அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 16 டிசம்பர், 2010

ஆடம்பரத் திருமணத்தை ஒழிப்போம்



என். பெனாசிர், தொண்டி
தனது ஆடை பிறரைக் கவர வேண்டும் என்று பல கடைகள் ஏறி இறங்கி வாங்கிறோம். காலில் அணியும் செருப்பைக் கூட வாங்கும் போது இது நன்கு உழைக்குமா? தரமானதா? என்று பார்த்துப்பார்த்து வாங்குகின்றான். இவ்வாறு தன் கைக்குட்டையிலிருந்து காலணி வரை பல மணிநேரங்களை செலவழித்து பார்த்தப் பார்த்து வாங்கும் மனிதன், மறுமைக்காக எந்த ஒன்றையும் பார்த்துப் பார்த்து செய்வதில்லை.அதனால்தான் நமது சமூகத்தில் வரதட்சணை என்னும் உயிர்கொல்லி தாண்டவம் ஆடுகின்றது.
தனது பிள்ளையுடைய திருமணத்தை ஊர் மெச்சவேண்டும், அழியா நினைவாய் மக்கள் முன் இருக்கவேண்டும் என்றும் இந்தத் திருமணத்தைப் போல் வேறு எந்தத் திருமணத்தையும் பாத்ததேயில்லை என்று மக்கள் புகாôரம் சூட்டவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே!
அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த சுன்னத்தைப் பின்பற்றி அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவது மகிழ்ச்சியா? இல்லை தனது பணத்தை இறைத்து ஆடம்பரத்தை முகஸ்துதிக்காக காட்டி அந்த ஒரு நாள் மட்டும் பெறும் இன்பம் பெரிதா? சிந்தியுங்கள்!
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும் என்ற நபிகளாரின் நபிமொழியை உற்று நோக்கியது உண்டா?
நபிவழியின் அடிப்படையில் திருமணத்தை எளிமையாக நடத்துங்கள் என்று கூறினால்,திருமணம் என்பது வாழ்நாளில் ஒரு தடவை வரக்கூடியது. அதலால் அது மிகப்பெரிய இன்பமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
மனிதன் மூலம் கிடைக்கும் இன்பத்தை இறைவன் மூலம் கிடைக்கும் பரக்கத்தை இவர்களுக்கு குறைவாகத் தெரிகிறது. திருமண தம்பதிகளுக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது இறைவனின் அருள்தான். அது எளிமையாக நடக்கும் திருமணத்தில்தான் கிடைக்கும் என்று நபிகளார் கூறிய பிறகும் ஆடம்பர திருமணத்தை எந்த முஸ்லிமும் தேர்ந்தெடுப்பானா?
இறைவனின் அருள் இருந்தால்தான் திருமணத்திற்கு பிறகு நடக்கும் சோதனைகள், பிரச்சனைகளிலிருந்து தம்பதிகள் விடுபடமுடியும் இதையாரும் புரிந்து கொள்வதில்லை. தங்களது பிள்ளைகள் திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டாமா? இறையருள் பெற்று இன்பம் பெறவேண்டாமா? பெற்றோர்களே சிந்தியுங்கள்!
ஆடம்பரத் திருமணத்தை நடத்துபவர்களே திருணமத்தை கானல் நீராய் பார்த்துக் கொண்டிருக்கும் ஏழை கன்னியரை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஆடம்பர திருணமங்கள் அதனால் ஏற்படும் செலவுகள் ஏழைகளையும் இவ்வாறு திருணம் செய்ய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி அவர்கள் திருமணம் என்பதையே வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள்.
ஆடம்பர திருணத்தை நடத்த விரும்புவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எண்ணிப் பார்க்கட்டும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன் 4:38)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
நீங்கள் ஷைத்தானின் நண்பராக வேண்டுமா? அல்லது இறையருளை பெறவோராக மாற வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites