மலிவு விலை உணவகம் இன்று திறப்பு
சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் 15 இடத்தில் அமைக்கப்படும் உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில், மாநகராட்சி மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் அறிவித்தார். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒரு உணவகம் என்ற வீதத்தில் 15உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் இன்று திறக்கப்படு கிறது.
சாந்தோம் பத்திரப்பதிவு துறை தலைவர் அலுவலகம் அருகில் மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள உணவு கூடத்தை முதல்வர் ஜெயலலிதா மதியம் 12 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
மலிவு விலை உணவகத்தில் ஒரு இட்லி (100 கிராம்) ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் (350 கிராம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் (350 கிராம்) 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இட்லி கிடைக்கும். மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தயிர் சாதம், சாம்பார் சாதம் கிடைக்கும். வாரத்தின் 7நாட்களும் இந்த உணவு கூடங்கள் திறந்திருக்கும். உணவு கூடத்தில் அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் 10 முதல் 12 பேர் பணியாற்றுவார்கள்.
உணவுக்கூடங்கள் இருக்கும் இடங்கள்
1. மாநகராட்சி வணிக வளாகம் திருவொற்றியூர்
2. மாநகராட்சி கட்டிடம் மாத்தூர்
3. சமூக நல கூடம் சூரப்பட்டு
4. மாநகராட்சி கட்டிடம் பழைய வண்ணாரப்பேட்டை
5. மாநகராட்சி கட்டிடம் பிராட்வே.
6. பழைய மண்டல அலுவலகம் புளியந்தோப்பு
7. மாநகராட்சி கட்டிடம் ஓரகடம்
8. பழைய மண்டல அலுவலகம் கீழ்ப்பாக்கம்
9. மாநகராட்சி கட்டிடம் சாந்தோம்
10. மாநகராட்சி கட்டிடம் தியாகராயநகர்
11. மாநகராட்சி கட்டிடம் மதுரவாயல்
12. மாநகராட்சி கட்டிடம் நங்கநல்லூர்
13. மாநகராட்சி கட்டிடம் திருவான்மியூர்
14. வணிக வளாகம் பெருங்குடி
15. தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம் துரைப்பாக்கம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக