அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 16 ஏப்ரல், 2011

இஸ்லாத்தை ஏற்றவர்களின் புகைப்படம்

இணைவைப்பு கொள்கையிலிருந்து விலகி சத்திய கொள்கையை ஏற்று, அதை தூயவடிவில் தன்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக சேலத்தில் இயங்கி வரும் கல்லூரியில் ஒரு மாதப் பயிற்சியை முடித்து விட்டு, அதற்குரிய சான்றிழ்களை பெற்றுக் கொண்டு, தமிழ் குர்ஆனையும் பெற்றுக் கொண்டு சென்றவர்கள்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

ஒரு கடவுள் மரணத்தை நோக்கி....?!


என்னப்பா இது? தலைப்பே தவறாக இருக்கிறதே! என்று எண்ணி முழுவதுமாக படிக்காமல் விட்டு விடாதீர்கள் முழுவதையும் படித்த பின்பு, உங்களுக்கு சரி என்று பட்டால் இதை பிறருக்கும் அனுப்புங்கள்.
ஆந்திர மாநில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை, ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.
தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும், தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.
சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டுரையை படிக்கக் கூடியவர்கள் யாராவது இவரை கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ நம்புபவர்களாக இருந்தால் பொறுமையாக இந்த கட்டுரையை படிக்கவும். அதன் நன்றாக அமர்ந்து குறைந்தது 5 நிமிடமாவது சிந்தியுங்கள், நிச்சயமாக சத்தியம் உங்களை வந்தடையும்.
ஒரு சாதாரான் ஹிந்துக்களிடம் எத்தனை கடவுள் இருக்கிறது என்று கேட்டால்? ஒருவர் சொல்வார் மூன்று என்று, மற்றவர் சொல்வார் முப்பது என்று, மற்றொருவர் சொல்வார் மூவாயிரம் என்று இப்படியே போய் முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்றும் சில பேர் சொல்வார்கள். ஆனால் இந்து மத வேதங்களை படித்த மேதையிடம் கேட்டால் கடவுள் ஒன்று தான் என்று கூறுவார். இன்று எல்லா ஹிந்துக்களும் நம்பக்கூடிய ஒரு விஷயம் தான் கடவுளின் அவதாரம் என்பது. ஹிந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் இத்தகைய அவதார புருஷர்கள் நிறையவே உண்டு. உதாரணம் இராமன், கிருஷ்ணன். இவர்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும், இவர்கள் பூமியில் அசத்தியத்தை அழிப்பதற்காக மனிதர்களாக அவதாரம் எடுத்தார்கள் என்றும் நம்புகின்றனர்.
உலகத்தில் பெண்ணின் வயிற்றில் கருவாக உருவாகி பிறந்த மனிதர்கள் யாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது தான் நியதி. அவ்வாறுதான் இன்று வரை பிறந்த மனிதர்கள் அனைவரும் இறந்தும் இருக்கின்றனர். மேற்கூறிய அவதார புருஷர்களின் இறுதி வாழ்க்கை என்ன ஆனது என்று எங்கையுமே குறிப்பிடப் படவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்பதும் நமக்கு தெரியவில்லை, காரணம் அத்தகைய அவதார புருஷர்கள் வாழ்ந்த காலங்கள் யாருக்குமே சரியாக தெரிவதில்லை, சில பல லட்சம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்தார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும், அது என்னவென்றால் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும், மரணத்தில் இருந்து யாரும் தப்பவே முடியாது என்பதுதான்.
இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் சில நபர்களை அவதாற புருஷர்களாக கருதுகிறார்கள், அதில் இரண்டு நபர்களைமட்டும் இங்கே காண்போம்.
ஓஷோ கம்யூனிட்டியின் நிருவனர் பகவான் ரஜ்நிஷ், இவர் அமெரிக்காவில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கே இருந்த அமெரிக்கர்கள் பலரை தனது கவர்ச்சிகரமான பேச்சாற்றல் மூலமாக தனது பக்தர்களாக மாற்றினார். இதனால் அமெரிக்க அரசாங்கம் இவரை சிறையில் அடைத்தது, சிறையில் இவருக்கு விஷம் வழங்கப்பட்டதாக இவரே கூறியிருக்கிறார். பின்னர் இவரை விடுதலை செய்த அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. இங்கே இவர் ஓஷோ கம்யூனிட்டியை தொடர்ந்து நடத்தி வந்தார். பின்னர் மரணம் அடைந்தார்.
இவரை கடவுளாக நம்பும் மக்கள் இவர் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை ஆனால் உலகத்திற்கு சில காலங்களுக்கு விஜயம் செய்திருந்தார் என்றும் நம்புகின்றனர். சற்று யோசித்து பாருங்கள் கடவுளை அமெரிக்க அரசாங்கம் சிறையில் அடைத்ததும், அவரும் உணவில் விஷம் வழங்கப்பட்டதையும்! இப்படிப்பட்டவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?
தற்போது புட்டர்பத்தி சாய்பாபா, ஆந்திர மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய ஆசிரமத்தை நடத்தி வரும் சாய்பாபாவை பல மக்கள் கடவுளாக நம்புகின்றனர். தற்போது அவர்கள் நம்பும் கடவுளுக்கு சுவாசக்கோளாறு பிரச்சனை. ஆதலால் செயற்கை கருவி பொறுத்தியுள்ளனர். சாய்பாபா தற்போது உயிருக்காக போராடிவருகிறார். செயற்கை கருவி ஒரு போதும் இயற்க்கையை போன்று இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே, அதே போன்று செயற்க்கை கருவி பொருத்தப்பட்டவர்களும் நீண்ட நாட்களுக்கு வாழ்ந்ததாகவும் தெரியவில்லை.
அப்படியென்றால் சாய்பாபா தனது இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய பக்தர்கள் ஆத்திரம் அடையக்கூடாது, இது தான் நிதர்சனம். மனிதனாக பிறந்தால் மரணித்தே தீர வேண்டும். அப்படி மரணிப்பவர்கள் யாரும் கடவுளாக இருக்க முடியாது என்பதே சத்தியம்!
கடவுள் என்பவன் யார்? மிக அழகாக கூறுகிறது திருக்குர்ஆன். ஒருவரை கடவுள் என்று நம்புவதற்கு அவரிடம் 4 நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
1. அவர் ஒருவராக இருக்க வேண்டும்.
இன்று எல்லா மதத்தின் வேதங்களும் கடவுள் ஒன்று தான் என்று கூற அந்த வேதங்களைப்பற்றிய ஞானம் இல்லாதவர்கள் பல கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆக கடவுள் என்பவர் ஒன்று தால் பலர் அல்ல என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
2. கடவுள் தேவையற்றவராக இருக்க வேண்டும்.
உலகத்தை படைத்த கடவுளை நம்பித்தான் மற்றவர்கள் இருக்க வேண்டுமே ஒழிய, கடவுள் பிறரை நம்பி இருக்கக்கூடாது. மேலே குறிப்பிட்ட இரண்டு நபர்களும் அவ்வாறு இருந்தார்களா? ரஜ்நிஷிற்கு அமெரிக்கா அரசாங்கம் விசாவை தள்ளுபடி செய்தது! கடவுள் உலகத்திற்கு விஜயம் செய்ய வருவாரானால் மற்ற நாடுகளுக்குச் செல்ல அவர் படைத்த மனிதர்களே விசா வழங்க வில்லை போலும் அப்படியா? மேலும் அவருக்கு உணவில் விஷம் கொடுக்கப்பட்டதாம்! சற்று யோசித்துப்பாருங்கள் கடவுளுக்கு மனிதர்கள் விஷம் கொடுத்தால் அது கடவுளை பாதிக்குமா? அப்படி பாதித்தால் அவர் கடவுளாக இருக்க முடியுமா?
அதே போன்று இன்று உடல் நிலை மோசமாகிக்கொண்டிருக்கும் சாய்பாபா? கடவுளுக்கு உடல் நிலை சரியில்லையா? அவருக்கு செயற்க்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறதே! அதுவும் மருத்துவர்களின் உதவியோடு! அப்படி இருக்க சாய்பாபா கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ எப்படி இருக்க முடியும்?
3. அவர் யாரையும் பெற்றிருக்கக்கூடாது! யாராலும் பெறப்பட்டவராக இருக்கக்கூடாது
ரஜ்நிஷ் மற்றும் சாய்பாபாவிற்கும் பெற்றோர்கள் உண்டு, மற்ற மனிதர்கள் போல் அவர்களும் தங்களுக்கு பல தேவைகளை பிறரின் உதவியுடன் பெற்றிருக்கிறார்கள். இப்படி இருக்க இவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?
4. அவரைப்போன்று எவறுமே இல்லை!
இந்த கட்டுரையின் மூலமே 2 நபர்களை தெரிவித்துவிட்டோம், தன்னை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கூறும் பட்டியல் நமது இந்தியாவில் நீண்டுகொண்டே போகிறது.
ஆக, மனிதன் ஒரு போதும் கடவுளாக மாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருக்குர் ஆன் கூறுகிறது, கடவுளுக்கு தேவைகள் கிடையாது, சோர்வுகள் ஏற்படாது, பெற்றோர்கள் கிடையாது, குழந்தைகள் கிடையாது, மனோ இச்சைகள் கிடையாது, அவன் மகாத்தூயவன், எந்த ஒரு மனிதனின் பார்வையும் அவனைக் காணமுடியாது அப்படிப்பட்டவேனே இறைவன், அவனை மனிதர்கள் தங்களுக்கு மொழிக்கு ஏத்தவாறு அழைக்கிறார்கள்..

தமிழில் - இறைவன்

ஆங்கிலத்தில் - GOD

ஹிந்தியில் - பகவான்

அரபியில் - அல்லாஹ்
என்று அழைக்கிறார்கள். எனவே நாம் இவ்வுலகிலும் நாளை மறு உலகிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்கள் தான் நம்பிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
ஆக நன்கு சிந்தியுங்கள் உண்மையை உணருங்கள்.
உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமு உண்டாக பிரார்த்திக்கிறேன்!


புதன், 13 ஏப்ரல், 2011

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால்



தாய்ப்பாலிலுள்ள 'ஹேம்லெட்' என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், 'ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!' இதன் சுருக்கம் தான், 'ஹேம்லெட்!'

மனித உடலில், 'ஹேம்லெட்' என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த 'ஹேம்லெட்' மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, சிறுநீர் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, 'ஹேம்லெட்' கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 'ஹேம்லெட்' புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஹேம்லெட்' எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, 'ஹேம்லெட்' அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.
அல்குர்ஆன் 46:15
ஆனால், 46:15வது வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.
கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, "கர்ப்ப காலம் ஆறு மாதம்''  என்று குர்ஆன் கூறுகிறது என்றால் வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.
இறைவன் வேண்டுமென்றே அனைவரும் தெரிந்து வைத்துள்ள நிலைக்கு எதிராகக் கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறை வார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.
மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு என்று தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.
கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்றெல்லாம் கூற முடியாது. ஆய்வும், சோதனைகளும் நடத்திப் பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும் இருக்காது.
இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம் உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர் தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும் உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.
மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத் தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித் துண்டு தான் கருவில் இருந்தது.
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். (23:14)
பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும் மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது. எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய் ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites