அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 26 பிப்ரவரி, 2011

நகப்பாலிஷ் இடலாமா?



கேள்வி : 


சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நகப் பாலிஷ் இடலாம். தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும்.
அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் மேனி நனைய வேண்டும். நகப் பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல் பாலிஷ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும்.
தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணி சாயம் போல்) நைல் பாலிஷ் கண்டுபிடிக்கப்படுமானால் எல்லா நேரங்களிலும் அதை இடலாம்.
தொழுகையும், குளிப்பும் கடமையாகாத சிறுவர், சிறுமியருக்கு இடுவதையும் தடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனினும் பெரியவர்களான பிறகும் எல்லா நேரங்களிலும் அவர்கள் இதை விரும்பாமல் இருக்கும் வகையில் அறிவுரை கூறுவது அவசியமாகும்.
நைல் பாலிஷ் என்பது பொதுவாகவே தடுக்கப்பட்ட ஒன்று அல்ல. இன்றைய சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொருத்தே இந்த நிபந்தனைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (2:195)

சிலந்தி


சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன?

கேள்வி :
காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன? அவர்களுக்கு இறைவனை அறிய வாய்ப்புகள் உண்டா?
மூஸா நபியவர்கள் பிர்அவுனிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது அவன் மூஸா நபியிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களோ அந்தக் கேள்வியைத் தான் கேட்டான்.
"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 20:51, 52)
"இப்போது தான் நீர் ஒரு கடவுளைப் பற்றிப் பேசுகிறீர். உமது பிரச்சாரம் சென்றடையாத மக்களைப் பற்றி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்?'' என்பது இக்கேள்வியின் கருத்து.
"அது பற்றிய ஞானம் என் இறைவனுக்குத் தான் உள்ளது; என் இறைவன் தவறான முடிவு எடுக்க மாட்டான்; எதையும் மறக்கவும் மாட்டான்'' என்று மூஸா நபியவர்கள் விடையளித்தார்கள். அவர்கள் நரகவாசிகள் என்றோ, சுவர்க்கவாசிகள் என்றோ கூறாமல் அதன் முடிவை இறைவனிடம் விட்டு விட்டார்கள்.
நீதி செலுத்துவதை அதிகம் விரும்புகிற இறைவன் எந்த அநீதியான தீர்ப்பும் வழங்க மாட்டான். நியாயமான தீர்ப்பே வழங்குவான்.
யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.
தவறே செய்யாத ஒரு குழந்தையைக் கூட சொர்க்கவாசி என்று நாம் முடிவு செய்யக் கூடாது. இதை இறைவனுடைய அதிகாரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துக்கள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக் குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள்.  முஸ்லிம் (5175)
எனவே, எந்தப் பிரச்சாரமும் சென்றடையாத மக்கள் விஷயமாக நம்மை விட அதிகம் நியாயம் வழங்கும் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவான் என்ற பதிலோடு நிறுத்திக் கொள்வது தான் நமக்குள்ள உரிமையாகும்.

மின்மினிகள்


மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.

புதன், 23 பிப்ரவரி, 2011

ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை 2010




தமிழக அரசு அகவிலைப்படி விபரம்

 1.7.2006
முதல் அகவிலைப்படி 2 சதவீதம் 


1.1.2007
முதல் அகவிலைப்படி 6 சதவீதம்


1.7.2007
முதல் அகவிலைப்படி 9 சதவீதம்


1.1.2008
முதல் அகவிலைப்படி 12 சதவீதம்


1.7.2008
முதல் அகவிலைப்படி 16 சதவீதம்


1.1.2009
முதல் அகவிலைப்படி 22 சதவீதம்


 

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் அரசு ஆணை
2010 -11 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் விபரம்(30 பள்ளிகள்)


2010 -11 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் விபரம்(96 பள்ளிகள்)


விளக்கக் கடிதங்கள்

1.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரின் பணிகள்.

2.
எம்.பில் ஊக்க ஊதியம், எம்.எட் பெறாமலும் பெறலாம்.

3.
ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்த பட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது.
விளக்கக் கடிதங்கள்
































ஏகத்துவம் ஜனவரி 2008 - C


கேள்வி பதில்
? அக்டோபர் மாத இதழில், முகத்திரையைக் கிழித்த முதல் பிறை என்ற தலைப்பில், "உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத அமாவாசை தினத்தில் முதல் பிறை என்று அறிவித்து உள்ளனர்' என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அதே நாளில் சவூதியிலும், மலேஷியாவிலும் நோன்பைத் துவக்கியுள்ளனர். உலகத்தில் எங்குமே பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்? இரண்டும் வேறு கிரகங்களில் உள்ளதா? மேலும் அதே கட்டுரையில், கமாலுத்தீனின் அடிவருடிகள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மார்க்கப் பத்திரிகையில் இது போன்ற மஞ்சள் பத்திரிகை வார்த்தைகள் இடம் பெறுவது ஏன்?
பி. ஹபீப் முஹம்மது  மேற்கு மாம்பலம், சென்னை
ஜாக் இயக்கத்தினர் 12.09.07 அன்று முதல் பிறை என்று அறிவித்தனர். 11.09.07 அன்று பிறை பார்த்தால் தான் 12ஆம் தேதி முதல் பிறையாக இருக்க முடியும். ஆனால் 11ஆம் தேதி உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாது என்று நாம் மட்டும் கூறவில்லை. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் கூறுகின்றது. மேலும் அன்றைய தினம் பிறை பார்த்ததாக உலகத்தில் யாருமே கூறவில்லை. முதல் பிறை என்று கூறியவர்கள் கூட பிறை பார்த்ததன் அடிப்படையில் முதல் பிறை என்று சொல்லவில்லை. கணிப்பின் அடிப்படையில் தான் கூறினார்கள்.
சவூதியிலும், மலேசியாவிலும் அன்றைய தினம் (12.09.07) நோன்பைத் துவக்கியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது பச்சைப் பொய். இந்த இரண்டு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். மார்க்க விஷயத்தில் தெளிவடைய வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இருந்திருந்தால் இது போன்ற பொய்யான தகவலைக் கூறியிருக்க மாட்டீர்கள்.
ஒரு வேளை அன்றைய தினம் வேறு எங்காவது நோன்பைத் துவக்கியிருந்தாலும் அதற்காக அன்று பிறை தென்பட்டது என்று கூற முடியாது. கணிப்பின் அடிப்படையில் தான் நோன்பைத் துவக்கியிருப்பார்கள். பிறை பார்த்து நோன்பைத் துவக்க வேண்டும் என்றால் 13 அல்லது 14ஆம் தேதி தான் முதல் நோன்பாகும்.
அடிவருடிகள் என்ற வார்த்தையையும் விமர்சித்துள்ளீர்கள். இது ஒன்றும் கெட்ட வார்த்தை கிடையாது. தமிழில் வழக்கத்தில் உள்ள வார்த்தை தான். தமிழ் அகராதிகளில் எதில் வேண்டுமானாலும் இதற்கான பொருளைப் பார்த்துக் கொள்ளலாம். அடிவருடிகள் என்றால் சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று பொருள். இதில் என்ன தவறு இருக்கின்றது? ஜாக் தலைமையிலிருந்து கிடைக்கும் பணத்திற்காகக் கொள்கையை அடகு வைப்பவர்களை வேறு எந்த வார்த்தையில் அழைப்பது?
சவூதி உட்பட அனைத்து அரபு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். ஆனால் இவர்கள் 12.09.07 அன்றே, அதாவது சவூதிக்கு ஒரு நாள் முன்னதாகவே நோன்பைத் துவக்கினார்கள். இதன் மூலம் சவூதியே பிறை விஷயத்தில் தவறில் இருக்கிறது, நாங்கள் தான் சரியான கருத்தில் இருக்கிறோம் என்று வாதிட்டார்கள். இவர்கள் இதில் உறுதியாக இருந்தால் ஹஜ் பெருநாளிலும் அதே நிலையை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 18.12.07 அன்று கமாலுத்தீன் மதனி பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அரபாவில் மக்கள் கூடுவதால் இன்று தான் அரபா நாள்; அதற்கு அடுத்த நாள் பெருநாள் என்று கூறியுள்ளார். அதைப் பின்பற்றி அவருடைய அடிவருடிகளும் இதே கருத்தை மறு நாள் பத்திரிகையில் அறிக்கையாக வெளியிட்டதுடன் 19.12.07 அன்று பெருநாளும் கொண்டாடினார்கள்.
பிறையின் அடிப்படையில் இன்று பெருநாள் என்று கூறாமல் சவூதியில் அரபாவில் மக்கள் கூடுகிறார்கள் என்பதால் அதற்கு அடுத்த நாள் தான் பெருநாள் என்று கூறுகிறார்கள்.
 "பிறை பார்த்த அடிப்படையில் 12.09.07 அன்று நோன்பு துவக்கம்'' என்று சுவரொட்டி ஒட்டினார்கள். "பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீசுக்கு எதிரானதா?'' என்று பிரசுரம் வெளியிட்டார்கள். "சவூதியில் பெருநாள் என்பதால் நமக்கும் பெருநாள்'' என்று பத்திரிகையில் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
இவர்கள் பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்களா? கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா? அல்லது சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்களா?
மார்க்க விஷயத்தில் இவர்கள் செய்து வரும் இந்தக் குழப்பத்தை நாம் பலமுறை சுட்டிக் காட்டிய பின்னரும் அதைக் கண்டு கொள்ளாமல் ஜாக்கின் தலைமையிலிருந்து தங்களுக்கு வரும் உதவிகளுக்காக மார்க்கத்தில் விளையாடுகிறார்கள் என்றால் இவர்களை அடிவருடிகள் - சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
? மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?
சுபைதா பீவி தோப்புத்துறை
பொதுவாக மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் யாருக்கும் விருந்தளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மார்க்கத்திற்கு முரணில்லாத விருந்துகளில் கலந்து கொள்வதிலும் தவறில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்த போது உம்மு சுலைம் என்ற பெண்மணி விருந்தளித்ததாகவும் அதில் பல நபித்தோழர்கள் கலந்து கொண்டதாகவும் ஹதீஸ் உள்ளது.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். தமது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். என்னுடைய தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸ் எனும் உணவைத் தயாரித்து அதை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனது தாய் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். "எங்களிடமிருந்து உங்களுக்குரிய சிறிய அன்பளிப்பு' என்று கூறுமாறு சொன்னாôர்கள்'' என்று கூறினேன். "அதை அங்கு வை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி, சில பெயர்களைக் குறிப்பிட்டு, "இன்னின்ன ஆட்களையும் நீ யாரையெல்லாம் அறிந்திருக்கிறாயோ அவர்களையும் அழைத்து வா'' என்று கூறினார்கள். நான் சந்தித்த ஆட்களையும், நபி (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்டுக் கூறிய நபர்களையும் நான் அழைத்தேன்.
(இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்களிடம்) "அவர்கள் எத்தனை பேர்?'' என்று அபூ உஸ்மான் கேட்டார். "முன்னூறு பேர்'' என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள். நூல்: நஸயீ 3334
? நாம் தொழும் போது நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்கலாமா? தொழுகையில் எந்தெந்த இடங்களில் பிரார்த்திக்க வேண்டும்?
என். ராதிகா செங்கல்பட்டு
தொழுகையில் ஸஜ்தாவிலும், இரண்டாவது மற்றும் நான்காவது ரக்அத்தில் இருப்பில் அமரும் போதும் விரும்பிய பிரார்த்தனையைச் செய்யலாம். இந்த இடங்களில் பிரார்த்திப்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
"அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),, நூல்: முஸ்லிம் 744
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: நஸயீ 1151
? ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி? அபூபக்கர் சித்தீக்மேலப்பாளையம்
"பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 699
இமாமைப் பின்பற்ற வேண்டும்; இமாமை முந்தக் கூடாது என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இமாமைப் பின்பற்ற வேண்டும் என்றால், இமாம் செய்வதைத் தொடர்ந்து செய்வது தான் பின்பற்றுதல் ஆகும். இமாமுடன் சேர்ந்து செய்வது பின்பற்றுதல் ஆகாது.
எனவே இமாம் ருகூவுக்குச் சென்ற பிறகு, அதாவது அவரைப் பின்தொடர்ந்து நாம் ருகூவுக்குச் செல்ல வேண்டும். இமாமுடன் சேர்ந்து செய்யக் கூடாது.
? முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
எஸ். அனீஸ் ஃபாத்திமா ,தொண்டி
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 3971
? வட்டி என்ற வியாபாரத்தில் தான் உண்மை உள்ளது. மற்ற வியாபாரம் அனைத்திலும் பொய் உள்ளது. எனவே உண்மையான தொழிலான வட்டி எப்படி ஹராமாகும் என்று மாற்று மத நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்குப் பதில் என்ன?
முஜிபுர்ரஹ்மான்பள்ளப்பட்டி
வட்டி என்பதை வியாபாரம் என்று கூறுவதே தவறு. ஏனென்றால் வியாபாரம் என்பது லாபம், நஷ்டம் இரண்டும் கொண்டது. ஆனால் வட்டியில் நஷ்டம் என்பதே கிடையாது.
நமது தேவைக்குப் போக நம்மிடம் பணம் உள்ளது. தேவையுடைய ஒருவர் இதைக் கடனாகக் கேட்கிறார். இவருக்குக் கொடுத்து உதவுவது மனிதாபிமான அடிப்படையில் உள்ளதாகும். ஆனால் இந்த மனிதாபிமான உதவிக்கு எதிரானது தான் வட்டி.
ஆயிரம் ரூபாயை வட்டிக்குக் கடனாக வாங்கியவர்கள், ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி செலுத்திய பின்னரும் அசல் தொகையான ஆயிரம் ரூபாய் கடனாகவே இருந்து கொண்டிருக்கும். இது எந்த வகையில் வியாபாரமாகும்?
இறைவன் நமக்கு வழங்கிய பொருளாதாரத்திலிருந்து, ஏழைகளுக்குத் தர்மம் வழங்குதல், கடனுதவி போன்ற நன்மையான காரியங்களைச் செய்வதை விட்டும் வட்டி என்ற பெரும் பாவம் நம்மைத் தடுத்து விடுகின்றது. இதனால் தான் வட்டி விஷயத்தில் இஸ்லாம் கடுமையான நிலையை மேற்கொள்கிறது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்குர்ஆன் 2:275, 276
வட்டியில் பொய்யே கிடையாது என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலைகள் அனைத்தும் வட்டித் தொழிலில் தான் அதிகம் உள்ளது. வட்டிக்கு வாங்கியவர்களை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்குவது, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி என்று போட்டு அடகு வைத்த பொருட்களைச் சுருட்டிக் கொள்வது போன்ற அநியாயங்கள் வட்டித் தொழிலில் வாடிக்கையாக நடைபெறுகின்றன.
நவீன வட்டித் தொழிலான கிரடிட் கார்டு வாங்கும் படித்த மக்கள் கூட எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பது தெரியாமலேயே கடனில் மூழ்கி, வங்கிகளின் அடியாட்களுடைய மிரட்டலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எனவே வட்டித் தொழில் உண்மையான தொழில் என்பது போலியான வாதமாகும்.
                                                               

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites