அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 2 ஜூன், 2011

உலகை உலுக்கிய விபத்துகள்


ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது மூலையில் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபனவை. உலக சரித்திரத்திலே உயிர்களை அதிகளவில் பலிகொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப் பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விபத்துகள் இவை.
டைட்டானிக் கப்பல் விபத்து
டைட்டானிக் திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912 ஆம் ஆண்டு இடம்பெற்றது. கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் தனது வெள்ளோட்டத்தி லேயே பனிப்பாறையுடன் மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைட்டானிக் கட்டி முடிக்க ஏற்பட்ட மொத்த செலவு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அப்போதே செலவானது. இப்போதைய மதிப்பில் சுமார் 150 மில்லியன் டொலர்கள்.
வீல்ட்ஹால் விபத்து
ஜெர்மனியின் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வீல்ட்ஹால் பாலத்தின் மீது 32000 லீட்டர் எரிபொருள் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார் ஒன்று மோதியது. 90 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே ஆட்டோ பான் என்று அழைக்கப்படும் பிரதான பாதையில் வீழ்ந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிந்தது. அந்த வெப்பம் தாங்க முடியாமல் பாலமும் வெடித்தது. தற்காலிகமாகப் பாலத்தை திருத்த ஆனா செலவு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள். மீளப் பாலம் கட்ட ஆன செலவு 318 மில்லியன் டொலர்கள்.
மெட்ரோ லிங்க் விபத்து
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 இல் இடம்பெற்ற மிகக் கோரமான தொடருந்து விபத்து இது. லொஸ் ஏன்ஜெலிஸ் தொடருந்து நிலையத்தில் எதிரும் புதிருமாக இரண்டு தொடருந்துகள் (ரயில்கள்) மிக வேகமாக மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாகப் பலியாயினர். மெட்ரோ லிங்க் தொடர்ந்து வந்த பொழுது அதை நிறுத்தும் சமிக்ஞை வழங்க வேண்டிய அதிகாரி எஸ்எம்எஸ் அனுப்புவதில் பிஸியாக இருந்தாராம். உயிர்களின் நஷ்ட ஈடு பொருள் இழப்பு எல்லாம் சேர்த்து இழப்பு 500 மில்லியன் டொலர்கள்.
கி 2 பொம்பர்கள் விபத்து
குவாமில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து மேலெழுந்த அமெரிக்க விமானப்படையினர் கி2 குண்டுவீச்சு விமானம் சமிக்ஞை கோளாறு காரணமாக தலை குப்புறமாக வீழ்ந்து 1.4 பில்லியன் டொலர்களைக் கரியாக்கியது. இதுவரைக்கும் மிக அதிக இழப்பான விமான விபத்தாக இதுவே கருதப்படுகிறது. எனினும் விமானிகள் இருவருமே வெளியே பரஷ¤ட்டில் பாய்ந்து உயிர் தப்பிக்கொண்டனர்.
எச்சன் வல்டஸ் எண்ணெய்க் கசிவு
அமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்தில் எக்சன் நிறுவனத்துக்கு சொந்தமான வல்டஸ் கப்பல் பவளப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 10.8 மில்லியன் கலன் எண்ணெய் கடலோடு கலந்து வீணாகியது. இது நடந்தது 1989 ஆம் ஆண்டு. எண்ணெய்க் கழிவுகளை சுத்திகரிக்க ஆன செலவு மட்டும் 2.5 பில்லியன் டொலர்.
பைபர் அல்பா எண்ணெய்க் கிணறு விபத்து
1988 இல் ஜூலை மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்துக்கு சொந்தமான வட கடலில் அமைந்திருந்தன. பைபர் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து முழு எண்ணெய்க் கிணற்றுத் தளத்தையும் எரித்து நாசமாக்கியது. இரண்டு மணித்தியாலங்களில் 16 தொழிலாளர்கள் பலியானதோடு 300 கோபுரங்கள். 100 பாரிய எண்ணெய்க் குழாய்கள் என்று அனைத்துமே சாம்பராயின அந்தக் காலகட்டத்தில் அதிக எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய பைபர் முழுவதுமாக இல்லாது போயிற்று. மொத்த இழப்பு 3.4 பில்லியன் டொலர்கள்.
சலேன்ஜர் விண் விபத்து
அமெரிக்காவினால் 1986 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சலேன்ஜர் விண்கலம் விண்ணில் எழுந்து 73 வினாடிகளில் வெடித்து சிதறியது. ஒரு சிறிய தொழிநுட்பக் கோளாறு தான் இதற்கான காரணம். எனினும் ஆன செலவோ மொத்தம் 5.5 பில்லியன் டொலர்கள்.
ப்ரெஸ்டீஜ் எண்ணெய்க் கசிவு
கிரேக்க நாட்டுக்கு சொந்தமான ப்ரெஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் ஸ்பானிய, பிரெஞ்சு கடற்கரையோரமாக 2002 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் சந்தித்த மாபெரும் புயல் காற்றே இந்த மிகப் பெரிய எண்ணெய்க் கசிவு விபத்துக்குக் காரணம் 77000 தொன்கள் கொண்ட எண்ணெய்த் தாங்கிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலைப் புயல் தாக்கியதும் சில தாங்கிகள் வெடித்து சிதறின. நடுக்கடலில் கடும் புயலில் மாட்டிக்கொண்ட கப்பலைப் புயல் இரண்டாகப் பிளந்தது. இருபது மில்லியன் கலன் எண்ணெய் கடலிலே வீணாகியது.
இதன் காரணமாக பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நீளமான கடற்கரைகள் மாசடைந்து போயின. சேதாரங்களும், சுத்திகரிப்புப் பணிகளுக்கும் ஆன மொத்த செலவு 12 பில்லியன் டொலர்கள்.
கொலம்பியா விண்கல விபத்து
1978 ஆம் ஆண்டில் ஆரம்பமான கொலம்பியா விண்கலக் கட்டுமானப் பணிகளின் மூலம் அமெரிக்கா உலகின் தலை சிறந்த விண்கலத்துக்கு அமைத்த பெருமையை அடைந்தது.
25 ஆண்டுகள் நீடித்த அந்த பெருமை, 2003 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதலாம் திகதி டெக்சாஸ் மாநிலத்தின் வான் பரப்பில் நிகழ்ந்த கொடூர விபத்தோடு இல்லாமல் போயிற்று. விண்கலத்தின் இறக்கைகள் ஒன்றில் ஏற்பட்ட சிறு துவாரம் பெரும் விபத்தை ஏற்படுத்தியது. விண்கலத்தில் ஏன் துவாரம் ஏற்பட்டது என்று ஆராயவே 500 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. மீள் கட்டுமானப் பணிகளுக்கு மேலுமொரு 300 மில்லியன் டொலர்கள், மொத்த இழப்பு மட்டும் 13 பில்லியன் டொலர்கள்.
செர்னோபில் அணு உலை விபத்து
1986 ஆம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்து தான் உலகில் யுத்தங்கள் இல்லாமல் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய சம்பவம். வரலாற்றில் கறை படிந்த நாளாகிப் போன ஏப்ரல் 26,1986 அன்று தான் அப்போதைய சோவியத் யூனியனின் உக்ரைனில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு மிக நீண்ட காலம் நீடிக்கக்கூடிய அழிவுகளைத் தந்தது. பல வருடம் கழித்து புற்று நோயினாலும் பலியானோரோடு சேர்த்து 125000 உக்ரைனின் அரைவாசிப் பிரதேசம் அணுக்கசிவின் காரணமாக இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறிடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவரானார்கள். 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றுவரை கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் சேர்த்து இழப்பு வேறெந்த விபத்துமே நெருங்க முடியாத 200 பில்லியன் டொலர்கள்.

செவ்வாய், 31 மே, 2011

புற்று நோய்


`யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!
- ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
புற்று நோய்க்கு என்ன காரணம்?
பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன. அவை: குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.
எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)
சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.
(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். `மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்)
இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?
தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.
`ஹியூமன் பபிலோமா வைரஸ்(Human Papilloma Virus - H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?
முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.
சரி கண்டு பிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்' என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.
புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு `மேஜர்' ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது `சிம்பிளான' ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்'தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.
புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?
மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவை: 1. ஆபரேஷன், 2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்), 3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).
Thanks : பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.

திங்கள், 30 மே, 2011

பெர்முடா முக்கோணம்


வட அட்லாண்டிக் பெருங்கடல் பெர்முடா, மியாமி, பியூர்டோரிகா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் இரு முக்கோண பகுதி கிடைக்கும். இதில் என்ன விசேஷம் என்று பார்ப்போம்.
இந்த முக்கோணத்தின் இயல்பு எல்லா விஞ்ஞானிகளையும் பயமுறுத்தும் வகையில்அமைந்திருப்பது தான். அப்படி என்ன இருக்கு இதில் ஆம்! இந்த முக்கோண
பரப்பிற்கு உள்ளே வருகின்றன எந்த ஒரு பொருளையும் இது தனக்குள் இழுத்துக்கொள்ளுமாம். பல ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 40 கப்பல்களையும், 20
விமானங்களையும் சிறு சிறு மரக்கலங்களையும் உள்ளிழுத்திருக்கிறது.
இதில் 1872ம் ஆண்டில் மேரி செலஸ்டினு பெயர் கொண்ட ஒரு பாய்மரக்கப்பல்
தான் பதிவான முதல் பதிப்பு. ஏன் இப்படி நடக்கின்றது என நிறைய ஆராய்ச்சிகளும் விளக்கவுரை களும் பல விஞ்ஞானிகளிடம் இருந்துகிடைத்திருக்கின்றன. அதில் வாலன்டைன் என்பவர் இந்த மாதிரி காணாமல்
போன பொருள்கள் அனைத்தும் எங்கேயும் போய்விடவில்லை.

அது எல்லாம் அங்கயேதான் இருக்கின்றன. ஆனால் வேறு பரிமாணத்தில் இருக்கின்றன என கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டு சோதிட வல்லுனர் ஒருத்தர் அந்த பரப்புக்கு அடியில் உள்ள ஒரு சக்தி மையத்தில் தான்நடக்கிறது என சொல்லியிருக்கிறார். திரும்பவும் அந்த பொருட்களை மீட்க முடியும் என்றும் சொல்கிறார்.
அதே மாதிரி படிகங்களில் இருந்து வருகின்ற ஒளி ரேகைகள் இத்தகைய பொருட்களை
வேறு பரிணாமத்திற்கு மாற்றி உள்ளிழுக்கின்றன என்ற கருத்தையும்விஞ்ஞானிகளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
அண்மைக்கால ஆய்வுகள் படி விஞ்ஞானிகள் எல்லா திட பொருட்களும் அதற்குள் உள்ளடக்கிய சக்தியை பெற்றிருப்பதாகவும், திடப்பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறு உருவம் என்றும் இந்த சக்தி ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்குகின்ற இலத்திரன் வடிவத்தில் இருக்கின்றது என முடிவாக கூறுகிறார்கள்.
இந்த இலத்திரன்களை காலம் என்னும் பரிணாமத்தில் திரும்பி செயல்பட
வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்ற செயல் முறையை தலைகீழாக
செய்தால் அப்படி செய்யும்போது எல்லா பொருளும் நுண்ணிய அணுக்களாக மாறி காற்றில் கலந்துவிடும் என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த செயல் முறைக்கு எதிர் மறை செயல் திறன்பெயரும் வைத்திருக்கிறார்கள்.
இதுதான் ஒரு பொருளின் ஐந்தாவது பரிணாமமாம்.
பேசினால் போதும்: தானாகவே சார்ஜ் ஏறும் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு பேசினாலே பற்றரியில் சார்ஜ் ஏறும் புதிய வகையான கைத்தொலைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி மின் சக்தியாக மாறி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. மேலும் கைத்தொலைபேசியில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகையான தொலைபேசியில் சார்ஜ் ஏற்றலாம்.
 சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தகைய கைத்தொலைபேசியை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராப் என்னும்
நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசி பயன்பாட்டில்
இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய கைத்தொலைபேசிகள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites