பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிப்பதுதான் பெரும்பாலும் நடைபெறும் சம்பவமாகும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள ஆப்பிரிக்க நாடான பபுவா நியு கினியாவில் உள்ள மென்டி நகரில் 17 வயதான ஒரு பள்ளி மாணவனை 10 பெண்களைக் கொண்ட கும்பல் பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண்கள், தாங்கள் வைத்திருந்த சமையலறை கத்தியால், மாணவனை தாக்கினர். அவர்களில் 4 பெண்கள், அம்மாணவனை வலுக்கட்டாயமாக கற்பழித்தனர். தற்போது, அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இது குறித்து அந்த நாட்டின் தெற்கு பிராந்திய போலீஸ் கமாண்டர் டெட்டி டெய் கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை மென்டியில் ஒரு பள்ளி மாணவனை பெண்கள் கும்பல் ஒன்று கத்தியால் தாக்கி கடத்திச் சென்றது. ஆனால் இரவில் தனியாக போக வேண்டாம் என்று பெண்களை நானே எச்சரித்திருக்கிறேன். இனி ஆண்களையும் எச்சரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், 4 பெண்கள் அவனுடன் பலவந்தமாக உடல் உறவு கொண்டுள்ளனர். மேலும் 6 பெண்கள், அவனை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அவனுக்கு எய்ட்ஸ் தாக்கி விடுமோ என்று அஞ்சுகிறோம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக