அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 29 மே, 2010

திருக்குர்ஆன் வினாடி வினா - பாகம் 4


1.   கேள்வி :மலைகளை குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள் யார்?
பதில் : ஸமூத் கூட்டத்தினர் (அல்குர்ஆன் 89 : 9)
2.   கேள்வி : மர்யம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : இம்ரான் (அல்குர்ஆன் 66:12)
3.   கேள்வி :மூஸா (அலை) அவர்கள் சமூகத்தைச் சார்ந்த, கணக்கிலடங்கா செல்வங்களைப் பெற்றவன் யார்?
பதில் : காரூன் (அல்குர்ஆன் 78 : 26)
4.   கேள்வி : காரூன் எவ்வாறு அழிக்கப்பட்டான்?
பதில் : இவனையும், இவனது வீட்டையும் பூமிக்குள் புதையுறச் செய்து அல்லாஹ் அழித்தான் (அல்குர்ஆன் 28 : 81)
5.   கேள்வி : துல்கர்னைன் அவர்கள் ஆட்சி காலத்தில் அட்டூளியங்கள் செய்த கூட்டத்தினர்கள் யார்?
பதில் : யஃஜூஜ், மஃஜூஜ் (அல்குர்ஆன் 18 : 94)
6.   கேள்வி : மதீனா நகரத்தின் முந்தைய பெயர் என்ன?
பதில் : யஸ்ரிப் (அல்குர்ஆன் 33 : 13)
7.   கேள்வி : அண்டை நாட்டில் ஒரு ராணி இருக்கிறாள் என்று உளவறிந்து நபி சுலைமான் (அலை) அவர்களிடம் சொன்ன பறவையின் பெயர் என்ன?
பதில் : ஹுýத் ஹுத் (அல்குர்ஆன் 27: 20-24)
8.   கேள்வி : இஸ்ரா என்றால் என்ன?
பதில் : ஒரு இரவில் மக்காவிலிருந்து ஜெருஸலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை  நபி (ஸல்) அவர்கள் செய்த பயணத்திற்கு சொல்லப்படும். (அல்குர்ஆன் 17 : 1)
9.   கேள்வி :அதிக எண்ணிக்கை மீது நம்பிக்கை வைத்து அல்லாஹ்வை நபித் தோழர்கள் மறந்த போர் களம் எது?
பதில் : ஹுýனைன் போர் (அல்குர்ஆன் 9 : 25)
10.   கேள்வி : கஅபத்துல்லாவில் இணைவைப்பவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?
பதில் : சீட்டி அடிப்பது , கைதட்டுவது (அல்குர்ஆன் 8 : 35)

வெள்ளி, 28 மே, 2010

துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?


ஹாங்காங்:துருக்கி நாட்டின் மலைச் சிகரத்தில், சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது, பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் கப்பலா என்பது குறித்து, ஆராய்ச்சியாளர் களிடையே குழப்பம் நிலவி வருகிறது.உலகில் பாவச்செயல்கள் பெருகியதால், வெள்ளத்தால் உலகை மூழ் கடிக்க நினைத்த கடவுள், நோவா என்ற தீர்க்கதரிசியிடம், ‘இன்னும் சில நாட்களில் உலகம் வெள்ளத்தில் மூழ்கி அழியப்போவதால், ஒவ் வொரு மிருகத்திலும் ஒரு ஜோடியைப் பாதுகாத்து, அவற்றை ஒரு கப்பலில் எடுத்துச் செல்என கூறினார்.
ஊழிக்காலத்துக்கு பின் வெள்ளம் வடிந்த போது, நோவாவின் கப்பல், துருக்கி நாட்டிலுள்ள அராரத் என்ற மலைச்சிகரத்தின் மீது தங்கியது.பின் நோவாவும், உயிரிகளும் மலையிலிருந்து பூமியில் இறங்கி பெருகினர் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. இது 4,800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.ஹாங்காங்கைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குனர் எங் விங் செங் என்பவரின் தலைமையில் சர்வதேச நோவா கப்பல் மதகுருக் கள்என்ற அமைப்பை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர், துருக்கிப் பகுதியில் நோவாவின் கப்பல் குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.அராரத் மலைச் சிகரத்தின் ஒரு பகுதியில், அவர் கள் ஒரு கட்டுமானத்தைக் கண்டறிந்தனர். அதில் பல அறைகள் இருக்கின்றன. சில அறைகள் மரத்தால் ஆனவையாக உள்ளன.
இந்த மரத்தடுப்புகள், மிருகங்களை வைக்கப் பயன் படுத்திய அறையாக இருக்கும் என்று ஆய் வாளர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து,’இது 100 சதவீதம் நோவாவின் கப்பல் என்று கூறமுடியாவிட்டாலும், 99.9 சதவீதம் அதுதான் என்று கூற முடியும்என்கிறார் எங் விங் செங்.அராரத் சிகரம் அந்த பகுதியிலேயே மிக உயரமானது. கடல் மட்டத்திலிருந்து 5,515 மீட்டர் உயரத் தில் உள்ளது.துருக்கி அதிகாரிகள், அப் பகுதியை உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோஅறிவித்தால் தான், அப்பகுதியில் அகழாய்வுகள் நடத்த முடியும் என்கின்றனர்.

மாணவ – மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்.

கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள
மாணவ – மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும்
தொண்டு நிறுவனங்கள்
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006
தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்
ராயபேட்டை, நெடுஞ்சாலை
சென்னை – 14
தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை
688 , அண்ணா சாலை
சென்னை – 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை
சென்னை – 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன்
4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்
ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை – 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை
133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை – 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை – 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை – 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்
டி – பிளாக் 10 ( 23 )
11 வது தெரு
அண்ணா நகர் – சென்னை 40
போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை
மாண்டியத் சாலை
எழும்பூர் – சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி – 614 207
14. டாம்கோ
807 – அண்ணா சாலை
5 வது சாலை
சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான்
Managing Director
Professional Courier’s
22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை – சென்னை – 18
16. மியாசி
புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு
சென்னை – 14
17. S I E T
கே.பி. தாசன் சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 18

சீரழிவுக்கு வழிவகுக்கும் ‘செல்’


திரும்பிய திசையெல்லாம் சிணுங்கும் செல்போன்கள் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய எடுத்துக்காட்டு.​ முதலில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த செல்போன்களில் இப்போது இண்டர்நெட் வசதி வரை வந்து விட்டது.
அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த செல்போன்கள் இல்லாத இளைஞர்களே இக்காலத்தில் இல்லை.​ ஆனால் செல்போன்களை பெரும் கலாசார சீரழிவையும்,​​ சமூகக் கேடுகளையும் ஏற்படுத்தும் கருவியாக மாற்றி வருகிறது செல்போன் சேவை நிறுவனங்கள்.
தங்களின் பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதற்காக,​​ இளம் தலைமுறையினரைச் சீரழிக்கும் பல புதிய சேவைகளைசெல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
அவற்றில் ஒன்றுதான் ஃபிரண்ட்ஸ் சாட்’. இதில் இணையும் வாடிக்கையாளர்கள் முகம்தெரியாத இளம் பெண்களுடனும்,​​ இளைஞர்களுடனும் மணிக்கணக்கில் பேசி மகிழலாம்.
பல்வேறு செல்போன் நிறுவனங்களும்,​​ஃபிரண்ட்ஸ் சாட்’,வாய்ஸ் சாட்’ ‘மொபைல் சாட்என வெவ்வேறு பெயர்களில் இந்த சிறப்புச் சேவைகளை அளித்து வருகின்றன.
இந்த கடலைக் கூட்டத்தில்இணைவதற்கான கட்டணமாக மாதம்தோறும் ரூ.​ 30 வரை பிடித்துக் கொள்வார்கள்.​ இதில் சேர்ந்தவுடன் உங்களுக்கு என்று ஒரு பிரத்யேக எண் ​(சாட் ஐடி)​ வழங்கப்படும்.​ பின்னர் செல்போன் நிறுவனம் குறிப்பிடும் எண்ணுடன் ​(டயல் எண்)​ நமக்கு வழங்கப்படும் சாட் ஐடியை சேர்த்து டயல் செய்தால்,​​ அந்த குழுவில் உள்ளவர்களுடன் பேசலாம்.
இதற்கு கட்டணம் ஒரு அழைப்புக்கு ரூ.​ 2 முதல் ரூ.​ 3 வரை வசூலிக்கப்படும்.​ பேசுபவரின் எண்ணும் உங்களுக்குத் தெரியாது,​​ உங்கள் எண்ணும் அவருக்குத் தெரியாது என்பது செல்போன் நிறுவனங்கள் அளிக்கும் கூடுதல் வசதி.​ இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி தனது நட்புச் சேவையை அளிக்கிறன்றன செல்போன் நிறுவனங்கள்.
இதற்கான விளம்பரங்களையே செல்போன் நிறுவனங்கள் புதுமையாக அறிவிக்கின்றன.​ சென்னை,​​ பெங்களூர்,​​ ஹைதராபாதில் உள்ள இளம் நண்பர்களுடன் பேசி மகிழ வேண்டுமா!​ என்றுதான் ​ விளம்பர வாசகம் தொடங்குகிறது.​ அதன் பின் இது குறித்து கூடுதல் விவரம் அறிய டயல் செய்ய வேண்டிய எண்ணை கொடுத்திருக்கிறார்கள்.
எங்களின் இந்த பிரண்ட்ஸ் சாட் குழுவில் இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பேர் சேர்ந்துள்ளனர் என்று ஒரு செல்போன் நிறுவனம் தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் கல்லூரி,​​ பள்ளி செல்லும் மாணவர்களைக் குறிவைத்தே இந்த சேவையை செல்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஏற்கெனவே இண்டர்நெட் சாட்டிங்,​​ ஆர்குட்,​​ ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் மூலம் முகம் தெரியாதவர்களுடன் பழகி,​​ அது தற்கொலை வரை முடிந்த செய்திகளை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் அதை விட மோசமாக கையில் இருக்கும் செல்போன்களே,​​ இப்போது ஆபத்தாக மாறிவருகிறது.​ இதுபோன்ற தேவையற்ற குறுஞ்செய்திகள்,​​ தகவல்களை விவரம் தெரிந்தவர்கள் ​ தவிர்த்து விடுவார்கள்.​ ஆனால் கல்லூரி,​​ பள்ளி மாணவர்களில் என்னவென்று பார்ப்போம் என்ற ஆர்வமிகுதியால் இதில் சிக்கிக் கொள்கின்றனர்.
முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பேசி மகிழ என்ன இருக்கிறது.​ இதுபோன்ற குழுக்களில் இணைபவர்கள் எந்த நோக்கத்தில் சேர்வார்கள் ​ என்பது முக்கியமாக யோசிக்க வேண்டிய விஷயம்.
செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுக்கு இடையே உள்ள போட்டி காரணமாகவும்,​​ தங்கள் லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் இதுபோன்ற தரம்கெட்ட சேவைகளை அளிக்கின்றன.​ இதில் சிக்கி சீரழிவது இந்தியாவின் எதிர்காலமான இளம் தலைமுறையினர்தான்.
விடுதிகளில் தங்கிப் படிக்கும்,​​ தினமும் அதிகதூரம் பயணித்து கல்லூரி,​​ பள்ளிக்குச் சென்று வரும் தங்கள் பிள்ளைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் செல்போன்களை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
அவர்கள் அதை எந்தவிதத்தில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூட இருந்தே கண்காணிப்பது மிகக் கடினம்.​ இந்நிலையில் இதுபோன்ற தேவையில்லாத சேவைகள் மூலம் இளைஞர்களுக்கு வலை விரிக்கும் செல்போன் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது கட்டாயம்.
இது தொடர்பாக ஒரு செல்போன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த சேவைக்கு எதிராக கருத்துத் தெரிவித்தபோது,​​உங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளோம்,​​ இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்என்று மட்டும் பதில் வந்தது.​ ​
புகார் செய்ததால் குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் பிரண்டஸ் சாட் தொடர்பான
விளம்பரங்கள் அனுப்புவதை அந்நிறுவனம் நிறுத்தி விட்டது.​ ஆனால் பிற வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற விளம்பரங்களைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
செல்இல்லையெனில் செல்லாக்காசு என்ற அளவுக்கு அந்தஸ்தின் அடையாளமாக விளங்குகிறது செல்போன்.​ செல்போனை வாங்கும்போது அதில் உள்ள வசதிகளைப் பார்த்து வாங்கித் தரும் பெற்றோர்கள்,​​ சேவை அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் இதுபோன்ற விபரீத சேவைகளைத் தடுக்காவிடில்,​​ வருத்தம்,​​ ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியாது.
டிராய்கட்டுப்படுத்துமா?
பிரண்ட்ஸ் சாட்போன்ற சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர் மேம்பாட்டு சேவை ​(விஏஎஸ்)​ என்ற அடிப்படையில் செல்போன் ​ நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றன.
நிறுவனங்கள் எத்தகைய சேவையை அளிக்கின்றன என்பதை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ​(டிராய்)​ கவனிக்காது.
அதேசமயம்,​​ இதுபோன்ற சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் புகார் செய்தாலோ,​​ அல்லது நுகர்வோர் அமைப்புகள் மூலம் புகார் செய்தாலோ அதை மனுவாக டிராய் ஏற்கும்.​ இது தொடர்பாக அதிக புகார்கள் வந்தால்,​​ சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்.
செல்போன் வாய்ஸ்மற்றும் எஸ்எம்எஸ்அடிப்படையில் இந்த சேவையை அளிக்கின்றன.​ வாய்ஸ்சேவையில் இந்த சேவையைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்,​​ எவருடன் தொடர்பு கொண்டு பேசுகிறார் என்பது தெரியாது.​ இது முழுக்க முழுக்க ஜிபிஆர்எஸ் தளத்தின் மூலம் அளிக்கப்படுகிறது.​ ஆனால் எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றம் அனுப்புவோர் மற்றும் அதைப் பெறுவோரின் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.​ பெரும்பாலும் கடலைபோட விரும்புவோர் இந்த வசதியைத் தேர்ந்தெடுப்பதில்லை.
ஆனால் இது தொடர்பாக ஒரு புகார் கூட டிராய்’-க்கு வரவில்லை என்பதுதான் உண்மை.தங்கள் பிள்ளைகள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள பெற்றோர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே உண்டு.​ ​
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் எஸ்எம்எஸ்அனுப்பும் வசதியை மட்டும் அளிக்கிறது.​ வாய்ஸ்தகவல் பரிமாற்றம் அளிக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாகும்.​ இத்தகைய சீரழிவுக்கு வழிவகுக்கும் சாட் தொடர்பான புகார்களை அளிக்க நுகர்வோர் அமைப்பு ஹெல்ப்லைன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை அளித்துள்ளது.
தொலைபேசி எண்:​​ 044-2859 2828
இணையதள முகவரி: c‌o‌n‌s‌u‌m‌e‌r@‌t‌n.‌n‌ic.‌i‌n
புகார் அனுப்ப வேண்டிய முகவரி:​​ ஆணையர்,​​ சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,​​ எழிலகம்,​​ 4-வது தளம்,​​ சேப்பாக்கம்,​​ சென்னை -​ 600 005.
எஸ். வெங்கடேஸ்வரன்
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF&artid=247192&SectionID=202&MainSectionID=199&SEO=&Title=

பன்றி இறைச்சி ஏன் தடை?


 
பன்றி நமக்கு ஏன்? ஹராம்?
இஸ்லாம் மட்டும் பன்றி இறைச்சியை தடை செய்ய வில்லை மாறாக கிரித்தவமும் பன்றி இறைச்சியை தடை செய்திருக்கிறது.
பைபிளின் அத்தியாயம் 11 லெவிட்டிஸ் 7 முதல் 8.
பைபிள் 14 டியூட்டர்னோமி வசனம் 8
பைபிள் 65 இஷையா 2 முதல் 5 வரை. பன்றி இறைச்சியை தடை செய்யும் வசனங்களை பார்க்கலாம்.
எனவே இஸ்லாம் மட்டும் பன்றி இறைச்சியை தடை செய்யவில்லை. மற்ற மதங்களும் பன்றி இறைச்சியை தடை செய்திருக்கிறது.
மேலும் பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்வதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன.
பன்றி இறைச்சி சாப்பிடுவதால் 4 விதமான குடல் புழுக்கள் உண்டாகின்றன.
வட்டப்புழு, (ரவுண்ட் வார்ம்) ஊசிப்புழு இன் வார்ம், கொக்கிப்புழு கூக் வார்ம்,
நாடாப்புழு இது மனித இரத்த நாளங்களை சென்றடைகின்றது.
இதனால் மனித உறுப்புகள் பாதிப்படைகின்றது.
இதில் திரிகுரா திச்சுராஸிஸ் என்ற மற்றொரு குடல் புழு உண்டாகின்றது.
மும்பையி­ருந்து வெளியாகும் மாதப்பத்திரிக்கை வெளியிடும் அதிர்ச்சி தகவல் அதாவது அமெரிக்கர்களிடையே தங்களுடைய மனைவியை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இதே போல் மும்பையிலும் இது போன்று நடைபெறுவதாக வெளியிட்டுள்ளது. பன்றியும் தங்களுடைய செயல்களை இப்படித்தான் செய்கின்றது. அமெரிக்க கலாச்சாரத்தை பின்பற்றுவதினால் நம் மக்களிடமும் இது காணப்படுகின்றது.
குறுக்கு விசாரனை:
மேற்கிந்தியர்கள் இதை சாப்பிடுவதினால் இந்த நோய் அவர்களை தாககுவதில்லையே ஏன்?
யுவந்நீரை டாக்டர் சுட வைத்து குடிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அதைப்பின்பற்றுவோர் குறைவாக இருக்கிறார்கள். சுடவைக்ககாமல் குடிப்பவர்கள்தான் அதிகம். அப்போது இந் நோய் வரவில்லை என்று கேட்க முடியுமோ? முடியாது. பொதுவாக கொஞ்சம் கொஞசமாகத்தான் நோய்கள் தாக்கும்.
எனவே மருத்துவ ரீதியிலும் இதில் தீங்கு இருப்தால் இதை இஸ்லாம் தடை செய்திருக்கடிறது.
தற்போது பன்றியினால் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலையும் ஆதற்கு அதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
புழுக்களைப்பற்றி மேலும் சுஜாதா எழுதிய ஏன் எதற்கு எப்படி 2 பக்கம் 70. என்ற புத்தகத்தை பார்க்க

இவர்களை தெரியுமா? பாகம் 3


உட்பிரிவுகள்:
அஷ்ஷைகிய்யா குருத்துவம்
அர்ரிஷ்திய்யா
இஸ்மாயீலிய்யா
நுஸைரிகள் ஃ அலவியர்கள் சிரியாவில் உள்ளனர்.
தகிய்யா:
ஷீஆக்களின் கொள்கைகளில் முக்கிய ஒன்றாக தகிய்யாவும் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதாகவே இக்கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். இதன் மறுவடிவம் நிபாக் நயவஞ்சகத்தனம் பொய் ஆகும். ஷீஆக் கொள்கை உள்ள ஒருவர் உள்ளொன்று வைத்துக் கொண்டு அதற்கு மாற்றமாக வெளிப்படையாக வேறொன்றைக் கூறுவதே தகிய்யாஎனும் நயவஞ்சகத்தனமாகும்.
தகிய்யாவை ஷீஆக் கொள்கையின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். அதற்கான சில உதாரணங்கள்.
தகிய்யாஎன்பது எமது மார்க்கத்தின் அடிப்படை. அதனை மறுப்பவனுக்கு மார்க்கத்தில் இடமில்லை.
தகிய்யா என்னுடையதும் எனது முன்னோர்களினதும் வழிமுறை. அது இல்லாதவனுக்கு ஈமான் இல்லைஎன்று ஷீஆ இமாம்களில் ஒருவரான அபூ ஜஃபர் கூறுகின்றார். (அல்காபி 2 27)
தகிய்யாஎன்பது மார்க்கத்திற்கு கண்ணியம் தருகின்றது. அது இல்லாவிடில் மார்க்கத்திற்கு இழிவு என ஷீஆக்கள் நம்புகின்றனர்.
நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை மறைத்து வைத்துக் கொண்டால் அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவான்; அதனை வெளிப்படையாகப் பரப்பினால் அல்லாஹ் உங்களை இழிவடையச் செய்வான்என அபூ அப்தில்லாஹ் எனும் ஷீஆ அறிஞர் குறிப்பிடுகின்றார். (அல்காபி 2 176)
இஸ்மாயீலிய்யா:
இவர்கள் இமாமிய்யாவின் உட்பிரிவாக உள்ளனர். பன்னிரெண்டு இமாம்களில் முதல் ஆறு நபர்களையும் இவர்கள் நம்புகின்றனர். ஏழாவது இமாம் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து மோதல் இப்பிரிவுக்கு வழிகோலியது. ஜஃபர் அஸ்ஸாதிக் என்பவர் இவர்களின் ஆறாவது இமாம். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.
1. இஸ்மாயீல். 2. மூஸா அல் காழிம்.
இஸ்மாயீலைத் தலைவராக ஏற்றவர்கள் இஸ்மாயீலிய்யாப் பிரிவினர் எனப்படுகின்றனர். மார்க்க விடயங்களில் வரம்பு மீறிச் சென்ற இக்குழு ஈராக்கில் தோன்றி வளர்ந்தது. இன்று ஈரான் குராஸான் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். எகிப்தில் தோன்றிய பாதிமியர் ஆட்சியும் இவர்களின் வழிமுறைகளுடையதே. இவர்கள் தமது 14வது இமாமாக ஆகாகானைநம்புகின்றனர்.
நுஸைரிய்யா:
இஸ்மாயீலிய்யாப் பிரிவின் உட்பிரிவாக உள்ள இக்குழுவினர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரம் என நம்புகின்றனர். இவர்களை அலவிய்யாக்கள் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் கிறிஸ்தவ மதத் தாக்கத்திற்குட்பட்டு அவர்களின் முக்கிய விழாக்களையும் பெருநாள் தினங்களையும் கொண்டாடுவதோடு கிறிஸ்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர். இன்று இப்பிரிவினர் சிரியாவிலேயே அதிகமாக வாழ்கின்றனர். அங்கு நுஸைரிய்யா ஆட்சியே உள்ளது.
துரூஸிகள்:
இறைவன் இமாமின் வடிவில் வந்துள்ளான் என்கின்றனர். பாதிமிய்யா ஆட்சியாளனான அல்ஹாகிம் பீ அமிரில்லாஹ் என்பவன் தன்னில் இறைவன் அவதரித்துள்ளதால் தன்னை வணங்குமாறு மக்களைப் பணித்தான். பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். உறவினர்கள் இவனைக் கொலை செய்துவிட்டனர்.
அல் ஹாகிம் பீ அம்ரில்லாஹ் கொலை செய்யப்பட்ட பின்னர் இவன் சாகவில்லை; மறைந்திருக்கின்றான்என்று பாரசீகப் பிரதேசத்தில் வாழ்ந்த ஹாமாஸ் அத்துரூஸி என்பவன் பிரசாரம் செய்தான்.
ஷீஆக்களின் கொள்கைகள்
  • அல்குர்ஆன்:
நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட 30 ஜுஸ்வுகள் அடங்கிய இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்ற அல்குர்ஆனை ஷீஆக்கள் முழுமையான அல்குர்ஆனாக ஏற்பதில்லை. 40 ஜுஸ்வுகள் இருப்பதாக நம்புகின்றனர். இமாமுல் காயிப்என்பவரிடம் அது இருப்பதாகவும் அவர் வெளிவரும் போது கொண்டுவருவார் எனவும் அதன் பின்னர் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் நம்புகின்றனர்.
  • அல் ஹதீஸ்:
புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை. அலி (ரழி) அவர்களையும் இவர்கள் நம்பும் இமாம்களும் அறிவித்த அல் உஸ்லுல் காபியில் உள்ளவற்றையே நம்புகின்றனர்.
  • ஸஹாபாக்கள்:
நான்கு ஸஹாபாக்களைத் தவிர மற்ற அனைவரையும் காபிர்கள் என்கின்றனர்.
ஷீஆக்கள் பற்றி அறிஞர்கள்:
நான் ஷீஆக்களின் வழிகெட்ட பிரிவான ராபிழாக்களைத் தவிர மற்றவர்களிடமே ஹதீஸ்களை எடுத்தேன். ஏனெனில் ராபிழாக்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி பொய்களை மார்க்கம் என்பர்.
ஷகீக் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்)
பொய் சொல்வதிலும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதிலும் முன்னிலைவகிக்கின்றவர்கள் ராபிழாக்களே ஆவர்.
இமாம் ஷாபிஈ (ரஹ்)
இந்த வழிகெட்ட ஷீஆக்களைப் பற்றி இமாம் மாலிக் (ரஹ்) அப்துல்லாஹ் இப்னுல் முபாறக் (ரஹ்) அபூ ஸர்ஆ (ரஹ்) இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இப்னுல் கையிம் (ரஹ்) அர்ராஸி அத்தஹபி போன்றவர்களும் நவீன கால நல்லறிஞர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.
இன்று எமது நாட்டில் பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களின் செல்வாக்கு அவற்றிற்கிடையிலான முரண்பாடான கொள்கைகள் அரசியல் அதிகார வீச்சுக்கு முக்கியத்துவமளிக்கின்ற அசத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு சத்தியத்தை தூக்கி எறிந்து விடுகின்ற இயக்கங்களின் அமைப்புகளின் அறிமுகம் என்பன இலங்கை முஸ்லிம்களின் சமகால சமய சமூக பண்பாடு அரசியல் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறியுள்ளன. இயக்க நடவடிக்கைகளின் செல்வாக்கு ஒவ்வொரு தனிமனிதனையும் அசைத்து வரும் இக்கால கட்டத்தில் அவற்றை மதிப்பீடு செய்வதும் விமர்சனப் பார்வைக்குள் உட்படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.
இன்று இலங்கையில் காணப்படும் இயக்கங்கள் அவற்றின் சர்வதேச ஸ்தாபகர்களினதும் தலைவர்களினதும் குறிக்கோள்களையும் திட்டங்களையும் செயற்படுத்தும் நடவடிக்கைகளையே பெரும்பாலும் தீவிரமாக அனுஷ்டிக்கின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலேயே சாத்தியமற்றுப்போன அநியாயமாகப் பெறுமதியான பல உயிர்களைப் பலியெடுத்த கொள்கைகளை முஸ்லிம்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கையில் அமுல்படுத்தி அதே நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.
இஸ்லாத்தைப் பற்றியும் அதன்கிலாபத் ஜிஹாத்பற்றிய தெளிவான அறிவற்ற உணர்ச்சிக் கோஷங்களுக்கு அடிமைப்பட்ட தூய்மையான ஏகத்துவக் கொள்கையை சிதைத்துவிட்ட அற்பமான அரசியல் நோக்கம் கொண்ட நபி (ஸல்) அவர்களின் தூய்மையான ஸுன்னாவைக் கொச்சைப்படுத்துகின்ற கோமாளிக் கூட்டங்களினால் இன்றுவரை உலகில் எங்கும் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை. இவர்களால் நிலைநாட்டவும் முடியாது. ஏனெனில் நபி வழியைப் புறக்கனித்த எந்தக் கூட்டத்திற்கும் அல்லாஹ் தனது உதவியை வழங்கிய வரலாறுகள் இல்லை.
இஸ்லாமிய வரலாற்றின் துவக்க நூற்றாண்டில் தோன்றிய கவாரிஜ்கள் போன்று இன்று அல்ஜீரியாவிலும் எகிப்திலும் பாகிஸ்தானிலும் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் ஏற்படுத்தியிருக்கின்ற இரத்தக் களறி பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் உயிர்களைப் பலியெடுத்து வருகின்றன. பன்னாயிஸம் பலவாயிரம் பேரை எகிப்தில் பலியெடுத்துள்ளது. எனினும் எத்தகைய பலனையும் கண்டதில்லை. பன்னாயிஸம் எகிப்திலும் மௌதூதியிஸம் பாகிஸ்தானிலும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் எத்தகைய அரசியல் மாற்றங்களையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. ஒரு நூற்றாண்டு காலத்தை அண்மித்தும் அவர்களின் கொள்கை வெற்றிபெறவில்லை என்றால் அக்கொள்கை உயிரோட்டமற்ற சாத்தியமற்ற நடைமுறைச் சாத்தியமற்றவை என்பது புலனாகிறது.
பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே அந்த நாடுகளில் இவர்களின் அதிகார வீச்சு கிலாபத்கனவு ஏதோ சாத்தியவரைக்கோட்டின் எல்லை தாண்டிய ஏதோ ஒரு மங்கிய குழப்பமான புள்ளியில் நின்று கொண்டிருக்கும் போது மிகச் சிறுபான்மையினராக மாற்று மதத்தவர்களுக்கு மத்தியில் முற்போக்கும் ஆழமான இஸ்லாமிய அறிவும் இல்லாத அனைத்து அசத்தியக் கொள்கைகளுடனும் சமரசம் செய்துகொள்கின்ற இக்கொள்கை எந்த வகையிலும் சாத்தியமற்றது என்று துணிந்து கூறலாம்.
ஏகத்துவத்தையும் நபிவழியையும் அடிப்படையாகக் கொள்ளாத இன்றைய சில்லறை இயக்கங்கள் பற்றி விவாதிக்கப்பட வேண்டிய பல விடயங்களும் கருத்துக்களும் உள்ளன. எனினும் நாம் வரலாற்றில் தோன்றிய வழிகெட்ட ஷீஆக் கொள்கையுடன் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் எவ்வாறு உடன் படுகின்றன ஒத்த பண்புக் கூறுகள் கொண்டுள்ளன என்பதை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அகீதா: ஷீஆக்கள் தங்களது கொள்கையை பகிரங்மாகச் சொல்வதில்லை. தெளிவான கொள்கையும் இல்லை. இதேபோல் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் தூய இறை ஓர்மை வாதம் பற்றி அழுத்தமாகப் பேசவில்லை. புரட்சியில் நம்பிக்கையுள்ள அளவு ஏகத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் ஏகத்துவத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் ஷீஆக்கள் போன்று அழுத்தம் கொடுப்பதில்லை. ஷீஆக்கள் தாங்கள் நம்பும் இமாம்களிடம் இறைவன் பேசுவதாகவும் இறைவன் அவர்களின் சிலர் மீது இறங்கி ஊடாடுவதாகவும் நம்புகின்றனர். இதே போன்ற அனைத்திறைவாதக் கொள்கையை குதுப் தனது சூறா இஃலாஸ் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites