரான மௌலான அப்துல் வாஹித் லாஹீர் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா?  என்று கவலையுடன் கேட்டார்கள்.  அப்போழுது அங்கிருந்த ஒருவர் ஹஜ்ரத் சொர்க்கத்தில் தொழுகை எவ்வாறு இருக்க முடியும்? அது அமல்களுக்குப் பிரதி பலன்கள் வக்ஷ்ங்கப்படும் இடமாயிற்றே. அமல் செய்யும் இடமல்லவே என்று கூறயவுடன்,ஆஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள்.   பிறகு சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்று கூறினார்கள்.
        இப்படிப்பட்ட நல்லடியார்களினால்தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது உண்மையில் வாழ்க்கையின் இன்பத்தைச் சம்பாதித்துக் கொள்பவர்கள் இப்படிப்பட்ட பெரியார்கள் தான்.
                    பார்க்க தப்லீக் தஃலீம் தொகுப்பு பக்கம் (45)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites