அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 12 நவம்பர், 2011

குர்ஆன் & ஹதீஸ் உள்ள கேள்வி பதில்கள் part 2

கேள்வி : நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் ?
பதில் : 950 வருடங்கள் (அல்குர்ஆன் 29:14)
கேள்வி : வித்ர் குனூத்தை நபிகளார் யாருக்கு கற்றுக் கொடுத்தார்கள்?
பதில் : ஹஸன் (ரலி)  நூல் : நஸயீ (1726)
கேள்வி : ஒரே காலத்தில் வாழந்த நபிமார்கள் யார்? யார்?
பதில் : மூஸா அலை) - ஹாரூன் அலை), இப்ராஹீம் (அலை) - லூத் (அலை), இஸ்மாயீல் (அலை), தாவூத் (அலை) - சுலைமான் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை)  (அல்குர்ஆன் 10:5, 11:69,70, 21:78, 2:125)
கேள்வி : எதைக் கூறினால் என் பரிந்துரை கிடைக்கும் என்று நபிகளார் கூறினார்கள்?
பதில் : பாங்கு துஆ  நூல் : புகாரீ (614)
கேள்வி : நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலையின் பெயர் என்ன?
பதில் : ஜுýதீ மலை (அல்குர்ஆன் 11:44)
கேள்வி : நயவஞ்கர்களுக்கு மிகவும் கடுமையாக தோன்றும் இரண்டு தொழுகைகள் எது?
பதில் : பஜ்ர்- இஷா  நூல் : புகாரீ (657)
கேள்வி :வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் யார்?
பதில் : இப்ராஹீம் (அலை), ஸக்கரிய்யா (அலை) (அல்குர்ஆன் 11:72,19 : 8,9)
கேள்வி : வெள்ளிக்கிழமை குளிப்பது யார் மீது கடமை?
பதில் : பருவ வயதை அடைந்தவர்கள்  நூல் : புகாரீ (858)
கேள்வி :முஃமின்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : பிர்அவ்னின் மனைவி, மர்யம்(அலை) (அல்குர்ஆன் 66 : 11,12)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் எந்த மூன்று அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஓதினார்கள்?
பதில் : பகரா, நிஸா,ஆலுஇம்ரான்  நூல் : முஸ்லிம் (1421)
கேள்வி : காபிர்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : நூஹ் (அலை) அவர்களின் மனைவி, லூத் (அலை) அவர்களின் மனைவி (அல்குர்ஆன் 66:10)
கேள்வி : கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் 70 ஆயிரம் நபர்களில் உள்ளவராக யாரை நபிகளார் குறிப்பிட்டார்கள்.
பதில் : உக்காஸா (ரலி),  நூல் : புகாரீ (5705)
கேள்வி : மர்யம் (அலை) அவர்களின் சகோதரர் பெயர் என்ன ?
பதில் : ஹாரூன் (அலை) (அல்குர்ஆன் 19:28)
கேள்வி :அல்லாஹ்விடம் மனிதர்களின் அமல்கள் எடுத்துக்காட்டப்படும் நாட்கள் எது?
பதில் : திங்கள்,வியாழன் நூல் : முஸ்லிம் (4653)
கேள்வி : தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசிய நபி யார்?
பதில் : ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:29,30)
கேள்வி : பெருநாள் தொழுகையின் கூடுதல் தக்பீர்கள் எத்தனை?
பதில் : 7,5  நூல் : திர்மிதீ (492)
கேள்வி : மூன்று நாட்கள் மக்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தவர் யார்?
பதில் : மர்யம் (அலை) (அல்குர்ஆன் 19:26)
கேள்வி : மாதத்தில் எந்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்?
பதில் : பிறை 13,14,15  நூல் : நஸயீ (2377)
கேள்வி : வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதற்கு அடையாளமாக ஸக்கரிய்யா நபிக்கு எதை அல்லாஹ் கூறினான்?
பதில் : நல்ல நிலையில் இருந்தும் மூன்று இரவுகள் மக்களிடம் அவர்களால் பேசமுடியாது (அல்குர்ஆன் 19:10)
கேள்வி : நபிகளார் இறந்த வருடத்தில் எத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்?
பதில் : 20 நாட்கள்  நூல் : புகாரீ (2044)
கேள்வி : அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார்களின் பெயர் என்ன?
பதில் : யஹ்யா (அலை), ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:7, 3:45)
கேள்வி : பிர்தவ்ஸ் என்ற சுவர்க்கத்திற்குரியவர் என்று சொல்லப்பட்ட நபித்தோழர் யார்?
பதில் : ஹாரிஸா (ரலி)  நூல் : புகாரீ (2809)
கேள்வி :மனிதன் இறந்தால் அவனை அடக்கம் செய்ய வேண்டுமென மனிதனுக்கு கற்றுக் கொடுத்தது எது?
பதில் : காகம் (அல்குர்ஆன் 5:31)
கேள்வி : ஷஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது?
பதில் : கடன்  நூல் : முஸ்லிம் (3832)

4 கருத்துகள்:

கேள்வி : மூன்று நாட்கள் மக்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தவர் யார்?
பதில் : மர்யம் (அலை) (அல்குர்ஆன் 19:26பொய்யான தகவல் போடவேண்டாம் فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا‌ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ‌‏ 
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
(அல்குர்ஆன் : 19:26)

فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا‌ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ‌‏ 
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
(அல்குர்ஆன் : 19:26)பொய்

மூன்று நாட்கள் நோன்பும்.மௌனமாக இருப்பது தான் நோன்பு.அக்காலத்தில் வழக்கில் இருந்தது

இஸ்லாத்தில் தற்காலிக கருத்தடை அனுமதிக்கப்பட்டுள்ளதா ? அதன் அரபி சொல் என்ன ?

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites