அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 5 ஜூன், 2010

புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா…?

ஆசிரியர் ஷஹித் பழனி பாபா
என்னுரை
அன்புச் சகோதரர்களே!
சாந்தியும் சமாதானமும் நம் மீது உண்டாகட்டும்!
என்னை ஆத்திரத்தோடு பார்க்காதீர்கள்; அதிலுள்ள நிறைகள் உங்களுக்குத் தெரியாது!! அனுதாபத்தோடு பார்க்காதீர்கள். அதிலுள்ள குறைகளும் தெரியாது போய்விடும். எனவே நடுநிலையோடு பாருங்கள். நாளைய இளைய சமுதாயத்துக்கும் நல்ல வழி காட்டிய பெருமை சேரும்.
“பைபிள்” இது கடந்த 7 நூற்றாண்டுகளாக அதிகம் அச்சடிக்கப்படும் நூல். 14-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் “காக்ஸ்டன்” என்பவர் அச்சு இயந்திரம் கண்டு பிடித்ததும் முதன் முதலில் அச்சு ஏறிய புத்தகம் தான் “பைபிள்”.
இதன் வரலாற்றுச் சுருக்கம்
மோசஸ் (முஸாநபி)க்கு வழங்கிய பழைய ஏற்பாடும் புனித ஆவிகள் புகுந்து வெளிப்படுத்திய ” புதிய ஏற்பாடுகளும்” கலந்த கலவை நூல் புனித வேதாகமம்.
இது தான் கிறிஸ்துனர்களும் யூதர்களும் கூறும் கூற்று.
இன்றைய உலகின் இரண்டாவது மிகப் பெரிய இனமான கிறிஸ்துவர்கள் இதை ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.
இந்நூல் குறித்து உலகின் மூன்றாவது பெரிய மார்க்கமான இஸ்லாமியர்களின் “திருக்குர்-ஆனும்” அதிகமாகவே கூறுகிறது.
‘தவ்ராத்’Old Testament என்றால் இன்ஜீல் என்றால் New Testament ஏசு நாதருக்கு அருளப்பட்டது.’திருக்-குர்-ஆன்’ முஹம்மது நபிகள் பெருமானாருக்கு அருளப்பட்டது என்கிறார்கள். இன்று வேதத்தை உடைய மக்கள் நால்வரே.
யூதர்கள்- பழைய ஏற்பாடு
கிறிஸ்தவர்கள் -பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கலந்த பைபிள்.
முஸ்லிம்கள் – குர்-ஆன்
இந்துக்கள் – ரிக்,யஜுர்,சோமா,அதர்வனா
எச்சமயமும் சாராமைக்கு – திருக்குறள்
இவையனைத்துமே ஆண்டவனால் அருளப்பட்டது. எக்காலத்துக்கும் எச்சமூகத்துக்கும் எச்சூழ்நிலைக்கும் ஏற்றவையாக உள்ளது என்று எல்லோருமே கூறி எக்காளமிடுகிறார்கள், வாதாடுகிறார்கள், வழக்கிடுகிறார்கள், வம்பிடுகிறார்கள், வன்மையான போருமிடுகின்றனர்.
எனவே எது ஆண்டவனால் அருளப்பட்ட புனித நூல்? எது எச்சமூகத்துக்கும் எச்சூழ்நிலைக்கும் ஏற்றவை என்பதை, எது சாதாரண பாமர மகனும் படித்துப் பின்பற்றத் தகுந்தவையாக உள்ளது என்பதையும் நடுநிலையோடு மதவெறிக்கு அப்பாற்பட்டு, உள்ளதை உள்ளபடி உரைக்கின்றேன்.
ஏற்றுக்கொள்வதும் எடுத்து எறிவதும் உங்கள் தலையெழுத்தைப் பொருத்த விஷயம். நீங்கள் ஏற்றுக் கொள்வதால் நான் வளர்ந்து விடப் போவதுமில்லை, எடுத்து எறிவதால் தளர்ந்து விடப்போவதுமில்லை. பரந்த மனதோடு திறந்து வைக்கிறேன். திறந்த மனதுள்ளவர்களுக்காக!
எது புனித நூல்?
இறைவனால் அருளப்பட்ட நூலாயிருக்கின்ற ஒன்று. எவ்வித மாற்றங்களும், முரண்பாடுகளுக்கும், விதண்டா வாதங்களுக்கும் சந்தேகத்துக்கும் இடமின்றி அசிங்கங்களுக்கும், அனாச்சாரங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவர் படித்து அர்த்தம் சொல்ல அன்னை,தங்கை, தம்பி,உறவுகளுடன் உட்கார்ந்து பயபக்தியோடு கேட்டு ஆமோதித்து ஜபிக்கப்பட வேண்டும். இதுவே சுருக்கமான அளவுகோல்!!
அஹ்மத் அலி பழனி பாபா
ஆகாயத்திலே நடந்த உண்மை
(Gulf Airlines) கல்ப் ஏர்லைன்சில் நான் கொழும்பு விமான நிலையத்திலிருந்து பஹ்ரின் செல்கிறேன். நான் முதல் வகுப்பில் ஏறுகிறேன்.மூன்றாம் வகுப்பு முழுவதுமிலங்கையிலிருந்து வேலை பெற்றுஅ செல்லும் பணியாட்கள். முதல் வகுப்பு காலியாக உள்ளது.
கடந்த 22 வருடங்களாக பைபிளையும் மற்ற வேதங்களையும் ஆராய்ந்து, பல மதத்தவர்களுடன் நெருங்கிப் பழகி வாதிட்டு அவர்கள் கூறும் விளக்கங்களையும் அடக்கத்துடன் கூர்ந்து ஏற்று என் அறிவுப்பசிக்குத் தீனி தேடிக் கொண்டவன்.
பைபிளை எடுத்து வைத்துப் படிக்கிறேன். நான் பெரும்பாலும் அரபி உடைகளையே விரும்பி அணிவேன். மேலொட்டமாய்ப் பார்த்தாலும் கிறிஸ்துவ தோற்றம். தலையை மூடியிருப்பதைக் கண்டால் முஸ்லிமின் வடிவம். 20 நிமிலம் கழித்து பயணிகள் அதிகமில்லாததால் பணிப்பெண் வந்து பணிவிடைகளை முடித்து விட்டு என் தேவைகளுக்காக நின்றவர் நீண்ட நேரம் குழம்புகிறார். பின்னர் மெதுவாய் பாதர் நீங்கள் கிறிஸ்துவரா? முஸ்லிமா? என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்கிறார்.
“ஆட்சேபகரமற்று நான் ஒரு முஸ்லிம்” என்றேன்.
“முஸ்லிம் கையில் பைபிளா? ஏனிந்த மாற்றம்? எப்படி வந்தது இந்த ஆகர்ஷனம் (Attraction? பைபிளின் புனிதம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்! தேவனின் மகிமையை என்னென்பேன். ஒ! ஜீஸஸ்” கண்களில் நீர்த்துளிகள். மெய்சிலிர்க்கப் பேசுகிறார்.
அவரின் ஆதங்கம் தணியும் வரை நான் மவுனமாயிருக்கிறேன். பிறகு மெதுவாய்ப் பேசினேன்.
“சகோதரியே! உங்கள் வயது?”
“22 வயது”
” எனக்கு 38 வயது ஆகிறது. நீங்கள் பைபிளை எத்தனை வருடமாய் படிக்கிறீர்கள்?”
” சிறு வயது என்றால், சுமாராக எத்தனை வயதில்?”
” 12 வயது முதல்!”
” அப்படியானால் 10 வருடமாய் படிக்கிறீர்கள்- நான் எனது 15 வயது முதல் இன்று 23 ஆண்டுகளாய் படிக்கிறேன்.!”
” நானும் ஐந்து ஆறு வருடமாய் தீவிரமாய் படிக்கிறேன்!”
” நீங்கள் – புராட்டஸ்டண்டா – கத்தோலிக்க்ரா? பியூரிட்டடா – கிறிஸ்துவரின் எப்பிரிவு?
” நான் ரோமன் கத்தோலிக்!”
” வெரிகுட்! உங்களுக்குள் இத்தனைப் பிரிவுகளும் ஒரே பைபிளை கடைப்பிடிக்கிறீர்களா?”
” இல்லை . நான் தேர்ந்தெடுத்தது K.J.V (King James) வர்ஷன்.”
” பைபிளை எழுதியது யார்?”
” யார் சொன்னது எழுதியது என்று? பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டது?”.
” யார் மூலமாக?”
” ஏசுநாதர் (ஈஸா நபி) மூலமாக!”
” அப்படி என்றால் அதற்கு முன் பைபிள் இல்லையா?”
” அதன் பெயர் பழைய ஏற்பாடு (Old Testament) ”
” ஏசுநாதர் தான் இதை அருளினார் என்று பைபிளில் எங்கே போட்டுள்ளது? நான் தான் கடவுள்; என்னையே வணங்குங்கள்; என்று ஏசு எங்காவது ஓரிடத்தில் சொல்லி உள்ளாரா?”
” பார்த்துத் தான் சொல்ல வேண்டும்.”
” சரி போகட்டும் என் சகோதரியே!
ஒரு புனித நூல் என்றால் – கடவுளிடமிருந்து இறங்கியது என்றால், அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாதல்லவா?”
” கட்டாயமாக!”
” இறங்கியது முதல் அது உருமாறாது யாராலும் திருத்தப்படாது, அப்பழுக்கற்று அப்படியே இருக்க வேண்டுமல்லவா?”
” நிச்சயமாக!”
” சகோதரியே! எல்லா சுவரிலும் எல்லாச் சர்ச்சுகளிலும் பொதுவாக என்ன எழுதி உள்ளது? ஏசு எதற்காக இப்பூவுலக்கு வந்தார்?”
” ஏசு சமாதானத்தை போதிக்க வந்தார் என்று எழுதியுள்ளது. ஏசு சமாதானத்தையே விரும்பினார் என்று நாங்களனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்.”
” சகோதரியே, பைபிளில் என்ன போட்டுள்ளது பாருங்கள்.”
என்கையிலுள்ள பைபிளை தருகிறேன்.
49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.
53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
லூக்கா – 12:49,51,52,53
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு – 10:34,35
ஏசுவின் வரிகளைச் சுட்டிக்காட்டியதும், பைபிளை என் கையிலிருந்து பிடுங்கி மேற்படி வசனங்களை திரும்பத் திரும்ப படிக்கிறார்.
முகம் சிவக்க, மனம் குழப்ப, புருவம் நெளிய தயவுடன் கொஞ்சம் இருங்கள்!(Excuseme) எனக்கூறிவிட்டு நெரெ(Cabincrew) பணிப்பெண்கள் அறை நோக்கிச் சென்று தனது பைபிளை எடுத்து புரட்டுகிறார். அட்டை, விலாசம்,அடிக்கப்பட்ட இடம் இவைகளை சரிப்பார்க்கிறார். இரண்டும் ஒன்று தான். வாசகங்களும் ஒன்றே! ஒரு பாட்டில் நீர் கொண்டுவந்து முழுவதும் குடிக்கிறார், வியர்வைத் துடைக்கிறார், சோர்ந்து அமர்கிறார், தன் கண்களையே நம்ப முடியாது தவிக்கிறார்.
அவரின் குழப்ப நிலையைக் கண்ட நான் ” என்ன அன்புச் சகோதரியே! தங்கள் மனம் புண்படும்படி நான் ஏதாவது கூறியிருந்தால் மன்னியுங்கள். எனக்கு உங்கள் வயதில் சகோதாரிகளுண்டு.என் கருத்தை நான் கூறவில்லை. பைபிளில் உள்ளதையே எடுத்து வைத்தேன்! பாவம் உங்கள் 10 ஆண்டு பைபிளின் பாசத்தை நான் சிதைத்து விட்டேனா?”
‘ இல்லை சார், எனக்கு அதிர்ச்சியாய் உள்ளது! எப்படி இப்படி எழுதப்பட்டுள்ளது? யார் இப்படி செய்தது? என்னால் நம்ப முடியவில்லை!’
” சகோதரியே, அதை முஸ்லிம்களோ இந்துக்களோ செய்யவில்லை, செய்யவும் முடியாது. இதை சரிபார்த்தவர்கள் லிஸ்ட்டில் 32 மேதாவிகள் (Bible Scholars and 52 Demominations) 52 – உயர் பாதிரிஸ்தானிகர்கள் கூடி சரிப்பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனால் மொழிபெயர்ப்பில் கோளாறு இல்லை. அப்படிக் கருத்தில் கொண்டாலும் இதோ தழிழ் பிரதி, இதுவும் அப்படியே! இதோ அரபிப்பிரதி” (தனக்கும் அரபி தெரியும் என்று வாங்கிப் படிக்கிறார்) ஆமோதிக்கிறார்.
” சகோதரியே! ஏசுநாதர் பேசிய மொழி என்ன?”
” அராமிக் (ARAMIC)”
” பைபிளிம் மூலப்பிரதி எந்த மொழியில் இருந்தது?”
” ஹிப்ரு (HEBREW)”
” தற்போது அராமிக் மொழியும் வழக்கில் இல்லை, மூலப்பிரதியும் காணாது போய்விட்டது.”
” அராமிக் வழக்கில் இல்லை – பைபிளின் மூலப்பிரதி காணாது போய்விட்டது என்று யார் சொன்னது?”
” பைபிளே சொல்கிறது.”
கடைசியில் திறந்து Summary of the book of the bible ( நூல் வரலாறு)K.J.V என்ற தலைப்பின் கீழ்: அதில் உள்ள வாசகம் இதோ!
NEW TESTAMENT
The New Testament, Which has a total of twenty seven Books, being with the four Gospels, which record the life and teachings of christ from four different view points Although the Originai autograph No Longer Exist.
27 புத்தகங்களைக் கொண்ட புதிய ஏற்பாடானது 4 சுவிஷேஷங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏசுநாதரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நாலு கோணங்களில் பதிவு செய்கிறது. அதன் மூலப்பிரதி காணாமல் போய்விட்டதால்…
” சகோதரியே, நிலைமை இப்படி இருக்க நீங்கள் எதைவைத்து இதை நிருபிப்பீர்கள்? கடவுளால் அருளிய வேதம் காணாமல் போனதா? எப்படிச் சகோதரியே நம்புவது? காலம் காலமாய் கடைசி நாள் கியாமத் (Day of Judgemant) வரை வழிகாட்ட வேண்டிய நூல் எங்கோ வழி தவறினால், அதைப் பின்பற்றினால் என்ன நிலைமை? குருடன் குருடனுக்கு வழிக்காட்டினால் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதுவும் வழிகாட்ட வந்த முதல் குருடனே காணாது போன பின், அடுத்தவன் அழைக்கிறான் – வாருங்கள் அவன் காட்டிய பாதையில் நான் கூட்டிச் செல்கிறேன், ” ஏசு அழைக்கிறார்” என்று கூப்பாடு போட்டால் – எப்படியம்மா ஏற்றுக் கொள்வது? நான் பரந்த மனதுடனே கேட்கிறேன் எது சரி – சகோதரியே?
பிறகு, ” ஏசுவை நீங்கள் என்னவென்று நினைக்கிறீகள்?” என்றேன்.
” அவரே கடவுள் என்று எண்ணி வழிபடுகிறேன்” என்றார்.
” சரி – அவர் கடவுள் என்றால் , எதை வைத்து அவரைக் கடவுள் என்கிறீர்கள்?”
” ஒரே வரி உலகில் யாருமே உடலுறவற்று பிறக்கவில்லை. அவரே – அவர் மட்டும் தந்தையற்று பிறந்துள்ளார்”.
” தந்தை இல்லாது பிறந்ததனால் மட்டுமே அவர் இறைவன் என்றால் அதே பைபிளில் வரும் ஆதம் – ஏவாள் (ADAM & EVE) தாயுமற்று தந்தையுமற்று பிறந்துள்ளானரே! அவர்களை எப்படி அழைப்பது Super God என்றா?
ஆரம்பமும் அர்று முடிவும் அற்று, தாயும் இன்றி தகப்பனும் இன்றி, வம்ச வரலாறு, வம்ச வழியும் இன்றி, சமாதானத்தின் ராஜா மெல்கிதேக்கு(Kings of Peace)என்றழைக்கப்படும் தீர்க்கதரிசி பற்றி பைபிளின் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் வருகிறதே – அதிகாரம் 7:2 முதல் 4வது வசனம் வரை – அவரை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை?
ஏசுநாதரே கடவுள் என்றால், அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் 3 நாள் இப்பூலகையும், கோள்களையும் வான்களையும் ஜீவராசிகளையும் யார் கவனித்துக் கொண்டது?
அவரது தாயின் வயிற்றில் 10மாத வளர்ச்சியின் போது உலகையாரம்மா கவனித்துக் கொண்டது?
நாத்திகனுக்கு இவைகள் நல்ல பிடியாகி விட்டதே!
ஏசுநாதரின் கடைசி வார்த்தைகள் என்ன என்று பைபிள் சொல்கிறது?
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ” ஏலோயீ! ஏலோயீலாமா சபக்தானி” என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு ‘என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அர்த்தமாம்.
மாற்கு 15:34
அவரே தேவன் (கடவுள்) என்கிறீர்கள். ஆனால் அவரே ‘என் தேவனே! என் தேவனே!! ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்கிறார். யாரையம்மா அழைத்தார்? தன்னைத் தானே அழைத்தாரா? ஏனிந்த குழப்பம்?”
மவுனம் பதிலாய் உள்ளது.
” கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கப்பெறும் என்று மத்தேயூ – 7:7ல் கூறியுள்ளப்படி நாம் கேட்டு கடவுளிடமிருந்து கிடைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். இவர் கேட்டே கிடைக்கவில்லையே! எப்படியம்மா இவர் பேச்சை நாம் கேட்பது என்று எந்த பாமர மகனும் யோசிப்பானல்லவா?”
இதற்கும் அச் சகோதரியிடமிருந்து மவுனமே பதிலாய் வந்தது.
” ஒரு புனித நூல் அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டுமல்லவா? யாரோடும் ஆண், பெண் பேதமின்றி, பகிர்ந்து அர்த்தத்துடன் படிக்க வேண்டுமல்லவா? ஒரு புனித நூலை ஓதும்போது மனது கலக்கமோ, தயக்கமோ இன்றி உள்ளம் தெளிவடைய வேண்டுமல்லவா? மாறாக குழப்பமோ குதர்க்கமோ ஏற்பட்டால் அது புனித நூலாகாதல்லவா?”
” ஆமாம்!”
” சரி, சகோதரியே! நீங்கள் குளிக்கும்போது நான் மாடியிலிருந்து பார்ப்பது கூடுமா?”
” தண்டனைக்குரிய குற்றம்”
” சாதாரண மனிதனான எனக்கே கூடாது என்றால் இறைநேசச் செல்வர்கள் இதைச் செய்யலாமா?”
” யார் செய்தாலும் மிகப் பெரிய தண்டனை தரப்பட வேண்டும்”.
” அப்படியானால் டேவிட்டை ஏன் தன்டிக்கவில்லை?”
” எந்த டேவிட்?”
(DAVID தாவூது) பைபிளில் வரும் ஏசுவின் முன்னோர்கள், ஏசுவின் பரம்பரை பட்டியலில் முதல் இடம் வகிப்பவர்!” (Genealogy)
” எங்கே போட்டுள்ளது?”
” இதோ – சாமுவேல் – அதிகாரம் – 11″
II Samuel – Chapter II version: 2 to 5
அதிகாரம் பதினொன்று சாமுவேல்
2. ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது ( டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.
3. அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய பத்சேபாள் – என்றார்கள்.
4. அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான், அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.
5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான்.
” போதும் நிறுத்துங்கள் சகோதரியே! ஒரு நபி – ஒழுக்கத்தை போதிக்க வேண்டியவரே – விபச்சாரம் அதுவும் பிறன் மனைவி என்று விசாரித்து தெரிந்து இந்தத் தவறை செய்துள்ளார்.
” அதன் பின்னால் உரியாவை ( பத்சேபாளின் கணவனை) பின்னர் கொலை செய்ய திட்டமிட்டு முடிக்கிறார்.
” இந்த உரியாவின் மனைவியும் தாவீதும் செய்தது பச்சை விபச்சாரம் – இவர்களுக்குப் பிறந்தது தான் சாலமோன் – இவர் வம்சத்தில் வந்தவர் ஏசு என்கிறீர்கள்”.
” ஆனால் பழைய வேதத்தின் கூற்றுப்படி விபச்சாரத்தில் பிறந்தவன் 10 (bastard)தலைமுறையானாலும் அவன் கர்த்தரின் சபைக்கு உட்படலாகாதே – ஏசு எப்படி இச்சபைக்கு வந்தார் என்று எந்த நாத்திகனும் கேட்டால் என்னம்மா பதில் சொல்வாய்?
” சரி போகட்டும் உங்களுக்கு சகோதரர்கள் உண்டா?”
” ஆமாம் 2 தம்பிகள் உண்டு!”
” அவர்கள் ஒரு பெண்னை கற்பழித்தால் கண்டிப்பீர்களா?”
” ஒரு பெண்னை காதலித்தால் வரவேற்பேன். காமமுற்றால் கண்டிப்பேன். காதலும் காமமும் வேறு (LUST AND LOVE IS DIFFERENT)”
” உங்கள் சகோதரன் ( இப்படிக் கேட்பதற்காக என்னை மன்னிக்கவும் என்றபடி) உங்களையே கற்பழித்தால்…?”
” அயோக்கியத்தனம்! அறிவீனம் (Nonsense idiot) காட்டு மிராண்டி! அவனை சுட வேண்டும். நீங்கள் என்ன பேச்சு பேசுகிறீர்கள்? பண்பாடு அற்றவன், மிருகம்.”
சகோதரியே! சாந்தமாகுங்கள்! இதை நான் சொல்லவில்லை. உங்கள் புனித வேதாகமத்தில் புனித ஆவிகள் புகுந்து எழுதி உள்ளன – இதோ அதைப் படியுங்கள்.
சாமுவேல் – 13வது அதிகாரம் வசனம் 1 முதல் 14 வரை
1. இதற்குப் பின்பு தாவீதின் குமாரானாகிய அப்சலோமுக்குத்தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.
2. தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிக்கப்பட்டான். அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள், அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய அம்னொனுக்கு வருத்தமாய்க்கண்டது.
3. அம்னோனுக்குத் தாவீதுடைய தமயன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி.
4. அவன் இவனைப் பார்த்து ‘ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதனாலே இப்படி மெலிந்து போகிறாய் எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான் அதற்கு அம்னோன் என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.
5. அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக்கொள் உன்னைப் பார்ப்பதற்கு உன் தகப்பனார் வரும்போது நீ என் சகோதரியாகிய தாமார் வந்து எனக்குப் போஜனம் கொடுத்து அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படிக்கு தயவு செய்ய வேண்டும் என்று சொல் என்றான்.
6. அப்படியே அம்னோன் வியாதிக்காரன் போல் படுத்துக் கொண்டு ராஜா தன்னைப் பார்க்க வந்தபோது ராஜாவை நோக்கி என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவன் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு பணியாரங்களைப் பண்ணுப்படி உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்.
7. அப்பொழுது தாவீது தாமாரிடத்தில் ஆள் அனுப்பி ‘ நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் பண்ணிக்கொடு’ என்று சொல்லச் சொன்னான்.
8. தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக் கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய் மாவெடுத்து பிசைந்து அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு.
9. சட்டியை எடுத்து அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள் ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான், பின்பு அம்னோன் எல்லோரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான். எல்லோரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.
10. அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா எண்றான். அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனான்.
11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டு வருகையில் அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து என் சகோதரியே, நீ வந்து என்னோட சயனி என்றான்.
12. அதற்கு அவள் வேண்டாம் என் சகோதரனே! என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது, இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம்.
13. நான் என் வெட்கத்தோட எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய், இப்போதும் நீ ராஜாவோட பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.
14. அவன் அவள் சொல்லைக் கேட்க மாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோட சயனித்து, அவளைக் கற்பழித்தான்.
” என் சகோதரியே! அண்ணனே தங்கையைக் கற்பழிக்கலாமா? அந்த சகோதரி தாமார் வேண்டாம் என் சகோதரனே, இது மதிகேடான விஷயம் என்பது வரை படிக்கும்போது தாமாரின் மீது மதிப்பும் மரியாதையும் கூடுகின்றன. ஆனால் அடுத்த வரியிலேயே இப்போதும் நீ ராஜா வோட (தாவீதுராஜா – அவர்களின் தந்தையுடன்) பேசு , அவர் என்னை உனக்குத்தராமல் மறுக்கமாட்டார்” என்று கூறும் போது தந்தையை மகள் கணித்துள்ள இடம் மிகமிக வேதனையளிப்பதாக உள்ளதல்லவா?
இவர்கள்தான் ஏசுநாதரின் முன்னோர்களா? இவர்களின் வம்ஸா வழியிலே ஏசுவை திணிக்கலாமா?
சகோதரியே, இம்மாதிரி குற்றங்களுக்கு திருக்குர்-ஆனில் 100 கசையடிகள் தர வேண்டும் எனக் கூறி விபச்சாரம் தேசிய குற்றமாக்கப்பட்டது.மேலும் சகோதரியே, “லோத்” (Lot – லூத் நபி) பற்றிய வரலாறு பைபிளின் முதல் பாகத்தில் வருகிறதே அதைப் படியுங்கள்
ஆதியாகமம்(GENESIS)19-வது அதிகாரம் வசனம் 31 முதல் 38 முடிய ( சத்தமாக படிக்கும்படி சொன்னேன். முதல் இரண்டு வசனத்தை சப்தமிட்டுப் படித்துவிட்டு – மவுனமாய் படிக்கிறார்.)
31. அப்பொழுது மூத்தவள் இளையவனைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறைமயின் படியே நம்மோட சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோட சயனிப்போம் வா என்றாள்.
33. அப்படியே என்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் , தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோட சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள்.
35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய் அவனோட சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்ப்வதியானார்கள்.
37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியாருக்குத் தகப்பன்.
38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
” ஏன் மவுனமாய்ப் படித்தீர்கள்?”
” எனக்கு அருவருப்பாயிருந்தது” என்றார்.(I Felt Embarassed)
” ஏனம்மா அருவருப்பு ? புனித வேதநூல் – இதை தலையில் வைத்துப் படுத்தால் உடல் நோய் தீரும் – என்றெல்லாம் உபதேசிக்கப்படுகிறதே!
ஒரு புனித நூல் அனாச்சரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும்! யாரோடும் ஆண் பெண் பேதமின்றி பகிர்ந்து, அர்த்தத்துடன் படிக்க வேண்டுமல்லவா? ஒரு புனித நூலை ஓதும்போது மனது கலக்கமோ தயக்கமோ இன்றி உள்ளம் தெளிவடைய வேண்டுமல்லவா? மாறாக குழப்பமோ குதர்க்கமோ ஏற்பட்டால் அது புனித நூலாகாதல்லவா என்று நான் கேட்ட போது ஆமோதித்தீர்கள் அல்லவா, பின் ஏன் மெளனமாய் படித்தீர்கள்? (Delegacy) இடர்பாடு ஏற்படும் அளவுக்கு அதிலுள்ள அசிங்கங்கள் சாதாரண வயதுப் பெண்ணாக இருந்தாலும் வயசானவராயிருந்தாலும் ஜீரணிக்க முடியவில்லையே ஏன்?
ஒரு குடிக்காரனை ஏன் வெறுக்கின்றோம்?
நிதானமற்று குடித்துவிட்டு தாய் தங்கை என்றுகூட உணர முடியாது அவன் தவறுதலாக நடக்கக் கூடுமல்லவா?
ராஜா தாவீதின் மகன் நிதானத்தோடே திட்டமிட்டுத் தங்கையைத் தனிமைப்படுத்தி, நிர்பந்தித்துக் கற்பழிக்கின்றான்!
தூங்கி எழுந்து தாவீது ராஜாவோ மாற்றான் மனைவி மீது மைய்யலுற்று கற்பழிக்கின்றார்.
மேலும், மாமனார் மருமகளை கற்பழிப்பதை ஆதியாகமம் (Genesis) 38:13ல் காணலாம். அந்த தீர்க்கதரிசியின் பெயர் ஜூடா (Judaha) இவர்தான் எனப்படும் யூத இனத்தை தோற்றுவித்தவர். இவர் தமது மகனின் ம்னைவி “தமார்” என்பவளை கற்பழித்த கதையையும் படித்துப் பாருங்கள்.
என் சகோதரியே! மேலும் நீங்கள் படிக்கத் தயங்கிய லோத்தின் குமாரத்திகள் கதையை எந்த டாக்டரிடமும் அனுப்பி வ்ல்லுனர் கருத்து (EXPERT OPINION) கேட்போம்.
வயதானவர் – மது அருந்தி மயக்க நிலையில் மகளால் கற்பழிக்க முடியுமா? இன்னும் எளிதாக சொல்லப்போனால், ஒரு பெண்னுக்கு மதுவைக் கொடுத்து மயக்கமூட்டி ஆணால் கற்பழிக்க முடியும். ஆனால் ஆண் மயக்கமுற்ற நிலையில் பெண் எப்படி உடலுறவு கொள்ள இயலும்? திருமணமானவர்களைக் கேட்டுப்பாருங்கள் புரியும். அநேகமாய் உங்களுக்கும் ( எனக்கும் ) திருமணமாகவில்லை – அதனால் குழப்பமே. குடும்பஸ்தார்களிடம் நான் விசாரித்ததில் ஆணின் மர்மஸ்தானத்துக்கு (இதை உங்களோடு பேச வெட்கப்படுகிறேம், வேதனைப்படுகிறேன். இருப்பினும் உண்மையை தோலுரிக்கும்போது இதை பொருட்படுத்தமாட்டீர்கள் என்று பணிவோடு கேட்டுவிட்டு) ஒரு விறைப்புத்தன்மை தேவை (Errection)என்றார்கள்.
இந்த ஒரு சாதாரண உண்மை சர்வலோக ரட்சகனுக்கு எப்படி தெரியாது போயிற்று?
இது கடவுளால் அருளப்பட்ட வேதமா? என்ன தான் முஸ்லிம்கள், யூதர்களின் எதிரிகளாக இருந்தாலும் எந்த தீர்க்கதரிசிகள் மீதும், இப்படி ஒரு கேவலத்தைச் சுமத்தமாட்டார்கள். பெயரைக்கூட சொல்லும் போது (மோசா) மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர் மீது என்றென்றும் ஆண்டவனின் அருள் பொழியட்டும் என்றே கூறுவர்.
சகோதரியே, என் நாவு கூசுகிறது. நீங்கள் வீட்டில் போய் (Ezekiel-23) ஏசேக்கேல் 23வது அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். தற்போது தென் ஆப்பிரிக்கா (South Africa)அரசின் (Publication Board) வெளியீடுகள் இதை தடை செய்துவிட்டன. இந்தக் கமிட்டியின் 5 அங்கத்தினர்களில் 2 பேர் கிறிஸ்துவ கத்தோலிக்க பாதிரிமார்கள்!
சார்! நீங்கள் சற்றுமுன் சொல்லும் போது Judah தான் யூதகுலத்தை தோற்றுவித்தவர் என்றீர்கள். அப்படியானால் மோசஸ் (மூஸா) அப்ரஹாம் (இப்ராஹீம்) இவர்களும் யூதர்கள் அல்லவா?
” இல்லை என் சகோதரியே! திருக்குர் ஆனில் அப்ரஹாம்(இப்ராஹீம்) யூதரும் அல்ல, கிறிஸ்தவருமல்ல; அவர் ஒரு நேர்மையானவர்; இறைவனுக்கு தன்னைத்தானே அர்பணித்தவர், சிலை வணக்கமே செய்யாதவர் (குர்-ஆன் 3:67) என்றுள்ளது. அதையே அளவுகோலாக வைத்து பைபிளை ஆராய்ந்தபோது கீழ்கண்ட முடிவுக்கு வரவேண்டியவராகிறோம்.
தயவு செய்து ஆதியாகமம் Genesis 11:31 படியுங்கள்!
11:31 தேராகு தன் குமாரனாகிய அபிராமையும் ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும் தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராவையும் அழைத்துக்கொண்டு அவர்களுடனே “ஊர்” என்ற ” கல்தே”யருடைய பட்டணத்தை விட்டு “காணான் ” (Cacaan)தேசத்துக்கு புறப்பட்டான்> ஆரான் (haran)வந்த போது அங்கேயே இருந்து விட்டனர் ஆதியாகமம் 11:31
எனவே, சகோதரியே ஆப்ரஹாம் பிறந்தது ” ஊர் ” என்கிற கல்தேயருடைய (Chades) பட்டணம். எனவே அவர் யூதரல்ல காரணம் கல்தேயருடைய பட்டணம் மெஸப்படோமியாவில் (MESOPOTAMIA)உள்ளது (தற்போதைய ஈராக்கின் ஒரு பகுதி) அவர், அரபியர் 2வது ” ஜூ யூதர் என்பதே இப்ராஹிமின் கொள்ளுப்பேரனான ஹீதா என்பவருக்குப் பின் ஏற்பட்டது.
மேற்கூறிய பைபிள் வசனங்களின் படி மூஸாவும் அப்ரஹாமும் யூதர்கள் அல்ல. பைபிளை ஆராயாது படித்ததனால் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்”.
” கேட்கவே அதிசயமாயுள்ளது ” என்கிறார்.
” சகோதரியே! நீங்கள் கோவிலில் (CHURCH) நுழைந்ததும் எதை வணங்குகிறீர்கள்?”
” சிலுவையிலுள்ள ஏசுவை, மேரி மாதாவை, ஜோஸப்பை!”
” அப்படியானால், ஏசு சொன்ன வாக்கியங்களான ” நான் பழைய வேதத்தை (தெளராத்-Old Testament) மெய்ப்பிக்கவே வந்தேன்” எனும் வசனத்தை நீங்கள் நம்புகிறீர்களா?”
” நிச்சயமாக! ”
சரி – பழைய ஏற்பாட்டில்.
அந்நிய தேவர்களின் பேச்சைச் சொல்ல வேண்டாம்.
அது உன்வாயிலிருந்து பிறக்க கேட்கப்படவும் வேண்டாம்.
யாத்திராகமம் 23:13
3. என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
4. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உன்க்கு உண்டாக்க வேணடாம்.
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
யாத்திராகமம் 21:3,4,5.
22. யாதொரு சிலையையும் நிறுத்த வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்; (உபாகமம் 16:22) இன்னும் பல உள்ளன, ஆக சிலைகளை வணங்குவதை – பைபிளில் சிலைவணக்கம் தடை செய்யப்பட்டுள்ள போது அதை மெய்ப்பிக்க வந்த ஏசுவையும் சிலுவையையும் நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்? ”
” I am confusedநான் குழம்பிவிட்டேன்” என்றார்.
என் கையில் அன்றைய தினசரி இருந்தது. அதில் சிரியன் கத்தோலிக்க வங்கி Syrian Catholic Bankஎன்று போட்டு வட்டி விகிதாச்சாராங்கள் இருந்தன!
அதைக்காட்டி, ” ஏம்மா கிறிஸ்தவர்கள் வட்டி வாங்கலாமா?” என்றேன்.
” தெரியாது சார்”.
” உபாகமம் 16:19ல் பரிதானம் வாங்காமல் இருப்பாயாக – பரிதானம் (வட்டி) ஞானிகளின் கண்களை குருடாக்கி நீதிமான்களின் நியாயங்களை தாறுமாறாக்கும்” என்றுள்ளதே. இஸ்லாமும் வட்டிக்கு விரோதமானது தான். சரி பன்றி இறைச்சியையும் மற்ற பிராணிகளின் ரத்தத்தையும் உண்பீர்களா?”
” தினமும் உண்போம் ”
பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும் அசைபோடாதிருக்கும். அது உங்களுக்கு இவைகளின் மாமிசத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பிர்களாக.
உபாகமம் 14:8
இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
உபாகமம் 12:23
(ரத்தம்) அதை சாப்பிடாது தண்ணிரைப் போல தரையில் ஊற்றிவிடவும்.
உபாகமம் 12:16,24
நீ கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்வதினால் நீயும் உனக்குப் பின் வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும் படிக்கும் நீ அதை (ரத்தத்தை) சாப்பிடலாகாது
உபாகமம் 12:25
” இதே கருத்தை உபாகமம் 12:27லும் காணலாம். இருப்பினும் நீங்கள் அதைச் செய்யலாமா?
” நீங்கள் முஸ்லிம் நாடுகளில் பார்த்திருப்பீர்களே, அவைகள் ஹராம் (விலக்கப்பட்டது) ஆக்கி வைத்திருப்பதை.”
” ஆமாம்” என்றார்.
” சகோதரியே, இஸ்லாமும், இன் ஜீலும் தெளராத்தும் ஒன்றையே கூறின. ஆனால் இஸ்லாம் தவிர ஏனைய மார்க்கங்களில் மனிதக் கைகள் ஊடாடி சிதைந்து உருத்தேய்ந்து உருமாறி விட்டன.
” உதாரணமாக- புதிய ஏற்பாட்டில் லூக்கா (LUKE)10:5ஐ படியுங்கள்.”
” ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது இந்த விட்டுக்கு சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவதாக சொல்லுங்கள்” என்று படிக்கிறார்.
அதன்பின் என்னிடமுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு குர்-ஆனில் 24:27 எடுத்து தருகிறேன்.அதே கருத்து சொல்லப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட பன்றி மாமிசம், ரத்தம் இவைகள் அல்லாது இறந்துபோன மிருகங்களையும் சரிபார்க்கிறார். வியப்பால் விழிகள் மலர்கின்றன. மிகமிக நேசத்துக்குரியவராய் கருதப்படுகிறேன்.
” பைபிள் முரண்பாடுகளுடைய (CONTRADICTION) என்றேன்ல்லவா? அது குறித்து கிழ்கண்ட வசனங்களைத் தருகிறேன். புரட்டிப் பாருங்கள்.”
” உதரணமாக ஒரு வசனத்தில் 50 வயதில் ஒருவர் இறந்தார் என்றும் மற்றொன்றில் அதே நபர் 60 வயதில் இறந்தார் என்றும் இருந்தால் எது சரி?” என்றேன்.
” ஏதாவது ஒன்றுதான் உண்மையாயிருக்கும். இல்லாவிடில் எந்த வாதமும் இரண்டாக முரண்பட்டால், இரண்டையுமே தவறாகத்தான் சொல்ல வேண்டும்” என்றார்.
” ஒரு புனித நூலில் முரண்பாடுகள் இருக்கலாமா?”
” இருக்கவே கூடாது”
” அப்படி இருந்தால் ?”
” அது புனித நூல் அல்ல, மனிதனால் எழுத்ப்பட்டவையே.”
” அப்படியானால், பைபிள் புனித நூல் அல்ல!”
” புதிய ஏற்பாட்டிலா பழைய ஏற்பாட்டிலா?”
” இரண்டிலுமே உள்ளன இதோ பாருங்கள்”-
II sAMUEL 8:4 II சாமுவேல் 8:4
தாவீது அவனுக்கிருந்த (எதிரியிடமிருந்து) இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரை வீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து இரதங்களில் நூறு ரதங்களை வைத்துக் கொண்டு… இதன் தமிழ் மொழி பெயர்ப்பில் மோசடி நடந்துள்ளது.
I CHRONICLES 18:14 நாளாகமம் 18:14
அவனுக்கிருந்த ஆயிரம் ரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இதரங்களைக் கொண்டு…..
ஆங்கிலத்தில்-
And David Took From Him A Thousand Chariots and Seven Hundred Horse men And Twenty Thousand Footmen…….
உண்மையான மொழிப்பெயர்ப்பு:
தாவீது அவனிடமிருந்து ஆயிரம் ரதங்களையும் எழுநூறு குதிரை வீரர்களையும் இருபதினாயிரம் காலாட்படை வீரர்களையும் கைப்பற்றி…. என்று வர வேண்டும்.
எது சரி: எழுநூறு (700) குதிரைப்படை வீரர்களா?
ஏழாயிரன் (7000) வீரர்களா?
இங்கே இடைமறித்து பேசுகிறார், ஏன்சார் 700க்கும், 7000க்கும் ஒரு சைபர் “0″ தானே வித்தியாசம்?”
” சகோதரியே, பைபிளை எழுதியபோது யூதர்களுக்கு சைபர் “0″ (பூஜ்ஜியம்) பற்றிய ஞானமில்லை. சைபரை இந்தியாவிலிருந்து அராபியர்கள் கொண்டு வந்தனர். பைபிளில் 700 என்பதை Seven Hundred என்று எழுத்தாலும் 7000 என்பதை Seven Thousand Hundred என்று மட்டுமே எழுதி வந்தள்ளனர். எண்ணால் எழுதும் பழக்கம் அவர்களுக்குமில்லை. பிற்கால ரோமர்கள் கூட ரோமர் எழுத்து (Romanian Letters)களை I II III IV V VI VII எப்படி உபயோகித்தனர்.
சாமுவேல் II Samuel 10:18
சீரியர் (Syrians) இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள், தாவீது சீரியரில் ஏழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரை வீரரையும் கொன்று அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் (Shophac) சாகும்படியாக வெட்டிப் போட்டான்.
I CHRONICLES நாளாகமம் 19:18
சிரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும் நாற்பதினாயிரம் காலாட் படையினரையும் கொன்று படைத்தலைவனாகிய சோப்பாக்கையும்? (Shophac) கொன்றான்.
எது சரி- எழுநூறு இரதங்களா? ஏழாயிரம் காலாட்படைகளா? நாற்பதினாயிரம் குதிரை வீரர்களா? நாற்பதினாயிரம் காலாட்படையினரா? ( குதிரைப்படைக்கு cavalry என்று காலாட்படைக்கு INFANTRY என்பதும் ஆங்கிலச்சொல்)
படைத்தலைவன் பெயர் சோபாகையா (Shobach)? அல்லது சோப்பாக்கையா (Shophac)?
II (Kings) இராஜாக்கள் 8:26
அகசியா ராஜாவாகிற போது இருபத்திரண்டு வயதாயிருந்தது.
II (Kings) 10:18
Two and twenty years old was Ahaziah when he began to reign.
II (Chronicles) நாளாகமம் 22:2
தமிழ் பைபிளில் இப்பகுதி மொழிபெயர்ப்பு மோசடி செய்துள்ளதால் ஆங்கில வாசகத்தை அப்படியே தந்து அதற்கு ஈடான தமிழ் வார்த்தைகளையும் தருகிறோம். அகசியா ராஜாவாகிய போது நாற்பத்திரண்டு வயதாயிருந்தது.
Forty and two years old was AHAZIAH who began to reign.
இருபத்தி இரண்டா அல்லது நாற்பத்தி இரண்டு வருடங்களா? எது சரியானது?
( பின் குறிப்பு: அன்புத் தமிழ்மக்களே உங்களில் பலபேருக்கு ஆங்கிலப் பிரதியையும் தமிழ் மொழிபெயர்ப்பையும் சரிபாருங்கள். இப்படியா மொழிபெயர்ப்பு மோசடியினை செய்வது? பாமர மக்களை ஏமாற்றலாமா? மனிதக்கைகள் ஊடாடி உள்ளன என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்! – ஆசிரியர்)
II Kings இராஜாக்கள் 24:8
யோயாக்கின் ராஜாவாகிற போது பதினெட்டு வயதாயிருந்தது. எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்.
II Chronicies நாளாகமம் 36:9
யோயாக்கின் ராஜாவாகிற போது எட்டு வயதாயிருந்தது. மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு……
பத்னெட்டு வயதா? எட்டு வயதா? மூன்று மாதமா? மூன்று மாதமும் பத்து நாளுமா? எது சரி?
சாமுவேல் 23:8 II Samule
தாவீதுக்கு இருந்த பராக்கிரமாலிகளின் நாமங்களாவன தக்கெமொனியன் Hachmonite குமாரானாகிய யோசேப்பா செபத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன், இவண் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒரு மிக்க வெட்டிப் போட்ட அதினோஏஸ்னி ஊரானானவன்.
நாளாகமம் 11:11 I Chronicles
தாவீதுக்கு இருந்த பராக்கிராமாலிகளின் இலக்கமுமாவது அக்மோனியின் Hachmonite குமாரனாகிய யாஷோபியாம் எனும் சேவைகாரரின் தலைவன், இவன் முன்னூறு பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்க கொன்று போட்டான்.
தக்கெமோனியன் (Tachmonite) அல்லது அக்மோனியன் (hachmonite) எது சரி?
யோசேப்பாசெபத் அல்லது யாஷோபியாம் எது சரி?
எண்ணூறு பேர்களா – முன்னூறு பேர்களா எது சரி?
II சாமுவேல் 24:1
கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரேலின் மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம்பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
நாளாகமம் 21:1 I Chronicles
சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்கு தாவீதை ஏவி விட்டது.
தாவீது கர்த்தரால் ஏவப்பட்டாரா அல்லது சாத்தானாலா? எது சரி?
சாமுவேல் 6:23
அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.
சாமுவேல் 21:8
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவனுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியானான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவனுடைய ஐந்து குமாரரையும் பிடித்து……
மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லை என்றும் அவளுக்கு 5 குமாரர்களிருந்தார்கள் என்றும் உள்ளது. எது சரி?
(பின் குறிப்பு: இந்த ” மீக்காள் ” என்னும் பெயரை கிங்ஜேம்ஸ்வர்ஷனிலும் king James Version 21:8 New World Translation-னிலும் அப்படியே வைத்துள்ளனர். ஆனால் New American Standard Boble 1973யில் ” மீக்காள் ” என்பவளை(Michal)”MERAB” என்றும் மாற்றி மோசடி செய்துள்ளனர்)
இது மட்டுமல்ல சகோதரியே, ஆதியாகமம் 6:3 பாருங்கள். அப்போது கர்த்தர் என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே ‘அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்’ என்றார்.
ஆக மனுஷரின் வயது 120 வருஷம் – என்றார். Noah (நூஹ் நபி அலை) நோவாவின் வயது (சாகும் போது) என்ன? என்று பாருங்கள்; ஆதியாகமம் 9:29ல் நோவாவின் நாட்களெல்லாம் தொள்ளாயிரத்து ஐம்பது (950) வருஷம் என்றுள்ளதே – முன்னுக்குப்பின் முரண்பாடல்லவா? இதை சில கிறிஸ்துஞானிகள் ஏற்றுக்கொள்ளாது – மனிதனிம் வருஷத்தை சொல்லவில்லை.வெள்ளம் வரப்போவது இன்னும் 120 வருடமென்று முன்னறிவிப்பு செய்துள்ளது என்கிறார்கள். அதுவும் பொருந்தவில்லை. காரணம் அப்படி பார்த்தாலும் நோவாவுக்கு வெள்ளம் வரும்போது (500+120) 620 வயதாகி இருக்க வேண்டும். ஆனால் பைபிளில் ஆதியாகமம் 5:32ல் நோவா ஐந்நூர்று வயது ஆன போது….. என்றும் ஆதியாகமம் 7:6ல் ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டான போது நோவா அறுநூறு வயதாயிருந்தான் என்றுள்ளது. எனவே கிறிஸ்துவ அறிஞர்களின் வாதம் கண்துடைப்பே!
” சகோதரியே! கிறிஸ்துவ உலகமனைத்தும் ஆண்டவன் தமது சாயலாகவே ( வெள்ளையோ கறுப்போ எப்படியோ? ஆணாகவோ பெண்ணாகவோ) படைத்தான் என்பதை நம்புகிறீர்களல்லவா?”
” ஆமாம் – ஆதியாகமம் 1:26ல்
பின்பு தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியும் மனுஷனை உண்டாக்குவோமாக…..பின்னர்
ஆதியாகமம் 1:27ல் தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார் என்றுள்ளது என்று படித்தார்.
மிக்க நல்லது – ஆனால் சகோதரியே – எசாயா 40:17,18 மற்றும் 25
17. சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும் மாயையாகவும் எண்ணப்ப்டுகிறார்கள்.
18. இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?
25. இப்படியிருக்க என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்கிரார்.
மேலும் சங்கீதம் PSALM 89:6ல் ஆகாய மண்டலத்தின் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? என்றுள்ளது – மேலும், ஏரோமியா JEREMIAH 10:6 மற்றும் 7லின் படி
6. கர்த்தாவே உமக்கு ஒப்பானவன் இல்லை. நீரே பெரியவர். உமது நாமமே வல்லமையில் பெரியது.
7. …………..ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும் அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை என்றுள்ளதே. ஏனிந்த முரண்பாடுகள்?
” சார்! இதுவரை நீங்கள் குறிப்பிட்டுள்ள முரண்பாடுகள் பழைய ஏற்பாட்டுகளில் தான் உள்ளது. ஆனால் புதிய….?
” புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு சகோதரியே.”
John:யோவான் 5:37
என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துஅ சாட்சி கொடுத்திருக்கிறார்: நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதிமில்லை.
John:யோவான் 14:9
………என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.
John:யோவான் 5:31
என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
John:யோவான் 8:14
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது.
” மேலும் சகோதரியே, நாலு சுவிசேஷகங்களிலும் கடைசி அதிகாரங்களை எடுத்து படிக்கவும்.”
மத்தேயூ MATTHEW 28:1 முதல் 6 வரை
1. ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
மாற்கு MARK 16:1 முதல் 8 வரை
1. ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கி கொன்டு.
மத்தேயூ MATTHEW 28:2
2. அப்பொழுது பூமி மிகவும் அதிரும்படி கர்த்தருடைய தூதன் வானத்திலிந்திறங்கிவந்து வாசலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான்.
மாற்கு MARK 16:2
2. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து.
மத்தேயூ MATTHEW 23:3
3. அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
மாற்கு MARK 16:3
3. கல்லறையின் வாசலில் இருக்கின்ற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
மாத்தேயூ MATTHEW 28:4
4. காவலாளர் அவனுக்கும் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.
மாற்கு MARK 16:4
4. அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப் பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.
மத்தேயூ MATTHEW 28:5
5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி நீங்கள் பயப்படாதிருங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
மாற்கு MARK 16:5
5. அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.
மத்தேயூ MATTHEW 28:6
6. அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்தெழுந்தார்; கர்த்த்ரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
மாற்கு MARK 16:6
6. அவன் அவர்களை நோக்கி பயப்படாதிருங்கள். சிலுவையில் அறையப்பட்ட நசரேனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை. இதோ, அவரை வைத்த இடம்.
மாற்கு MARK 16:7,8
7. நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய் உங்களுக்கு முன்னே கலிலெயாவுக்குப் போகிறார். அவர் உங்களுக்குச் சொன்னப்படியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
8. நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால் அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து கல்லறையை விட்டு ஓடினார்கள். அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.
லூக்கா LUKE 24:1 முதல் 8 வரை
1. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின சுகந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
யோவான் JOHN 20:1 முதல் 18 வரை
1. வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோட, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையஒ அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.
லூக்கா LUKE 24:2
2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளபட்டிருக்கிறதைக் கண்டு.
யோவான் JOHN 20:2
2. உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய் கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
லூக்கா LUKE 24:3
3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்.
யோவான் JOHN 20:3
3. அப்பொழுது பேதுருவும் மற்ற சீஷனும் கல்லறையிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
லூக்கா LUKE 24:4
4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
யோவான் JOHN 20:4
4. பேதுருவைப் பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி முந்திக் கல்லறையிடத்தில் வந்து.
லூக்கா LUKE 24:5
5. அந்த ஸ்திரிகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
யோவான் JOHN 20:5
5. அதற்குள்ளே குனிந்துபார்த்து. சீலைகள் கிடக்கிறதைக் கண்டான், ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
லூக்கா LUKE 24:6
6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்ந்தெழுந்தார்.
யோவான் JOHN 20:6
6. சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னே வந்து கல்லறைக்குள்ளே பிரவேசித்து.
லூக்கா LUKE 24:7
7. மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவு கூருங்கள் என்றார்கள்.
யோவான் JOHN 20:7
7. சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
லூக்கா LUKE 24:8
8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து.
யோவான் JOHN 20:8
8. முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரதவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
யோவான் JOHN 20:9 முதல் 18 வரை
9. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
10. பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப் போனார்கள்.
11. மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள். அப்படி அழுது கொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து.
12. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனுமாக உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
13. அவர்கள் அவனை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள் என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி இயேசு நிற்கிறதையே கண்டாள் ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
15. இயேசு அவளைப் பார்த்து, ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய் என்றார். அவள் அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி ஐயா, நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன் என்றாள்.
16. இயேசு அவளை நோக்கி, மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள். அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
17. இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே! நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்குப் போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
18. மகதலேனா மரியாள் போய், தான் கர்த்த்ரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
இயேசு கிறிஸ்துவை அடக்கம் செய்த பின் என்ன நடந்தது என்பதை விவரிப்பதில் இந்த விலிய சுவிஷேஷக்காரர்களிடையே எத்தனை முரண்பட்ட வாதங்கள்? இதில் யாருக்கு வந்தது புனித ஆவி? ஒரே புனித ஆவியா? பல புனித ஆவிகளா? புளுகு மூட்டைகளா?
புனித வெள்ளிக்கிழமையும் புளுகு மூட்டையும்
(GOOD FRIDAY FRAUD)
” சகோதரியே, புனித வெள்ளிக்கிழமையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லவா?”
” ஆமாம், ஏசுநாதர் இறந்த தினமல்லவா!”
” ஏசுநாதர் இறந்தது எப்போது?”
” வெள்ளிக்கிழமை 9வது மணியளவில் (மதியம் 3 மணி)”
” ஆதாரம் என்ன?”
” LUKE(லூக்கா) 23:44 இதுவே ஆதாரம்!”
” போதும். சரி, ஏசுநாதரிடம் மக்கள் ஒரு அடையாளம் காட்டச் சொன்னார்கள் அல்லவா? அதைப்பற்றி சொல்லுங்கள்” என்றேன்.
MATTHEW மத்தேயூ 13:38 முதல் 40 வரை
மத்தேயூ 27:46லும் இதைச் சொல்கிறார்.
38. அப்பொழுது வேதபாரிகளிலும், பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி போதகரே, உம்மாள் ஒர் அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.
39. அவர்களுக்கு அவர் (ஏசு) பதிலளிக்கும் விதமாக இந்தப் பொல்லாத விபச்சார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா (JONA யூனூஸ் நபி) தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேற அடையாளம் இவர்களுக்கு கொடுக்கப்போவதில்லை.
40. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவுல் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்திலிருப்பார்.
இங்கேயும் வல்லுனத்தைக் காட்டி மொழிபெயர்ப்பு மோசடி செய்துள்ளனர். காரணம் இதன் மூலத்திலும் ஆங்கிலத்திலும் உள்ளப்படி
FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE’S BELLY, SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH. Mathew 12:40
இதன் சரியான மொழிபெயர்ப்பு: யோனா மூன்று பகல் மூன்று இரவு ஒரு பெரிய மீன் வயிற்றில் இருந்தது போல மனுஷகுமாரனும் மூன்று பகல் மூன்று இரவு பூமியின் இருதயத்திலிருப்பார்.
( இது ஒரு சிறு தவறு போல் தோன்றினாலும் அங்குதான் பெரிய அயோக்கியத்தன்மை அடங்கியுள்ளதைப் பற்றி பாருங்கள்.)
( ஆக ஏசுநாதர் முன்னறிவிப்பு செய்தபடி அவர் இறந்தபின் அல்லது இறந்ததாக சொல்லப்படுவதற்குப் பின் 3 பகல் 3 இரவு கழித்து உயிர்த்து எழுவார்.(Reserection)
அதன்படி வெள்ளி இரவு அவரை அடக்கம் செய்ததாகவும் அதை ஆர்மத்திய ஊர்க்காரான யோசேப்பு என்பவன் அந்த சரீரத்தை துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி அடக்கம் செய்ததாக மத்தேயூ கூறுகிறார். காரணம் இயேசுவின் 12 சீடர்களின் 12-ம்மவன் யூதாஸ் தற்கொலை செய்து கொண்டான், மீதி 11 பேர்களும் ஏசுநாதரை கைது செய்ய ரோமாபுரி வீரர்கள் வந்தபோது சீஷர்களெல்லாம் கைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். (மத்தேயூ 26:56)
எனவே ஏசு நாதரின், உடலைப் புதைத்ததைக் கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலம் பைபிளில் இல்லை. ஆர்மேனியனான யோசேப்புவின் வாக்குமூலமும் இல்லை. ஏசுநாதரின் தாயாரின் வாக்குமூலம் இருட்டடிப்பு செய்த மர்மம் என்ன? கிறிஸ்தவ உலகமே பதில் சொல்லுங்கள்.
புனித வெள்ளி
ஏசு நாதர் இறந்தது வெள்ளி 9வது மணி நேரம் அதாவது 3 மணி. மாலை அடக்கமானதும் அவரின் முன்னறிவிப்புப்படி 3 பகல் 3 இரவு கழித்து அவர் எழ வேண்டும். ஆனால் ஓய்வுநாள் ( யூதர்களின் ஓய்வுநாள் சனிக்கிழமை) முடிந்து வாரத்தின் முதலாம் நாள் வந்த போது ஏசு காணாது போய்விட்டார். இது தான் ( F.I.R ) முதல் தகவல் அறிக்கை. இனி கணக்கு போடுவோம்.
ஆக இரு(2) இரவுகள் ஒரு பகல் வருகிறதே! ஏசு சொன்னதாக சொல்லப்படும் 3 பகல் 3 இரவு எங்கே? யார் புளுகுவது?
புனித வெள்ளி என்று புளுகி உலகம் முழுவதும் 3 நாள் விடுமுறை விடுகிறார்கள்! இதை மூடி மறைக்கவே இரவும் பகலும் 3 நாள் என்ற மோசடி மொழிபெயர்ப்பினை செய்கிறார்கள். அப்படி கணக்கு பார்த்தாலும் (2 இரவும்) மூன்று நாளும் வராதே!
கல்லறை அடைத்த கல்லைப் புரட்டியது யார்? என்பதை 4 சுவிஷேஷங்களும் தரும் 4 வித தகவல்களினால் இது ஒரு பெரும் மோசடி; ஒரே புனித ஆவியினால் எழுதப்படவில்லை. அவரவர் மனப்போக்கில் எழுதியது. இச்சிக்கல்களை யோசித்த மாற்கு தமது சுவிஷேஷத்தில் (8:11- 13) ஏசுநாதர் தம்மை நபி என்று நிரூபிக்க சொன்னவர்களுக்கு எத்தனையோ அடையாளங்களைக் காட்டி உள்ளார், ஆனால் மாற்கு 11 அப்போது பரிசேயர் வந்து அவரோடு (ஏசுவிடம்) தர்க்கிக்கத் தொடங்கி அவரை சோதிக்கும்படி, வானத்தில் இருந்து ஒர் அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார். அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சு விட்டு – இந்த சந்ததியினர் அடையாளம் தேடுகிறதென்ன? இந்த சந்ததியினருக்கு ஒர் அடையாளம் கொடுக்கப்படுவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என சொல்லி படகில் ஏறி அக்கரை போனார். மாற்கு 8:11-13

 thanks :

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites