அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 30 மே, 2010

திருக்குர்ஆன் வினாடி வினா பாகம் 5


1.            கேள்வி :அண்டை நாட்டு ராணியின் சிம்மாசனத்தை உங்கள் இடத்திலிருந்து எழுவதற்குள் கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன ஜின்னின் பெயர் என்ன?
பதில் : இப்ரீத் (அல்குர்ஆன் 27 : 39)
2.            கேள்வி : நம்மிடம் எவ்வளவு நபர்கள் இருந்தால் எதிரிகளிடம் போர் செய்யலாம்?
பதில் : எதிரிகளின் படையின் பாதியளவு (அல்குர்ஆன் 8 : 66)
3.            கேள்வி :திருக்குர்ஆன் ஓதுவதற்கு முன்னர் செய்யவேண்டியவை என்ன?
பதில் :ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடவேண்டும்.(அல்குர்ஆன் 16:98)
4.            கேள்வி :அறியாமை காலத்தில் இஹ்ராம் அணிந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு எவ்வழியில் செல்வார்கள்?
பதில் : வீட்டில் கொல்லைப்புற வாசல் வழியாக (அல்குர்ஆன் 2: 189)
5.            கேள்வி : போர் தடை செய்யப்பட்ட மாதங்கள் எத்தனை?
பதில் : நான்கு(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) (அல்குர்ஆன் 9 : 36)
6.            கேள்வி : ஈஸா நபியின் மற்றொரு பெயர் என்ன?
பதில் : மஸீஹ் (அல்குர்ஆன் 4 : 171,172)
7.            கேள்வி : முஹம்மத் என்ற பெயர் திருக்குர்ஆனில் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது ?
பதில் : நான்கு (3:144, 33:40, 47:2, 48:29)
8.கேள்வி : மீன் வயிற்றில் இருந்த நபி யார் ?
பதில் : யூனுஸ் (அலை)

9.கேள்வி : திருக்குர்ஆனில்மொத்தம் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?
பதில் : 114
10.கேள்வி : திருக்குர்ஆனின் மொத்தம் எத்தனை வசனங்கள் உள்ளன?
பதில் : 6236 வசனங்கள்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites