அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 28 டிசம்பர், 2011

ARMED POLICE

ARMED POLICE
Lotus Garden, Kilpauk, Chennai - 600 010.
Designation
Officer Name
Contact Numbers
ADGP
Narinderpal Singh, IPS
044-25322233
adgpaptn@gmail.com
IGP
Pramod Kumar, IPS
044-25321212ap.chennai10@gmail.com
DIG Chennai
P. Sakthivelu, IPS
044-26412501
I   Bn – Trichy
C. Jaya Balan
0431-2472695 (F)
 II   Bn – Chennai
J. Gunasekaran
044-26384727
044-26383990(F)
III   Bn – Veerapuram
S.Durairaj
044-26841756
044-26841758(F)
IV   Bn – Kovaipudur
P. Moorthy, IPS
0422-2607260
0422-2607257(F)
V    Bn – Chennai
S. Rajasekar
044-26384585
044-26374444(F)
VI   Bn – Madurai
M. Eswaran
0452-2528518(F)
VII  Bn – Pochampalli

04341-252444(F)
VIII Bn – Delhi
Amit Kumar Singh, IPS
011 28520049 (F)
011-25508252
IX   Bn –Manimuthar
J. Rajendran, IPS
04634-291183
04634-250250
X    Bn –Uludurpet
S. Abdulkani
04149-222486(F)
XI   Bn –Rajapalayam
R. Chinnasamy
04563-257815
XII  Bn –Manimuthuar (CSG)
N. Rajasekaran, IPS
04634-255701
04634-291900 (F)
XIII BN  Poonamallee
N.Kanmani, IPS
044-26271133
XIV Bn – Palani
N. Rajendran,
04545-241788
04545-241799 (F)
XV Bn – Sundarampalli
Tr.R.Samuthirapandi,IPS
044-26841809
044-26841829 (F)
CMT / RC Avadi
K. Balraj
044-26385496
CMT Small Arms
R.A. Jeyapal
044-26373377
CONTROL

044-26432599, 64604562
FAX

044-26428384

சனி, 17 டிசம்பர், 2011

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

மார்பகப் புற்றுநோயை தடுக்கும்  `பாகற்காய்!’

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.
இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.
மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்என்கிறார் இவர்.
ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந்தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.
பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவைஎன்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்என்கிறார் அகர்வால்.
`கேன்சர் ரிசர்ச்பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.
அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.
மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்என்கிறார் அகர்வால்.
அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.
பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்போன்றவற்றைக் கொண்டுள்ளது.

திங்கள், 12 டிசம்பர், 2011

நாசாவில் திப்பு சுல்தான்


வட்டி இல்லா வங்கியே தீர்வு

வட்டி இல்லா வங்கியே தீர்வு


விதர்பா பிரச்சினையைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியே தீர்வு- எம்.எஸ்.சுவாமிநாதன்

சென்னை: விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

நேற்று கூட 30 பேர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்.

சிறு வயதில் எனது பெற்றோர் என்னிடம் இருந்த நகைகளை காந்திஜியிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இவ்வாறு தானமாக பெறப்பட்ட நகைகளை காந்திஜி ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரிஜன மக்களுக்கு உதவினார் காந்தி. எனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் . நம்மிடம் உபரியாக உள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவார். அதனபடி என்னிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் கை வளையத்தை காந்தியிடம் கொடுத்தேன் என்றார் சுவாமிநாதன்.

கருணா ரத்னா விருது என்பது சுற்றுச்சூழலியல் மற்றும் சைவம் மீதான அகிம்சை, அன்பு .ஆகியவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்திப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் விருதாகும். சென்னையைச் சேர்ந்த கருணா இன்டர்நேஷனல் அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது.

இந்த விருதினை இஸ்லாம் மற்றும் சைவம் குறித்த ஆய்வுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற முசாபர் ஹூசேன், புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சின்னி கிருஷ்ணா, சிபிஆர் பவுண்டேஷனைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா ஆகியோர் உள்ளிட்ட நான்கு பேர் பெற்றனர். அவர்களுக்கு விருதுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசும் அளிக்கப்பட்டது.
ஆதாரம் http://thatstamil.oneindia.in/news/2010/04/07/islamic-banking-solve-vidarbha-crisis-swaminathan.html

வியாழன், 8 டிசம்பர், 2011

ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்

ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்

வள்ளியூரான்


ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மாதம் 150 ரூபாய்க்கு ஆன்லைனில் படிக்கலாம்.


பி.எஸ்.என்.எல். நிறுவனம், இணையதளம் மூலம் பள்ளி  மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத்தரும் டில்லியில் உள்ள கிரே செல்ஸ் 18 மீடியாஎன்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம் நடத்தி வருகிறது. முதல் 15 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் படிக்க இலவசம். மாணவர்கள் தொடர்ந்து இந்தச்சேவையைப் பயன்படுத்த விரும்பினால் மாதம் ரூ. 150 கட்டணம் செலுத்தவேண்டும்.


பி.எஸ்.என்.எல். டாப்பர் லேர்னிங்என்ற அந்த இணையதளத்தில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களையும், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களையும் ஆன்லைனில் கற்றுக்கொள்ள முடியும்.


இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் நடப்பு வாழ்க்கையில் எப்படிப் பயன்படுகிறது, ஆய்வுக்கூடங்களில் இப்பாடங்களில் உள்ள சோதனைகளை எப்படி செய்து பார்க்கலாம் என்பது உள்பட பல்வேறு வீடியோ காட்சிகள் ஒவ்வொரு பாடத்திற்கும் 2டி மற்றும் 3டி அனிமேஷன் முறையில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. பாடத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரிவையும் விளக்கமாக கற்றுத்தர 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் தங்கள் பாடங்களில் உள்ள ஒவ்வொரு கேள்வியையும், காட்சிகளாக வீடியோவில் பார்ப்பதால் பாடங்கள் எளிதில் மறந்துபோகாது.


பாடம் சம்பந்தமாக  பார்த்த விஷயங்களை மாணவர்கள் எந்தளவிற்கு புரிந்துகொண்டார்கள்  என்பதை சோதிக்க இந்த இணையதளத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான மதிப்பெண்களையும் உடனடியாக தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொருத்து அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான யோசனைகளை வல்லுநர்கள் அளிக்கும் வசதியும் இந்த இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் ஒவ்வொரு பாடத்திற்கும் பள்ளியில் அளிக்கும் வீட்டுப் பாடத்தில் ஏதேனும் புரியாத விஷயங்கள் இருப்பின் அதையும் இந்த இணையதளத்தில் கேள்விகளாக கேட்கலாம். கேள்விகளுக்கான விடைகள் வீடியோ வாயிலாகவோ அல்லது எழுத்து வடிவமாகவோ மாணவர்களுக்கு அளிக்கப்படும்.


இந்த இணையதளத்தில் வகுப்பு நடத்தும் அனைத்துஆசிரியர்களும் முக்கியக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்  ஆவார்கள். இவர்களிடம் தொடர்புகொண்டு பேச நினைக்கும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறவும் இந்த இணையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


இதுதவிர புத்தகங்களில் உள்ள பாடங்களை ஆன்லைனில் பி.டி.எஃப். வடிவத்தில் மாணவர்கள் பார்க்க முடியும். முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், மாதிரி கேள்வித்தாள்கள் மற்றும் அதற்கான விடைகளும் இந்த இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த கேள்விகளுக்கு எப்படி விடையளிக்க வேண்டும். எந்தக் கேள்விக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில்  பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் டிப்ஸ், லேட்டஸ்ட் கல்விச் செய்திகளையும் இந்த இணையதளத்தைப்  பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.


பிளஸ் டூ படித்து முடித்தப்பிறகு ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சேருவதற்கான யோசனைகள், வழிமுறைகளையும் நிபுணர்கள் இந்த இணையதளத்தில் வழங்குகிறார்கள். பிளஸ் டூ முடித்தப் பிறகு அல்லது எந்தெந்தப் படிப்புகளுக்கு என்னமாதிரியான வேலைகள் இருக்கின்றன என்பதுபோன்ற தகவல்களும் தொகுத்து வைக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் எந்தப் படிப்புக்கு என்ன வேலை என்று மற்றவர்களைக் கேட்டு தெரிந்து கொள்வதற்குப் பதிலாக தாங்களாகவே படித்து தெரிந்துகொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்கியுள்ளது.


இத்தனை சிறப்பு அம்சங்கள் பொருந்திய இந்த இணையதளத்தில் கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் தொகுத்து அளிக்கப்பட உள்ளன. வகுப்பறையைத் தாண்டி பாடம் சம்பந்தமான பல கேள்விகளை படக் காட்சிகளாக தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த இணையதளத்தைப் பார்த்துப் பயனடையலாம்.


விவரங்களுக்கு: http://bsnl.topperlearning.com

பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்!


திங்கள், 21 நவம்பர், 2011

ஆதார் அட்டை விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள்


ஆதார் கார்ட் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்ற இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். மக்கள் மனங்களில் எழும்பும் ஆதார் பற்றின கேள்விகளுக்கு இதோ பதில்கள்
ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது 12 எண்களைக் இலக்கங்களைக் கொண்ட ஒரு எண். இதை யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா தனது எல்லா குடிமக்களுக்கும் வழங்குகிறது. இந்த எண்ணில் புகைப்படம் உள்ளிட்ட ஒருவரைப் பற்றின மிக முக்கிய தகவல்கள் ஒரு சென்ட்ரல் டேட்டா பேஸில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆதார் ஒப்புநோக்க எளிதானது மேலும் தனிதன்மையுடையது என்பதால் கள்ள எண்களையும் தவறான தகவல்களையும் தவிர்க்க ஏற்றது. ஜாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றானது.
1. இது ஒரு 12 இலக்க எண்அட்டை மட்டுமல்ல
2. அனைவருக்கும் ஆனது. கைக்குழந்தைகளுக்குக் கூட. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக ஆதார் யு.ஐ.டி எண் கொடுக்கப்படும்.
3. அது இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் தருகிறது. குடியுரிமை பற்றினது அல்ல. இந்தியர்களுக்கு மட்டுமானதும் அல்ல.
4. ஆதார் கார்ட் பெற்றுக் கொள்வது விருப்பத்தின் பேரிலானது, கட்டாயம் அல்ல.
5. நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
6. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிபட்ட ஆதார் அடையாள எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்ணுக்கு மேல் கிடைக்காது.
7. யு.ஐ.டி ஒரு தனி நபர் பற்றின அரசாங்க மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் அளிக்கும். மேலும் விபரங்கள் ஏதும் யு.ஐ.டி கொடுக்காது.
8.ஆதார் யு.ஐ.டி எண் விபரங்கள் ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு பயன்படும்..ஆனால் அவற்றுக்கு மாற்றாகாது.
எதற்காக ஆதார் பெற வேண்டும்?
1. கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன் தரத்தக்கது
2. தெளிவான அடையாளம் தரும் ஒரு நபருக்கு
3. வங்கிகளில் ஏழைகளும் எளிதில் கணக்கு வைத்துக் கொள்ள ஏது செய்யும்
4. அரசாங்க மற்றும் தனி நபர் நிறுவனங்களின் சேவைகளை ஏழைகளும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
5. பிரயாணிகளுக்கு அடையாளப் பிரச்சினைகளில் இருந்து விடுதலை
6. அரசாங்கத்தின் நலம் தரும் திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவும் போய்ச் சேரவும் எளிதாக இருக்கும்
யாரெல்லாம் ஆதார் பெற்றுக்கொள்ளலாம்?
இந்தியாவில் வசிக்கும் மற்றும் யு.ஐ. டி.ஏ.ஐ யின் வெரிஃபிகேஷனை திருப்தி செய்யும் எவரும் ஆதார் பெறலாம்.
எப்படி பெறுவது?
உள்ளூர் ஊடகங்களில் ஆதார் பற்றின பிரச்சாரங்கள் செய்வார்கள். ஊடகங்களில் தெரிவிக்கப்படும் (ஆதாரங்களை)  certain documents எடுத்துப் போக வேண்டியிருக்கும்.
என்னென்ன ஆதாரங்கள் தேவைப்படும்?
பதிவு செய்யும் நேரம் தேவைப்படும்ஆவணங்கள்
1. (ஆதார் விண்ணப்பப் படிவம்) Aadhaar application form
2. வசிப்பிடம் பற்றின தகவல்
3. அடையாள அட்டை புகைப்படத்துடன்
ஒவ்வொரு ஊருக்கும் இவை மாறுபடலாம்
தேவைப்படும் தகவல்கள்
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பால்
4. முகவரி
5. பெற்றோர் மற்றும் காப்பாளர் பற்றின தகவல்
6. தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈ மெய்ல் முகவரி
மேலும்
1. புகைப்படம்
2. 10 விரல் அடையாளங்கள்
3. விழிப்படல அடையாளம்
எங்கு பதியலாம்?
இங்கு சொடுக்குங்கள் Enrollment camps
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கும்?
இங்குசொடுக்கவும் Aadhaar application form
பதிவு செய்து கொள்ளும் முகாம்களில் படிவங்கள் கிடைக்கும் அல்லது இங்கு பிரிண்ட் செய்து கொள்ளலாம் சொடுக்கவும்  here. 
ஆதார் ஹெல்ப் லைன் தொலை பேசி எண்: டோல் ஃப்ரீ எண் : 1800-180-1947
ஆதார் படிவத்தில் அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
பதிவு செய்து கொள்ளும் போதே தவறுகளை நேரில் பார்த்து சரி செய்து கொள்ள வசதி உண்டு. அப்படியும் பிழைகள் நேர்ந்தால்.. 48 மணி நேரத்துக்குள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்று சரி செய்து கொள்ளலாம்.
ஆதார் கார்ட் விண்ணப்பித்து எத்தனை நாளில் கிடைக்கும்?
பல சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருப்பதால் 60 லிருந்து 90 நாட்கள் ஆகலாம்.
விண்ணப்பம் மறுக்கப்படுமா?
மறுக்கப்படலாம்
1. தவறுகள் நேர்ந்தால்
2. மேலும் உங்களைப் பற்றின உடற்கூறு ரீதி ஆதாரம் மற்றும் ஒருவரின் ஆதாரமும் ஒன்று போல் இருந்ததால்.
சரி பார்க்கப்பட்ட பின் ஆதார் கார்ட் வழங்கப்படும்.

இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Tamil

பூர்த்தி Aadhaar சேர்க்கை படிவத்தை சேர்த்து, பின்வரும் ஆவணங்களை நோட்டரி / அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அசல் அல்லது மந்தை பிரதிகளை உற்பத்தி இருக்க வேண்டும். 

அடையாள * சான்று (PoI) 
முகவரி    * சான்று (PoA)
பிறந்த     * தேதி (DoB)

Uid வலைத்தளம் படி, பின்வரும் சான்றாக ஏற்று எந்த ஆவணங்கள் உள்ளன. நீங்கள் பட்டியலிடப்பட்ட ஆவணங்கள் சில அல்லது எந்த இல்லை என்றால், தொடர்ந்து இருக்கும் வழிமுறைகள் 'சான்று ஆவணங்களை இல்லை எனில் ஒரு' கீழே பிரிவில் பார்க்க.

அடையாள சான்று (PoI), (பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட) 
1.பாஸ்போர்ட்  
2.நிரந்தர கணக்கு எண் அட்டை
3.ரேஷன் / PDS புகைப்பட அட்டை
4.வாக்காளர் அடையாள அட்டை
5.ஒட்டு உரிமம்.
6. அரசு புகைப்பட அடையாள அட்டைகள்
7. NREGS வேலை அட்டை
8. அறியப்பட்டதா கல்வி நிறுவனம் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை
9. படைக்கல உரிமம்
10. Photo வங்கி ஏடிஎம் கார்டு
11. Photo கடன் அட்டை
12. ஓய்வு கால ஊதியம் பெறுபவர் புகைப்பட அட்டை
13. சுதந்திர போராட்ட வீரர் புகைப்பட அட்டை
14. ஜாம் புகைப்பட கைச்சாத்து புத்தகம்
15. CGHS / ECHS புகைப்பட அட்டை
16. முகவரி அட்டை பெயர் மற்றும் தபால் திணைக்களம் வெளியிட்ட புகைப்பட கொண்ட
17. லெட்டர் ஹெட் குழு ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட கண்டறிந்து கொண்ட நிகழ்வு சான்றிதழ்

புகைப்படங்கள் இல்லாமல் ஆவணங்கள் ஏற்று முடியாது. பழைய புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ள உள்ளன.
முகவரி சான்று (PoA) (பெயர் மற்றும் முகவரி அடங்கிய)

1. பாஸ்போர்ட் 
2. வங்கி அறிக்கை / கைச்சாத்து புத்தகம்
3. தபால் கணக்கு அறிக்கை / கைச்சாத்து புத்தகம்
4. ரேஷன் அட்டை
5. வாக்காளர் அடையாள அட்டை
6. ஒட்டு உரிமம்7. அரசு புகைப்பட அடையாள அட்டைகள்
8. மின்சார பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை)
9. தண்ணீர் பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை) 
10. தொலைபேசி தொலைபேசி பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை)
11. சொத்து வரி ரிசிப்ட் (இல்லை பழைய விட 3 மாதங்கள்)
12. கடன் அட்டை அறிக்கை (இல்லை பழைய விட 3 மாதங்கள்)
13. காப்பீட்டு ஆவணம்
14. லெட்டர் ஹெட் வங்கி புகைப்பட கொண்ட கையெழுத்திட்ட கடிதம் 
15. லெட்டர் ஹெட் பதிவு நிறுவனம் வெளியிட்ட கையெழுத்திட்ட கடிதம் கொண்ட புகைப்பட
16. லெட்டர் ஹெட் அறியப்பட்டதா கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்ட கையெழுத்திட்ட கடிதம் கொண்ட புகைப்பட 
17. NREGS வேலை அட்டை
18. படைக்கல உரிமம்  
19. ஓய்வு கால ஊதியம் பெறுபவர் அட்டை
20. சுதந்திர போராட்ட வீரர் அட்டை
21. ஜாம் கைச்சாத்து புத்தகம்
22. CGHS / ECHS அட்டை
23. லெட்டர் ஹெட் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அல்லது குழு மூலம் ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட முகவரி கொண்ட நிகழ்வு சான்றிதழ்
24. கிராம பஞ்சாயத்து தலைவர் வழங்கப்பட்ட முகவரி அல்லது அதன் சமமான அதிகாரம் சான்றிதழ் (கிராமப்புறங்களில்)
25. வருமான வரி மதிப்பீட்டு ஆணை
26. வாகன பதிவு சான்றிதழ் 
27. பதிவு விற்பனை / லீஸ் / வாடகை ஒப்பந்தம்
28. தபால் திணைக்களம் வெளியிட்ட புகைப்பட கொண்ட முகவரி அட்டை
29. ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் மாநில அரசு வெளியிட்ட புகைப்படம் கொண்டிருக்கும்.

பிறந்த தேதி (DoB) ஆதாரம் (பெயர் மற்றும் DoB கொண்டு)

1. பிறப்பு சான்றிதழ்
2. SSLC புத்தக / சான்றிதழ்
3. பாஸ்போர்ட்
4. லெட்டர் ஹெட் குழு ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட பிறந்த தேதி சான்றிதழ்
Introducer கணினி - ஒரு சான்று ஆவணங்களை வேண்டும் எனில் ஆதாரம் ஆவணங்களை இல்லை மக்கள் வழக்கில், ஒரு introducer அமைப்பு அங்கே உள்ளது. சேரல் இன்னும் பதிவாளர் ஒரு நபர் தகவல் செல்லுபடியாகும் தன்மையை உறுதி கூறுவேன் நபர்கள் உருவாக்க முடியும். Introducers அரசாங்க முகவர், வங்கிகள், ஆசிரியர்கள், கிராம postmen, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இருக்க முடியும். Introducers முதல் கொடுக்கப்பட்ட பயிற்சி சேர்ந்தார் வேண்டும். அவர்களின் uid சேர்ந்தார் யார் நபரின் விவரங்கள் மத்தியில் சொல்லப்படும்.
ENGLISH

Along with the filled Aadhaar enrollment form, following documents need to be produced in original or attested copies from notary/gazetted officer.
  • Proof of Identity (PoI)
  • Proof of Address (PoA)
  • Date of Birth (DoB)
As per the UID website, following are the documents which will be accepted as proof. If you don’t have some or any of the listed documents, see the bottom section ‘In case one does not have documents for proof’ for the procedure to be followed.

Proof of Identity (PoI) (containing name and photo)

  1. Passport
  2. PAN Card
  3. Ration/ PDS Photo Card
  4. Voter ID
  5. Driving License
  6. Government Photo ID Cards
  7. NREGS Job Card
  8. Photo ID issued by Recognized Educational Institution
  9. Arms License
  10. Photo Bank ATM Card
  11. Photo Credit Card
  12. Pensioner Photo Card
  13. Freedom Fighter Photo Card
  14. Kissan Photo Passbook
  15. CGHS / ECHS Photo Card
  16. Address Card having Name and Photo issued by Department of Posts
  17. Certificate of Identify having photo issued by Group A Gazetted Officer on letterhead
Documents without photos will not be accepted. Older photos are acceptable.

Proof of Address (PoA) (containing name and address)

  1. Passport
  2. Bank Statement/ Passbook
  3. Post Office Account Statement/Passbook
  4. Ration Card
  5. Voter ID
  6. Driving License
  7. Government Photo ID cards
  8. Electricity Bill (not older than 3 months)
  9. Water bill (not older than 3 months)
  10. Telephone Landline Bill (not older than 3 months)
  11. Property Tax Receipt (not older than 3 months)
  12. Credit Card Statement (not older than 3 months)
  13. Insurance Policy
  14. Signed Letter having Photo from Bank on letterhead
  15. Signed Letter having Photo issued by registered Company on letterhead
  16. Signed Letter having Photo issued by Recognized Educational Instruction on letterhead
  17. NREGS Job Card
  18. Arms License
  19. Pensioner Card
  20. Freedom Fighter Card
  21. Kissan Passbook
  22. CGHS / ECHS Card
  23. Certificate of Address having photo issued by MP or MLA or Group A Gazetted Officer on letterhead
  24. Certificate of Address issued by Village Panchayat head or its equivalent authority (for rural areas)
  25. Income Tax Assessment Order
  26. Vehicle Registration Certificate
  27. Registered Sale / Lease / Rent Agreement
  28. Address Card having Photo issued by Department of Posts
  29. Caste and Domicile Certificate having photo issued by the state government.

For Date of Birth (DoB) proof (having name and DoB)

  1. Birth Certificate
  2. SSLC Book/Certificate
  3. Passport
  4. Certificate of Date of Birth issued by Group A Gazetted Officer on letterhead

In case one does not have documents for proof – Introducer System

In the case of people who do not have documents for proof, there is an introducer system. The Registrar for enrollment can designate individuals who can vouch for the validity of a person’s information. Introducers can be government agencies, banks, teachers, village postmen, elected representatives and NGOs. Introducers will be enrolled first and given training. Their UID will be mentioned among the details of the person who gets enrolled.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites