அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

ரமளான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டதா ? அல்லது சிறிது சிறிதாக அருளப்பட்டதா?

 ரமளான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு 40 வயது முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிது சிறிதாகத் தான் குர்ஆன் அருளப்பட்டிருக்கும் போது ஒரே இரவில் அருளப்பட்டது என்பதன் பொருள் என்ன?

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல்குர்ஆன் 25:32)
திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. 17:106, 20:114, 76:32 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன் 97:1)
இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம்  நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இது லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்பதையே 97:1 வசனம் கூறுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites