அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 17 ஏப்ரல், 2010

இத்தாவும் , இல்லாத விதிமுறைகளும்.


இத்தாவும் , இல்லாத விதிமுறைகளும்.

http://4.bp.blogspot.com/_t2pWZV8YafM/S8MRk0onPMI/AAAAAAAAABE/8u0EmtUkiVQ/s320/226751942.jpg
கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்த கால கட்டமே இத்தா எனப்படும். இத்தா என்பதற்கு காத்திருப்புக் காலம் ,கணித்தல் , எண்ணுதல், காத்திருத்தல் என்று பல்வேறு பொருள்கள் உள்ளன.இதனை நாம் திருமறைக் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்

கணவனை இழந்த பெண்களுக்குரிய இத்தாக் காலம்

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும் அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்

2 : 233)

விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்குரிய இத்தாக் காலம்

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர் களுக்கு அனுமதி இல்லை (அல் குர்ஆன்

2 : 228 )

எதற்காக இத்தாக் காலத்தை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்?

கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் 'இத்தா''எனப்படுகின்றது.கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். ( அதனால்தான் இறைவனும்கூட இவ்வாறு தன்னுடைய குர்ஆனில் கூறுகிறான்

(2=228 )

தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூற முடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.


மாதவிடாய் அற்றுப் போன பெண்களுக்குரிய இத்தாக் காலம்

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.

(அல் குர்ஆன்

65 : 4)

கர்ப்பிணிப் பெண்களுக்குரிய இத்தாக் காலம்

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று

2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக் கெடுவிரிரிலிருந்து கர்ப்பினிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான் (அல் குர்ஆன்

65 : 4)

தம் கணவர் இறந்த சிலநாடகளுக்குப் பின் சுபைஆ அல் அஸ்லமிய்யா (ர­) அவர்கள் பிரசவித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று மறுமணம் புரிந்து கொள்ள அனுமதி கோரினார்கள். அப்பொது நபி (ஸல்) அவருக்கு அனுமதி அளித்ததை அடுத்து (அவர் ஒருவரை) மணந்து கொண்டார் அறிவிப்வர் : மிஸ்வர் பின் மக்ரமா (ர­) நூல் : புகாரி

(5320)

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.இவ்வசனத்திரிரிலிருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.


இத்தா என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகள் மற்றும் மூடநம்பிக்கைகள்


இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம் செய்யவற்காக உள்ள காலகட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட காலகட்டங்கள் நிறைவு பெற்றவுடன்தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.
இக்காலகட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் .

இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ மணப் பொருட்களை பூசவோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூ­ல் சாயமிடப்பட்டு தயாரிக்கப் பட்ட ஆடைகளை அணியலாம். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ர­ )

நூல் : புகாரி

(313)

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப் படுகிறது.

பெண்களை சூரிய ஒளி கூட படாத வகையில் இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர்.

சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர்.

அதில் சிறிய ஓட்டைகள் இருக்கும்.

அவர்கள் வானம் பார்க்கக்கூடாது,

வெளிச்சம் பட்டுவிடக்கூடாது மற்றும் யாரையும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக அந்த ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும் சிமிண்ட் போன்ற பொருட்களை பூசியும் அடைத்து விடுகின்றனர்.

இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.

அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம் அதற்காகத்தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.

சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம்.

இதைவிடக் மிகக் கொடுமை என்ன வென்றால் கர்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக் கூடாதாம்.

ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணை பார்த்து விடக் கூடாதாம்.

சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்கு தடைஉள்ளது.

( அதே நேரத்தில் கல்யாணம் ஆகாத பெண்ணையோ அல்லது கல்யாணம் முடித்து கணவன் ஊரிலோ அல்லது வெளிநாடு வெளியூரிலோ இருக்கின்ற பெண்ணோ எப்படியும் இருக்கலாம் அவர்களைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ன மாயமோ இறைவனே அறிவான் அவர்களையும் கட்டுப்பாடோடுவைக்க வேண்டுமென்றுதான் இஸ்லாம் கூறுகிறதே அது ஏன் தெரியவில்லை அவர்களையேன் கண்டும் காணாமலும் விட்டு விடுகிறார்கள் )

சில ஊர்களில் அந்த வருடம் முழுமையாக துக்கமாகக் கொண்டாடுவார்கள்.

இரு பெருநாட்களுக்கும் புதுத் துணிமணிகள் எடுத்து அணியமாட்டார்கள்.

வானம் பார்க்கக்கூடாது.

வெளிச்சம் பட்டுவிடக்கூடாது என்று ஒரு அறையில் (விட்டு விடுவார்கள்) அவர்கள் வைத்துவிடுவார்கள்.

மாற்று மத சமுதாயங்களில் கணவனை இழந்த பெண்கள் மதிக்கப் படும் முறையை விட இன்றைக்கு இத்தா என்ற பெயரில் இஸ்லாமிய பெண்கள் ( இஸ்லாமிய பெயர்தாங்கியவர்களால் அல்லது இஸ்லாத்தை சரியாக தெரியாதவர்களால் அல்லது அரையும் குறையுமாக தெரிந்தவர்களால் ) இழிவுபடுத்தப்படுகின்றனர்.

இத்தா காலகட்டத்தில் உள்ள பெண்களை இருட்டறையில் அடைத்து வைக்க வேண்டும் என்றோ அவர்கள் எந்த ஒரு ஆணையும் பார்க்கக் கூடாது என்பதும் திருமறைக் குர்ஆனின் வழிகாட்டுதலுக்கும் நபி வழிக்கும் மாற்றமானதாகும்.'

பின்வரும் வசனத்தை கவனித்துப் படியுங்கள். ஆண்கள் இத்தா இருக்கக் கூடிய பெண்களை பார்த்துப் பேசலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

(அல் குர்ஆன்

2 : 235)

நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! என்ற வாசகத்தி­ருந்து நல்ல சொற்களைக் கூற வேண்டு மென்றால் அவர்களை நேரில் பார்த்தால்தான் கூற முடியும். இத்தா என்பது ஒரு தலாக் விடப்பட்ட பெண்ணோ , கணவனை இழந்த பெண்ணோ மறுமணம் செய்து கொள்வதற்குரிய இடைவெளிதானே தவிர அவர்கள் வீட்டி­ருந்து வெளியில் செல்லக்கூடாது யாரையும் பார்க்க் கூடாது பேசக் கூடாது என்றெல்லாம் கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான நடைமுறையாகும்.பின்வரக் கூடிய ஹதீஸைப் படித்துப் பாருங்கள் இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

என்தாயின் சகோதரி மணவிலக்கு செய்யப்பட்டார். அவர் (இத்தா காலகட்டத்தில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே என் தாயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தெரிவித்) தபோது நபி (ஸல் ) அவர்கள் ஆம் நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பரித்துக் கொள். ஏனெனில் (அதில்) கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும் அல்லது ஏதேனும் நல்லறம் செய்யக் கூடும்.அறிவிப்பவர் : ஜாபிர் (ர­)

நூல் : முஸ்­ம்

(2972)

இத்தா இருந்த பெண்ணை ஒருவர் வெளியே செல்லக் கூடாதென கண்டிக்கின்றார். அவரும் ஒரு ஆண்தான் மேலும அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்கின்றார்கள். நபியவர்களும் ஆண்தான். இத்தா இருக்கக் கூடிய பெண்கள் இருட்டறையில் தான் கிடக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமானதாகும் ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் ஒரு பெண் தன்னுடைய வீட்û.ட விட்டு வெளியே சென்று நபியவர்களிடம் ''வெளியே செல்வதற்கும் அனுமதி கேட்கிறார்கள். நபியவர்களும் அனுமதி வழங்கி விடுகின்றார்கள். இவற்றை யெல்லாம் இன்றைய நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .

இன்றைக்கு தவ்ஹீத் வாதிகள் கூட தங்களுடைய வீட்டுப் பெண்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இத்தா காலத்தை நடைமுறைப்படுத்துவதை அனுமதிப்பதில்லை. மேலும் இத்தா என்ற பெயரில் அமைக்கப்படும் அந்த இருட்டுச் ஜெயி­­ருந்து வெளிவரும் போதும் அறியாமைக் காலத்தைப் போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகின்றன்.

சில ஊர்களில் இத்தாவி­ருந்து வெளியே வரக்கூடிய நாளில் காலை நேரத்தில் யாரும் பார்க்காத அதிகாலை நேரத்திலேயே ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள நீர் நிலைகள் வயல் வெளிகள் தோப்புகள் போன்ற இடங்களுக்கு சென்று விடுவார்கள். அங்கு நன்றாக சமைத்து சாப்பிட்ட பின்பு இரவு நேரத்தில் யாரும் பார்க்காதவாறு வீட்டிற்கு வந்து இருட்டறை ஜெயில் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். இன்னும் சில ஊர்களில் அந்த இருட்டறையி­ருந்து வெளியே வரும்போது வேறு யாரையும் பார்ப்பதற்கு முன்னால் முத­ல் குர்ஆனைப் பார்த்து விட்டு வெளியே வருவாôகள். இன்னும் ஊருக்கு ஊர் வித்தியாசமாக பல்வேறு முறைகள் நிலவி வருகின்றன். சில ஊர்களில் அவர்களை துணி துவைத்தல், பாத்திரம் பூசுதல் போன்ற ஒரு வேலையைக் கூட செய்ய விடமாட்டார்கள். இத்தாவி­ருந்து வெளியே வரும்போது புதுச் சேலையைக் கட்டிக் கொண்டு ஊரிலுள்ள பெரிய தர்காவிற்குச் சென்று ஃபாத்திஹா ஓதி நேர்ச்சை செய்து அதை முடிப்பதும் உண்டு.இவையெல்லாம் முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான மூடநம்பிக்கைகளாகும். இவையெல்லாம கண்டிப்பாக தடுக்கப்பட தவிர்க்கப் படவேண்டியவையாகும்.

நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார்கள். பிறகு '' சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும். நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே (ஏற்று) பின்பற்ற தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியும் கட்டுப்படுத்தும் சக்தியும் வாய்ந்ததாகும்.அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)

நூல் : புகாரி

(2563)

எனவே இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் தவிர்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த முறைப்படி நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோமாக.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites