அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

திருஷ்டி கழிப்பது சரியா ?

 மிளகாய் போன்ற சில பொருட்களை வைத்து ஓதி அதை தலையைச் சுற்றி எச்சில் துப்பி எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்று கூறுகிறார்களே, இதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?
மெஹ்ராஜ், ஈரோடு
மிளகாய் போன்ற பொருட்களை வைத்து ஓதி, தலையை சுற்றிப் போடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. ஆனால் சில பிராத்தனைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதை ஓதி வரலாம்.
அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மா, மின் குல்லி ஷைத்தானின் வஹாம்மா. வமின் குல்லி ஐனின் லாம்மா (அல்லாஹ்வின் முழுமையான சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத் துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்) எனும் இந்தச் சொற்களின் மூலம் நபி (ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காகப் பாதுகாப்புத் தேடி வந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 3371

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites