அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 7 ஆகஸ்ட், 2010

நோன்பின் சட்டங்கள்

                                   N.Raj Mohamed  M.I.SC
நோன்பு கட்டாய கடமை
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ(183)2
معناه في اللغة الإمساك وترك التنقل من حال إلى حال ( تفسير القرطبي ج: 2 ص: 272)
الإمساك  -  Hold  - பிடித்துக்கொள்,  
  التنقل- Remove - அகற்று,
أحدهما أن الصوم يمتع من ملاذ النفس وشهواتها ما لا يمنع منه سائر العبادات الثاني أن الصوم سر بين العبد وبين ربه لا يظهر إلا له فلذلك صار مختصا به (تفسير القرطبي ج: 2 ص: 274)
இந்த மாதத்தை தேர்வு செய்த காரணம்
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ (2:185)
1.         இந்த மாதத்தை கண்ணியப்பபடுத்த வேண்டும். 2:185
2.         இறையச்சமுடையவராக ஆகனும். 2:183
நோன்பு கேடயம்
5065 قَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ  * رواه البخاري
فإن الصوم   له وجاء  بكسر الواو وبالمد أي كسر لشهوته وهو في الأصل رض الخصتين ودقهما لتضعف الفحولة فالمعنى أن الصوم يقطع الشهوة ويدفع شر المني كالوجاء ( تحفة الأحوذي ج: 4 ص: 169)
நோன்பை விடுவதற்கு அனுமதி
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمْ الْعُسْرَ (2:185)
நோன்பை முறிக்கும் செயல்கள்
1903 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ * رواه البخاري
எதை அல்லாஹ் தேவையில்லை என்று கூறினானோ அதற்கு அல்லாஹ் எந்தக் கூலியையும் தரமாட்டான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து  விட்டு பசியோடும் தாகத்தோடும் இருப்பதில் பயனேதும் இருக்க முடியாது,           பொதுவாகவே பொய்கள், புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கவேண்டும். ஆனால் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து அதிகமாக விலகிக் கொள்ள வேண்டும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இவற்றால் நோன்பு முறியாது என்று ஃபத்வாக்கள் அளித்து வந்ததால் நோன்பு எந்த மாற்றத்தையும் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தவில்லை.   நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கோட்டைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது , பொய் , புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வசாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும்தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர் . இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நம்முடன் சண்டைக்கு வருபவர்களிடம் பதிலுக்குச் சண்டை போட பொதுவாக அனுமதி உள்ளது . நம்மிடம் எந்த அளவுக்கு ஒருவர் வரம்பு மீறுகிறாரோ அந்த அளவுக்கு வரம்பு மீறவும் அனுமதி இருக்கிறது . நோன்பாளி இந்த அனுமதியைக் கூட பயன் படுத்தக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
1894 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ *رواه البخاري
சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது , பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது.
.

நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்
1936 أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ قَالَ مَا لَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا فَقَالَ فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ وَالْعَرَقُ الْمِكْتَلُ قَالَ أَيْنَ السَّائِلُ فَقَالَ أَنَا قَالَ خُذْهَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لَابَتَيْهَا يُرِيدُ الْحَرَّتَيْنِ أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ أَطْعِمْهُ أَهْلَكَ* رواه البخاري
நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்
1933 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ * رواه البخاري
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
1926 أَنَّ عَائِشَةَ وَأُمَّ سَلَمَةَ أَخْبَرَتَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ * رواه البخاري
நோன்பு வைத்து கொண்டு குளிக்கலாம்
2018  قَالَ أَبُو بَكْرٍ قَالَ الَّذِي حَدَّثَنِي لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ يَصُبُّ عَلَى رَأْسِهِ الْمَاءَ وَهُوَ صَائِمٌ مِنْ الْعَطَشِ أَوْ مِنْ الْحَرِّ * أبو داود
நறுமணம் பயன்படுத்துவதற்கு தடையில்லை. பயன் படுத்த கூடாது என்பதற்கு எந்த ஆதாரமாக இல்லை. நோன்பு நோற்றவர் பல்துலக்குதல், உணவுகளை ருசி பார்ப்பது, எச்சிலை விழுங்குதல் போன்ற காரியங்களை செய்வதற்கு எந்த தடையும் இல்லை
இரத்தத்தை வெளியேற்றுதல் (ஆரம்பத்தில் ரத்தம் குத்தி எடுத்து கூடாது)
15268 عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ * رواه أحمد
இந்த சட்டம் பிற்காலத்தில் மாற்றப்பட்டு விட்டது.
2288 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- احْتَجَمَ وَهُوَ صَائِمٌ بَعْدَ مَا قَالَ யி أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ. 2/183 (سنن الدارقطنى - مكنز - (6 / 42)
ஸஹாபாக்களின் செயல்கள்
1940   سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَكُنْتُمْ تَكْرَهُونَ الْحِجَامَةَ لِلصَّائِمِ قَالَ لَا إِلَّا مِنْ أَجْلِ الضَّعْفِ * رواه البخاري 
நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளு கோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவதற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது.
இம்மையில் என்ன நன்மை
உடலில் உள்ள இன்சுலின் சுரப்பது சீராவது, அதாவது இன்சுலின் என்பது ரத்தத்தின் சர்க்கரையை (சர்க்கரையோடு கலந்து தேவையான ஆற்றலை உருவாக்கி) குறைக்காமல் உயர்த்துவதற்குரிய உயிரணுக்களாகும். கொழுப்பு சத்து குறைவது, எடை குறைவது, மன அழுத்தம், சோர்வு நீங்க, சில செல்கள் வளர்ச்சியடையும், பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.
மறுமையில் என்ன நன்மை
38 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ * رواه البخاري
1896 عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ * رواه البخاري
1904 أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ


வியாழன், 5 ஆகஸ்ட், 2010

திருநங்கை என்ற பெயரில் சமூகத் துரோகிகள்.

               தொகுப்பு : Rasmin M.I.SC
ஆண்கள் பெண்கள் என்ற இருபாலாருக்கும் இடையில் தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கக் கோரி போராடும் ஒரு குழுவாக இன்றைய நாட்களில் நம்முன் தெரியக் கூடிய ஒரு வகையினர் அரவாணிகள்.

தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும் படி கூறும் இவர்கள் ஆரம்பத்தில் தங்கள் பெயருக்காக போராடினார்கள்.

அலிகள் என்று அழைக்கப் பட்டவர்கள் மீடியாக்கள் தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி அதில் வெற்றியும் கண்டார்கள்.

இதே குழு தற்போது தங்களை திருநங்கைகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

அரவாணிகள் என்றால் யார்?

மக்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல நாங்கள் மூன்றாவது பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்.உண்மையில் மூன்றாவது பாலினம் என்பது பொய்யாகும்.

இவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள்.

பெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள்.

நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள்.

ஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத் தான் இருக்கும்.
இந்தியாவின் மும்மை டெல்லி குஜராத் போன்ற இடங்களில் ஆண்களை அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் சில உடல் அமைப்பிற்கு மாற்றும் செயன்முறையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் மார்பு போன்ற பிறப்பில் தங்களுக்கு இல்லாத சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.அதன் பின் தங்களை பெண்களாக மக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்துகின்றனர்.

அரவாணிகளின் தொழில்(?)உலகுக்கே ஆபத்தானது.

திருநங்கைகள் என்று சொல்லப் படும் இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை.

இவர்கள் தங்கள்; முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.
அதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பரிப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.

இவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒரு அடி அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும் போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும் வசை பாடுவதும் இவர்களின் தொழில்.

இவர்களின் இந்த இழி செயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.

இதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப் படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

அரவாணிகள் வாழும் நாடுகள்.

அரவாணிகள் ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக இருந்தார்கள் தற்போது  அதிகமாக இந்தியாவில் தான் உருவெடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்திய நாட்டின் முக்கிய நகரங்களாகிய மும்மை கல்கத்தா குஜராத் டெல்லி சென்னை போன்ற நகரங்கள் இதில் அதிகம் முக்கியத்துவம் பெருகின்றன.

இது தவிர மலேசியா சிங்கப்பூர் இஸ்ரேல் வட தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் அரவானிகள் என்ற பெயரில் இருக்கிறார்கள்.

அரவாணிகள் என்ற பெயரைத் தவிர்த்து இவர்களின் வேலையை செய்யக் கூடிய கேடு கெட்டவர்கள் பலர் அணைத்து நாடுகளிலும் உள்ளனர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இவர்கள் அழைக்கப் படுவர் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அரசாங்கங்களின் அங்கீகாரத்துடன் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பகிரங்கமாக இந்த அசிங்கத்தை நடத்தி வருகிறார்கள்.இந்தப் பட்டியலில் இருதியா 128வது நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.129வது நாட்டினராக தங்களை அறிவிப்பு செய்யும் படி இலங்கையில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அன்மையில் பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.(இவர்கள் பற்றிய முழு விபரத்திற்கு இளைஞர்களே சுயஇன்பமும் விபச்சாரமே என்ற நமது ஆய்வுக் கட்டுரையைப் படிக்கவும்.)

கூத்தாண்டவர் திருவிழாவும் ,அரவாணிகளின் அசிங்கங்களும்.

சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்றால் கூவாகம் என்ற கிராமம் இருக்கிறது.

இங்கு தான் வருடா வருடம் அரவாணிகளின் திருவிழா நடக்கிறது.

இந்த விழாவில் இந்த கேடு கெட்டவர்களின் அழகிப்போட்டியும் நடை பெரும்(அழகிப் போட்டியென்பதே கேடு கெட்ட செயல்தான் என்பதை புரிந்து கொள்ளவும்)இவர்களின் வருடாந்த விழாவில் யார் அழகியாக தேர்ந்தெடுக்கப் படுவாரோ அவருக்கு மிஸ்கூவாகம் என்ற பட்டம்(?)வழங்கப் படும்.

இந்த விழா முழுக்க முழுக்க பெண் தோற்றத்தை தங்களுக்குள் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஆண்களால் தான் நடத்தப் படுகிறதே ஒழிய இவர்கள் ஒன்றும் மூன்றாம் பாலினம் அல்ல.என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அரசுகளும் இந்த ஜன்மங்களுக்கு உடந்தையே!

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கள் இந்த அரவாணி என்று சொல்லப் படும் விபச்சாரிகளுக்கு அதிக சழுகைகளை வழங்கி அவர்களுக்கு இன்னும் உத்வேகம் கொடுத்து சமூக சீர்கேட்டுக்கு வழிகோழுகின்றன.

குறிப்பாக இவர்களுக்கு சங்கங்கள் அமைத்து அதற்கெண்றே சில நாடுகள் சட்ட சீர்திருத்தங்களைக் கூட மேற்கொண்டுள்ளன.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எப்படி அரசு அனுமதி கொடுத்துள்ளதோ அதே அனுமதி இந்த அரவாணிகளுக்கும் உள்ளது.

இந்திய அரசாங்கமோ மற்ற அரசுகளை விட ஒரு படி மேலே சென்று இவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரியாக கணக்கெடுத்தால் அரவாணிகளை மூன்றாம் பாலினமாக கணக்கெடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக இந்திய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கங்களே இப்படி கேடு கெட்ட விதத்தில் கருத்து வெளியிடும் போது மாநில அரசுகளை கேட்கவா வேண்டும்.
அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானதா?

அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானது என்று இன்றைக்கு சில தன்னார்வக் குழுக்கள் குரல் கொடுக்கின்றன.

இவர்கள் இப்படி குரல் கொடுப்பது சமுதாய சிந்தனையுள்ளவர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்குகிறது.

இயற்கைக்கு மாற்றமாக செய்ற்கை முறையில் தன்னை பெண்ணாக காட்ட முயலும் இவர்கள் சுய லாபத்திற்காக உழைக்காமல் கையேந்தி சாப்பிடுவதற்காக இப்படி செய்யும் போது சமுதாய நலனை விரும்பும் எந்தவொருவரும் அவர்களை எதிர்க்க வேண்டுமே தவிர அவர்களை ஆதரிப்பது எந்த விதத்திலும் சரியானதாக அமையாது.

அத்தோடு ஓரினச் சேர்க்கை போன்ற மிகப் பெரும் சமூகக் கொடுமையை அரங்கேற்றும் இவர்களை ஆதரித்தால் அவர்களை நாம் எந்த பட்டியலில் சேர்ப்பது?

இஸ்லாமிய தீர்ப்பு என்ன?

அரவாணிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் இவர்களைப் பற்றி இஸ்லாம் அழகான மிகத் தெளிவான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.

உலகில் ஏற்படும் அணைத்துப் பிரச்சினைகளுக்கும் அழகாக எந்த மார்க்கமும் சொல்லாத வகையில் தீர்பை சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் என்பது உலகறிந்த உண்மை.

இந்த தூய இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது.
இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப் பட முடியாதவர்கள்.

உலகில் ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் தான் இருக்கிறது. இதை தவிர செயற்கை பாலினமாக மாற முனையும் இவர்களை ஒருக்காலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.

திருக்குர்ஆன் பார்வையில் இரண்டு பாலினம் மாத்திரமே!

உலகில் இரண்டு பாலினம் மாத்திரமே உள்ளது என்பதை குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்(4:1)

மேற்கண்ட வசனத்தில் ஆதம்(அலை)மூலம் அவரின் துணையை படைத்து அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.என்று குறிப்பிடுவதிலிருந்து உலகில் ஆண் பெண் ஆகிய இரு பாலினத்தைத் தவிற வேறு பாலினம் இல்லை என்பது உள்ளங் கையில் நெல்லிக் கணி போல் தெளிவான விஷயம்.

அரவாணிகள் பற்றி நபியவர்களின் வார்த்தை.

(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி' (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால் அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள்.    (புஹாரி 4324)

அரவாணிகள் என்று தங்களை அழைக்கும் இவர்கள் ஆண்கள் என்பதால் தான் நபியவர்கள் அவர்களை பெண்கள் இருக்கும் இடத்திற்கே வர விடக்கூடாது என்று தடுக்கிறார்கள்.

இவர்கள் பெண்களிடம் தங்களை பெண்களைப் போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய அங்க அவயவங்களை நோட்டமிடும் கீழ்தரமான காரியங்களை செய்பவர்கள் அதனால் இவர்கள் ஒரு போதும் பெண்களுடன் தொடர்பு வைக்க அனுமதிக்கக் கூடாது என்பது நபியவர்களின் தெளிவான வார்த்தை.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும் அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்! என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள். (புஹாரி 6834)
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இவர்கள் நபியவர்களின் சாபத்திற்கு உரியவர்கள்.

அதாவது ஆண்களைப் போல் நடக்கும் பெண்களையும் பெண்களைப் போல் நடக்கும் ஆண்களையும் நபியவர்கள் சபிக்கிறார்கள்.

இந்த அரவாணிகள் என்று சொல்லப் படுபவர்கள் ஆண்கள் ஆனால் பெண்களைப் போல் தங்களை அடையாளப் படுத்துகிறார்கள்.

மொத்தத்தில் இவர்கள் இறைவனி சாபத்திற்கு உரியவர்கள் என்பதால் அரவாணிகள் விஷயத்தில் நாம் கவணமாக இருக்க வேண்டும் அவர்களை ஆண்களாகத் தான் நாம் முடிவெடுக்க வேண்டும் அவர்களுடன் நமது பெண்கள் (அரவாணிகளை பெண்களாக நினைத்து)பழகுவதை தடுக்க வேண்டும்.

மொத்தத்தில் அரவாணிகளை நாம் வீடுகளிலேயே வைக்கக் கூடாது அவர்கள் தங்களை ஆண்கள் என்று பகிரங்கமாக அறிவித்து ஆணுடைய தோற்றத்தில் இருந்தால் நாமும் அவர்களை ஆண்களாக ஏற்றுக் கொள்ள முடியும் மாறாக தன்னை ஒர அரவாணியாக எவர் காட்டிக் கொள்கிறாரோ அவருக்கு நமது வீட்டில் கூட இடம் கொடுக்கக் கூடாது என்பது இஸ்;லாத்தின் தெளிவான நிலைபாடு.

பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வளிக்கின்ற மார்க்கம்



          எம். முஹம்மது சலீம்
கடந்த சில மாதங்களுக்கு முன், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுமனித சமுதாயத்தின் சீரான இயக்கத்தின் மீது படுமோசமான தாக்குதல்கள்   நிகழ்ந்தன.. தினமும் எத்தனையோ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திவாலாகி போவதென்பதும், பலர் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பறிதவிப்பதும்  தொடர்கதையாக  இருந்து கொண்டிருந்தது. அந்த பாதிப்புகளையெல்லாம் செய்திதாள்களின் மூலமாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.  இதைப் போன்றே மாபெரும் பொருதாரப் பிரச்சனைகள், நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் வாட்டி வதைத்து வேதனைப் படுத்தியிருக்கின்றன என்பதை உலக சரித்திரத்தைத் திருப்பிப் பார்ப்பவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.

உலகளவிலே மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்விலும் கூட இந்த பொருளாதார சிக்கல்கள், தடுமாற்றங்கள் துளிர்விடுவதென்பது  தவிர்க்கமுடியாத வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.  ஆகவே அனைவருடைய வாழ்வையும் அடிக்கடி ஆக்கிரமிக்கின்ற இந்த பொருளாதாரப் பிரச்சனைகள் தோன்றுவதற்காக  அடித்தளமிடுகின்ற காரணிகள் எவை? அவைகளை அடியோடு அகற்றி அழகிய முறையில் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? என்று ஆதங்கப்பட்டு, அனைத்து நாடுகளும் இன்றளவும் பல்வேறான சட்டதிட்டங்களை  அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நிரந்தர தீர்வைத் தரக்கூடிய வகையில் இல்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கின்றது.

ஆனால் பொதுவாகவே ஒரு மனிதனின் தொட்டில் பருவம் தொடங்கி மண்ணறையில் அடக்கப்படுகின்ற காலகட்டம் வரை, அவனை ஆட்டிப்படைக்கின்ற அனைத்து விதமான  சந்தேகங்களுக்கும், சிக்கல்களுக்கும் அழகிய முறையில் பதிலளிக்கின்ற  இஸ்லாமிய மார்க்கம், இந்த பொருளாதாரப் பிரச்சனையிலிருந்தும் மனிதன் தப்பிப்பதற்காக  தீர்க்கமானத் தீர்வைத்தருகின்றது. ஆகவே அதையறிந்து அதன்படி நமது அமல்களை அமைத்துகொண்டோம் எனில் வாழ்க்கை முழுவதும் நிம்மதியானதாக மாறிவிடும்.

முதலில் நமது வாழ்க்கையின் வளத்தை வேரறுப்பதற்காகவே வந்துபோகின்ற  பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கின்ற ஒட்டுமொத்த காரணிகளையும்  மூன்று வகையாக வரிசைப்டுத்தலாம். ஏனெனில் இந்த மூன்று முதன்மையான தன்மைகளை மையமிட்டு தான் பொருளாதாரப் பிரச்சனை உதயமாகிக் கொண்டிருக்கின்றது..

1.  அர்த்தமற்ற ஆன்மீக சிந்தனைகள்

2. ஆடம்பர மோகம்

3. தீயகாரியங்களின் தாக்கம்         

இந்த காரணங்களால் எப்படியெல்லாம் மனித வாழ்க்கையில் பொருளாதாரத் தட்டுப்பாடு தலையெடுக்கின்றது என்பதையும், அதைத் தகர்த்தெறிவதற்கு மார்க்கத்தில் முன்நிறுத்தப்பட்டுள்ள தகவல்களையும் இனி ஒவ்வொன்றாகக் காண்போம்.

அர்த்தமற்ற  ஆன்மீக சிந்தனைகள்

நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையை தரமிக்கதாக அமைத்துகொள்ளவேண்டும் என்பதற்காக, மனிதர்கள் எத்தனையோ மதங்கள், இசங்கள் மற்றும் கொள்கை கோட்பாடுகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் நம்மைச் சுற்றி இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் புத்தர்கள் போன்றோர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஆன்மீக நம்பிக்கைகளைச் சற்று கவனித்தால், அவை மனிதனுடைய பொருளாதாரத்தைப் பறிக்கக் கூடியதாகவே இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ந எந்தளவிற்கெனில், அவர்கள் தாங்கள் நம்புகின்ற தெய்வங்களுக்கு மனிதனுக்கு இருப்பது போன்றே தன்மைகள் இருப்பதாக கருதுகிறார்கள். மனிதனுக்கு பசி, தாகம், துக்கம், தூக்கம்  மற்றும் குடும்பம் போன்ற தேவைகள்  இருப்பது போன்றே, தங்களது கடவுளர்களுக்கும் தேவைகள், பலவீனங்கள், இருப்பதாக நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் தான்  அவைகளுக்கு தினந்தோறும் பலகாரங்களுடன் விதவிதமானப் படையல்களைப் படைக்கின்றார்கள். இன்னும் நெய், பால், சந்தனம், பழம் மற்றும் பல பொருட்களில் பூஜைகள் நடத்தி அவைகளுக்கு ஆராதனை நடத்துகிறார்கள். திருவிழா, பண்டிகைகளின் பெயராலும் பணத்தைப் பயனற்ற வகையில் செலவழிக்கிறார்கள்.

இன்னும் தங்களின் கோரிக்கைகள், பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதற்காக, அந்த சிலைகளுக்கு ஆடு, கோழி போன்ற உயிரினங்களை  நேர்ச்சை என்ற பெயரில் பலி கொடுப்பதைக் காண்கிறாம். இதனுடைய உச்சக்கட்டமாகத் தான், தேவையான வரம் தங்ளுக்கு கிடைக்கும் என நினைத்துக் கொண்டு  நரகபலி என்ற பெயரில்  மனிதர்களையே படுகொலைச் செய்கின்ற சாமியார் கூட்டங்கள் உலாவந்துக் கொண்டிருக்கின்றன. 

அதுமட்டுமல்ல, தங்களது கடவுளர்களின் தேவைகளை சாதாரணமக்களால்   தனித்திருந்து நிறைவேற்றமுடியாது. மாறாக அதற்கு பூசாரிகளின் துணைத் தேவை. அவர்களால் தான் அக்கடவுளர்களுக்குரியத் தேவைகளைத் திருப்திகரமாக நிறைவேற்றமுடியும் என்று நம்புவதால், அந்த இடைத்தரகர்களுக்காகத் தட்சணைகள், காணிக்கைகள் என்று பொருளாதாரத்தை வாரிவழங்குவதைக் காண்கிறோம்.

ஜோதிடம், பில்லி, சூனியம் மற்றும் தோஷம் போன்ற மூடநம்பிக்கைகள் அவர்களுடைய மதத்தில் விதைக்கப்பட்டுள்ளதால், அதற்காகவென்றே அதிகமான பொருளாதரத்தை விரையம் செய்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்துவிட்டால் பிறந்தநாள்விழா என்றும், அதே பெண்குழந்தையாக இருந்து பருவத்திற்கு வந்துவிட்டால் பூப்புனித நீராட்டுவிழா என்றும், பெண்ணைத் திருமணம் முடித்துதரும்போது வரதட்சனை என்றும், அப்பெண் கர்ப்பம் தரித்திருக்கின்ற போது வளைகாப்பு என்றும் பணத்தை மையமாகக் கொண்டதாக பல சடங்கு, சம்பிரதாயங்கள் அவர்களிடத்தில் மலிந்துக் காணப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு மனிதன் இறந்த பிறகும் கூட மூன்றாவது நாள், பதினாறாவது நாள் மற்றும் கருப்புநாள் என்று குறித்துவைத்துக் கொண்டு, அதிலே குலதெய்வ கோயில்களுக்கு இரத்த பந்தங்களோடு  சென்றுவரவேண்டும் போன்ற  சடங்கு சம்பிரதாயங்கள் அவர்களின் பொருளாதாரத்தை அட்டைப் போல உறிஞ்சியெடுப்பதாக அமைந்திருக்கின்றன..

குறிப்பாக மாற்றுமதத்தவர்களின் நம்பிக்கையில் வேரூன்றிகிடக்கின்ற ஆன்மீகச் சிந்தனைகளும், அதிலிருந்து கிளையாகப் பிரிகின்ற  சடங்கு சம்பிரதாயங்களும், அவர்களை வாழ்நாள் முழவதும் பொருளாதாரப் பிரச்சனையெனும் பொறியில் சிக்கவைத்து வேடிக்கைப் பார்க்கக் கூடியதாக தான்  இருக்கின்றன.

அர்த்தமுள்ள ஆன்மீக சிந்நதனை

இறைவன் தேவையற்றவன்:

இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, பரிபாலித்துக்கொண்டிருக்கின்ற இரட்சகன் ஒருவன் தான். இப்புவியில் நம்மை படைத்து, நாம் வாழ்வதற்காக  அனைத்து வசதிவாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்திருக்கின்ற அவனுக்கு எவ்விதமான  தேவைகளும், பலவீனங்களும் இல்லை.
"அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன்.
(அல்குர்ஆன் 112 :1,2)

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை . (அல்குர்ஆன் 51:57)

பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன்

ஒட்டுமொத்த அகிலத்தையும் அடக்கியாளுகின்ற வல்லமை பெற்றவனிடம்  பிரார்த்தனை புரியவேண்டும் என்பதற்காக, எந்தவொரு காணிக்கையையும், எவரிடமும் கொட்டிக்கொடுக்க வேண்டியதில்லை. நாம் எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் எளிதாக அவனை நினைத்துப் பிரார்த்திக்கலாம், அவனுக்குரிய திருநாமத்தைக் கொண்டுத் துதிக்கலாம் என்று இஸ்லாமிய மார்க்கம் இறைவனை நெருங்குவதற்குரிய இலக்கணத்தை உன்னதமான முறையில் மொழிகின்றது.
 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்''(என்பதைக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2 : 186)

நிர்பந்தம் இல்லை :

மனிதனை இறையச்சமுடையவானாக மாற்றி அவனை மறுமை வெற்றிக்காக தயார்படுத்துவதற்காகவும், மற்றமனிதர்களுக்கு பயனளிக்கின்ற விதத்தில் மனிதாபிமானம் கொண்டவனாக அவனை  வாழவைப்பதற்காகவும்,   பலவேறான கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் இறைவன்  வழங்கியிருக்கின்றான்.. அவற்றில் முக்கியமாக திகழ்கின்ற  தொழுகை, நோன்பு போன்ற வணக்கத்தைப் புரிவதற்காக வேண்டி குறிப்பிட்ட தொகையை செலுத்தவேண்டும் என்ற நிலை கிடையாது. அதேபோல குர்பானி கொடுத்தல், ஜகாத், ஹஜ் போன்ற கடமைகள் அனைத்துமக்களின் மீதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படாமல் சக்தி பெற்றவர்கள் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று அறிவுறுத்துவதோடு, அதற்கான நோக்கமும்வரம்பும்  துல்லியமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
(அல்குர்ஆன் 2 : 286)


அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.
(அல்குர்ஆன் 22 : 37)
 
நேர்ச்சையால் பிரச்சனை தீராது:

நேர்ச்சையென்ற பெயரில் இறைவனுக்காக  எதையேனுமொன்றைப் படைத்து வழிபட்டால்தான் நமது பிராத்தனைகள், கோரிக்கைகள்  இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாத்தில் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நேர்ச்சையால் நமக்கு நிர்ணயித்து வைக்கப்பட்டுள்ள விதியில் எந்தவிதமான மாறுதலும் நிகழ்ந்துவிடாது என்று அழுத்தமாக போதிக்கப்பட்டுள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
"நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த ) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும். (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை)" என்றும் கூறினார்கள். (நூல் : புஹாரி 6608, 6693)

இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் :
"நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 6692)

மிகைத்தவனுக்கே மறைவான ஞானம் :

நாளை என்ன நடக்கும்? எங்கே நாம் மரணிப்போம்? எவ்வளவு சம்பாதிப்போம்? நாளைய தினம் ஆட்சியைக் கைப்பற்றபோவது யார்? போன்ற மறைவான விஷயங்களை இறைவன் ஒருவன்  மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களுக்கும் கூட அவற்றை அவன்  அறிவித்துக்கொடுத்தால் தான் தெரியும். இதன் மூலம் ஜோதிடம் பால்கிதாபு போன்ற பித்தலாட்டக்காரியங்களுக்கு இஸ்லாம் சவுக்கடி கொடுக்கின்றது.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத்தவிர யாரும் அதை அறியமாட்டார்.(அல்குர்ஆன் 6 :59)

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான்.கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது.அல்லாஹ் நன்கறிந்தவன். நுட்பமானவன்.
(அல்குர்ஆன் 31 :34)

அனைத்தும் அவன் செயல் :

ஏக இறைவனிடமிருந்து தான் எந்தவொரு நன்மையும், தீமையும் நமக்கு ஏற்படுகின்றது. அவனுடைய அனுமதியின்றி எந்தவொன்றும் நம்மை அணுவளவுக்கூட அணுகாது. இதை அவனே திருமறையில் கூறுகிறான்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கைக் கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும என்று கூறுவீராக.(அல்குர்ஆன் 9 :51)


இதன் மூலம் கண்மூடித்தனமாகக் கடைபிடித்துவருகின்ற ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, தாயத்து, தகடு போன்ற அனைத்து மூடநம்பிக்கைகளையும், போலியான காரியங்களையும் மண்மூடிப்புதைக்கின்றது இஸ்லாம். மேலும் மனிதனின் பகுத்தறிவிலே கரைபடிவதையும், அதன்மூலம் கரன்சி நோட்டுகள் கைமாறுவதையும் தடுக்கிறது. சுருக்கமாக சொன்னால்   அர்த்தமுள்ள இஸ்லாத்தின் ஆன்மீக சிந்தனைகள் (இறைநெறிக்கோட்பாடு)  மனிதசமுதாயத்தைப்  பொருளாதார நெருக்கடியெனும் படுகுழியில் விழுந்துவிடாமல்  காப்பாற்றக்கூடியதாக இருக்கிறது.

அழிவைத்தரும் ஆடம்பர மோகம்

 மனித சமுதாயத்தின் வாழ்வியல் தளத்தை நவீன காலத்துக் கண்டுபிடிப்புகள் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இது. இத்தருணத்தில் அடுத்தவர்களுடைய வாழ்வோடு தங்களது வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் அனுபவிப்பது போன்ற ஆனந்தமான வாழ்க்கை நமக்கு இல்லையே என்று ஏங்கக் கூடியவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு இருப்பது போன்ற ஆடம்பர வசதிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் நவீன சாதனங்களை பெருக்கிகொள்ள வேண்டும் என்று பேராசைப் படுபவர்களும்  இருக்கிறார்கள். தங்களை ஆட்டிப்படைக்கின்ற இந்த ஆடம்பரமோகத்தின் வீரியத்தைத் தணித்துக் கொள்வதற்காக, கடன், கந்துவட்டி போன்றவற்றில் வீழ்ந்து, வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தில் உழன்றுகொண்டிருப்பவர்களை கண்கூடாகக் காண்கிறோம். இதன் இறுதிகட்ட விளைவாக, இருப்பதையெல்லாம் இழந்து, வாழ்வதற்கு  வழிதெரியாமல் குடும்பத்தோடு தற்கொலைச் செய்து கொள்ளும் இழிநிலை பெருகிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சிலரோ இலஞ்சம், ஊழல், மற்றும் மோசடி என்று மற்றவர்களின் பொருளாதாரத்தைப் பறிக்கக் கூடியவர்களாக உருமாறிவிடுகிறார்கள்.

ஆகவே பொருளாதார நெருக்கடியின் கோரப்பிடியில் சிக்கவைக்கின்ற ஆடம்பர மோகத்தை விட்டும் மனிதசமுதாயம்  மீண்டுவருவதற்கேற்ப முத்தான கருத்துக்களை முன்வைக்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.


ஆடம்பர மோகத்தை அழிக்கும் வழிமுறை

நாடியவர்களுக்கே செல்வ வளம் :

படைத்தல், காத்தல், அழித்தல், மழை தருதல், குழந்தையைத் தருதல் மற்றும் ஆட்சியைத் தருதல் இது போன்ற அனைத்து அதிகாரங்களும், அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானதாகும். இவ்வாறே முக்கியமான அருட்கொடையாக இருக்கின்ற செல்வத்தை எவர்களுக்கு வழங்க வேண்டும்? எவ்வளவு வழங்க வேண்டும்? எப்போது வழங்க வேண்டும்? என்பதெல்லாம் அவனுடைய அதிகாரத்தில் உள்ளதாகும். இதை அருள்மறையில் அறிவிக்கின்றான்.
         வானங்கள் மற்றும் பூமியின் திறவுகோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியவர்களுக்குச் செல்வத்தை  அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான்.அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 42:12)

பேராசைக் கொள்ளாதீர்கள் :

காலை முதல் மாலை வரை செல்வத்தைச் சேகரிப்பதற்காக சூறாவளியாய் சுற்றித்திரிந்தாலும், அல்லாஹ் விதித்ததை விட கடுகளவுக் கூட அதிகமான செல்வத்தைத் திரட்டிவிடமுடியாது. எனவே பிறருக்குக் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் பார்த்து ஒருபோதும் பேராசைப்படக் கூடாது. அப்போது தான்அழிவைத்தரும் ஆடம்பரமோகத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:32)

கீழுள்ளவர்களைப் பாருங்கள் :

வாழ்க்கைத்தரத்தில் நம்மைவிட மேல்மட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து ஒருபோதும் பெருமூச்சுவிடாமல், நம்மை விட தாழ்ந்த வாழ்க்கைத் தரத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களை நினைத்து பார்க்க வேண்டும். உணவு உடை மற்றும் உறைவிடம் போன்ற அனைத்துவிஷயத்திலும் மற்றவர்களை விட அல்லாஹ் நம்மை மேன்மைப்படுத்தியிருப்பதை என்றும் மறந்துவிடக் கூடாது. உதாரணமாக  மிதிவண்டியில் செல்பவர்கள், மோட்டார் வாகனத்தில் விரைந்து செல்பவர்களைப் பார்த்து பூரித்துவிடாமல், நடைப்பயணமாகப் போகக்கூடியவர்களை நினைத்து பார்த்து தமது நிலையை திருப்பதிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அல்லாஹ் நமக்கு அருளியிருக்கின்ற அருட்கொடைகளை மறந்தவர்களாக மாறிவிடுவோம். <ம்ஹண்ப்ற்ர்:வேண்டும்.அதற்காக>.

அபூஹரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
"உங்களுக்குக் கீழே ( வசதி வாய்ப்பில் குறைவாக) உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலே உள்ளவர்களை நீங்கள் பார்க்காதீர்கள். உங்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகளை   நீங்கள் குறைவாக மதிக்காமல் இருக்க, இது மிகவும் பொருத்தமாக இருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புஹாரி(6490) முஸ்லிம் (2963)
 

போதுமென்ற மனதைப் பெறுவோம் :

தமக்குத் தரப்பட்டிருக்கின்ற வசதி வாய்ப்புகளைக் கொண்டு, வாழ்க்கையை திருப்தியடைந்து கொள்கின்ற போதுமென்ற மனம் இருந்தாலே போதும் ஆடம்பர மோகத்தை தலைகாட்டவிடாமல் தகர்த்தெறிந்து விடலாம். இன்னும் சொல்லப்போனால் போதுமென்ற மனதை விட சிறந்த செல்வம் வேறெதுவுமில்லை. ஏனெனில் இத்தன்மை இல்லையென்றால், மலையளவு செல்வம் குவிந்திருந்திருந்தாலும் ஆசைமனம்  அமைதியடையாது. ஆகவே தான் இந்த பண்பை வளர்த்துக் கொள்ளுமாறு நம்மை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளாôகள்.

அபூஹரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
"அதிகமான சொத்து இருப்பது செல்வமில்லை. மாறாக, செல்வம் என்பது  (இருப்பதைப் போதுமாக்கும்) மனதளவில் உள்ள செல்வம் தான் செல்வமாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புஹாரி (6446) முஸ்லிம் (1051)

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கின்றார்கள் :
"ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து, அவருக்குப் போதுமான அளவுக்குச் செல்வம் வழங்கப்பட்டு, அவருக்குத் தான் தந்துள்ளதை போதுமாக்கிக் கொள்ளும் குணத்தையும் அல்லாஹ் வழங்கிவிட்டால் அவர் வெற்றி அடைந்து விட்டார்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (நூல் : முஸ்லிம் 1054)

வறியவர்கள் பெறும் மறுமை வெற்றி :

வாழ்க்கையை வாட்டி வதைக்கின்ற வறுமைநிலையை நினைத்து, அதற்காக இறைநெறியை மறந்து வரம்பு மீறியக்காரியங்களில் இறங்கிவிடக் கூடாது. ஏனென்றால் இந்த அற்பமான நிலையற்ற உலகத்தின் இன்பங்களைச் சுவைப்பதற்குரிய வசதி வாய்ப்புகளை வழங்காவிட்டாலும், அதற்கு பகரமாக சொர்கத்தின் பேரின்பங்களை அல்லாஹ் பரிசளிப்பான். 

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள் :
"சொர்க்கத்தின் வாசலில் நான் நின்றிருந்தேன். அதனுள் நுழைபவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாகவே இருந்தார்கள். வசதியானவர்கள் (வாசலிலேயே ) தடுக்கப்பட்டிருந்தனர். எனினும் (அவர்களிலுள்ள) நரகவாசிகள் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட கட்டளையிடப்பட்டனர்" என்று  நபி(ஸல்) அவர்கள கூறினார்கள்.
நூல் : புஹாரி ( 5196) முஸ்லிம் (2736)

இந்த அழகிய அறிவுரைகளை அகத்திலே ஆழமாகப் பதியவைத்து, அதன்படி அமல்களை அமைத்துக் கொண்டால் ஆடம்பர மோகம் அடியோடு மாய்ந்துபோய்விடும்

திசைமாற்றும் தீயக் காரியங்கள்


மேற்கத்திய கலாச்சாரத்தின் மோகம், மக்கள் மனதில் முத்திரைப் பதித்துக் கொண்டிருக்கின்ற தருணம் இது. இந்நேரத்தில் மனிதனின் சீரிய சிந்தனைகளை மலுங்கடித்து, அவனை இலட்சியப் பாதையை விட்டும் திசைத் திருப்புகின்ற சீர்கேடுகள் அவனைச் சுற்றி சிதறிக்கிடக்கின்றன. அநேகமான மக்கள் அந்த அனாச்சாரக் காரணிகளால் கவரப்பட்டு, அதன் மூலம் கிடைக்கின்ற அற்ப சுகங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். சினிமா, சிகரெட், பாக்கு, மது, மாது மற்றும் போதைமருந்து போன்றவற்றில் பித்துபிடித்தவர்களாகப் புதைந்துகிடக்கின்றார்கள்.  தினந்தோறும் வியர்வை சிந்தி, தேகத்தை வருத்தி, சிரம்பட்டு சேகரிக்கின்ற செல்வத்தையெல்லாம் சிற்றின்பத் தேடல்களுக்காக செவழித்து பொருளாதார சிக்கலில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இத்தகைய மோசமான நிலையில் மனிதசமுதாயம் மயங்கிவிடாமல்  நெறிமுறையோடு வாழ்வதற்கேற்றவாறு இஸ்லாம் சிறப்பான முறையில் நற்போதனைகளை பறைச்சாற்றுகின்றது.

தீமைகளை தீண்டாமல் இருக்க அறிவுரைகள்

அருட்கொடைகளைப் பற்றி விசாரிக்கப்படுவோம் :

மனித சமுதாயத்தின் இயக்கம் சீராக இருப்பதற்காகவும், அதன் செயல்பாடுகளை பரிசோதிப்பதற்காகவும், அல்லாஹ் தனது அருட்கொடைகளை தான் விரும்புகின்ற  விதத்தில் வகுத்தளிக்கிறான். சிலர், கோடிக்கணக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த சுகபோகங்களை அனுபவிப்பதறகுரிய ஆயுள் அவர்களுக்கு இருக்காது அல்லது அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்குரிய வாரிசுகள் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். சிலர் கல்வி, குடும்பம், ஆரோக்கியம் போன்ற அனைத்து அருட்கொடைகளையும் பெற்றிருப்பார்கள். ஆயினும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி பராமறிப்பதற்குத் தோதுவாக அவர்களுக்கு செல்வம் இல்லாமல் மிகவும் சிரமப்படுவார்கள். ஆகவே  இறைவன் நமக்கு அருளிய அருட்கொடைகளுக்காக அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.  அவற்றை என்றென்றும் நாம் நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றுககும் மேலாக  இம்மையில் கொடுக்கப்பட்ட அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் (அல்குர்ஆன் 102 : 8)

எனவே எந்த வழியில் செல்வத்தை திரட்டினாய்? அதை எவ்வாறெல்லாம் செலவழித்தாய்? குடும்பத்தாருக்கு செய்யவேண்டிய கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றினாயா? உன்னிடம் கையேந்தி வந்தவர்களுக்கு உதவிபுரிந்தாயா? செல்வத்தை தீய வழியில் செலவழித்தாயா? அல்லது நற்காரியங்களுக்காகப் பயன்படுத்தினாயா? என்று இறைவன் நம்மை விசாரிக்காமல் விடமாட்டான். இதைப்பற்றி  இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

மறுமை நாளிலே ஒரு அடியான் ஆயுளை கழித்ததைப் பற்றியும்செல்வத்தை சம்பாதித்ததையும் செலவழித்ததையும் பற்றியும்அறிûவை  பயன்படுத்தியதை பற்றியும்ஆரோக்கியத்தை பாதுகாத்தது பற்றியும் விசாரிக்கப்படும் வரை நகரவே முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2341)

அல்லாஹ் விரும்பமாட்டான் :

மறுமையில் ஈடேற்றத்தைப் பெற வேண்டுமென்றால் வெறும் நல்லறங்கள் மட்டும் போதாது. அதற்கும் மேலாக  இறையருளும் கண்டிப்பாக தேவை. அப்போது தான் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கின்ற சொர்க்கச் சோலைகளில் சங்கமிக்க முடியும். எனவே நித்திய ஜீவனான அல்லாஹ்வின் நேசத்தை பெறக்கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் நமது அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்..அவனது விருப்பத்தை விட்டும் நம்மைத் தூரப்படுத்துகின்ற தீயக்காரியங்களை விட்டும் ஒதுங்கியிருக்க வேண்டும். வீண்விரையம் செய்வதும் அத்தகைய தீயப்பண்புகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற பண்புகளில் ஒன்றாகும். இதை திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்.
       
   ஆதமுடைய மக்களே ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள். உண்ணுங்கள். பருகுங்கள். வீண்விரையம் செய்யாதீர்கள். வீண்விரையம் செய்வோரை அல்லாஹ் விரும்பமாட்டான். 
   (அல்குர்ஆன் 7:31) 

அபூஹரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
"நிச்சயமாக அல்லாஹ் மூன்று காரியங்களை உங்களிடம் விரும்புகிறான். மூன்று காரியங்களை உங்களிடம் வெறுக்கிறான். அவனை நீங்கள் வணங்குவதையும்,எதையும்  அவனுக்கு நீங்கள் இணைவைக்காமல் இருப்பதையும் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் சேர்ந்து பற்றிக் கொண்டு, நீங்கள் பிரிந்து விடாமல் இருப்பதையும் உங்களிடம் விரும்புகிறான். இவரால் கூறப்பட்டது, இவர் கூறினர் என்பதையும்,அதிக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் உங்களிடம் வெறுக்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் 1715)

ஷைத்தானின் தோழர்கள் :

தேவையற்ற, பயனற்ற, தீமையான முறையில் பொருளாதாரத்தை விரையம் செய்பவர்களை இறைவன் வெறுக்கிறான். தன்னுடைய இறையருளை விட்டும் அப்புறப்படுத்தி விடுகிறான், எனவே அத்தகையவர்கள் மனித சமுயதாயத்தையே நரகவாசிகளாக மாற்றத்துடிக்கின்ற ஷைத்தானின் உற்றத் தோழர்களாக மாறிவிடுகிறார்கள்.

விரையம் செய்வோôர், ஷைத்தான்களின் உடன்பிறப்புக்ளாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 17 : 27)

தீமைகளுக்கு துணை போகாதீர்கள் :

தான் தீமையான செயல்களில் ஈடுபடாவிட்டாலும், தனக்கு நெருக்கமானவர்கள் செய்கின்ற தவறான செயல்பாடுகளுக்காக காசு பணத்தை கொடுத்து உதவிசெய்பவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு நெடுநாள் தொடர்கின்ற தோழமை முறிந்து விடக்கூடாது என்பதற்காக தான் கொடுத்துதவினேன் என்று காரணத்தை கூறுகின்றார்கள். ஆனால் இதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.

இறைச்சத்திலும், நன்மையிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்புமீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 5 : 2)

முஸ்லிம்சமுதாயத்தின் நிலை :

மேற்கண்டவற்றின் மூலம், காலம் காலமாக மனித வர்க்கத்தை வதைத்து வருகின்ற பொருளாதார பிரச்சனைக்குரிய அனைத்து காரணங்களையும் இஸ்லாமிய மார்க்கம் களைந்தெறிகின்றது என்பதை அறியமுடிகின்றது. ஆனாலும் கூட இஸ்லாமியர்களும் பொருளாதார சிக்கலால் அல்லல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். காரணம், மார்க்கத்தின் மகத்துவத்தை அறியாதவர்களாக, அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமலும், மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்திற்கு ஒப்பாகவும், பேணுதல் என்ற பெயரில் வரம்புமீறியும் பெயரளவு முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக தர்கா வழிபாடு, மவ்லுது, மீலாதுவிழா, கந்தூரிவிழா, கத்தம் பாத்திஹாவட்டி, வரதட்சனைதாயத்து, தகடு, பால்கிதாபு போன்று தடுக்கப்பட் இணைவைப்பான பித்அத்தான காரியங்களுக்களிலும்இன்னும் இது போன்ற குர்ஆன் ஹதீஸக்கு மாற்றமான கரியங்களிலும் மூழ்கி செல்வத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய இளைஞர்கள் சினிமா, பீடி, சிகரெட், பாக்கு, போதை போன்ற கெட்டப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டு ஆரோக்கியத்தை திரும்ப பெறுவதற்காகவும் பொருளாதாரத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.    எளிமையான இனிமையான இஸ்லாமிய மார்க்த்தை கடினமானப் பாதையாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : புஹாரி ( 39 )              
                   
எனவே இறைமார்க்கமான இஸ்லாத்தை தூய்மையான முறையில் பின்பற்றி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக திகழ்வதற்கு, ஏக இறைவன் நமக்கு அருள்புரிவானாக.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites