அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதினால் ஆணில் சிறிய குழந்தைகளுக்கு தங்கம் அணிவிப்பது தடையா ?

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது? எல்லோருமே எல்லா கருத்துக்களையும் பின்பற்றுவதில்லை. சிறு சிறு தவறுகளைச் செய்யத் தான் செய்கின்றார். அப்படியிருக்கும் போது ஆண் குழந்தைகளுக்கு தங்க நகை அணிந்தால் என்ன தவறு? ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.1. தூங்குபவர் விழிக்கின்ற வரை  2. சிறுவன் பெரியவராகும் வரை  3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.அறிவிப்பவர்: ஆயிஷா (ர-)நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031எனவே தங்கம் அணியக்கூடாது என்ற கட்டளை...

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே?இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.முஹம்மது யாஸீர், திருநெல்வேலி பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள்.அப்போது கிராமவாசி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும்...

அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா?

அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா? ஏழாவது நாள் கொடுக்காவிட்டால் மற்ற நாட்களில் கொடுக்கலாமா? குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? ஏழாவது நாள் குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் நிலையில் மொட்டை அடிப்பது சாத்தியமா?"ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி)நூல்: நஸயீ 4149இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று...

பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர் களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா?

பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை.நான் நபி (ஸல்) அவர்களிடம், கஅபாவின் அருகிலுள்ள ஒரு சுவரைப் பற்றி, "இது கஅபாவில் சேர்ந்ததா?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "ஆம்'' என்றார்கள். "எதற்காக அவர்கள் இதைக் கஅபாவோடு இணைக்கவில்லை?'' என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், "உன் சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்'' என்று பதிலளித்தார்கள். "கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம் என்ன?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால் அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற...

ஒருவர் தவறு செய்யப் போகின்றார் என்று சந்தேகித்தால் அவரை அவருக்குத் தெரியாமல் உளவு பார்க்கலாமா? அவர் பிறரிடம் பேசுவதைக் கேட்கலாமா?

தெளிவான ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகப்படுவதையும், அவர் ஏதேனும் தவறு செய்கின்றாரா என்று துருவித் துருவி ஆராய்வதையும் திருக்குர்ஆன் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றது.நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு இது போன்று விசாரிப்பது தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. எப்போது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகின்றோமோ அப்போதே அவரைப் பற்றி புறம் பேசத் துவங்கி விடுகின்றோம். புறம் என்று துவங்குவது...

தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ரமளான் ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது, ஷைத்தான் வந்து திருடியதாகவும், அவன் பிடிபட்டவுடன், தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதினால் ஷைத்தான் தீண்ட மாட்டான் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் புகாரியில் ஹதீஸ் உள்ளது. அபூஹுரைராவின் முன் ஷைத்தான் வந்தானா? தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா? ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப் பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். "உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், "நீங்கள் படுக்கைக்குச்...

மனிதர்களைத் தலைவர் என்று அழைக்கலாமா ?

 பனூ ஆமிர் தூதுக் குழுவினர், நபி (ஸல்) அவர்களை நோக்கி, நீங்கள் எங்களின் தலைவர் என்று கூறிய போது, அல்லாஹ் தான் தலைவன் என்று நபி (ஸல்) கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. நாம் இஸ்லாமிய மேடைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தலைவர் என்று தான் கூறுகின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் தலைவர் என்று அழைக்கக் கூடாது என்றால் திமுக தலைவர் என்றும் சொல்லக் கூடாதா? அப்துல் அலீம், அய்யம்பேட்டை தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் அபூதாவூதில் 4172வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மத்ரஃப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும் இதற்கு மாற்றமான கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸில் தலைவர் என்பதற்கு ஸய்யித் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸய்யித் - தலைவர் என்ற பதத்தை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குப் பயன்படுத்தி...

சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக பேசாமல் இருப்பது குற்றமா ?

 நானும் ஒரு பெண்ணும் பள்ளிப் பருவத்திலிருந்தே தோழிகளாக இருந்தோம். சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் எங்களுக்கிடையே சண்டை வந்து கொண்டிருந்தது. அதனால் நான் அவளுடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். நான் பேசவில்லை என்பதால் அவளும் என்னுடன் பேசவில்லை. நான் பேசாமல் இருப்பதால் அல்லாஹ் என்னைத் தண்டிப்பானா? பவுஜியா, திருச்சி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்.  எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப் பட்டதன்று! அறிவிப்பவர்: அனஸ் பின்  மாலிக் (ரலி),  நூல்: புகாரி 6065 இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்காகப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் இறைக் கட்டளைக்கு மாற்றமாக...

வரதட்சனைத் திருமணத்தில் கஷ்க்காமல் இருப்பதினால் உறவினர்களைத் துண்டித்ததாக ஆப்ôதா?

? வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது. வரதட்சணை வாங்குவது குற்றம் என்று தடுத்தும் மீறி செய்கின்றார்கள். அதே சமயம் நம் உறவினர்களையும் ஒட்டி வாழ வேண்டும். நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தால் நாம் உறவைத் துண்டித்ததாக ஆகாதா? விளக்கவும். ஆரிஃப் புதுக்கோட்டை உறவினர்களை ஆதரிப்பதாக இருந்தாலும், வேறு எந்த நன்மையான காரியமாக இருந்தாலும் ஒரு தீமையின் மூலம் தான் அதை நிறைவேற்ற முடியும் என்றால் அதை இஸ்லாம் அங்கீகரிக்காது. நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2) பாவமான காரியத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் தடை செய்து விட்டான். வரதட்சணை என்ற பெரும் பாவத்தைச் செய்பவர் உறவினர்...

ரமளான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டதா ? அல்லது சிறிது சிறிதாக அருளப்பட்டதா?

 ரமளான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு 40 வயது முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிது சிறிதாகத் தான் குர்ஆன் அருளப்பட்டிருக்கும் போது ஒரே இரவில் அருளப்பட்டது என்பதன் பொருள் என்ன? இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல்குர்ஆன் 25:32) திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. 17:106, 20:114, 76:32 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது. மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன் 97:1) இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன்...

இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்தால் மட்டும் போதுமா ? அல்லது குளிக்க வேண்டுமா ?

 கணவன், மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் உணர்ச்சியின் காரணமாக இச்சை நீர் வெளிப்பட்டால் அதற்காகக் குளிக்க வேண்டுமா? அல்லது உளூச் செய்தால் போதுமா? உணர்ச்சியினால் ஏற்படும் இத்தகைய கசிவுக்கு அரபியில் மதீ என்று பெயர். மதீ வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டார். "அதற்காக உளூச் செய்வது தான் கடமை. (குளிக்க வேண்டிய அவசியமில்லை)'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: புகாரி 132, 178, 269 இந்த ஹதீஸின் படி மதீ என்ற இச்சை நீர் வெளிப்பட்டால் குளிக்கத் தேவையில்லை. உளூச் செய்வது போதுமானதாகு...

உளூச் செய்து விட்டு சினிமா பாடல்கள் படித்தால் உளூ முறிந்து விடுமா ?

 என் நண்பர் ஒருவர் உளூச் செய்து விட்டு, சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்டு விட்டு மீண்டும் உளூச் செய்யாமல் தொழுகின்றார். கேட்டால் இதற்குத் தடையில்லை என்று கூறுகின்றார். இப்படிச் செய்தால் உளூ கூடுமா? சினிமாப் பாடல்களைக் கேட்பது தவறு என்பதில் சந்தேகமில்லை. உளூவுடனோ, உளூ இல்லாமலோ எந்த நிலையிலும் சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்பது பாவம் தான். ஆனால் அதே சமயம் அதனால் உளூ முறியும் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், காற்றுப் பிரிதல், தூக்கம், மதீ வெளிப்படுதல் என உளூவை முறிக்கும் காரியங்கள் என்னென்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒரு தீமையைச் செய்தால் உளூ நீங்கி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்...

அழகுக்காக மொட்டை யடித்துக் கொள்ளலாமா? அழகுக்காக தலையில் கறுப்பு அல்லாத வேறு கலர் சாயம் பூசிக் கொள்ளலாமா?

 அழகுக்காக மொட்டை யடித்துக் கொள்ளலாமா? அழகுக்காக தலையில் கறுப்பு அல்லாத வேறு கலர் சாயம் பூசிக் கொள்ளலாமா? ஜே. அப்துல் அலீம் அய்யம்பேட்டை தலையில் கறுப்பு அல்லாத சாயம் பூசுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். குறிப்பாக தலை நரைத்தவர்கள் கறுப்பு அல்லாத சாயம் பூசுவதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். யூதர்களும் கிறித்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலை முடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3462 மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா அழைத்து வரப்பட்டார். அவரது தலையும், தாடியும் வெண்மையாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை எதையேனும் கொண்டு மாற்றி விடுங்கள். கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்...

ரப்பு என்ற வார்த்தையை முதலாளியை அழைக்கும் போது சொல்லலாமா ?

 அரபு நாடுகளில்  முதலாளிகளை அர்பாப் என்று அழைக்கின்றார்கள்.  3:64 வசனத்தில் அர்பாப் என்ற சொல்லை இறைவனுக்குப் பயன்படுத்துகின்றான். எனவே மனிதர்களை அர்பாப் என்று அழைக்கலாமா? கதீஜா ஜெஸ்மின், துபை அர்பாப் என்பது ரப் என்பதன் பன்மையாகும். ரப் என்ற வார்த்தைக்கு பரிபாலிப்பவன், எஜமானன், தலைவன் என்று பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. ரப் என்ற வார்த்தையை அல்லாஹ் தனக்குப் பயன்படுத்தியிருப்பது போலவே மனிதர்களுக்கும் பயன்படுத்தியுள்ளான். என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப் படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 12:41) இந்த வசனத்தில் எஜமானனுக்கு என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் ரப் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலாளிகளை...

குழந்தைகளின் மலஜலம் நஜீஸாகுமா?

 சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 222 அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மடியில் இருக்கும் போது, அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள்.  "வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையைக் கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். "பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும்.  ஆண் குழந்தையின் சிறுநீருக்காக...

ஓரே சமூதாயத்திற்கு மூன்று தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் சொல்லுகிறானே அந்த மூன்று நபர்கள் பெயர் என்ன ?

 36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர் அவர்கள் இதை மறுக்கின்றார்கள். எனவே இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளனவா? கே. அப்துர்ரஹ்மான், புதுக் கல்லூரி, சென்னை ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 36:13,14) இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்ற குறிப்பு குர்ஆனில் வேறு எங்கும் காணப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது...

உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் சிலர் குர்ஆனை ஓதும் போது சில உச்சரிப்புகளை மாற்றி ஓதுகிறார்களே இது சரியா ? ? நாங்கள் உருதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாங்கள் அரபி ஓதும் பொழுது,  ஹ  ங்  ந  ஆகிய மூன்று எழுத்துக்களையும்              ழ உச்சரிப்பில் ஓதி வருகின்றோம். இவ்வாறு ஓதுவது சரியா? ஏ. பல்கீஸ் பானு, அஷ்ரபுத்தீன், பண்டாரவாடை  குர்ஆன் வசனங்களை ஓதும் போது வார்த்தை, உச்சரிப்பு போன்றவற்றை இயன்ற வரை சரியாக ஓத வேண்டும். திருக்குர்ஆனும் இதையே வலியுறுத்துகின்றது. குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73:4) பொதுவாகவே உருது பேசும் மக்களிடம் நீங்கள் குறிப்பிடுவது போன்று அரபு எழுத்துக்களை உச்சரிக்கும் வழக்கம் உள்ளது. அரபு மொழியின் உச்சரிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அரபு மக்கள் எப்படி அந்த...

மீக்காயீல் என்ற மலக்கைப் பற்றி விளக்கவும் ?

 அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயிலுக்கும் யார் எதிரியாக இருக்கின்றார்களோ அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான் என்று அல்குர்ஆன் 2:98 வசனத்தில், வானவர்கள் என்று கூறி விட்டு பின்பு ஜிப்ரீல், மீகாயீல் என்று  அல்லாஹ் தனியாகக் குறிப்பிடுகின்றான். ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? ஜிப்ரீலைப் பற்றி தெரியும். மீகாயீலைப் பற்றி விளக்கவும். எம். திவான் பஜிரா, பெரியகுளம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார். பிறகு, "1. இறுதி நாளின் அடையாளங்களில்...

உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் 64:16 வசனத்தில் உள்ளதே இதன் விளக்கம் என்ன ?

 திருக்குர்ஆனின் 64:16 வசனத்தில் உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். சிறு சிறு பாவங்கள் செய்பவர்கள் இதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வே இயன்ற வரை தான் இறையச்சத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகின்றான் என்று கூறலாம் அல்லவா? இதற்கு விளக்கம் என்ன? நாஸர் இப்னு இப்ராஹீம், கோவை உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல்வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 64:16) இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்பதற்கு இயலாவிட்டால் பாவங்கள் செய்யலாம் என்று பொருளல்ல. பாவங்கள் செய்வதற்கு இயலாமையைக் காரணம் காட்ட முடியாது. என்னால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை; அதனால் நான் மது அருந்தி விட்டேன் என்று யாரும் கூற முடியாது. நமக்குக் கட்டளையிடப்பட்ட...

இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு பால் புகட்டுவது கட்டாயமா ? இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பால் புகட்டுவது ஹராமா ?

 குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை முழுமையாக பாலூட்டும் படி இறைவன் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். அப்படியானால் இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா? இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பாலூட்டுவது ஹராமாகுமா? பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம் குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 2:233 மற்றும் 31:14 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது என்று எந்த நிபந்தனையும் இல்லை. பிறந்த குழந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று கொடுத்துள்ளார்கள். நான் (எனது மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை (மக்காவில்) கருவுற்றிருந்தேன். கர்ப்பக் காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டு மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு...

சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் தான் பிரகாசமா ? தமிழில் படிப்பவருக்குக் கிடையாதா ?

 சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் அவருக்கு அடுத்த ஜும்ஆ வரை பிரகாசம் நீடிக்கின்றது என்று ஹதீஸ் உள்ளது. பிரகாசம் என்றால் ஒளி என்று அறிவோம். இதன் நன்மைகள் என்ன? அரபியில் ஓதினால் தான் இந்த நன்மைகளை அடைய முடியுமா? தமிழில் படித்தாலும் நன்மை கிடைக்குமா? விளக்கம் தரவும். ஏ. மாலிக், கோவை. ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாகிம் இந்த ஹதீஸில் பிரகாசம் நீடிக்கின்றது என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதன் நன்மைகள் என்ன என்று இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ விளக்கம் கூறவில்லை.  நபி (ஸல்) அவர்கள் நன்மை எதையும் வரையறுத்துச் சொல்லாத ஒன்றுக்கு நாம் வரையறுக்க முடியாது. பொதுவாக குர்ஆன் ஹதீஸில் பிரகாசம், ஒளி போன்ற வார்த்தைகள்...

குர்ஆனை அரபியில் ஓதினால் மட்டும்தான் பத்து நன்மைகள் அதிகமா ? இது மொழி வேற்றுமையை உருவாக்கவில்லையா ?

 இஸ்லாத்தில் மொழி, நிறம் போன்றவற்றிற்கு எந்த மகத்துவமும் இல்லை. ஆனால் குர்ஆனை அரபியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்கிறார்கள். மற்றபடி அவரவர் தாய்மொழியில் ஓதினால் நன்மைகள் இல்லை என்கிறார்கள். இது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும். அல்லாஹ்வுடைய எழுத்தில் ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்து; லாம் என்பது ஒரு எழுத்து; மீம் என்பது ஒரு எழுத்து என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதீ 2835 இந்த ஹதீஸின்படி குர்ஆனை அதன் மூல மொழியான அரபு மொழியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் நமது தாய்மொழியில் குர்ஆனின்...

குர்ஆனை அரபியில் ஓதினால் மட்டும்தான் பத்து நன்மைகள் அதிகமா ? இது மொழி வேற்றுமையை உருவாக்கவில்லையா ?

 இஸ்லாத்தில் மொழி, நிறம் போன்றவற்றிற்கு எந்த மகத்துவமும் இல்லை. ஆனால் குர்ஆனை அரபியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்கிறார்கள். மற்றபடி அவரவர் தாய்மொழியில் ஓதினால் நன்மைகள் இல்லை என்கிறார்கள். இது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும். சாதிக்கா முஹம்மது, முரார்பாத் அல்லாஹ்வுடைய எழுத்தில் ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்து; லாம் என்பது ஒரு எழுத்து; மீம் என்பது ஒரு எழுத்து என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதீ 2835 இந்த ஹதீஸின்படி குர்ஆனை அதன் மூல மொழியான அரபு மொழியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால்...

குர்ஆன் ஹதீஸ் இல்லாமல் தனது சொந்த ஆய்வின் படி தீர்ப்புச் சொல்வது கூடும் என்று ஹதீஸில் உள்ளதே . அப்படியெனில் மத்ஹபுகளும் கூடும்தானே ?

 நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பும் போது, முஆத் (ரலி), குர்ஆன் மற்றும் ஹதீஸில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் எனது சிந்தனையைக் கொண்டு முடிவு எடுப்பேன் என்று கூறுகின்றார்கள். இதை நபி (ஸல்) அவர்களும் அனுமதிக்கின்றார்கள். இதைத் தான் மத்ஹபுவாதிகள் எடுத்துக் கொண்டு மத்ஹபுச் சட்டங்களை இயற்றலாம் என்று கூறுகின்றார்கள். இதற்கு விளக்கம் என்ன? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஜ்திஹாத் (ஆய்வு) செய்து தீர்ப்பளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த ஹதீஸில் குர்ஆன் ஹதீஸ் இல்லாமல் சொந்தமாக மார்க்க விஷயத்தில் தீர்ப்பளிக்கலாம் என்ற கருத்தில் உள்ளது. இந்த ஹதீஸ் பல்வேறு நூற்களில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான ஹதீஸாகும். நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான்...

சூனியம் என்பது இப்போது இருக்கும் கண்கட்டி வித்தையைப் போன்றதா? அல்லது தாயத்து தகடு போன்றவற்றில் மந்திரித்து வைப்பது போன்றதா?

மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர். இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ உலகில் எந்த வித்தையும் கிடையாது.தாயத்து, தகடு போன்றவற்றால் கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துப் பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு...

பள்ளிவாசலில் வியாபாரம் செய்யலாமா ?

 பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதற்குத் தடை உள்ளது. (புலூகுல் மராம்) ஆனால் மார்க்கப் புத்தகங்களையும், தொப்பி, அத்தர் போன்றவற்றையும் பள்ளிவாசலில் விற்கின்றார்கள். இது கூடுமா? கே. முஹம்மது ஜாஃபர், செங்கோட்டை பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், "அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமில்லாமல் ஆக்கட்டும்'' என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 1242 இந்த ஹதீஸின் படி பள்ளிவாசலில் எந்தப் பொருளையும் விற்பதோ வாங்குவதோ கூடாது. மார்க்கப் புத்தகங்களானாலும் பள்ளிக்கு வெளியில் தான் விற்க வேண்டு...

அல்லாஹ் அக்பர் என்று சப்தமிட்டு வார்த்தைகளைச் சொல்லலாமா ?

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க விரும்புகின்றீர்களா? என்று கேட்ட போது நாங்கள் அல்லாஹு அக்பர் என்று சப்தமாகக் கூறினோம் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. பெருநாள் தினத்திலும் மற்ற சந்தோஷமான வார்த்தைகளைக் கேட்கும் போதும் அல்லாஹு அக்பர் என்று சப்தமாகக் கூறுவதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றார்களே! இந்த ஹதீஸின் அடிப்படையில் இவ்வாறு செயல்படலாமா? ஈ. இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர் நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் புகாரியிலும் இடம் பெற்றுள்ளது. "என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் "அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்று கூறினோம். உடனே அவர்கள், "சொர்க்கவாசிகளில்...

மூன்று சிசுக்கள் தொடர்ச்சியாக இறந்து விட்டால் பெற்ற தாய்க்கு சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பிறந்த சிசு இறந்தாலும் சொர்க்கமா? விளக்கவும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உரைகளை (பெண்கள் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயித்து விடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே பெண்கள் ஒன்று திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து போதித்தார்கள். பிறகு, "உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வரும்) முன்பாக தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே!...

இறைவனை நபியவர்கள் எட்டாவது வானத்திற்குச் சென்று பார்த்தார்களா ?

 பார்வைகள் இறைவனை அடையாது என்று குர்ஆன் வசனம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது 7 வானத்திற்கு அப்பால் ஜிப்ரீல் செல்ல முடியாமல் 8வது வானத்திற்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று இறைவனைப் பார்த்ததாக எங்கள் பள்ளியில் ஒருவர் பிரச்சாரம் செய்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? விளக்கம் தரவும். அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. அல்லாஹ்வை எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:103) முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான்....

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை முபாஹலா செய்வதற்கு அழைக்கலாமா?

இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு முரண்பாடான இரண்டு கருத்துக்களைக் கூறுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவருமே தாங்கள் கூறுவது தான் உண்மை என்று வாதிக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் தங்கள் கூற்றுக்கு உரிய ஆதாரத்துடன் நேரடியாக விவாதிப்பதன் மூலம் எது உண்மை என்பதை நிரூபிக்கலாம். இதற்கு வழியில்லாத பட்சத்தில் இரு தரப்பினரும் தங்கள் குடும்பத்துடன் ஒரு சபையில் வந்து, தங்கள் கருத்தைக் கூறி, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முபாஹலா என்று பெயர். உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்''...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites