புதுடில்லி : கரீபியன் கடலில், மிகக் குறைந்த ஆழத்தில் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியின் தோற்றம் குறித்துப் புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியூபா தீவு அருகில், கரீபியன் கடல் பகுதியில், ‘கேமேன்’ என்ற பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 5 கி.மீ., ஆழத்தில் செங்குத்தான பள்ளத்தாக்கு ஒன்றில் புகைந்து கொண்டிருக்கும், ஒரு எரிமலையின் வாய்ப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியின் வெப்பநிலை 400 டிகிரி செல்சியசாக உள்ளது. காரீயத்தின் உருகு வெப்பநிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இப்பகுதியில் இதுவரை கண்டறியப்படாத கடல்வாழ் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அவற்றால் பூமியின் தோற்றம் பற்றிய தகவல்களை அறிய முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக