அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 31 அக்டோபர், 2011

குர்ஆன் & ஹதீஸ் உள்ள கேள்வி பதில்கள் part 1

கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குழந்தைகளின் பெயர் என்ன?
பதில் : இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) (அல்குர்ஆன் 14 : 39)
கேள்வி : ஹ‏ýýதையைபிய்யா உடன்படிக்கை நடந்து கொண்டிருக்கும் போது கையில் விலங்குடன் வந்த நபித்தோழர் யார்?
பதில் : அபூஜன்தல் (ரலி)  நூல் : புகாரீ (2734)
கேள்வி : உருக்கிய செம்பைப் போலும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்குமே அந்த மரத்தின் பெயர் என்ன?
பதில் :  ஸக்கூம் (அல்குர்ஆன் 44 : 43-46)
கேள்வி : எந்த வழியை தேடினால் சுவர்க்கத்தின் வழி இலகுவாகும்?
பதில் : கல்வி  நூல் : முஸ்லிம் (4867)
கேள்வி : காளைக் கன்றை கடவுளாக சித்தரித்தவன் யார்?
பதில் : சாமிரீ (அல்குர்ஆன் 20 : 87,88)
கேள்வி : அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் என்று சொல்லப்பட்ட நபித்தோழர் யார்?
பதில் : காலித் பின் வலீத் (ரலி)  நூல் : புகாரீ (4262,1246)
கேள்வி : கடவுளாக சித்தரிக்கப்பட்ட காளைக் கன்றை நபி மூஸா (அலை) அவர்கள் என்ன செய்தார்கள் ?
பதில் : அதை நெருப்பில் எரித்து அதன் சாம்பலை கடலில் தூவினார்கள்.     (அல்குர்ஆன் 20 : 97)
கேள்வி : இந்த சமுதாயத்தில் நம்பிக்கைக்குரியவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட நபித் தோழர் யார்?
பதில் : அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி),  நூல் :புகாரீ (4382)
கேள்வி : நபி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரிடம் எந்த அற்புதத்தை காட்டி அல்லாஹ் உடன்படிக்கை எடுத்தான் ?
பதில் : தூர் மலை தலைக்கு மேல் உயர்த்தி (அல்குர்ஆன் 2: 93, 7:171)
கேள்வி : ஷஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது?
பதில் : கடன்  நூல் : முஸ்லிம் (3832)
கேள்வி : ஜாலூத் என்பவன் யார்?
பதில் : நபி தாவூத் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோல் மன்னன் (அல்குர்ஆன் 2 : 251)
கேள்வி : நபிகளார் காலத்தில் யார் இறந்த போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது?
பதில் : நபிகளாரின் மகன் இப்ராஹீம் (ரலி), நூல் : புகாரீ (1043)
கேள்வி : தாவூத் நபி எந்த மன்னரின் கீழ் வீரராக திகழ்ந்தார்கள்?
பதில் : தாலூத் (அல்குர்ஆன் 2 : 247 -251)
கேள்வி : இவர் ஒருபக்கம் நடந்தால் ஷைத்தான் இன்னொரு பக்கம் ஓடிவிடுவான் புகழ்ந்து கூறப்பட்ட நபித்தோழர் யார்?
பதில் : உமர் (ரலி), நூல் : புகாரீ (3294)
கேள்வி : ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போர்க்களத்தில் அல்லாஹ் கூறினான்?
பதில் : பத்ர் (அல்குர்ஆன் 3 : 123-125)
கேள்வி : ஹ‏ýýதைபிய்யா உடன்படிக்கை ஏற்க மறுத்த முக்கிய நபித்தோழர் யார்?
பதில் :உமர் (ரலி), நூல் : புகாரீ (2734)
கேள்வி : குர்ஆனில் பெயர் கூறப்பட்ட நபித் தோழர் யார் ?
பதில் : ஸைத் (ரலி) (அல்குர்ஆன் 33 : 37)
கேள்வி : நபிகளாரின் மனைவியர்களில் அதிகம் தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தவர் யார்?
பதில் : ஸைனப் (ரலி), நூல் : முஸ்லிம் (4490)
கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : ஆஸர் (அல்குர்ஆன் 6 : 74)
கேள்வி : படைத்தவனுக்கு அடுத்து நாம் பணிவிடை செய்யவேண்டிய நபர் யார்?
பதில் : தாய், நூல் : புகாரீ (5971)
கேள்வி :நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர் என்ன?
பதில் : வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் (அல்குர்ஆன் 71 : 23)
கேள்வி : ஒரு முஸ்லிமை அதிகபட்சமாக எத்தனை நாட்கள் வெறுத்திருக்கலாம்?
பதில் : மூன்று நாட்கள், நூல் : புகாரீ (6065)
கேள்வி : நபி யூனுஸ் அவர்கள் அனுப்பப்பட்ட மக்களின் தொகை எவ்வளவு?
பதில் : ஒரு இலட்சம் அல்லது அதற்கு மேல் (அல்குர்ஆன் 37 : 147)

5 கருத்துகள்:

எந்த வீட்டிற்கு மலக்கு வர மாட்டார்கள்

எந்த இருதொழுகைக்கு மலக்குகள் சாட்சியம் கூறுகிறார்கள்?

மூஸா (அலை) காலத்தில் வாழ்ந்த கொடுங்கோல் மன்னன் யார்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites