யுக முடிவு நாள் சூர் ஊதப் படும் நாள் தீர்ப்பு நாள் மறுமை மறுவுலகம் ஒன்று திரட்டப்படும் நாள் இன்னும் இது போன்ற பல சொற்களால் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றி இறைவன் பல இடங்களில் கூறுகிறான் 3 :114, 2 : 281, 55 : 26, 27
இது விஷயத்தில் மரணத்திற்கு பின் உள்ள அனைத்தின் மீதும் ஈமான் கொள்வது இறுதி நாளை நம்புவதன் மீது அடங்கும்
1, மண்ணறையில் வேதனை, இவ்வுலகில் வாழ்ந்த அநியாயக்காரர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் தீயோர்களுக்கும் மண்ணறையில் வேதனை உண்டு என பல நபி பொழிகள் கூறுகின்றனர். இதனை குர்ஆனும் கூறுகிறது. 40 : 46
இவ்வசனத்தில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் காலையிலும் மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்று கூறுவதிலிருந்தே நரக வேதனைக்கு முன்னால் மற்றொரு வேதனை உண்டு என்பதை உணர்த்துகிறது அது தான் கப்ரு வேதனை இதனை பின்வரும் வசனமும் தெளிவுப்படுத்துகிறது 6 : 93
2, உயிர்பித்து எழப்பப்படுதல்,
ஒரு மனிதன் இறந்து மண்ணறையில் வைக்கப்பட்டு பிறகு இறுதி நாளில் அவன் உயிர்பிக்கப்படுவான் முதல் சூர் ஊதப்பட்டு இரண்டாவது சூர் ஊதப்படும் போது உயிர்பித்து எழப்பப்படுவார்கள் என்று இறைவன் கூறுகிறான். 39 : 68
இதன் பிறகு எல்லோரும் எழப்பப்படுவார்கள். எல்லோரையும் இறைவன் மீட்டிக் கொண்டு வருவான். 21 : 104, 23 : 16
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமையில் மனிதர்கள் நிர்வாணமாகவும் செருப்பணியாமலும் விருத்த சேதணம் (கத்னா) செய்யாமலும் எழப்பப்படுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி, முஸ்லிம்
3, விசாரனையிம் கூலி கொடுப்பதும்
88 : 25, 26, 6 : 160, 21 : 47
0 கருத்துகள்:
கருத்துரையிடுக