அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அமானிதம்

இஸ்லாமிய ஒழுங்குகள்- அமானிதம் - நபிகளாரின் நாணயம் அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.ஸி அமானிதத்தைப் பேணுவது இறைத் தூதர்களின் பண்பாகும். ரோம மன்னர் ஹெர்குலிஸ், நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானாரின் நடத்தைகள் அவரிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்தக் குணங்களை வைத்து அவர் நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார். ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய அமானிதத்தைப் பேணுவது சிறந்த அளவுகோலாகும். (ரோம மன்னர் ஹிராக்ளியஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு நான் அளித்த பதிலைக் கேட்டு விட்டு அவர் கூறியதாவது:) "உம்மிடம் "முஹம்மத் எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?' என்று...

மருத்துவக் குறிப்புகள்

1. விஷேச தினத்தில் அந்த நாள் வராமலிருக்க... நிறைய பேர் விசேஷ நாட்களில் மாதவிடாய் வராமலிருக்க மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவார்கள். இது உடம்புக்குக் கேட்டை விளைவிக்கும். இதற்கு மிக எளிய வழி ஒரு டம்ளர் பாலை எடுத்து சூடு செய்து அதில் ஒரு மூடி எலுமிச்சை சாற்றைப் பிழிந்தால் பால் திரியும். இதை விடியற்காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அந்த நாள் முழுவதும் இது வராமல் நிம்மதியாக இருக்கலாம். மூன்று நாட்களுக்கு இதைச் செய்து சமாளிக்கலாம். 2. அந்த நாள் வருவதற்கு... சிலருக்கு மாதவிடாய் சரியாக வந்து விடும். இன்னும் சிலருக்கு மாதவிடாய் சரியாக வராது. இப்படிப்பட்டவர்கள் நிம்மதியாக எங்கும் செல்ல முடியாது. இதற்கு மாவிலக்குப் பட்டையை (நாட்டு மருந்துக் கடைகளில்...

மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை நோய் விசாரிக்கலாமா?

? மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை நோய் விசாரிக்கலாமா? அவர்களுக்கு நோய் நிவாரணத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கலாமா? முஹம்மத் ஹுஸைன் திருவாரூர் முஸ்லிமாக இருப்பவர், மற்றொரு முஸ்லிம் நோயுற்றிருக்கும் போது விசாரிப்பது அவசியமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, நோயுற்றால் நோய் விசாரிக்கச் செல்வது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ 1240) மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது நோய் விசாரிக்கச் செல்ல வேண்டுமென கட்டளையிடா விட்டாலும் அதை (நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள்  அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு "இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!'' என்றார்கள். உடனே...

வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?

? "இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது'' என்ற வசனத்தின் படி வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?முஹம்மத் ஹுஸைன் திருவாரூர் முதலில் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அஹ்லுல் கிதாப் என்ற வாசகம் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது. பொதுவாக எல்லா யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார் களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites