அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 9 ஜூலை, 2010

`ஸ்டெம் செல்’

ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.
இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.
தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.
இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites