அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 9 ஜூலை, 2010

`ஸ்டெம் செல்’

ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.
இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.
தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.
இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

Email addresses of Important Offices in Krishnagiri District



Name of the Officer/ Office
Email Address
District Collector
District Revenue Officer 
District Supply Officer 
Special Deputy Collector (CM cell)
DIC
PA to Collector (PD)
Principal District Judge
Assistant Director (Survey) 
National Informatics Centre 
BDO-Krishnagiri
BDO-Kaveripattinam
BDO-Veppanapalli
BDO-Bargur
BDO-Mathur
BDO-Uthangarai
BDO-Soolagiri
BDO-Hosur
BDO-Kelamangalam
BDO-Thally
TIIC, Hosur
Municipal Office, Krishnagiri

Email addresses of Important Offices in Nagapattinam District
Name of the Officer/ Office
Email Address
District Collector
The  Additional collector
The District Revenue Officer
The District  Superintendent of Police
The Principal District Judge
The Project Officer
Personal Assistant to Collector  (General)
Revenue Divisional Officer/ Sub Collector, Nagapattinam
Revenue Divisional Officer , Mayiladuthurai
Sub Collector, Nagapattinam
Personal Assistant to Collector  (Panchayat Development)
Personal Assistant to Collector  (Agriculture)
Personal Assistant to Collector  (Small Savings)
Personal Assistant to Collector  ( Noon Meal Programme)
Assistant Director  (Panchayats)
Assistant Director  (Survey & Land Records)
Assistant Director  (Statistics)
Assistant Director  (Audit)
Assistant Director  (Mines)
Assistant Commissioner  (Excise)
Treasury Officer
Joint Registrar (Co-operatives)
District Supply Officer
District Sports Officer
District Forest Officer
District Social Welfare Officer
Project Officer ( Women Development)
District Adi Dravidar  Welfare Officer
District Project Nutrition  Officer
District Backward Classes Welfare Officer
Special Deputy Collector - Public Grievance Redressal Cell
Deputy Collector - Training
Nehru Yuva Kendra, Nagapattinam
District Rural Development Agency
District Industries Centre
District Planning Cell
Chief Educational Officer
Deputy Director (Health)
Joint Director (Health)
Deputy Director (Tuberculosis)
Public Relations Officer, Nagapattinam District
Customs, Nagapattinam District
Central Excise, Nagapattinam District
The Joint Director (Agriculture)
The Naval Detachment , Nagapattinam
National Informatics Centre
District Informatics Officer,
National Informatics Centre

இன்ஷா அல்லாஹ் தொடரும் ...

நோபல்பரிசு 2009


உலகில் வழங்கப்படும் எத்தனையோ உயரிய விருதுகளில் மிக உன்னதமானதும் மனித மற்றும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக அறிவியல் ஆராய்ச்சிகளை விஞ்ஞானத்தின் அடுத்தபடிகளுக்கு கொண்டு செல்லும் விஞ்ஞானிகளையும், சுற்றுபுற சூழல் மற்றும் மனிதநேய அமைதிக்காக பாடுபடும் மாமனிதர்களையும் கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இவ்விருதை ஆல்பிரட் நோபல் எனும் விஞ்ஞானியின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு உருவாக்கம்
சிறந்த விஞ்ஞானியான ஆல்பிரட் நோபல் டைனமைட் என்னும் வெடிபொருளை கண்டு பிடித்தார். இதன் பயனாக மிகுந்த செல்வமும் பெயரையும் சம்பாதித்தார். ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு தன் கண்டுபிடிப்பை பயன்படுத்த நினைத்த ஆல்பிரட் அழிவு செயல்களுக்கு பயன் படுவதை எண்ணி வருந்தினார். சமூக சிந்தனை யாளரான நோபலுக்கு மனிதகுல ஆக்கத்திற்கு பயன்படும் கண்டுபிடிப்புகளை செய்யும் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதில் உண்டான எண்ணமே மன ஆறுதல் தந்தது. அதனால் முதன் முறையாக 1895- ஆம் வருடம் நோபல் பரிசை உருவாக்கினார். அவர் மறைவிற்குப் பின்னர் நோபல் கமிட்டி உருவாக்கப்பட்டு அதன்மூலம் இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகியவற்றில் சாதனை புரியும் விஞ்ஞானிகளுக்கும், இலக்கியம், பொருளாதாரம் போன்றவற்றில் சாதனை படைக்கும் நிபுணர்களுக்கும் உலக அமைதிக்காக பாடுபடும் தலைவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் கமிட்டி
நோபல் கமிட்டி என்பது நார்வே நோபல் கமிட்டி, கரோலின்ஸ்கா ராயல் ஸ்விஸ் அகாடமி மற்றும் நோபல் சபை ஆகிய நான்கு அமைப்பு களை கொண்டது. ராயல் ஸ்விடிஸ் அகாடமி, ஸ்டாக் ஹோம் ஆகியவை இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் நோபல் பரிசிற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக் கின்றன.
கரோலின்ஸ்கா நிறுவனத்திலுள்ள நோபல் அசெம்பிளி, ஸ்டாக் ஹோம் ஆகியவை மருத்து வத்திற்கும், ஸ்வீடிஸ் அகாடமி ஆகியவை இலக்கியத்திற்கும் நார்வீஜியன் நோபல் கமிட்டி, ஓஸ்கோ அமைதிக்கும் பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறது.
தேர்வு செய்யும் முறை
உலக அளவில் உள்ள விஞ்ஞான அமைப்பு கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களின் பிரதிநிதிகளையும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் அனுப்பி வைத்து அதனுள் தகுதியானவர்களின் கட்டுரைகளையும் ஆய்வு களையும் சிறந்த நிபுணர்களைக் கொண்டு விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சுமார் 6 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 23 காரட் தங்கத்திலான சுமார் அரை பவுண்ட் எடையிலான தங்கப்பதக்கமும்  சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இயற்பியல் துறை
சார்லஸ் கேகாவ்
சீனாவின் ஷாங்காயில் 1933-ஆம் ஆண்டு பிறந்தவர். பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுள்ளார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் 1966- ஆம் ஆண்டு மின் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஷாங்காய் பல்கலைகழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி 1999-ல் ஓய்வு பெற்றவர்.
ஜார்ஜ் இ ஸ்மித்
அமெரிக்காவில் 1930- ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் சிகாகோ பல்கலைகழகத்தில் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக் காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி 1986-ல் ஓய்வு பெற்றவர்.
வில்லார்ட் எஸ் பாய்லே
கனடாவில் 1924-ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். கனடாவில் உள்ள மேக்கில் பல்கலைகழகத்தில் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்கா வின் நியூ ஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி 1974-ல் ஓய்வு பெற்றவர்.
கண்டுபிடிப்புகள்
சார்லஸ் கே காவ் கண்ணாடி இழையில் ஓளியை பயணம் செய்ய வைத்து சாதனை நிகழ்த்தினார்.
வில்லார்ட் எஸ் பாய்லே, ஜார்ஜ் இ ஸ்மித் ஆகிய இருவரும் இமேஜிங் செமி கண்டக்டர் சர்க்யூட்டை (சிசிடி சென்சார்) வடிவமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இதன்மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதும், தகவல்களை இணைய தளம் மூலம் மிகத் துரிதமாக பரிமாறிக் கொள்வதும் சாத்தியமாகும்.
வேதியியல் துறை
இம்முறை வேதியியல் துறையில் நம் இந்தியரான வெங்கட்ராமகிருஷ்ணன் யெடா.இ. யோனத் தாமஸ்ஸ்டீட்ஸ் என்னும் சக விஞ்ஞானிகளுடன் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர். சிதம்பரத்தில் 1952-ஆம் ஆண்டு பிறந்தவர். 1971-ல் குஜராத்தில் உள்ள பரோடா பல்கலைகழகத்தில் இயற்பியலில் பி.எஸ்.சி பட்டம் பெற்று அமெரிக் காவில் உள்ள ஓஹையோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அதன்பின் உயிரியல் ஆய்வில் ஈடுபட்டார். இப்பரிசை பெறும் 3-வது தமிழர், ஏழாவது வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார்.
யெடோ இ. யோனத்
இஸ்ரேலைச் சேர்ந்த யோனத், ஜெருச லேமில் 1939-ல் பிறந்தவர். வைஸ்மான் அறிவியல் கல்லூரியிலிருந்து 1968-ல் எக்ஸ்ரே கிரிஸ்ட லோகிராபி பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தாமஸ் ஸ்டீட்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் விஸ்கான்சின் மாகாணம் மில்வாகியில் 1940-ஆம் ஆண்டு பிறந்தார். ஹார்வார்டு பல்கலைகழகத்திலிருந்து 1966-ல் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.v கண்டுபிடிப்பு
செல்களில் ரிபோசோம்கள் புரதத்தைத் தயாரிக்கின்றன. இந்தப் புரதங்கள்தான் உடல்கூறு வேதியல் பணியை கட்டுப்படுத்துகின்றன. ரிபோசோம்களை உருவாக்கும் ஆயிரக்கணக்கான அணுக்கள் ஒவ்வொன்றின் இட அமைப்பையும் படம் பிடிக்க இம்மூவரும் எக்ஸ்ரே கிரிஸ்டலோ கிராபி முறையை பயன்படுத்தியுள்ளார்.
மேலும் அணு நிலையில் அதன் அமைப்பு, செயல்படும் விதம், எவ்வாறு ரிபோ சோம்களில் ஆண்டிபயோட்டிக்குகள் ஒட்டிக் கொள்கின்றன என்பதை 3-டி. மாதிரிகள் மூலம் விளக்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த தேவையான ஆண்டிபயோடிக் மருந்துகளைத் தயாரிக்க முடியும்.
மருத்துவம்
எலிசபெத் பிளாக்பர்ன்
ஆஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர். பிரிட்டனில் கேம்பி ரிட்ஜ் பல்கலைகழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.
ஜேக் சோஸ்டாக்
லண்டனில் 1952-ல் பிறந்தவர். இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலை கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். 1979 முதல் ஹார்வார்டு மருத்துவ பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார்.
கரோல் கிரெய்டர்
அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தவர். 1987-ல் கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
கண்டுபிடிப்பு
வயோதிகத்திற்கு காரணமான செல் மற்றும் செல் பிரிதலின் போது குரோமோ சோம்கள் எவ்வாறு பிரதி எடுக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இது புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும்.
இலக்கியம்
ஹெர்தா முல்லர்
ருமேனியாவில் பிறந்தவர் ஹெர்தா முல்லர். 1982-ல் தாழ்ந்த பூமி என்ற பெயரில் எழுதிய சிறுகதைகள் மூலம் எழுத்துலகிற்கு அறிமுக மானவர். இவருடைய லேண்ட்ஸ்கேப் ஆப்தி டிஸ்பொசஸ்ட் (வறியவர் பூமி) என்ற படைப்புக்காக இவ்விருது கொடுக்கப்படுகிறது. ருமேனியாவில் வசித்த முல்லரின் பெற்றோர் சிறுபான்மை ஜெர்மனி சமூகத்தைச் சார்ந்தவர்கள். ருமேனியாவில் சிறுபான்மை ஜெர்மனியர் வாழும் கிராமம் ஒன்றில் இழைக்கப்படும் கொடுமைகளை விவரிக்கின்றது இச்சிறுகதை நூல். இதனை ருமேனிய அரசு தடை செய்தது. 1984-ல் இக்கதைகள் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு, அங்கு வெளியிடப்பட்டது. ருமேனிய அரசின் ஊழல் அடக்குமுறை, சர்வாதிகார ஆட்சியை விமர்சித்த இந்நூல் ருமேனிய சர்வாதிகாரி நிகோனு செசேஸ்கு பதவி நீக்கம் செய்யப்பட்டு மரண தண்டனை கொடுக்கப்பட காரணமாயிற்று.
அமைதி
பராக் ஒபாமா
கென்யா நாட்டை சேர்ந்தவருக்கும், அமெரிக்க பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, அமெரிக்காவின் முதல் ஆப்ரிக்க- அமெரிக்க அதிபர் ஆவார்.
சர்வதேச அளவில் தீவிரவாதத்தைக் கட்டுப் படுத்தியது, அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை, நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தியது, பருவநிலை மாற்றம் தொடர்புடைய நடவடிக்கை களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஆகியவையும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை சந்திக்க வைத்து அமைதியை ஏற்படுத்தி யது, ஒபாமாவின் ஐரோப்பிய நாடு களுக்கான புதிய ஏவுகணை பாதுகாப்பு கொள்கைக்கு ரஷ்யா ஆதரவளித்ததன் மூலம் இரு வல்லரசுகளுக்கிடையே பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது போன்றவை ஒபாமாவை நோபல் பரிசு பெற வைத்தது.
பொருளாதாரம்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த எலினோர் ஆஸ்ட்ரோம் மற்றும் ஆலிவர் இ. வில்லியம்சன் ஆகியோர் கூட்டாகப் பெற்றுள்ள னர். பொருளாதார நிர்வாகம் குறித்த அவர் களின் ஆய்வுக்கு இப்பரிசு வழங்கப்படு கிறது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெறும் முதலாவது பெண்மணி என்ற பெருமையை ஆஸ்ட்ரோம் பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட பெண்களில் ஐந்தாமவர் என்ற பெருமையும் இவரையே சாரும். ஒரே ஆண்டில் ஐந்து பெண்கள் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஆஸ்ட்ரோமின் ஆய்வு அறிக்கையானது பொருளாதார நிர்வாகம் சார்ந்தது. இதில் பொது சொத்தை ஒரு குழுவினர் வெற்றிகரமாக நிர்வகிப்பது எப்படி? என்பதை விவரிக்கிறது.
எலினோர் ஆஸ்ட்ரோம்
1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிறந்த இவர் பொருளாதாரத்தில் மிகுந்த நாட்டமுடையவர். இண்டியானா பல்கலைக்கழகத்தில் கணவர் வின்சென்ட் ஆஸ்ரோமுடன் இணைந்து தனி ஆய்வுப் பிரிவைத் தொடங்கியவர். கூட்டுச் செயல்பாடு, அறக்கட்டளை மற்றும் பொது விவகாரங்களில் நிபுணத்துவம் உடையவர். அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு குறித்த ஆய்வு மையத்தின் நிறுவன இயக்குநராகவும் இவர் உள்ளார்.
ஆலிவர் இ. வில்லியம்சன்
1932-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பிறந்த ஆலிவர் இ. வில்லியம்சன் பொருளாதாரத்தில் பரிமாற்றச் செலவு குறித்த ஆய்வை மேற் கொண்டார். ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் முதுகலை நிர்வாகவியல் பட்டமும் கார்னீகி மெலோன் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றார். நிர்வாகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளின் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், பெர்க்ளி பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றுள்ளார். பொருளாதாரம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியுள்ள இவர் வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருது, ஹார்ஸ்ட் கிளாஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
பெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்
Saturday, December 20, 2008 1:55 PM

பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.சாதாரணமாக ஒரு மனிதனின் கையில் 150இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் வாழ்வது இனங்காணப்பட்டுள்ளது.இருப்பினும் மனிதர்களின் கைகளில் மொத்தமாக சுமார் 4700க்கும் மேலான வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.இவற்றுள் பல நோயாக்கிகள் ஆகவும் விளங்குகின்றன.ஆண்களின் கைகள் அதிகம் அமிலத்தன்மை உடையவையாக இருப்பதால் பெண்களோடு ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அங்கு பக்ரீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன.இருந்தாலும் ஆண்களும் பெண்களைப் போலவே பல வகை பக்ரீரியாக்களின் பரவலுக்கும் தொற்றுக்கும் காரணமாக இருக்கின்றனர்.சுரக்கப்படும் வியர்வை,கைகளில் காணப்படும் நெய் சுரப்பிகள் மற்றும் சுரக்கப்படும் ஓமோன்கள் என்பனவற்றின் தன்மையின் அடிப்படையில் பெண்களின் கைகளில் ஆண்களை விட அதிக பக்ரீரியாக்கள் வாழ இடமளிக்கப்படும் நிலை தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித்துவமான கைகளில் ஈரலிப்பை பேணப் பயன்படும் பசைகளைத் தயாரிக்கவும் மற்றும் பக்ரீரியா நீக்கி சுத்திகரிப்பு திராவியங்களை பாவிப்பதன் மூலம் நோய்த்தொற்றல்களை தடுப்பது தொடர்பில் பெண்களையும் ஆண்களையும் அறிவூட்ட கூடிய அளவுக்கு இவ்வாய்பை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.அதுமட்டுமன்றி சில விடைதெரியாத கேள்விகளும் இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து எழுந்திருக்கின்றன.அவற்றுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு ஆராய்ச்சியாளர்களைச் சேர்ந்துள்ளது.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites