அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 4 டிசம்பர், 2010

"கல்வி கற்பது நிச்சயம், அது முஸ்லிம்களின் லட்சியம்''


k.ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்.
மற்ற மதங்களை பின்பற்றுவர்களை விட முஸ்லிம்கள் கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு கல்வி அறிவே கிடையாது, இவர்கள் படிப்பிற்கு முன்னுரிமை தர மாட்டார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதிலும், பணம் சம்பாதிப்பதிலும் தான் ஆர்வமாக உள்ளார்கள் என்று நினைப்பது உண்மையாகத்தான் இருக்கிறது.
நம் முஸ்லிம் சமுதாய மக்கள் தன்னுடைய பெயரைக் கூட எழுதத் தெரியாத அளவிற்கு கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள். மேலும் நம் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், போது மருத்துவரிடம் சென்று காண்பிக்கிறோம்.  அவர் என்ன மருந்தை எழுதிக் கொடுக்கிறார், எந்த மருந்தை எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று கூட தெரியதாவர்கள் முஸ்லிம்களில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்கள் தரக் கூடிய சேர்க்கை படித்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது கூட தெரியாத பெற்றோர்கள் ஏராளம். இதைப்போன்று மணியார்டர் படிவம், வங்கி படிவம் போன்றவற்றை பெரும்பாலான முஸ்லிம்களுக்கு பூர்த்தி செய்யத் தெரியாத அவல நிலைதான் தொடர்கிறது. இதற்கு காரணம் படிப்பறிவின்னை, அதைப் பற்றி விழிப்புர்ணவு இல்லாமை.
நாம் மறுமை வெற்றிபெற மார்க்கத்தைப் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்குக்கூட இந்த உலகக்கல்வி அவசியமாகிறது. ஏதாவது ஒரு மொழி தெரிந்திருந்தால்தான் நாம் எதையும் தெரிந்து கொள்ள முடியும். எனவே மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காவது நாம் உலகக்கல்வியை படிக்க முன்வரவேண்டும்.
"உங்களுக்கு முன்னர் முன்னுதார ணங்கள் சென்றுள்ளன. "எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக் கருதியோரின் முடிவு எப்படி இருந்தது' என்பதைச் சிந்தியுங்கள்! (அல்குர்ஆன் 3:137)
இது மட்டுமல்லாமல் இது போன்ற ஏராளமான வசனங்களில் பூமியில் பயணம் செய்து அவனுடைய அத்தாட்சிகளை சுற்றி பார்த்து சிந்திக்குமாறு கூறுகிறான்.
இறைவனுடைய அத்தாட்சிகளையும், அவனுடைய ஒவ்வொரு அற்புதப் படைப்புகளையும் சிந்திப்பதற்கும், ஆராய்வதற்கும் உலகக்கல்வி தேவைப்படுகிறது. இந்த உலகக் கல்வி இல்லாததின் காரணத்தினால் தான் இறைவனுடைய வல்லமைகளையும், அத்தாட்சிகளையும் சிந்திக்காமல் இருக்கிறோம். இன்னும் ஆட்சி, அதிகாரத்திற்கும் கல்வி தேவையென்று  அல்லாஹ் கூறியுள்ளான்.
"தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடல் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார்.'' (அல்குர்ஆன் 2:247)
ஆட்சி செய்வதற்கு கல்வி அவசியம் என்பதால்தான் தாலூத் என்ற நல்லடியாருக்கு ஆட்சியதிகாரத்தை தந்தான். ஆட்சிக்கு அல்லாஹ் செல்வத்தை பார்க்கவில்லை, கல்வியை தான் பார்கிறான் என்பது இந்த வசனத்தின் மூலம் தெரிகிறது.
இன்னும் அல்லாஹ் கூறுகிறான் இஸ்லாத்தை கல்வியாளர்கள் அறிந்து கொள்வார்கள் என்று
(முஹம்மதே!) "உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது. (அல்குர்ஆன் 34:6)
கல்வி வழங்கப்பட்டவர்கள் இஸ்லாத்தை முழுமையாக விளங்கி கொள்வார்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறகிறான். இதை நாம் கண்கூடாக பார்கிறோம். எத்தனையோ மாற்று மத சகோதரர்கள் குர்ஆனை சிந்தித்து பார்த்து இன்னும் இறைவனுடைய படைப்பகளையும் சிந்தித்து எது உண்மை என விளங்கி இஸ்லாத்தை ஏராளமானவர்கள் தழுவுவதைப்பார்கிறோம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் உலகக் கல்வியும், படிப்பறிவும் தான். கல்வியறிவால் தான் அவர்கள் அனைத்தையும் சிந்திக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் கல்வியை வலியுறுத்தி ஏராளமான வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன. னவே கல்வியை கற்பதற்க்கு முயற்சி செய்யவேண்டும்.
குழந்தைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்,
குழந்தைகள் தளர்ந்தாலும் படிப்பு விஷயத்தில் பெற்றோர்கள்  தம் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். உன்னால் படிக்க முடியும். நீ படி, நீ ஒரு டாக்கடராக வேண்டும், கலெக்ட்ராக வேண்டும் நீ நமது சமுதாயத்தில் சிறந்தவனாக வர வேண்டும் என்று ஆர்வமூட்ட வேண்டும். இப்படி ஒவ்வொரு பெற்றோரும் நடந்து கொண்டால் வருங்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் முழுமையான படிப்பறிவு பெற்ற சமுதாயமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
ஆண், பெண் என பாரபட்சம் பார்க்க கூடாது.
படிப்பு விஷயத்தில் ஆண், பெண் என்று பாரபட்சம் காட்டாமல் படிக்க வைக்க வேண்டும். ஆனால் இதற்கு மாற்றமாக நம் சமுதாயத்தினர் பெண்களை படிக்க வைப்பதில்லை. "கல்யாணம் செய்து கணவன் வீட்டுக்கு போகும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறுகிறார்கள். கல்யாணம் ஆனாலும் படிப்பு தேவை. படிப்பு இருந்தால்தான் கணவன் குடும்பத்தை சீராக நடத்தி செல்வாள்.இன்னும் தன் கணவன் தவறு செய்யும் சரியானதை கூறி திருத்துவாள்.தம் குழந்தை படிப்பதற்கும் படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் உதவுவாள்.
மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் உண்டு.
1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத்தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கைகொண்டார். 
2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.
3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் ; அபூமூசா அல்அஷ்அரீ (ரலிலி), நூல்: புகாரி (97)
அடிமையாக இருப்பவர்களுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஊக்கமளித்துள்ளார்கள் என்றால் நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆர்வம் அவசியம்:
படிக்க வேண்டுமென வீட்டில் அனுப்பினாலும் படிப்பதற்கு நாம் முயற்சி செய்வதில்லை. படிப்பு வரவேண்டுமென்றால் முதலில் நாம் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இருக்கவேண்டும். நபித்தோழர்கள் நபிகளார் காலத்தில் மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வபட்டு முறைவைத்து கற்று வந்துள்ளார்கள்.
நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூஉமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்தோம். - அது மதீனாவின் மேடான கிராமப் பகதிகளில் ஒன்றாகும்-  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்றுகொண்டிருந்தோம்.  அவர் ஒருநாள்  செல்வார்; நான் ஒருநாள் செல்வேன்.  நான் சென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து)விடுவேன்.  அது போன்று அவர் சென்றுவரும்போதும் அவ்வாறே செய்வார். 
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் :புகாரி (89)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். (ஒருநாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "அபூ அப்திர்ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரைகூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) அவர்கள் "உங்களைச் சலிலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு  அறிவுரை கூறிவந்தார்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூவாயில் ஷகீக் பின் சலமா, நூல் :புகாரி (70)
ஆண்கள் மட்டும் இவ்வாறு கல்வி கற்பதில் ஆர்வமாக இருக்கவில்லை, பெண்களும் நபிகளாரிடம் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.  
 (ஒருசமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், "(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களி டம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக் காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே  அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர் களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள். ''உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ  அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்'' என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி,  "இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?' என்று கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள் "(ஆம்) இரண்டு, குழந்தை களை இழந்துவிட்டாலும்தான்'' என்றும் அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் :புகாரி(101)
கல்வி வளர்ச்சிக்கு இறைவனிடம் கேட்க வேண்டும்
கல்வி வரவில்லையென்று தளர்ந்து விடக் கூடாது. சிலருக்கு கல்வி வரவில்லை என்று மனம் தளர்ந்து தற்கொலை செய்யக்கூடியவர்களையும் பார்க்கிறோம். ஆனால் இறைவன் கல்வி ஞானத்தை தன்னிடம் கேட்கும் படி கூறுகிறான்,
"என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக (அல்குர்ஆன்  20;114)
இதைப் போன்று மூஸா நபி அவர்களும் கல்வியை இறைவனிடம் கேட்டதையும் குறிப்பிடுகின்றான்.
 "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார்.  எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அல்குர்ஆன் 20: 25,26,27)
கல்வி கற்க ஆசைப்படவேண்டும்
கல்வி விஷயத்திற்கு பொறாமைபட வேண்டும். அது அல்லாமல் மற்ற விஷயத்திற்கு பொறாமைபட்டுக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
7528 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரண்டு விஷயங்கüல் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், "இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!'' என்று (ஆதங்கத் துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான்.  அதை  அவர் உரிய வழியில் செலவிடுகிறார்.
(இதைக் காணும்) மற்றொருவர், "இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்'' என்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ர-),நூல் :புகாரி (7528)
நம் மார்க்கத்தில் பொறாமை என்பது கிடையாது. ஆனால் ஒருவருக்கு இறைவன் கல்வியை அதன் படி அவர் செயல்படும் போது அவரைப்  போன்று நாமும் கல்வி கற்க வேண்டும். அதன் படி செயல்படவேண்டுமெனப் பொறாமைப்படலாம் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது. அப்படியென்றால் கல்விக்கு நம் மார்க்கம் எந்த அளவிற்கு முக்கியதுவம் தந்துள்ளது என்பதை சிந்துத்துப் பாருங்கள். எனவே கல்வி கற்பதில் நாமும் ஆர்வமுடன் இருந்து நம் குழந்தைகளையும் படிக்க வைத்து நல்லெழுக்கமுள்ள குழந்தைகளாகவும் அறிவாளிகளாகவும் மாற்ற முயற்சிப்போம்.


வியாழன், 2 டிசம்பர், 2010

அடையாளம் காணப்பட்ட அசத்திய வாதிகள்



கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு!
இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற வேலைகளைப் பார்த்தால் படு பயங்கரமானதாக இருக்கும். காசுக்காகவும், காழ்ப்புணர்ச்சியினாலும் எதையும் செய்யத் துணிபவர்கள் தான் இவர்கள்.
"அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 158
இது போன்று தான் இன்றைய  ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் இருக்கின்றனர். தாயத்து, தட்டு புத்தகங்களையும், மத்ஹபு புத்தகங்களையும் வைத்து விற்பனை செய்யக்கூடியவர்களும், காயிதே மில்லத்திற்குப் பிறந்த நாள் கொண்டாடி ஃபாத்திஹா ஓதி சாப்பிடக் கூடியவர்களும், வரதட்சணை திருமணங்களில் முன்னிலை வகிக்கக் கூடியவர்களும், தர்ஹா எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடக் கூடியவர்களும் தான் இன்றைக்குப் பல ஊர்களில் பெயரளவில் உள்ள ஜாக் அமைப்பின் நிர்வாகிகளாக உள்ளனர்.
இவர்கள் இந்த அமைப்பில் ஒட்டிக் கொண்டிருப்பதின் நோக்கமே மாதா மாதம் வருகின்ற சல்லிகளுக்காகத் தான். இந்த சல்லிகள் நின்று விட்டால் இவர்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
படம் காட்டி வெளிநாட்டில் பணம் பறித்து வயிறு வளர்க்கும் இந்த இயக்கத்தினர், தவ்ஹீத் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்களையெல்லாம் தங்கள் இயக்கச் சொத்து என்றும், சங்கங்கள் என்றும் அங்கு தொழுகையே நடைபெறவில்லையென்றும் நீதி மன்றங்களில் பொய்களைத் துணிந்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். இது போன்ற வேலைகளுக்காகவே இத்தகையோரை மாநில நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானை, தானே நிர்வகித்து வருவதாகவும், ஷம்சுல்லுஹா வந்து தன்னிடம் சண்டை போட்டதாகவும் கூசாமல் பொய்யெழுதி நீதிமன்றத்தில் கொடுத்தவரெல்லாம் தற்போது ஜாக்கில் மாநில நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல! 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மவ்லவி எம். ஷம்சுல்லுஹா அவர்களுக்குச் சம்பளம் கொடுத்ததாகவும், இனிமேல் சம்பளம் கிடையாது என்றும் பச்சைப் பொய்யை, ஜாக் லெட்டர் பேடில் கடிதமாக எழுதி, கையெழுத்திட்டு அந்தப் போர்ஜரி கடிதத்தை நீதிமன்றத்தில் கொடுத்தவர் தான் மாநில அமீர் எஸ். கமாலுத்தீன் மதனீ!
மேலே நாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் அவர்களே கையெழுத்திட்ட ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் பிரச்சனையில் இவர்களது மோசடிகள் அம்பலமாகி விட்டதால் அதைத் திசை திருப்புவதற்காக இவர்கள் நடத்திய பைக் எரிப்பு நாடகத்தைப் பற்றி ஏற்கனவே ஏகத்துவம் இதழில் எழுதியிருந்தோம். இந்த பைக் எரிப்பைச் செய்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று காவல்துறையில் பொய்ப் புகார் கொடுத்து, தற்போது வழக்கும் நடைபெற்று வருகின்றது. தங்களது அல்ஜன்னத் என்ற பத்திரிகையிலும் பைக்கை எரித்தது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று கூசாமல் எழுதியிருந்தார்கள்.
ஆனால் தற்போது ஜாக் சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "பைக்கை எரித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும்'' என்று கூறியுள்ளார்கள். ஆக, தங்கள் சுயநலத்திற்காக எப்படிப்பட்ட பொய்யையும் சொல்லி, யாரையும் சிறைக்கு அனுப்பத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் உதாரணம்.
உண்மை அவர்களிடம் வந்த போது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் அவர்களிடம் வந்து சேரும்.
அல்குர்ஆன் 6:5
தமக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்த யாவும் அவர்களை விட்டு மறைந்து போகும்.
அல் குர்ஆன் 6:24
"நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
அல் குர்ஆன் 9:107
"நயவஞ்சகர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.
அல்குர்ஆன் 63:1
சல்லடை ஊசியைப் பார்த்துக் கேட்டதாம், உனக்கு பின்னால் ஒரு துளையிருக்கிறதே என்று! அது போலத் தான் இன்றைய ஜாக் இயக்க நிர்வாகிகள் நம்மைப் பார்த்து செய்கின்ற விமர்சனங்களும் இருக்கின்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிரச்சினையைத் தொட்டுப் பேசியுள்ளனர். ஜாக் இயக்க நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் பண மோசடியில் நிரூபிக்கப் பட்டவர்கள். தவறான தொடர்பில் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டவர்கள். திருமணம் செய்து அபலைப் பெண்களை ஏமாற்றியவர்கள். பணத்திற்காகக் கொள்கையில் தடம் புரண்டவர்கள்.
இவையெல்லாம் சாட்சிகளுடன் அந்தந்த நேரங்களில் நிரூபிக்கப்பட்டும், உண்மை தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிப் பெருமைப்பட்ட இவர்கள் நம்மை பார்த்து விமர்சனம் செய்வது வேடிக்கையிலும் வேடிக்கையே!
(இது பற்றி ஆதாரங்களுடன் நாம் வெளியிட்ட ஐந்து சிடிக்களைக் காண்க!)
தடம் மாறும் ஜாக்
நாங்கள் தான் கொள்கைவாதிகள் என்றும், குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும்  கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை ஆட்டம் காணத் துவங்கி விட்டது. ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பு, மார்க்க விஷயத்திலும் கொள்கையிலும் கூட இவர்களை தடுமாறச் செய்துள்ளது. இவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
களியக்காவிளை விவாதம் தொடர்பாக இவர்கள் தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் இதற்குத் தெளிவான சான்றாகும். இவர்களுடைய மாநில அமீர் பேசிய சில பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு ஆதாரமாக இருக்கும் போதே, இவர்கள் கப்ரு வணங்கிகளுக்கு உதவி செய்ய மறுத்ததாக தங்களுடைய பத்திரிகைகளில் எழுதியுள்ளனர். இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இது ஒன்றே மாபெரும் சான்றாகும்.
இவர்கள் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வின் காரணமாக களியக்காவிளை சம்பவம் மட்டுமல்லாது பல நிலைகளில் கொள்கையில் தடம் புரண்டு அசத்தியத்திற்குத் துணை சென்றுள்ளனர் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்.
ஆரம்ப காலத்தில் மார்க்க விஷயங்களில் திருமறைக் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு மட்டும் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறி வந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக "உலக, மார்க்க விஷயங்களில் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்'' எனும் மார்க்கத்திற்குப் புறம்பான புதுக் கொள்கையைப் புகுத்தினார்கள்.
குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் என்று கூறி வந்தவர்கள், "ஸஹாபாக்களுடைய கருத்துக்களையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று திருமறைக் குர்ஆனிலும், நபிவழியிலும் இல்லாத ஈமானுக்கு மாற்றமான மூன்றாவது அடிப்படைக்குச் சென்றார்கள். இன்று வரை அதைத் தங்கள் பத்திரிகையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
ஆதாரப்பூர்வமான ஸஹீஹான நபிமொழிகளைத் தான் மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக இன்றைக்குப் பலவீனமான செய்திகளையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் நிலைக்குச் சென்று விட்டனர்.
தன்னுடைய உறவினர் என்பதற்காக, கொள்கையற்றவர்களை தங்களுடைய மதரஸா நிகழ்ச்சிகளில் பங்கு பெறச் செய்து "உமறுப் புலவர் கனவில் நபிகள் நாயகம் வந்தார்கள்'' என்று அவர் உளறியதையெல்லாம் ரசித்துக் கேட்ட கொள்கை வீரர்கள் தான் இவர்கள்.
அது மட்டுமல்ல! அதே பிர்தவ்சியா மதரஸா ஆண்டு விழாவில், "வந்தே மாதரம்' பாடுவதை ஆதரித்து, அதாவது இணை வைப்பை ஆதரித்து ஒருவர் பேசுகிறார். அவரை இறுதி வரை பேச வைத்து, வந்தே மாதரம் என்பது எவ்வளவு பெரிய இணை வைப்பு வரிகள் என்பதை அந்தக் கூட்டத்தைக் கேட்டவர்களுக்குக் கூட விளக்காமல் அனுப்பி வைத்த இந்தக் கொள்கைச் சிங்கங்கள் தான் சத்தியவாதிகளாம்.
குர்ஆன் அனைவருக்கும் விளங்கும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருவதால், "16 கலைகளைக் கற்றவர்கள் தான் குர்ஆனை விளங்க முடியும்'' என ஜாக்கின் மாநில அமீர், தான் என்ன பேசுகிறோம் என்று கூட அறியாமல் தனிமனித வெறுப்பில் குராபிகளை விட மோசமாகப் பேசியுள்ளார்.
இவர்கள் தனி மனிதக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தான் கொள்கையில் தடம் புரண்டுள்ளார்கள் என்பதற்கு நாம் இன்னும் பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.
ஸஹர் நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டுள்ளன. அதை நாம் நம்முடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்த வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் வெறுப்புற்ற இவர்கள் ஹதீஸை மறுக்கின்றோமே என்பதைக் கூட அறியாமல் "ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்வது குழப்பமானது'' என குராபிகளைப் போன்று அறிவித்தனர்.
பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுவது தான் நபிவழி; எனவே திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால், "திடல் தொழுகை என்று ஒரு தொழுகையே மார்க்கத்தில் கிடையாது' என்று தமிழக முதல்வரையே மிஞ்சும் அளவிற்கு தங்களின் தமிழ் மொழிப் புலமையை வெளிப்படுத்தி, திடலில் தொழ வேண்டும் என்ற சுன்னத்தை மறுத்தனர்.
பெண் வீட்டு விருந்து என்பது நபிவழித் திருமணத்தில் இல்லாத ஒன்று; எனவே பெண் வீட்டுத் திருமண விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் "பெண் வீட்டு விருந்து வைக்கக் கூடாது என ஹதீஸில் வருகிறதா?'' என்ற அபாரக் கேள்வியைக் கேட்டு இன்று ஜாக் இயக்கத்தினர் பெருவாரியாகப் பெண் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டி வருகின்றனர்.
தவ்ஹீத் பெயரில் ஆடம்பரத் திருமணம் நடத்தக் கூடியவர்கள், பெண் வீட்டு விருந்திற்குத் தவ்ஹீத் போர்வை போர்த்தியவர்கள் வர வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் ஜாக் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுத் திருமணத்திற்குத் தங்கள் ஜமாஅத்தின் பேச்சாளரை அனுப்பி வைத்து திருமணத்தையும் நடத்தி வைப்பார்கள். அந்தச் சபையில் என்ன நடந்தாலும் வந்த வேலையை மட்டும் பார்த்து விட்டுச் சென்று விடுவார்கள். அதைக் கண்டித்துக் கூட பேச மாட்டார்கள். இவை நாம் கற்பனை செய்து எழுதவில்லை. ஜாக் இயக்க நிர்வாகிகள் எடுத்த அவதாரங்களை விபரமாகக் கேட்டறிந்து தான் எழுதுகிறோம்.
உணர்வு வார இதழில், "அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, உழவர் சிலை போன்றவை வரலாற்று சிறப்பு வாய்ந்தவை'' எனத் தவறாக எழுதி விட்டோம். பிறகு இதற்கு மறுப்பு வெளியிட்டு மன்னிப்பும் கேட்டு விட்டோம்.
ஆனால் பரிசுத்த வேடம் போடும் இந்தக் கொள்கை வேடதாரிகள், "சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் ததஜ'' என்று தங்கள் பத்திரிகையிலே எழுதி அகமகிழ்ந்து கொண்டனர். ஆனால் என்ன வேடிக்கை என்றால் அதற்கு மறு பக்கத்திலேயே, "கண்ணகிக்குச் சிலை வைத்து பூம்புகாரை அழகு பார்த்தவர் நீங்களல்லவா?'' என கலைஞரைப் புகழ்ந்து எழுதி சிலை வழிபாட்டை ஜாக் இயக்க நிர்வாகிகள் ஆதரித்துள்ளனர். இவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ள முறையற்ற தனி மனித வெறுப்பு தான் இவர்களை இப்படியெல்லாம் தடுமாறச் செய்துள்ளது.
விரலசைப்பது நபி வழி என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து பணப் பட்டுவாடா செய்யக்கூடிய சில சவூதிகள் சரியான ஆய்வில்லாமல் இது தவறு என்று கூறியதாலும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அனைவரும் விரலசைத்து இந்த நபிவழியை நிலைநாட்டி வருவதாலும் வெறுப்புணர்வின் காரணமாக இவர்களின் ஆதரவுப் பத்திரிகைகளில் எந்த விதமான முறையான ஆய்வுமில்லாமல் விரலசைப்பது நபிவழியல்ல, அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் என எழுதியுள்ளனர்.
இட ஒதுக்கீட்டை ஆதரித்து இவர்கள் தங்கள் பத்திரிகைகளில் அதிகமதிகம் எழுதியுள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு தர மறுத்தவர்களைக் கண்டித்தும் எழுதியுள்ளனர். பல மாநாடுகளில் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளனர். ஏன்? ஜாக் மாநில நிர்வாகியாக இருந்து தற்போது அவர்களாலேயே தூக்கியெறியப் பட்டுள்ள கோவை அய்யூப் அவர்கள், "முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காகக் கை சின்னத்தில் வாக்களிப்பீர்'' என நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரசியல் மேடையில் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்தார்.
ஆனால் பாருங்கள், இவர்களின் கயமைத்தனத்தை! ஜனவரி 29 அன்று கும்பகோணம் மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு கொடுத்த போது, "உரிமைகளை இவர்களிடம் கேட்கலாமா?'' என மாநில அமீர் கொள்கை வெறி (?) மேலோங்கி பல இடங்களில் முழங்கியுள்ளார். பல இடங்களில் ஜாக் இயக்கப் பேச்சாளர்கள் வெள்ளிக்கிழமை பயான்களில், இட ஒதுக்கீடு கேட்பது மார்க்கத்திற்கு முரணாணது என்றும் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் உளற ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஆதரித்த ஒன்றையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்கிறது என்பதற்காக மறுத்துப் பேசுவது கொள்கைப் பிடிப்பா? இல்லை தடுமாற்றமா?
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையின் அடிப்படையில் தவ்ஹீது ஜமாஅத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அதைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதே சமயம், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு இயக்கங்களிலிருந்தும் விரட்டப்பட்ட ஒருவருக்கு, பாளை தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வழங்கக் கோரி தங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இவர்களின் கொள்கைத் தடுமாற்றங்கள் இது மட்டுமல்ல! சுருக்கமாகக் கூறினாலே பல பக்கங்களுக்கு எழுதிக் கொண்டே போகலாம். எனவே அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள் யார் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். காசுக்காகவும், தனி மனித வெறுப்பு வழிபாட்டினாலும் தடம் புரண்ட இவர்கள் இனிமேலாவது தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

திங்கள், 29 நவம்பர், 2010

இறைப்பையின் சிறப்பு




‡RÖLப் ‘\‹R hZ‹ ÛR›Á CÛWப்ÛT 30 –.¦. EQÛY Uy|• ÙLÖ·º•.
CÛWப்ÛT›Á J£ Th‡ A¥ X‰ ˜µ CÛWப்ÛTயு• C¥XÖU ÚX EjL[Ö¥ E›Ÿ YÖZ ˜zயு.
T\ÛYLºeh•, ˜RÛXLºeh• CÛWப்ÛT CWண்| AÛ\L· ÙLÖண்P RÖL C£ef\‰.
RYÛ[L· RjL¸Á CÛWப்ÛTÛV ÙY¸ ÚV ‰ப்“fÁ\]. A‡ ¥ E·[ L³°LÛ[ ˜Á LÖXÖ¥ ÙY¸ ÚV¼½V ‘Á CÛWப் ÛTÛV —ண்|• «µ jhfÁ\].
Á¿ Bண்Lºeh J£ ÙTண் GÁ\ «fR†‡¥ CÛWப்ÛTப் “¼¿ ÚSÖVÖ¥ TÖ‡eLப்T|fÁ\]Ÿ.
15 SÖyLºeh J£ ˜Û\ “‡V ÚLÖÛZப் TPX• E£YÖf\‰. C‰ C¥XÖ«yPÖ¥, CÛWப்ÛTÚV ÉWQ UÖf «|•.

yzV EQ°, Eப்‘yP CÛ\op, —Á, F¿LÖš Cப்TyP LÖšL½L· BfVÛY CÛWப்ÛTப் “¼¿ÚSÖÛV H¼T|†‰• ATÖV• E·[ÛY. “ÛLப் TZeL•, CÛWப்ÛTப் “¼¿ÚSÖš ATÖV†ÛR 40 ˜R¥ 80 NR®R• A‡L¡ef\‰.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

வண்ணாத்தி நண்டு



பத்து கால்களை வைத்துக் கொண்டு பக்கவாட்டில் நடக்கும் உயிரினங்களில் ஒன்று நண்டு. சகதி நிறைந்த மற்றும் மணற்பாங்கான கடற்கரைகளில் துளையமைத்துக் கொண்டு அதில் வாழும் உயிரினங்களில் ஒன்று தான் வண்ணாத்தி நண்டு. இந்த நண்டுக்கான பெயர்க்காரணம்,தோற்றம்,சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..""யூகா என்பது இதன் விலங்கியல் பெயர்.இதன் மேல்ஓட்டின் முன்பக்கம் கூர்மையாகவும் இரு கண்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தைக் காட்டிலும் அதன் கண்கள் துருத்திக் கொண்டும் இருக்கும். நீளமான கண் இழைகள் உடையது. இதன் 10 கால்களில் 8 நடப்பதற்கும் மற்ற இரு முன்னங்கால்கள் உணவைப் பிடிக்கவும், சண்டையிடவும், உடலுறவுக்கும் பயன்படுகின்றன.இவற்றில் ஆண் நண்டுகளில் மட்டும் முன்புறம் உள்ள முன்னங்கால்களில் ஒன்று மட்டும் பருத்துப் பெருத்து அதிக நீளமாகவும் இருக்கும். ஒரே இடத்தில் துளைகளமைத்து பல ஆண்டுகள்தான் அமைத்த குழியிலேயே உயிர் வாழ்கிறது. இதனைப் பிடித்து சற்று தூரத்தில் கொண்டு சென்று விட்ட பிறகும் திரும்பவும் உடனே அதே குழிக்குத் திரும்பி விடும் அளவுக்கு ஞாபக சக்தியுடைய விநோத ஜீவன்.இருப்பினும் அவை தங்கியிருக்கும் குழிகளைத் தன் சொந்த வீடாகவே நினைப்பதால் அதை விட்டு அதிக தூரம் செல்வதேயில்லை. ஏனெனில் எதிரிகள் விரட்டும்போது அவை உடனே தன் குழிக்குத் திரும்ப வேண்டும்.பாறைகள் நிறைந்த கடற்பகுதிகளில் பெரும்பாலும் வாழாமல் சதுப்பு நிலக் காடுகளிலும் சகதியான இடங்களிலும் அதிகமாக காணப்படுகின்றன. துணிகளைத் துவைக்க சலவை செய்பவர்கள் கைகளை உயர்த்தி பின்னர் கீழே இறக்குவதைப் போலவே இந்த நண்டும் தனது முன்னங்காலை ஆட்டிக்கொண்டே இருப்பதால் இதனை வண்ணாத்தி நண்டுகள் என்றே அழைக்கின்றனர்.மண்ணில் இருக்கும் பாக்டீரியா, புரோட்டாசோவா போன்ற நுண்ணியிரிகளைப் பிரித்து உண்ணும் குணம் உடையது. கடலில் அலைகள் குறைந்து இருக்கும்போது மண்ணைத் தின்பது போலவே தெரிந்தாலும் அந்த மண்ணை மக்கச் செய்து அதிலுள்ள கழிவுகளை மட்டும் பிரித்துவிட்டு நுண்ணுயிரிகளைச் சாப்பிடுகின்றன. கொக்குகள், நாரைகள், கடல் காகங்கள் மற்றும் பெரிய நண்டுகளுக்கு இவை இரையாகின்றன. தாவர குப்பைகளை மக்கச் செய்தும்,மண்ணுக்குள் ஆக்சிஜனை ஊடுருவச் செய்தும், தான் சார்ந்திருக்கும் சுற்றுப்புறத்துக்கு நன்மை செய்கின்றன. பகல் நேரங்களில் அடர்ந்த நிறமாகவும் இரவில் வெளிறிய நிறமாகவும் இருப்பதால் இதன் அடையாளம் சில சமயங்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றது.கடலில் ஏற்படும் மாசுகளால் அழிந்து கொண்டே வரும் இவ்வினங்கள் தனது உடல் நிறத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கும் அதிசய உயிரினம். பிற நண்டுகளுடன் சண்டையிடும்போதோ அல்லது இரையைப்பிடிக்கும்போதோ ஒரு முன்னங்கால் துண்டிக்கப்பட்டு விட்டால் அதே இடத்தில் சிறிது நாளில் இன்னொரு கால் முளைத்துவிடும் அரிய வகை கடல் வாழ் உயிரினமே வண்ணாத்தி நண்டு'' என்ற

பலூன் மீன், இப்படி இருக்கிற நான்...

சாதாரண மீன்களைப் போலவே கடலில் நீந்தித்திரியும் இந்த மீன்கள் எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டால் பலூன் போல உருண்டை வடிவமாகி விடுவதால் இதற்கு பலூன் மீன் எனப் பெயர் வந்தது. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..""மீனவர்களால் செல்லமாக பேத்தை மீன் என அழைக்கப்படும் இதன் விலங்கியல் பெயர் டெட்ராடான். லத்தீன் மொழியில் டெட்ராடான் என்பதற்கு 4 பற்கள் என்று அர்த்தமாகும். மனிதப் பல்லைப் போலவே இம்மீனின் வாயில் மேலும், கீழுமாக தலா இரு பற்கள் வீதம் மொத்தம் 4 பற்கள் இருக்கின்றன.கடலுக்கடியில் வாழும் சங்குகள்,சிப்பிகள், நண்டுகள் இவற்றைப் பிடித்து அதன் உறுதியான மேலோடுகளை உடைத்து அதனுள்ளே இருக்கும் சதைகளை இப்பற்களின் உதவியால் சாப்பிடுகின்றன. இம்மீனின் வயிற்றுப்பகுதியில் மட்டும் டெட்ராடாக்ஸின் எனும் மிகக் கொடிய விஷம் இருக்கும். ஆனால் ஜப்பானிலும் கொரியாவிலும் இந்த விஷம் உள்ள பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து விட்டு மற்றவற்றை சுவையுள்ள உணவாக்கி சாப்பிடுகின்றனர்.தனித்தனியாக இருக்கும் இதன் இரு கண்களும் எல்லாப்பக்கமும் அசையும் சக்தியுடையது. தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளும் விசித்திர ஜீவன். உலகம் முழுவதும் 121 வகைகள் இருப்பதாகவும் அவற்றில் சில பிறப்பு முதல் இறப்பு வரை கடலில் மட்டுமே வாழும் தன்மையுடையதாகவும் சில உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் முகத்துவாரங்கள் வழியாக ஆறுகளில் சென்றும் வாழ்கின்றன.குளிர் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர மற்ற எல்லாக் கடல்களிலும் இவ்வினங்கள் காணப் படுகின்றன. இவை நீந்தும்விதம் இவற்றை மற்ற மீன்களிலிருந்து தனித்து பிரித்துக் காட்டுகிறது.ஏனெனில் இதன் பக்கவாட்டு மற்றும் மேல்,கீழாக இருக்கும் செதில்கள் மூலமாக மிக மெதுவாக நீந்துகிறது. மற்ற மீன்களைவிட சற்று வித்தியாசமான தோற்றமளிக்கும் இம்மீன்கள் மெதுவாக நீந்துவதால் எதிரிகளுக்கு எளிதில் இரையாகி விடுகின்றன. எதிரிகள் இதனருகில் வந்து பயமுறுத்தும்போது நீரை உடனடியாக உடலுக்குள் உள்ளிழுத்து ஒரு பலூனைப்போல, உருண்டையாக பந்தைப் போல மாறி தண்ணீரில் உருள ஆரம்பித்து விடுகின்றன.மற்ற எதிரி மீன்கள் இதன் செயல்பாடுகளைப் பார்த்துப் பயந்து உடனே அந்த இடத்தை விட்டு அகன்று ஓடிவிடும். இம்மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து விட்டால் காற்றை வாய் வழியாக உடலுக்குள் உள்ளிழுத்து அப்போதும் பலூன் போன்று உருமாறிவிடும்.இந்த தற்காப்பு நடவடிக்கையையும் மீறி எதிரிகள் விழுங்கிவிட்டால் அதன் வாயை அடைத்துக் கொண்டு நின்று விடும். இதனால் வாயில் சிக்கிக் கொண்ட இந்த மீனை எதிரி மீன்கள் எப்படியாவது வெளியில் துப்பிவிடத் துடிக்கும். வெளியில் வந்தவுடன் தனது வயிற்றில் இருக்கும் காற்றையோ அல்லது நீரையோ வெளியேற்றிவிட்டு சாதாரண நிலைக்கு வந்து பின் தப்பித்துச் சென்று பாறைகளின் ஊடே பதுங்கிக் கொள்ளும் விநோத ஜீவன் இது'' என்றார்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites