அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 5 ஜூன், 2010

புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா…? 2

சுவிஷேஷம் எழுதிய மத்தேயூ ஏசுவின் சீடர் அல்ல
” சகோதரியே, 4 சுவிஷேஷக்காரர்களில் யாராவது ஏசுநாதரை கண்ணால் கண்ட சாட்சிகளுண்டா?”
” ஏன் மத்தேயூ – 12 சீடர்களில் ஒருவராயிற்றே.”
” சகோதரியே, “சீடர் மத்தேயூ (MATHEW) வேறு, சுவிஷேஷத்தை எழுதிய மத்தேயூ வேறு!”
” எப்படிச் சொல்கிறீர்கள்?”
” நீங்கள் எதை வைத்து இந்த மத்தேயூ தான் சீடர்களில் ஒருவர் என்கிறீர்கள் சகோதரியே?”
” ஆயத்துறையில் சுங்க அதிகாரியாக இருந்த மத்தேயூ ஏசு அழைத்து அவரைப்பின் தொடர்ந்து சென்றதாக உள்ளதே.” (அதிகாரம் 9 வசனம் 9)
” கண்டும் காணாதவர்களாயும் கேட்டும் கேளாதவர்களாயும் காதாரக் கேட்டும் உணாராதிருப்பீர்கள் – கண்ணாரக் கண்டும் அறியாதிருப்பீர்கள் என்ற ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது மத்தேயு13 ௧3,14 எவ்வளவு உண்மையாக உள்ளது சகோதரி?”
” என்ன ஃபாதர் சொல்கிறீர்கள்? இதோ படித்துப் பாருங்கள் மத்தேயு 9:9″ என்றார்.
” நீங்களே படியுங்களம்மா” என்றேன்.
மத்தேயு எழுதிய சவிஷேஷத்தின்படி 9:9
9 – AND AS JESUS PASSED FORTH FROM THENLE, HE Saw a man, named mathew, Sitting of the receipt of custom, HE Saith unto him follow me – And he follwed Him(Matthew 9.9)
” இதை எழுதியவர் மத்தேயு தானே? என்றேன்.
” ஆமாம்.”
அப்படியானால்: Man named matthew – மத்தேயு எனும் பெயருடைய மனிதனைக் கண்டார் (HE(ஏசு) கூப்பிட்டார் him (மத்தேயு)he (மத்தேயு)Followed Him அவர் (ஏசு) பின் சென்றார். யார் சொல்வது ? 3வது நபர் சொல்வது போலல்லவா உள்ளது.
(தமிழ் மொழிபெயர்ப்பில் இதிலும் மோசடி செய்துள்ளனர்.Follow Me என்பதை ” என் பின்னால் சென்றுவா” என்று எழுதி உள்ளது. – உண்மைப்பதம் ” என்னைப்பின் தொடர்ந்துவா என்பதே)
தமிழ் பைபிள் படியே தமிழ் வாசகர்களுக்கு தருகிறேன்.
மத்தேயு எழுதிய சவிஷேஷம்: அதிகாரம் 9.
வசனம் 9: இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் போகையில் ஆயத்துறையில் (சுங்க கேட்டருகில்) உட்கார்ந்திருந்த மத்தேயு எனும் ஒரு மனுஷனைக் கண்டு; எனக்கு பின் சென்றுவா என்றார். அவன் எழுந்து அவருக்குப்பின் (ஏசுவுக்கு) பின் சென்றான். மத்தேயு 9:9
WHO IS THIS HE AND HIM?
யார் அந்த அவர்? எழுதுவதே மத்தேயு: அப்படியிருக்க,
” மத்தேயூ எனும் ஒரு மனுஷனைக் கண்டு” என்றும் (He CALLED Him) என்பதை எனக்குப் பின் சென்றுவா என்றார். (என்ன மோசடி மொழிப்பெயர்ப்பு) போகட்டும்-
அவன் எழுந்து அவருக்குப் பின் சென்றான்.
இது ஆங்கிலத்தில் THIRD PARTY STATEMENT
அந்த மத்தேயுவும் இந்த மத்தேயும் ஒரு நபரானால் மத்தேயு ஆகிய நான் ஆயத்துறையிலிருக்கும் போது ஏசு என்னிடம் வந்து என் பின்னே எழுந்து வா என்றார். “னான் எழுந்து பின் சென்றேன்” என்பது பொருந்தும்.
இது ஆங்கிலத்தில் SELF STATEMENT OF NARRATION
அதனால் சீடர்களில் ஒருவரான மத்தேயு வேறு; சுவிஷேஷம் எழுதிய மத்தேயூ வேறு.
HE CALLED HIM: அவர் அவனை அழைத்தார்.
HE FOLLOWED HIM: அவன் அவரைப்பின் தொடர்ந்தான் (9:9 மத்தேயு)
” சிந்தியுங்கள் சகோதரியே” என்றேன்.
Iam Convinced நான் திருப்தியடைகிறேன்” என்று கூறினார் அப்பெண்மணி
சுவிஷேஷங்களிடையே முரண்பாடு
சுவிஷேஷங்கள் நாலும் கோர்வையாய் இல்லை. துண்டு துண்டாகச் சேகரிக்கப்பட்ட துணுக்குகளை ஒட்டி வைக்கப்பட்டது போன்று இருக்கின்றன. அவைகளில் ஒரு “தொய்வு” காணப்படுகிறது. மேலும் ஒருவர் கூற்றை மற்றொருவர் மறுக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.
உதாரணமாக-
1.ஏசுநாதர் தமது மார்க்கப் பிரசங்கத்தை செய்த கால அளவு எவ்வளவு என்பது குறித்து சுவிஷேஷெக்காரர்களிடையே வேறுபாடு உண்டு.
” ஒரே ஒர் ஆண்டு நடைபெற்றது.” என மாற்கு, மத்தேயு, லூக்கா மூவரும்
” இரண்டு ஆண்டுகள்” – என யோவான் கூறுகிறார்
எது சரி
2. இந்த சந்ததியினருக்கு ஒரு அடையாளம் காட்டப்படும்.” லூக்கா
” ஒரு அடையாளம் கூட காட்டப்படாது.” மாற்கு
3. ஏசுநாதர் உயிர் பிரிந்து அடக்கம் செய்யப்பட்டதற்கும் அவர்கள் உயிர்த்தெழுப்பபட்டு வானுலகிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டதற்குமிடையில் உள்ள கால அளவில் சுவிஷேஷங்களிடையே முரண்பாடுள்ளது.
4. இறுதி போஜன சடங்குகள் (LAST SUPPER)(Eucharist)
பற்றிய மூன்று சுவிஷெஷங்களிலும் வெவ்வேறு விதமாக கூறப்பட்டுள்ளது.
5. ஏசுநாதர் உயிர்த்தெழும் நிகழ்ச்சியையும் மூவரும் ஒரே விதமாய்க் கூறவில்லை.
6. ஏராளமான மீன்கள் கிடைத்த அதிசயம் அற்புதம் ஏசுநாதரின் வாழ்நாளிலேயே நடந்ததாக லூக்கா சொல்கிறார். ஆனால், யோவானோ இந்நிகழ்ச்சி ஏசு இறந்தபின் உயிர்த்து எழுந்த பின் நடந்ததாகக் கூறுகிறார். எது சரி?
7. ஏசுநாதர் மரணித்தபின் மூன்று முறை மற்றவர்களுக்கு தோற்றமளித்தார் – லூக்கா
ஜெருஸலத்தில் ( ஒரே வாரத்தில்) இருமுறையும் கலீலியோவில் ஒரு முறையாக மூன்று…. – யோவான்
ஒரே ஒருமுறை (கலீலியோவில்) தோற்றமளித்தார் – மத்தேயு எது சரி?
8. கல்லறைக்குப்போன பெண்கள் எத்தனைபேர்?
( மரியதானா மகதலேனா) ஒருவரா, பலரா எது சரி?
9. திபேரியா கடற்கரையில் ஏசுநாதர் மீனவர்களை சந்தித்தது உயிருடனிருக்கும் போதா? அல்லது யோவான் (21:1- 14) கூற்றின்படி உயிர்த்து எழுந்த பின்பா? எது சரி?
10.ஏசுநாதர் முதலில் தோற்றமளித்தது ஜுதேயாவில் – லூக்கா
ஏசுநாதர் முதலில் தோற்றமளித்தது கலீலியோவில் – மத்தேயு எது சரி?
11.அடக்கம் செய்யப்பட்ட ஏசுநாதர் பரமண்டலத்துக்கு உயர்த்தப்பட்டார்(ASENCION) -மாற்கு, லூக்கா இது குறித்து மாத்யூவும் யோவானும் ஒன்றும் கூறவில்லை. இந்த மெளனம் ஏன்?
12.ஈஸ்டர் பண்டிகையைப் பற்றி சுவிசேஷங்களின் மவுனம் ஏன்?
13.ஏசுவின் இறுதி சம்பாஷனை – இறுதி போஜனத்திற்குப் பின் – கைதாகும் முன்வரை நடந்தது. பிரசித்திபெற்ற பேச்சு பற்றி (4 அத்தியாயங்கள்) யோவான் மட்டுமே கூறுகிறார், மற்ற மூவரின் மவுனம் ஏன்?
( முஸ்லிம்களுக்கு அது சாதகமாக உள்ளதால் அந்த இருட்டிப்பா?)
( மூடி மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் உதயம் மற்றும் தேற்றரவாளன் யார்?)
யார் அந்த தேற்றரனாளம்?
யார் அந்த தேற்றரவாளன்?
1. நான் என் பிதாவை வேண்டிக்கொள்வேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. யோவான் 14:15,16
2. நான் உங்களுடனே தங்கி இருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் போதித்து, நான் உங்களுக்கு சொன்ன எல்லாவர்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:29
3. பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும் பிதாவினிடத்தில் இருந்து புறப்பட்டு வருகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும் பொழுது அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார். நீங்கள் ஆதி முதல் என்னுடன் கூட இருந்தபடியால் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் – யோவான் 16:26
4. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:7,8
5. இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதாயிருக்கிறது. சத்திய ஆவியாகிய அவர் வரும்பொழுது சகல சத்தியத்திற்கும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப் படுத்துவார். யோவான் 16:12,13,14
யோவானுடைய சுவிசேஷத்தில் இருந்து சில மேற்கோள்களை படித்தீர்கள். அவற்றிலெல்லாம் அவர் Parakletos என்ற கிரேக்க வார்த்தையைத்தான் உபயோகப்படுத்தி இருக்கிறார். இப்பதத்திற்கு தேற்றரனாளன் என்பதே பொருளாகும். ஆனால் பின் காலத்தில் இப்பதத்தை குருமார்கள் மொழிபெயர்க்கும் பொழுது “பரிசுத்த ஆவியாகிய ” என்ற அடைமொழியை தேற்றரவாளன் என்ற பதத்திற்கு முன்னால் திணித்துக் கொண்டார்கள்! எனக்காகப் பரிந்துரை செய்பவர் எனது கட்சியை எடுத்து வாதிப்பவர், எனக்காக வாதாடுபவர் எனக்காக வக்காலத்து வாங்கி பேசுபவர் என்பதுதான் தேற்றரவாளன் என்ற பதத்திற்கு நேரடியான பொருள். கி.பி. முதலாவது நூற்றாண்டின் கிரேக்க மொழி பேசிய யூதர்கள் மத்தியில் “பாக்லேட்” என்ற பதம் வாதாடுபவர், பரிந்துரைப்பவர் தலையிட்டு உதவி புரிபவர் வக்காலத்து வாங்கி பேசுபவர் என்ற அர்த்தங்களிலேயே வழக்கில் இருந்து வந்திருக்கிறது.
யோவான் இந்த பதத்தை தமது சுவிசேஷத்தில் நான்கு தடவைகளும் முதலாவது நிருபத்தில் ஒரு தடவையும் உபயோகப்படுத்தி இருக்கிறார். சுவிசேஷத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பதம் “பரிசுத்த ஆவியை” குறிப்பிடுகிறதென்றும் நிருபத்தில் உபயோகப்படுத்த பதம் “கிருஸ்துவை” குறிப்பிடுகிறதென்றும் பைபிளில் பதவுரையாளர்கள் கூறுகிறார்கள்! “தேற்றரவாளன்” என்பவர் பின் காலங்களில் தோன்றி ஈஸாநபி அவர்களின் பணியை முழுமைப்பெறச் செய்வார் என்பதனை மூடிமறைப்பதற்காகவே அப்பதம் பரிசுத்த ஆவியையும் ஏன் கிறிஸ்துவையுமே குறிக்கின்றது என அம்மார்க்க அறிஞர் திசை திருப்பிவிடுகிறார்கள்.
இந்த நான்கு சுவிசேஷக்காரர்களும் எந்த மூலத்திலிருந்து தங்களது நூல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டினார்கள்?
மூலனூல் காணாமல் போன மர்மம்?
லூக்காவின் முரண்பாடுகள்!
கிறிஸ்துவக் கோட்பாடுகளிலேயே ஆணிவேர் போன்ரது ஏசுநாதரின் வானிலகுப் பயணம், (ASCENSION) – இது குறித்து மத்தேயும் யோவானும் மவுனமாயுள்ளதன் மர்மம் என்ன?
லூக்கா மட்டும் தமது சுவிசேஷத்தில் ஒரு வகையாகவும் அவருடைய அப்போஸ்தலருடைய நடபடிகள் (அவரே எழுதியது) வேறு வகையாகவும் கூறுகிறார். மரித்தவுடன் வானுலகு எய்தினார் – லூக்கா
மரித்து 40நாள் கழித்தே அது நடந்தது. அப்போஸ்தலர்களின் நடவடிக்கையில் – லூக்கா
ஏணிந்த முரண்பாடு?
(மத்தேயு, மாற்கு, லூக்கா) இம்மூன்று சுவிசேஷங்களிலும் ஒரே மாதிரி வசனங்கள் 330 இடங்களிலும் மார்க், மத்தேயுவில் ஒரே மாதிரி வசனங்கள் 178 இடங்களிலும் வருகின்றன. மாற்கிலும் லூக்காவிலும் ஒரே மாதிரி வசனங்கள் 100 வருகின்றன. மாத்யூவிலும் லூக்காவிலும் ஒரே மாதிரி வசனங்கள் 230 இடங்களிலும் வருகின்றன.
விபரமாய் கூறினால்,
மாத்தேயுவிற்கு மட்டும் தனியாக உரித்தான வசனங்கள் 330, மார்க்கிற்கு மட்டும் தனியாக உரித்தான வசனங்கள் 53, லூக்காவிற்கு மட்டும் தனியாக உரித்தான வசனங்கள் 500
ஒரே புனித ஆவியால் சொல்லப்பட்டதானால் ஏனிந்த முரண்பாடு, ஏற்றத்தாழ்வுகள்? ஏறுக்குமாறான ஏமாற்றுவித்தைகள்?
ஏசுநாதரின் வம்ஸா வழி பற்றிய முரண்பாடுகள்
(GENEOLOGY)
GENEOLOGY FROM DAVID TO JESUS ACCORDING TO MATTHEW 1:6 – 16
மத்தேயு எழுதின சுவிசேஷம்
1.அதிகாரம்
1.ஆபிரகாமின் குமாரனாகிய, தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு
2.ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோப்பு யூதாவையும் அவன் சகோதரனையும் பெற்றான்.
3.யூதா பாரேசையும், சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்.
4.ஆராம் அம்மினதாவைப் பெற்றான். அமினதாப் நகசோனைப் பெற்றாள். நகசோன் சல்மோனைப் பெற்றான்.
5.சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான். ஓபேத் ஈசாவைப் பெற்றான்.
6.ஈசாப் தாவீது ராஜாவைப் பெற்றான்.தாவீதுராஜா உரியாவின் மனைவியாயிருந்தவனிடத்தில் சாலமோனைப் பெற்றான்.
7.சாலமோன் ரெகொபெயாமைப் பெற்றான். ரெகாபயொம் அபியாவைப் பெற்றான்.அபியா ஆசாவைப் பெற்றான்.
8.ஆசா யோசாபாத்தைப் பெற்றான். யோசாபாத் யோராமைப் பெற்றான். யோராம் உரியாவைப் பெற்றான்.
9.உரியா யோதாவைப் பெற்றான். யோதாம் ஆகாசைப் பெற்றான். ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றாம்.
10.எசேக்கியா மனோரேயைப் பெற்றான். மனோரோ ஆமோனைப் பெற்றான். ஆமோன் யோசியாவைப் பெற்றான்.
11.பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12.பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான், சலாத்தியேல் சொரொபா பேலைப் பெற்றான்.
13.சொரொபாபேல் அபியூதைப் பெற்றான். அபியூத் எலியாக்கிமைப் பெற்றான். எலியாக்கீம் ஆபோரைப் பெற்றான்.
14.ஆசோர் சதோக்கைப் பெற்றான். சதோக்கு ஆகீமைப் பெற்றான். ஆகீம் எலியூதைப் பெற்றான்.
15.எலியூத் எலெயாசாரைப் பெற்றான். எலெயாசார் மாத்தானைப் பெற்றான். மாத்தான் யாக்கோபைப் பெற்றான்.
16.யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான். அவளிடத்தில் கிரிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
17.இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைக்கும் தாவீது முதல் பாபிலொனுக்குச் சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன காலம் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாறு தலைமுறைகளுமாம்.
“அன்பு சகோதரியே, எகிப்துக்கு (EGYPT) சென்றுள்ளீர்களா?”
” O Yes – அங்குள்ள பிரமிடுகளைக் கண்டு வியந்துபோனேன்?”
“ரொம்ப சரி – பிரமிடுகளின் வயது என்னவாக இருக்கும்?”
“10000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என்றார்கள்.”
“எனது இந்தியாவின் உயரமான சிகரம் எவரஸ்டின் வயது தெரியுமா? ( 8 கோடி வருடம் – நீலகிரிமலை 320 கோடி வருடம்)
“தெரியாது. ஆனால் ஐரோப்பாவிலுள்ள ஆல்ப்ஸ் மலை 4 கோடி வருடங்கள் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.”
“சரி உலகின் மூத்த நாகரீகம் எந்த நதிக்கரையில் எப்போது தோன்றியது?”
” INDUS VALLEY CIVILIZATION – சிந்துவெளி நாகரீகம் சுமார் 8 முதல் 10 ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நாகரீகம் என்கிறார்கள். நைல் நதி நாகரீகம் 6 ஆயிரம் வருடம் என்று படித்துள்ளேன்.”
“ஆக, உலகம் தோன்றி நாகரீகம் வளர்ந்து ஹரப்பா மொஹஞ்ஞதாராவில் ( இன்றைய பாகிஸ்தான்) உற்பத்தியாகி 10 ஆயிரம் ஆண்டுகள் என்பது புதை பொருளாராய்ச்சியின் கருத்து நிலைமை அப்படி இருக்க, ஏசுநாத்ருக்கு முன் தோன்றிய ஆதம்நபி இருவருக்கும் இடைப்பட்டதாக பைபிள் கூறுகிற வருடங்கள் – கி.மு. 37 நூற்றாண்டுகள் அதாவது 3700 வருடங்களுக்கு முன் முதல் மனிதன் தோன்றினான்.( பைபிளின் அதியாகமம் ஆதம்நபி தோன்றியதை வரையறுத்துக் கூறி உள்ளது) என்று ஏசு தோன்றி 1986 ஆக உலகம் தோன்றி (3700+1987=5687 ஆண்டுகள் தான்)
முதல் மனிதன் தோன்றியபைபிள் படி 5687 ஆண்டுகள்.
இதோ, என் கையிலுள்ள யூதர்களின் காலண்டர் – இதன்படி முதல் மனிதன் தோன்றி (இது 1985ம் வருடக்காலண்டர்) 5746 வருடங்கள் என்று பெருமை பேசுகிறது.
இப்போதைய பைபிள்கள் இதை இருட்டிப்பு செய்கின்றன. எது சரி?
” இன்னொரு எளிமையான கேள்விக் கேட்கட்டுமா?”
” தாராளமாக”
” ஒரு செடி சூரிய ஒளி (SUN LIGHT) இல்லாது (தாவரங்கள்) விளையுமா? வளருமா?
” நிச்சயமாக முடியாது. காரணம் Chlorophil எனும் பச்சை நிறமே சூரிய ஒளியிலிருந்துதான் பெற முடியும். இதை நான் ஆரம்ப பள்ளியிலேயே படித்துள்ளேன் – Lovely days.”
” உங்களுக்குத் தெரிந்த சாதாரண உன்மைக் கூட சர்வலோக இரட்சகனுக்கு தெரியாது போனது ஏன்?”
” என்ன சொல்கிறீர்கள்?”
” ஆத்திரப்பட்டு ஆவதொன்றுமில்லை. அமைதியாக ஆதியாகமம் முதல் பக்கம் (பைபிளின் முதல் பக்கம்) படியுங்கள். முதல் 19 வசனங்கள் மட்டும் படியுங்கள்.”
படித்து முடிக்கிறார்.
” கவனித்துப் படித்தீர்களா? சகோதரியே!”
மூன்றாம் நாள் புல் பூண்டு கனிவர்க்கங்களையும் விருட்சங்களையும் படைத்துவிட்டு( ஆதியாகமம் 1:12)
நாளாம் நாள் சூரியன் சந்திரனையும் படைக்கிறார் (ஆதியாகமம் 1:14 முதல் 16 வரை)
சூரிய ஒளியற்று எப்படி தாவர இனங்கள் வளர்ந்தன? கனிதந்தன? வர்கங்களை உற்பத்தியாக்கின? எந்த விஞ்ஞானியாவது ஒத்துக்கொள்வார்களா?
” உங்கள் குர்-ஆனில் எப்படி உள்ளது?”
” சூரியனை உண்டாக்கிய பின், தாவரம் உண்டாக்கினான் ஆண்டவன்.”
I am Surprise to hear do you have an English copy? Can you give me please.
” O yes நிச்சயம் தருகிறேன். இதையே எடுத்துப் போங்கள். இது அரபி English புத்தகம்.
(இடையில் விமானம் 1 மணி நேரம் நின்றது. அப்போது பஹ்ரினுக்கு முதல் வகுப்பில் ஓர் அரபி ஏறினார். எங்கள் வாதத்தைக் கேட்டபின் அவர் ஒரு காஃபிருக்கு எப்படி குர்-ஆனை தந்தீர்கள். மொழிபெயர்ப்பு மட்டும் தர வேண்டும் என்றார். ஐயா, அரபி மட்டும் தெரிந்த ஒரு கிறிஸ்துவனுக்கு எந்த மொழிபெயர்ப்பை தருவீர்கள் என்றதும் வாய் மூடிவிட்டார்.)
ஆதியாகமம்
1. அதிகாரம்
1. ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும், இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார். இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற் காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
6. பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக் கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்க கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி ஆகாய விரிவுக்குக் கீழ் இருக்கிற ஜலத்துக்கும், ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்துக்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் என்று பேரிட்டார். சாயங்காலமும், விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
9. பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்கு சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார்.
11. அப்பொழுது தேவன், பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
12. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார்.
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
14. பின் தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாகம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற விரிவிலே சுடர்கள் உண்டாக்க கடவது. அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும், குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
15.அவைகள் பூமியின் மேல் பிரகாசிக்கும் படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
16. தேவன் பகலை ஆளப்பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17. அவைகள் பூமியின் மேல் பிரகாசிக்கவும்.
18. பகலையும் இரவையும் ஆளவும் வெளிச்சத்துக்கும், இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்.
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
” சகோதரியே! பைபிளின் முதல் பக்கத்தின் முதல் அத்தியாயத்தின் 19 வசனங்களை மீண்டும் படித்துவிட்டு எத்தனை இரவு, பகல், மாலை Day – Night and Evening என்று சொல்லுங்கள்.”
1. இருள் – ஆரம்பத்தில்
2. வெளிச்சம் – உண்டாக்கினார். எதிலிருந்து உண்டாக்கினார்? இன்னும் வானத்தில் சூரியன் உண்டாக்கவில்லை.
3. 4வது வசனத்தின்படி வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார் – எதைக் கொண்டு பிரித்தார்? இன்னும் சூரியனும் சந்திரனும் படைக்கப்படனில்லை.
4. 5வது வசனத்தின்படி தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பெயரிட்டார். இருளுக்கு இரவு என்று பெயரிட்டார். – பகலும் இரவும் எப்படி உண்டாகிறது. பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றினால் ஒரு நாள் அதாவது ஒரு பகல் ஒர் இரவு சூரியனும் இருக்க வேண்டும். இரண்டையும் சுற்றிவிட்டிருக்க வேண்டும்.
5. 6வது வசனம் ஜலத்தின் மத்தியில் ஆகாய பிரிவு உண்டாக்கினார். – சூரியன் இன்னும் படைக்கப்படவில்லை. அதற்குள் சாயங்காலம் விடியற்காலமாகிறது. முதல் நாளும் ஆகிறது.
6. 7வது வசனம் ஆகாயபிரிவுக்கும் ஜலத்திற்கும் வித்தியாசம் செய்தார். – முதல் வசனத்தில் ( வானம் பூமி சிருஷ்டித்தார்) எற்படுத்திய வானம் எங்கே – ஏன் மீண்டும் ஆகாயம் உண்டு செய்கிறார். IS God is absendminded?
7. 8வது வசனம் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயரிட்டார். சாயங்காலமும் விடியற் காலமுமாகி இரண்டாம் நாளானது. 9 – 10வது வசனம் வெட்டாந்தரை தனியாகவும் ஜலம் தனியாக பூமியும் சமுத்திரமும் உண்டாயிற்று. – (மீண்டும் வானம் என்று மூன்றாவது முறையாக அதே மறதியை செய்கிறார்.) காலை மாலையுடன் 2 நாளாகிறது( சூரியன் இன்னும் படைக்கப்படவில்லை) 2 நாளில் கடவுளுக்கு ஏகப்பட்ட Confusion குழப்பம்.
8. 11வது வசனம் பூமியானது புல், விதை பிறப்பித்து பூண்டுகளும் உண்டாகி – பூமியின் மேல் தங்களில் தங்கள் ஜாதியின் படியே கொடுக்கும் கனி விருட்சங்களை முளையும்படி ஆணையிட – 12வது வசனம் – அவரது ஆனை அமுலாக்கப்பட்டு விதை, கனி விருட்சம், புல் பூண்டுகள் பூமியில் தோன்றின.-
சூரியனும் சந்திரனும் இன்னும் உண்டாக்கவில்லை கனி, மரம், செடி தாவரங்கள் உண்டானது எப்படி?
9. 13வது வசனம் சாயங்காலமும் விடியற்காலமுமாக மூன்றாம் நாளானது.- மூன்று நாள் அதாவது 3 விடியற்காலம், 3 சாயங்காலம், 3 இரவுக்காலம் சூரியனின்றியே.
10. 14வது வசனம் பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க சுடர்களை வானத்தில் உண்டாக்கி அவைகளை அடையாளமாகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும், குறிப்பதற்காகவும் உண்டாக்கினார். 16வது வசனம் பகலை ஆளப் பெரிய சுடர் இரவை ஆளச் சிறிய சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 18வது வசனம் பகலையும், இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும், இருளுக்கும், (மீண்டும்) வித்தியாசம் உண்டாக்கி (மீண்டும்) வானத்தில் வைக்கின்றார். 19வது வசனம் சாயங்காலமும் விடியற் காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.-
ஆரம்பத்தில் 4வது வசனத்தில் ஒருமுறை இரவையும் பகலையும் வெவ்வேறாகப் பிரிக்கிறார். 14வது வசனத்தில் 2வது ஒருமுரை பிரிக்கிறார். 18வது வசனத்தில் மீண்டும் ஒரு (3வது) முறை பிரிக்கிறார். கடவுளுக்கு இத்தனை மறதிகளா? காலம் அடையாளம் – நாள் வருஷங்களை உண்டாக்க நாலாவது நாள் தான் இறைவனே நாள் குறிக்கிறார்.
4வது நாள்தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உண்டாக்குகிறார். இரவும் பகலும் ஆளப்படுகிறது. காலம், பகல், இரவு மாலை, மதியம் 4வது நாளில் தானே படிப்படியாய் 14வது வசனத்தில் செய்கிறார். – பின்னர் இதற்கு முன்னரே 9வது வசனங்களுக்குள் 3 நாள் எப்படி ஆனது? மாலை காலை எப்படி வந்தது ? இதுதான் புனித ஜாலங்களா? புளுகு மூட்டைகளா? முதல் பக்கத்திலேயே இத்தனை தவறு. விஞ்ஞானியைவிட்டால் இன்னும் கெட்டுப்போகும்.
சகோதரியே இந்த வேடிக்கையைப் பார்க்கவும்
வம்ஸாவழி
எது சரி?
கடவுளால் தூண்டப்பட்டு எழுதியவர்கள் இந்த 4 சுவிசேஷக்காரர்கள் என்றால், ஒருவர் மத்தேயு 21தலை முறை; மற்றவர் லூக்கா 41தலை முறை என ஏன் தர வேண்டும்? இதில் தச்சர் ஜோசப் தவிர மற்ற அனைத்திமே வெவ்வேறு (Not identical) பெயர்கள்; வெவ்வேறு பட்டியல். அதில் வினோதம் உரியாவுக்கும் தாவிதுக்கும் பிறந்தவர். அவர் ஏசுநாதரின் வம்ஸா பட்டியலில் வருகிறார். லூக்காவும் அதே தவறைச் செய்கிறார். தம் மருமகளோடு விபச்சாரம் செய்தவர் அதில் பிறந்தவரும் கூட ஏசுவின் வம்ஸா வழியில் முன்னோராக வருகிறார்கள். இது நியாயமா?
இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரை ( ABRAHAM TO DAVID) 14 பதினாலு தலைமுறைகளும்
அதாவது ஆபிரகாம் முதல் தாவீது வரை – 14 தலைமுறைகளும்
தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப் போன காலம் வரை – 14 தலைமுறைகளும்
பாபிலோனுக்கு சிறைபட்டுப் போன கால முதல் கிறிஸ்துவரைக்கும் – 14 தலைமுறைகளும்
ஆனால் லூக்கா 23 – 38 வரை வேறு கணக்கு தருகிறார்.
ஆக, தாவீதுக்கு முன் தரும் பட்டியலிலும் இருவரிடையே முரண்பாடுகள். முற்றிலும் தாவீது முதல் ஏசு முடிய உள்ளத்தில் முரண்பாடுகள்.
(இப்ராஹிம்) ஆப்ரஹாமுக்கு முந்திய தலைமுறையினர் பற்றி மத்தேயூ ஒன்றும் கூறவில்லை.
லூக்கா கூறுகிறார்,
பழைய ஏற்பாட்டில், முதல் மனிதன் ஆதம் தொட்டு ஆப்ரஹாம் வரை இருபது (20) தலைமுறைகளும் மத்தேயுவின் சுவிஷெசத்தில் ஆப்ரஹாமிலிருந்து ஏசுநாதர் வரை 41 தலைமுறைகளும் ஆக மொத்தம் 61 தலைமுறைகள் வரிசைப்படுத்துகிறார்.
ஆனால் லூக்கா – ஆதம் தொட்டு ஏசுநாதர் வரை 77 தலைமுறைகளைப் பட்டியல் போட்டுள்ளார்.
பழைய ஏற்பாட்டில் ஆப்ரஹாமுக்கு 19 தலைமுறைகள் இருப்பதாகவும் நபி ஆப்ரஹாம் 20வது தலைமுறை எனக் கூறுகிறது.
லூக்காவோ ஆப்ரஹாமுக்கு முன்னதாக 20 தலைமுறைகள் இருந்தன என்றும் ஆப்ரஹாம் 21வது தலைமுறை என்கிறார். (இப்ராஹீம்) ஆப்ரஹாம் முதல் ஏசுநாதர் வரை 14 தலைமுறை என்கிறார் மத்தேயு ஆப்ரஹாம் முதல் தாவீது வரை 16 தலைமுறைகள் என்கிறார் லூக்கா. ஏனிந்த குழப்படிகள்? இதில் எது சரி?
கடவுள் ஒய்வெடுத்தாரா?
” சகோதரியே, (SABATH) சபாத் தினம் என்றால் என்ன?”
” ஓய்வு நாள் ”
யாருக்கு “ஒய்வு நாள்?”
” கடவுளுக்கு காரணம் வானம் பூமி அனைத்தும் – மனுஷனைத் தவிர படைத்துவிட்டு ஏழாம் நாள் (சனிக்கிழமை) ஒய்ந்திருந்தார் என்று ஆதியாகமத்தில் 2:22 வது அதிகாரம் 2வது வசனத்தில் உள்ளது.
” சகோதரியே, ஏழாவது நாள் என்பது யூதருக்கு சனிக்கிழமை; கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையை ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்? “சபாத் என்றாலே ஹீப்ரு மொழியில் ஓய்வுநாள், ஞாயிற்றுக்கிழமை ரோமாபுரியினரின் சூரியக்கடவுளான மித்ராவின் தினம்.
கடவுள் ஓய்வெடுத்ததாக கிறிஸ்துவர்களும் யூதர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். கேட்டால் ஆதியாகமம் 2:2ஐ சுட்டிக்காட்டுகிறீர்கள். நான் ஓய்வே எடுக்கவில்லை என்று கூறினால் மறுப்பீர்களா?”
“இதோ பாருங்கள் பழைய ஏற்பாட்டில்!”
ஓய்வெடுத்தது
ஆதியாகமம் 2:2
தேவன் தம்முடைய கிரியையெல்லாம் முடிந்த பின்பு ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்.
ஓய்வெடுக்கவில்லை
ஏசாயா 40:28
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய ஆநாதித்தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாது…
இதில் எது சரி?
“சார் I am terribly confused? I feel ashamed- நான் மிகவும் குழம்பிவிட்டேன், எனக்கு கேவலப்பட்டது போன்ற உணர்வு உண்டாகிறது.”
தலையில் கை வைக்கிறார் விமானப் பணிப்பெண் அறைக்குள் சென்று முகம் கழுவி பவுடர் அணிந்து சுநகசநளா செய்து தலைவலி மாத்திரை உண்டு வருகிறார். கொஞ்சநேரம் மவுனமாகிறார். பழைய உற்காகமில்லை. நான் பைபிளை புரட்டி மீண்டும் படிக்கிறேன். பின்னர் (அஸர்) மாலை நேரத் தொழுகை தொழுகிறேன். விமானம் இன்னும் சில மணிகளில் அபுதாபி போகும்.
தொழுகை முடிந்ததும் “உண்வு உண்கிறீர்களா?” என்கிறார். “வேண்டாம்” என்று கூறிவிட்டு குர்-ஆனை கொஞ்சநேரம் ஓதுகின்றேன் பின்னர் மீண்டும் பைபிளை எடுத்துப் படிக்கிறேன். அப்பெண்மணியும் வந்து எதிரே அமர்கிறார்.
நான் பைபிளில் இதுவரை சுட்டிக்காட்டியவைகளை அடிக்கோடிட்டுத் தருமாறு கேட்கிறார். அவருடைய பைபிளில் மளமளவென்று அடிக்கோடிட்டு ஓரத்தில் விபரமும் எழுதித்தருகிறேன்.
“சார் இறுதி இராபோஜனம் குறித்து யோவான் மட்டுமே குறிப்பிடுகிறார். மற்ற ( Gospellers) சுவிஷேஷக்காரர்கள் மவுனம் சாதிக்கிறார்கள். காரணம் முஸ்லிம்களுக்கு சாதகமாகிவிடும் என்று கூறினீர்களே அதன் மர்மம் என்ன?”
சகோதரியே! பழைய ஏற்பாட்டை மெய்ப்பிக்கத்தானே ஏசு வந்தார்? பழைய ஏற்பாட்டில் என்ன எழுதி உள்ளது?”
18வது அதிகாரம் 18 மற்றும் 19வது வசனம்.
18. உன்னைப்போல் (LIKE UNTO THEE) ஒரு தீர்க்கதரிசியை நான் (GOD) அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் (இறைவன்) வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்வார்!
19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். DEUTERONOMY 18:18,19
“இது எங்கள் ஏசுநாதரின் வருகையைக் குறித்து ஆண்டவன் மோசேவுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டதல்லவா?”
“அவசரப்படாதீர்கள் சகோதரியே! ஆழ்ந்து படியுங்களேன்!”
உன் “சகோதர கூட்டத்திலிருந்து” என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்லளின் சகோதர கூட்டம்- (இஸ்ரவேலர்கள் யாருடைய வாரிசுகள்? அப்ரஹாமின் மகன் இஸ்ஸாக்கின் (ISSAC) வாரிசுகள் என்பது இஸ்ஸாக்கின் சகோதரர் (ISHMAEL) இஸ்மாயில். இங்கு ஏசுநாதர் எப்படி வருகிறார்? அவர் இஸ்ரவேலின் யூதகுலமாயிற்றே? யூதகுலத்தில் உண்டாவார் என்றிருந்தால் உங்கள் கூட்டத்திலிருந்து உரொவரை என்றல்லவா சொல்லப்பட்டிருக்க வேண்டும், மாறாக “உன் சகோதர கூட்டம்” என்பதன் ஆய்வு என்ன?
“சரி போகட்டும், வேறு எவ்வகையில் இது ஏசுநாதருக்கு பொருந்துகிறது?”
(மூஸா) மோசஸும் யூதர், ஜீஸஸும் யூதர்.
மோசஸும் தீர்க்கதரிசி, ஜீஸஸும் தீர்க்கதரிசி.
“இந்த ஒற்றுமை ஒன்றே போதுமே. இதுதான் எனக்கு போதிக்கப்பட்டது” என்றார்.
“சகோதரியே! ஏற்கனவே மோசஸ் யூதரல்ல என்று நிருபித்தேன்; பரவாயில்லை!
யூதராகவும் நபியாகவுமட்டுமே இருந்தால் அதுமட்டும் போதுமென்றால் இது ஏசுவுக்கு மட்டுமல்ல.
தாவீதும் தீர்க்கதரிசி, தாவீதும் யூதரே.
சாலமோனும் தீர்க்கதரிசி, சாலமோனும் யூதரே.
இன்னும் எத்தனையோ நபிகள் உண்டு.
எனவே உங்கள் வாதம் அதில் அடிப்பட்டு போய்விடும். இன்னும் எளிமையான பல உதாரணங்களை எங்களால் தரமுடியும்.
அது முழுக்க முழுக்க முஹம்மது நபி அவர்களையே குறிக்கும் என்பது எங்கள் வாதம். இல்லை ஏசுவையே குறிக்கும் என்பது பாதிரிகள் வாதம். அவர்கள் கூறும் ஒரே ஒரு ஒற்றுமை ஏசுவும் மோசேவும் யூதர், தீர்க்கதரிசி என்பதே. அந்த அளவுகோலையே நாமும் பயன்படுத்தி விளக்குவோம். தவறாக இருந்தால் விட்டு விடுங்கள், சரி என்றால் சந்தோஷம்! என்றேன்.
“உங்கள் பாணி(Approaching) எனக்குப் பிடித்துள்ளது. உங்கள் பதிலை கூறுங்களேன் என்றார்.
“சகோதரியே, உன்னைப்போல் ” LIKE UNTO THEE மோசேயைப்போல் யார் என்று பார்ப்போம். மோஸஸ்,முஹம்மத்,ஜீஸஸ் Moses, Mohamed, Jesus மூவரையும் களத்திறக்குவோம்.
இதைப்போல் இன்னும் எத்தனையோ வேற்றுமைகளை காட்டலாம். ஆக தவ்ராத் (OLD TESTAMENT)ல் சொல்லிய தீர்க்கதரிசி முஹம்மது நபிகளார்தானே தவிர ஏசுநாதர் அல்ல.
இதே கருத்தையே (இது இறைவனின் கூற்றாக) உபாகமம் 18:18 மோசசும் கூறுகிறார்.
என் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரிலிருந்து எழுப்பப்பண்ணுவார். அவருக்கு செவி கொடுப்பீர்களாக என்றுள்ளது. உபாகமம் 18:15
உபகாமம் 18:18 இறைவன் சொன்னது.
உபகாமம் 18:15 மோசே தீர்க்கதரிசி சொன்னது.
“அது சரி . நீங்கள் முதலில் கூற வந்தது இறுதி இரவு போஜனத்தில் 3 சுவிஷேஷக்காரர்களின் மவுனம் பற்றியல்லவா? அதற்கு இன்னும் விளக்கம் தரப்படவில்லையே?”
“மன்னியுங்கள் சகோதரியே!”
கிறிஸ்துவ கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்கும் ஆணிவேர் போன்றது ஏசுநாதரின் இராபோஜன பிரசங்கம். இதை யோவான் 4 அத்தியாயங்களில் விவரிக்கிறார். அதில் ஏசுநாதர் எதிர்காலத்தில் மனித சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பின் காலங்களில் வழிகாட்ட யார் வருவார்கள் என்பது பற்றியும் உபதேசித்திருக்கிறார். யோவான் கிரேக்க (GREEK மொழியில் PARAK LETOS எனக் குறிப்பிட்டதை ஆங்கிலத்தில் என்று மொழி பெயர்த்துள்ளார். அதை பைபிளில் தேற்றரவாளன் (வழக்குரைப்பவர், வாதிடுபவர், பரிந்துரையாளர், சிபாரிசு செய்பவர், வழி காட்டுபவர்) என்று கூறுகின்றனர்.
15.If you love me keep my commandments.
16. And I will pray the father, and he shell give you another comforter, and he may abide you with you for ever. John – 14,15,16.
இங்கே தமிழ் மொழிபெயர்ப்பு மோசடியைக் காணுங்கள்.
15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளை கைக்கொள்ளுங்கள் John 14:15
சரியான மொழிபெயர்ப்பு:
(If you love me) என்னை நீங்கள் நேசித்து என் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தீர்களேயானால் நான் என் பிதாவினிடத்தில் வேண்டுவேன். அவர் உங்களுக்கு இன்னொரு தேற்றரவாளனைத் தருவார். அவர் (தேற்றரவாளன்) என்றென்றும் உங்களுடனிருப்பார்.
ஆனால், தமிழ் பைபிளில் புதிதாக சத்திய ஆவி என்று சேர்த்துள்ளனர்.
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். யோவான் 14:15,16
நான் உங்களுடனே தங்கி இருக்கையில் இவைகளை உங்களுக்கு சொன்னேன். என் நாமத்தாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26
பிதாவினிடத்திலிருந்து தான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும் பிதாவினிடத்தில் இருந்து புறப்பட்டு வருகிறவருமாகிய சத்திய ஆவியான, தோற்றரவாளன் வரும் பொழுது அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார். நீங்களும் ஆதி முதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் யோவான் 16:26
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் இருக்கும். நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனெயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோனான் 16:7,8
இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும் பொழுது சகல சத்தியத்திற்கும் உங்க சத்தியத்திற்கும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப் படுத்துவார். யோவான் 16:2,13,14
“இவைகள் தீர்க்கதரிசியின் வருகையல்ல; புனித ஆவியிம் வருகையைக் குறித்தே கூறப்படுவதாக பாதிரிமார்கள் எங்களுக்கு சொல்லியுள்ளனரே!”
“சகோதரியே! அது தான் PRIESTLY POLITICS or POLY TRICKS”
புனித ஆவி என்றால் புனித ஆவி புதிய ஒன்றா?
யோவான் 16:7ன் படி நான் போவது நலமாயிருக்கும்; நான் போனேனாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
ஆக, புனித ஆவி ஏசுநாதருக்கு முன்னும் இருந்தது, அவர் வாழும்போதும் இருந்தது. இல்லாத ஒன்றையே அனுப்பப் போவதாக கூறுகிறார்.
Gulf Airlines விமானம் அபூதாபியை நெருங்குகிறது. மீண்டும் பேச்சு தொடர்கிறது.
“ஏங்க சார் நிறைய இடங்களில் சுவிஷேஷக் கூட்டங்கள் ‘ஏசு அழைக்கிறார்’ ( நம் தமிழ் நாட்டில் சகோதரன் தினகரன் போன்றோர்) என்று கூறி, சப்பாணிகள் நடந்துள்ளனர். குருடர்கள் பார்வை பெற்றுள்ளனர். செவிடர்கள் கேட்டும், பிணிகள் நீங்கியும் அற்புதங்கள் ஏற்பட்டு உள்ளனவே! அது எப்படி?”
“சகோதரியே! அது குறித்து நீண்ட விளக்கம் தர வேண்டும். ஆனால் நமது விமானப் பயணம் குறுகியது. சுருங்கக் கூறினால்.
மத்தேயூ 24:5 , மத்தேயூ 24:11,23 முதல் 25 வரை, மத்தேயூ 7:15 முதல் 23 வரை
அநேக கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள் அப்பொழுது இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார் அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
ஏனெனில், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மத்தேயூ 24:23 முதல் 25 வரை
ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைத் தரிசித்துஅ கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயூ 24:5
15. கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு, எச்சரிக்கையாயிருங்கள் அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கின்ற ஓநாய்கள்.
16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
17.அப்படியே நல்ல மரமொல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது.
19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
20. ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்திமாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே! என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயூ 7:15 முதல் 23வரை
“சகோதரியே! மேற்சொன்னவற்றில் மத்தேயூ 7:22ல் உள்ளது” அந்நாளில் – எது அந்த நாள்! நாளை நியாயத் தீர்ப்பு செய்யும் ?(DAY OF JUDGEMENT) நாள். அந்நாளில் ஏசு என்ன செய்கிறார் பாருங்கள். கர்த்தாவே! கர்த்தாவே! உன்நாமத்தினால் அதை இதை செய்தோம் என்பார்கள். யார் அவர்கள்? முஸ்லிம்களா? இந்துக்களா? யூதர்களா? புத்தபிச்சுக்களா? பார்சிகளா? கிறிஸ்துவர்களாகிய நீங்கள் உங்களைப்பார்த்து என்ன சொல்கிறார்?
ஏசு சொல்வார். ஒருக்காலும் நான் உங்களை அறியவில்லை. என்னை விட்டு தூரப் போங்கள் (Depart from me) என்பார்! எனவே, இந்த மாய ஜாலங்களில் மயங்காது நேரான வழியை தேர்ந்தெடுங்கள் சகோதரியே!”
” O GOD “Terrible” ஓ கடவுளே, மிக பயங்கரம் WE WERE MISGUIDED- எங்களை வழி கெடுத்துவிட்டார் இந்தப் பாதிரிகள் என்றார் அப்பணிப்பெண்.
( இது குறித்து நீண்ட விவாதம் செய்தேன். புத்தகத்தின் அளவு நீளமாகக் என்பதற்காகவே இங்கு சுருக்கித் தருகிறேன். இறைவன் நாடினால் அடுத்த பதிப்பில் முழு விபரமும் தருகிறேன். 6 வால்யூம்கள் உள்ளன – ஆசிரியர்)*
* இந்நூலாசிரியர் பழனி பாபா அவர்களின் இந்த ஆசை நிறைவேறவில்லை. 1997ஆம் ஆண்டு ரமலான் மாதம் பயங்கரவாதிகளால் வெட்டி (ஷஹித்) கொலை செய்யப்பட்டார்கள்.(இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஊன்) அவரது பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுத்து மறுமையில் சுவனத்தில் சேர்க்க துஆ செய்வோம். (பதிப்பகத்தார்)
“முஸ்லிம்களாகிய நீங்கள் பைபிளை முழுவதும் பொய் என்கிறீர்களா?”
“சரியான கேள்விதான், சகோதரியே! பைபிளில் மட்டுமல்ல, தெளராத், இன் ஜீல், ஸபூர் (சங்கீதங்கள்) இவையனைத்தும் வேதங்களையும், அதனைக் கொணர்ந்த இறைவனின் தூதுவர்களையும் ஏற்று நடக்க வேண்டும் என்பது எங்கள் திருக்குர் ஆனின் ஆனை. அதுவுமல்லாது மலக்குகள் (ANGEKS) மறுமை இவற்றை ஏற்று நடப்பது எங்கள் கடமை! ஆனால், மாறுபடாத – மாசுபடாத மனிதக்கரத்தின் கறைபடாத நூலாக அவைகள் இருந்தால் அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்.”
“இன் ஜீல், ஈஸா என்ற பதங்களை முஸ்லிம்கள் கூறுவதை நான் கண்டிள்ளேன்!”
“சகோதரியே, நான் மறுக்கவில்லை, மாறாக என் வேதம் இன் ஜீல் இதை என் தேவனாகிய கர்த்தர் அருளினார் என்று பைபிளில் எங்காவது ஏசுநாதர் கூறுகிறாரா?”
“இல்லை”
“முஸ்லிம்கள் மட்டுமே கூறுகின்றனர். அதில்தான் ஆராய்ச்சியாளனுக்கு கருவே அமைந்துள்ளது. எப்படி எனில்
ஒரு வேத நூலை ஆராய்பவர் தெளிவான எளிமையான பதங்களை உடைய வசனங்களை வைத்து மேற்கோள் காட்டி விளக்கிட வேண்டும்.
அதற்கு 3 விதமான அளவுகோலை முஸ்லிம்கள் காலங்காலமாய் கடைபிடிக்கிறார்கள்.
இறைவனால் கூறப்பட்டது – Words of God
நபியால் கூறப்பட்டது – (Hadith) Words of the prophet of God
சரித்திராசிரியர்களால் கூறப்பட்டது – Words of the HISTORIANS or Outograper
திருக்குர் ஆன் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் ஆனைகள். ஹதிஸ்கள் (Traditions) நபிகளாரின் வாக்குகள் மற்றும் அதை கேள்விப்பட்டவர்கள், உறவினர்கள், நண்பர்களின் வாக்குமூலங்கள். சரித்திரங்கள், சரித்திர வல்லுனர்களின் கூற்று மற்றும் Commentators இப்படி மூவகையும் தனித்தனியே வைத்துள்ளோம். உங்களுடையது அனைத்தும் சேர்ந்த (அரபு நாட்டு இரவுக் கதைகள் போல்) கலவை.
“கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் சார்”
“தெளிவாகவே சொல்கிறேன். பேனாவை வாங்கி கீழே உள்ளதை எழுதுகிறேன்;
“உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்களின் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்கு கற்பிப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்வார்.” உபாகமம் 18:18
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குஅ செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன் உபாகாமம் 18:19
நான் – நானே கர்த்தர். என்னைப்யல்லாமல் வேறு ரட்சகர் இல்லை. ஏசாயா 43:11
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது, நானே கர்த்தர்; வேறோருவர் இல்லை. ஏசாயா 45:18
என்னையல்லாமல் வேறே தேவனில்லை! என்னைத் தவிர வேறு ஒருவருமில்லை. ஏசாயா 45:21
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே! என்னை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். நானே தேவன் வேறொருவரும் இல்லை. ஏசாயா 45:22
இவற்றைப் படிக்கும் போதே எளிதாய்க் கூறிவிடலாம், யாருடைய இடையுதவியும், விளக்க பதவுரைமில்லாது கூறலாம்.” நான்”"என்” போன்றவை “சுய” சொற்கள். ஓர்மையில் உள்ளது. இது இறைவன் கூறுவதுபோல் உள்ளது என்பது வெளிப்படை.
அதே நேரம், இரண்டாவது கூற்றுப்படி, ஒரு தீர்க்கதரிசியின் சொல் என்பதை பைபிளில் எப்படி ஆராய்வது எனப் பார்ப்போம்.
“உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்கு செவி கொடுப்பீராக. உபாகமம் 18:15
அப்போது கர்த்தர் ர்ன்னை நோக்கி அவர்கள் சொன்னது சரியே. உபாகமம் 18:17
“ஏலி,ஏலி,லாமா,சபக்தனி என்று மிகுந்து சப்தமிட்டு ஏசு கூப்பிட்டார். “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர். என்று அர்த்தமாம்” மத்தேயூ 27:46
“இயேசு அவனுக்குப் பதில் சொல்லும் வண்ணமாக கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால், “ஓ இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” மாற்கு 12:29
அதற்கு இயேசு “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே” மாற்கு 10:18
23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார் அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
24. ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் (அறிவாளிகளையும்) வஞ்சிக்கத் தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.
25. இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மத்தேயூ 24:23,24,25
இயேசு கூறினார், ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைதரித்துக் கொண்டு நானே கிரிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்ப்ச்ச்ர்கள். மத்தேயூ 24:5
இதைப் படிக்கும் ஒரு குழந்தைக்குக் கூட புரியும் கர்த்தர் என்னை நோக்கி என்பதும், இயேசு அழுதார், கூவினார் இயேசு மோசே கூறியது எனும் போது அது ஒரு தீர்க்கதரிசி, இறைவனின் தூதுவருடைய சொல் என்பது புரிகிறது.
மூன்றாவது நபருடைய சொல் அதாவது சரித்திராசிரியரின் சொல் எப்படிப்பட்டது என்பதை பார்ப்போம்.
அப்போது எல்லாரும் (சீடர்கள்) அவரை (ஏசுவை) விட்டு ஓடிப்போனார்கள்.
12. மறுநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகையில் அவருக்குப் பசி உண்டாயிற்று.
13. அப்போது இலைகளுள்ள ஒரு அத்திபரத்தைத் தூரத்திலே கண்டு,அதில் ஏதாகிலும் அகப்படுமா என்று பார்க்க வந்தார். அவர் அதனிடத்திலே வந்தபோது அதில் இலைலளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. மாற்கு 12:12,13
அவருக்குப் பசியுண்டாயிற்று என்பது மூன்றாவது நபர் கூற்று. ஏசுவின் கூற்று எனக்கு பசியுண்டாயிற்று, நான் அதனிடம் வந்தபோது என்றிருக்கும். அவர் அதனிடம் வந்தபோது என்பது மூன்றாம் நபர் அதாவது சரித்திராசிரியரின் கூற்று.
இப்படிப் பகுத்துப் பார்த்தால் பைபிள் என்பது கடவுளின் வாக்காக இருக்க வாய்ப்பற்று இரு மடங்கு தீர்க்கதரிசிகள் மற்றும் சரித்திராசிரியர்கள் கூற்று மலிந்து கிடப்பதைக் காணலாம். எனவே, மொத்த பைபிளும் கடனுளின் வார்த்தைகள் என்பதை ஏற்றுக்கொள்ள ஒரு முஸ்லிமால் முடியாது.
“பழைய ஏற்பாட்டைக் கூட மோசேவின் முழு வார்த்தை என்று ஏற்பதில்லையா?”
“சகோதரியே, பழைய வேதத்தை எடுத்துப் பாருங்கள். 700க்கும் மேற்பட்ட இடங்களில் மோசேவிடம் கர்த்தர் சொன்னதாவது, கர்த்தரிடம் மோசே சொன்னதாவது, கர்த்தர் ஆரோன் மோசேவிடம் கூறியதாவது என்றுள்ளது.
இது மோசஸ் சொல்லவும் இல்லை, கடவுளின் வார்த்தையாகவும் இல்லை. மோசஸ் சொல்லியிருந்தால் நான் கர்த்தரிடம் சொன்னேன், கர்த்தர் என்னிடம் பேசிய போது என்று ஒருமை வந்திருக்கும். அவர் இவரிடம் சொன்னர். இவர் அவரிடம் என்பது முழுக்க முழுக்கு மூன்றாம் நபர் சாட்சி. எனவே பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதி மனிதக் கைகளால் ஊடாடப்பட்டுவிட்டது என்ற உண்மையை தெரிந்தும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் மறுதலிக்க காரணமெம்ம!” என்றேன்.
“முற்றிலும் சரியே!” என்றார் அப்பெண்.
“சகோதரியே, நீங்கள் நிச்சயம் யூதப் பெண்ணாக இருக்க முடியாது.”
“நீங்கள் அரபிகளுக்கு சொந்தமான GULF AIRLINES-ல் வேலை செய்கிறீர்கள். யூதர்களுக்கு சொந்தமான COCOCOLA பானத்தைக் கூட பருகாது PEPSI பானம் பருகும் அரபிகள் யூதர்களின் பரம வைரிகள் அதனால் சொல்கிறேன்.”
“மிகவும் சரி, நான் அமெரிக்கன் கலிபோர்னியாவைச் சார்ந்தவள்”
“அப்படியானால் ஏசு கிறிஸ்துவால் உங்களுக்கு பலன் இல்லையம்மா.”
“மிகவும் கொடுரமான அதிர்ச்சி தரத்தக்க வேதனை தரும் செய்தி உங்களுடையது.”
“வேண்டுமானால் மத்தேயூ 15:21 முதல் 24 வரை படித்துப்பாருங்கள்.
21. ஏசுநாதர் திரு சீதோன் பட்டணத்துக்கு போனார்.
22. அப்போது அந்த திசைகளில் குடியிருக்கிர கானானிய (CANNAN) தேச யூதரல்லாத ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும். என்மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23. அவளுக்கு எவ்வித பதிலும் தராது ஏசு போகிறார். சீடர்கள் சிபாரிசு செய்கிறார்கள், வேண்டிக் கேட்கிறார்கள்.
24. அதற்கு அவர் கானாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்துக்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடி அல்ல என்றார். மத்தேயூ 15:21 – 24
அதைப்படித்த அப்பெண்மணி சற்று அதிர்ச்சி அடைகிறார்.
ஆனால் முஹம்மது நபிகளை இறைவன் ‘ரஹ்மத்துல் ஆலமீன்’ அகில உலகுக்கும் அருட் கொடையாக ஆக்கி வைத்துள்ளான்.
மேலும் சகோதரியே! மத்தேயூ 10:5 முதல் 7 வரை படியுங்கள்.
(அதிகாரம் 10ல் தான் யூதாஸ் கரியோத்து காட்டிக் கொடுத்தவன்) உட்பட 12 சீடர்களை ஏசு தேர்ந்தெடுக்கிறார், பின்னர் அறிவுரை கூறும்போது -
5. இந்த பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்கு கட்டளையிட்டு சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார்(GENTILES) நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர்(SAMARITANS) பட்டணங்களில் பிரவேசியாமலும்…..
6. காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்துக்குப் போங்கள்.
7. போகையில் பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்! மத்தேயூ 10:5 – 7
“சகோதரியே, புற ஜாதியார் யார்? அமெரிக்கராகிய நீங்களும் நானும், ஏன் யூதரல்லாத அனைவரும் தானே.”
“ஆனால் சார், மார்க் 16:15ல் நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிகளுக்கும் சுவிஷெஷத்தை பிரசங்கியுங்கள் என்று கூறியுள்ளாரே!”
“சகோதரியே, மீண்டும் இவ்வரிகள் மத்தேயூ 15:24 உடன் முரண்படுகிறது. (முரண்பட்டால் புனிதம் கெடும்) மற்றும் மத்தேயூ 1:21ல்
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது (யூத) ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை(யூதர்களை) இரட்சிப்பார் என்றான் (தேவ தூதன் யோசேப்பின் கனவில்) இதனுடனும் முரண்படுகிறது.
இதனால் தான் பல பைபிள் அறிஞர்கள் சில ஆண்டுகளுக்கு முன் மார்க் 16ல் 9லிருந்து 20வரை நீக்கி Foot Note அடிக் குறிப்பிட்டுள்ளனர். ( THE NEW AMERICAN STANDARD BIBLE ) பல பாதிரிகளின் எதிர்ப்புகளால் சிலர் சில பைபிள்களில் சேர்த்தும் சேர்க்காமலும் விட்டுள்ளனர்.( சேர்க்காது விட்டது AMERICAN REVISED STANDARD VERSION)
“அப்படியிருந்தும் மத்தேயூ 28:19ல் ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும்(NATIONS)என்று வருகிறதே.”
“சகல லாதிகள் (தேசங்கள்) என்பது All nations யூதர்களின் 12 குலங்கள் (இது குறித்து ஏசுவே லூக்கா 22:30ல் “நீங்கள் என் ராஜ்யத்திலே, என் பந்தியிலே போஜனபானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாய் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள்” என்றார்) இந்த 12 கோத்திரங்களைத்தான் குறிப்பிடுகிறார் NEW AMERICAN STANDARD BIBLE மற்றும் NEW WORLD TRANSLATION of Holy SCRIPTURES இந்த இரு பைபிள்களிலும் All Nations என்று இல்லை. மாறாக All the Nations என்றுள்ளது. எனவே குறிப்பிட்டுச்சொல் 12 கோத்திரத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறது. இதை வழக்கம் போல Papal Politics வேலை செய்துள்ளனர்.”
“ஓ Now I under stand இப்போது புரிகிறது!”
“அது மட்டுமல்ல சகோதரியே!
ஏற்கனவே படித்த மத்தேயூ 15:24லிருந்து 25,26ல் என்ன சொல்லப்படுகிறது?
ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று மீண்டும் அப்பெண்மணி கேட்க (புற ஜாதி பெண்மனி) ஏசு என்ன சொன்னார்?
அவர் அவளை நோக்கி; “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல” என்றார். மத்தேயூ 15:26
பிள்ளைகள் என்பது யூதர்கள், அப்பம் அருள்பெற்ற அற்புத சக்தி, நாய்க்குட்டி என்பது புற ஜாதியராகிய நாம்.
இன்னொரு இடத்தில் நம்மை பன்றி என்று சொல்லுகிற வசனம் வருகிறது. இவ்வளவு ஏன் சகோதரியே; ஏசுநாதர் யூதர்களை காணாது போன ஆடுகள் என்கிறார். மற்றெல்லாரையும், பல நேரம் பல இடங்களில் இப்பொல்லாத சந்ததியினர், இந்த விபச்சார சந்ததியினர், குட்டிவிரியன் பாம்புக் குட்டிகளே, நாய்களே, பன்றிகளே என்று கூறுகிறார்.
ஒரு தீர்க்கதரிசி இப்படி கூப்பிடுவாரா? நிச்சயம் இருக்க முடியாது, காரணம் எங்களுடைய குர்-ஆனிலே அவரையும் ரஹ்மத்துல் ஆலமீன் உலகத்து மாந்தருக்கு அருட்கொடை என்று கூறுகிறது.
அவருடைய தாய் மேரி (மரியம்)யை உலகத்து மாந்தருக்கெல்லாம் உயர்வானவராக குர்-ஆனில் வைத்துள்ளோம். ஆனால் அந்த மாந்தர்க்கரசி பற்றி பைபிள் மவுனமே சாதிக்கிறது. பேசினால் ஆண்டுகள் யுகங்கள் தேவை. மொத்தத்தில் பைபிளிலும் குர்-ஆனிலும் வரும் ஒரே ஒரு விதவசனம் தான் பதில்.
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறப்படியால். Mathew மத்தேயூ 13:13
(அவர்கள்) செவிடர்களாக,ஊமையர்களாக,குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள் அல்குர்-ஆன் 2:18
இது தான் பதில்.
“ரொம்ப நன்றி சார். பஹ்ரினில் நீங்கள் எங்கு தங்குவீர்கள்? என் அண்ணனும் இங்கு கம்பெனி வைத்து என் ஜினீயரிங் காண்டிராக்ட் செய்து வருகிறார்/”
“ஹோட்டல் அல்ஜஸிராவில் 2 நாள் இன்ஷா அல்லாஹ் தங்குவேன்.”
“ரொம்ப நன்றி சார்” விடைபெற்றேன்.
பஹ்ரினில் தங்கியிருக்கும்போது மறுநாள் ரிஸப்ஷன் போனில் என்னைப் பார்க்க ஒரு குடும்பம் வந்துள்ளதாக செய்தி வந்தது மேலே அனுப்பும்படி கூறினேன். என்ன ஆச்சிரியம்! அல்ஹம்துலில்லாஹ், அதே விமானப் பணிப்பெண் அவருடைய தாய், தங்கை, அண்ணன், அண்ணி(தகப்பனார் இல்லை) அனைவரும் வந்து உரிமையோடு அளவளாவினர். மகள் கூறியதையும் பாதிரிகள் தயங்கியதையும் கூறி குடும்பமே இஸ்லாத்தைத் தழுவும்படி வழி கேட்டனர்.
பஹ்ரினிலுள்ள ( ISLAMIC GUIDANCE SOCIETY ) இடம் வரவழைத்து ஒப்படைத்து விடைபெற்று ரியாத் சென்றேன். அவர்களுடன் ஓட்டலில் உரையாடியது VIDEO செய்யப்பட்டிள்ளது.
ரியாத் லக்கி வீடியோவிலும் அபுதாபியில் அல் அமனாவிலும், சிங்கப்பூரில் மஜீத் பிரதர்ஸ், இலங்கையில் ISLAMIC STUDIES CENTRE – Colombo விலும் என்னிடமும் காப்பிகள் கிடைக்கும். முற்றும்.
thanks : http://kadayanalluraqsha.com/?paged=5  

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites