அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 11 மே, 2011

ஆபாச ஆடைக்கும் ஆண்மைகுறைவுக்கும் தொடர்பு !


பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.
அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.
முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.
அன்பானவர்களே ! வாருங்கள் திருமறையின் பக்கம் ! நம்மை படைத்தவனின் எச்சரிக்கையை செவி தாழ்த்தி கேட்போம் ...
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது
 Quran 24:31
இறுக்கமான ஆடையணிவது கூடாது
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ رواه البخاري
கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது  மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி), நூல் : புகாரி (367)



ஞாயிறு, 8 மே, 2011

அடிமைகள் மீது தாக்குதல்


நபிகள் நாயகம் வரலாறு                                தொடர் : ?
அடிமைகள் மீது தாக்குதல்
எம்.. முஹம்மத் சுலைமான்
கேள்வி : இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைப்படுத்தப்பட்ட அடிமைகள் பெண்கள் யார்?
பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ், ஜாரிஆ, நஹ்திய்யா (ஆதாரம் :அல்இஸாபா11052, 11216,12159)
கேள்வி : இவர்கள் எதனால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்?
பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ். நஹ்திய்யா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைக்கு உள்ளானார்கள். (ஆதாரம் : அல்இஸாபா 11052)
கேள்வி : இவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தவர்கள் யார்?
பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் : தபகாதுல் குப்ரா- இப்னு ஸஅத், பாகம் :8 பக்கம் :255  )
கேள்வி : இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைப்படுத்தப்பட்ட ஆண் அடிமைகள் யார்?
பதில் : ஆமிர் பின் புஹைரா(ரலி),பிலால் (ரலி), ஜைத் பின் ஹாரிஸா (ரலி),
கேள்வி : ஆமிர் பின் புஹைரா(ரலி),பிலால் (ரலி) ஆகியோரை விடுதலை செய்தவர் யார்?
பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் : தபகாதுல் குப்ரா- இப்னு ஸஅத், பாகம் :8 பக்கம் :255  )
கேள்வி : நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது ஆமிர் பின் புஹைரா (ரலி) அவர்கள் எவ்வாறு உதவி செய்தார்கள்?
பதில் : நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட போது ஸவ்ர் குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள் அப்போது அவர்கள் இருவருக்கும் ஆமிர் பின் புஹைரா (ரலி) அவர்கள்தான் உணவாக ஆட்டின் பாலைக் கறந்து வழங்கிவந்தார்கள். (ஆதாரம் : புகாரீ 3906)
கேள்வி : இஸ்லாத்தை ஏற்றததற்காக மக்காவில் அடைத்து கொடுமைபடுத்தப்பட்ட மூன்று நபித்தோழர்கள் யார்?
பதில் : வலீத் பின் வலீத் (ரலி), ஸலமா பின் ஹிஷாம் (ரலி), அய்யாஷ் பின் அபீ ரபீஆ (ரலி) (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : வலீத் பின் வலீத் (ரலி) அவர்கள் யார்?
பதில் : பிரசித்திப்பெற்ற நபித்தோழர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சகோதரர். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : ஸலமா பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் யார்?
பதில் : இணைவைப்பாளர்களின் தலைவன் அபூஜஹ்லின் சகோதரர் ஆவார்கள். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : அய்யாஷ் பின் அபீ ரபீஆ (ரலி) அவர்கள் யார்?
பதில் : இணைவைப்பாளர்களின் தலைவன் அபூஜஹ்லின் தாய்வழிச் சகோதரர் ஆவார்கள். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : அய்யாஷ் பின் அபீ ரபீஆ (ரலி) அவர்கள் எவ்வாறு மக்காவில் அடைக்கப்பட்டார்கள்?
பதில் : ஹிஜ்ரத் செய்து சென்றவர்களை மக்காவிற்கு திரும்பிவருமாறு ஆசை வார்த்தை கூறி அவர்கள் மக்கா வந்தபோது  அவர்களை அடைத்துவிட்டான் அபூஜஹ்ல். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : அடைத்து வைத்து கொடுமைபடுத்தப்பட்ட மூன்று நபித்தோழர்கள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
பதில் : தொழுகையில் குனூத்தில் '' இறைவா! வலீத் பின் வலீத், ஸலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! என்று இவர்களுக்காக பிரர்த்தனை செய்தார்கள். (ஆதாரம் : புகாரீ 4560)
கேள்வி : உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது மக்கள் என்ன செய்தார்கள்?
பதில் : குறைஷி குலத்தவர்கள் உமர் அவர்களைத் தாக்குவதற்காக அவர்கள் வீட்டிற்கு படையெடுத்தனர். (ஆதாரம் : புகாரீ 3864)
கேள்வி : அப்போது உமர் (ரலி) அவர்களை காப்பாற்றியது யார்?
பதில் : ஆஸ் பின் வாயில் என்பவர் (ஆதாரம் : புகாரீ 3864)
கேள்வி : எவ்வாறு பாதுகாத்தார்?
பதில் : அவர் தலைவராக இருந்ததால் உமருக்கு நான் அடைக்கலம் கொடுத்துள்ளேன் எனவே நீங்கள் அவரை ஒன்று செய்யக்கூடாது என்றார். எனவே அவர் பேச்சை மீறமுடியாமல் தாக்கவந்தவர்கள் திரும்பிச் சென்றனர். (ஆதாரம் : புகாரீ 3865)
கேள்வி : இணைவைப்பவர்களின் வேதனை செய்யும்  இரண்டு முறை கூறு!
பதில் : ஒன்று கொலை செய்துவிடுவார்கள். அல்லது கட்டிவைத்து வேதனை செய்வார்கள் (ஆதாரம் : புகாரீ 4650)
கேள்வி : இஸ்லாத்தை ஏற்ற ஸஅத் பின் ஸயீத் (ரலி) எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டார்கள்?
பதில் : கட்டிவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தினார்கள். (ஆதாரம் : புகாரீ3867)
கேள்வி : இவர்களை இவ்வாறு செய்தவர் யார்?
பதில் : உமர் (ரலி) அவர்கள் (அப்போது இஸ்லாத்தை அவர்கள் ஏற்றிக்கிருக்கவில்லை) (ஆதாரம் : புகாரீ3867)
கேள்வி : ஸஅத் பின் ஸயீத் (ரலி) அவர்களுடன் கட்டப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டவர் யார்?
பதில் : அவர்களின் மனைவி பாத்திமா (ரலி) (ஆதாரம் : புகாரீ3867)
கேள்வி : இவ்விருக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் உள்ள உறவு என்ன?
பதில் : உமர் (ரலி) அவர்களின் சகோதரி பாத்திமா (ரலி), ஸஅத் பின் ஸயீத் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மச்சான். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 6942 ஹதீஸின் விரிவுரை)

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites