அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

10-பாங்கு - C


பாடம் : 111
(சப்தமாக ஓதும் தொழுகையில்) இமாம் (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிய பின்) உரத்த
குரலில் ஆமீன்' கூறுவது.
ஆமீன்' என்பது பிரார்த்தனையாகும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களும் அவர்களைப் பின் பற்றித் தொழுவோரும் பள்ளி
வாசலில் பேரொ- எழும் அளவுக்கு (உரத்த குரலில்) ஆமீன்' கூறினர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தலைமைத் தாங்கித் தொழுவிப்பவரை அழைத்து, ஆமீன் கூறும் வாய்ப்பை எனக்குத் தவறும்படி செய்து விடாதீர் என்று கூறுவார்கள்.
நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆமீன்' கூறாமல் இருக்க மாட்டார்கள்; (ஆமீன் கூறும்படி) மக்களுக்கு ஆர்வமுட்டுவார்கள். ஆமீன் கூறுவதில் நிறைய நன்மை இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
780 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள்.ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)து டன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (அவர்களின் மற்றோர் அறிவிப்பில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
பாடம் : 112
ஆமீன் கூறுவதன் சிறப்பு.
781 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஆமீன்' என்று கூற, விண்ணுலகில் வானவர்களும் ஆமீன் கூற, ஆக இருசாராரின் ஆமீன் கூறலும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால் அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 113
பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) ஆமீன் கூறுவது.
782 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள், ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்லுங்கள். ஏனெனில் எவர் ஆமீன்' கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன்' கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 114
தொழுகை வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டால்... (தொழுகை நிறைவேறுமா?)
783 அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்
-ரலி) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர் என்று கூறினார்கள்
பாடம் : 115
ருகூஉவின் போது தக்பீரை முழுமையாகக் கூறுவது.
இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (818ஆவது) ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும்.
784 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பஸ்ரா நகரில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். (தொழுது முடித்த பின் அலீ (ரலி) அவர்களைச் சுட்டிக் காட்டி) இந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவூட்டு(ம் வகையில் தொழுவிக்)கிறார் என்று இம்ரான் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் நிமிரும் போதும் தாழும் போதும் தக்பீர் கூறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.
785 அபூசலமா (பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவிக்கும் போது குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்த பின், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போன்றே தொழுவிக்கிறேன் என்று குறிப்பிடுவார்கள்.
பாடம் : 116
சஜ்தாவின்போதும் தக்பீரை முழுமையாகக் கூறுவது.
786 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீ தா-ப் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்யும் போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள். தொழுகை முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு,
இவர் எனக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை நினைவூட்டினார்' அல்லது முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுத முறைப்படி நமக்குத் தொழுவித்தார்' என்று கூறினார்கள்.
787 ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையானன இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இறையில்லம் கஅபா அருகிலுள்ள) மகாமு இப்ராஹீம்' அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஒவ்வொரு குனி விலும் நிமிர்விலும் எழும் போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். (விளக்கம் கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள், தாயற்றுப்போவாய்! அது நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை போன்று இல்லையா? என்று கூறினார்கள்.
(குறிப்பு: பொருள் கருதாமல் தாயற்றுப் போவாய்', தந்தையற்றுப் போவாய்' என்று கூறும் வழக்கு முந்தைய அரபுகளிடையே இருந்தது என்பதைக் கவனத்தில்கொள்க!)
பாடம் : 117
சஜ்தாவிலிருந்து எழும் போது தக்பீர் கூறுவது.
788 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப் பின்னால் (லுஹ்ர் தொழுகை)தொழுதேன். (அத் தொழுகையில்) அவர், இருபத்தி இரண்டு தக்பீர்கள் கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், அவர் ஓர் அறிவி-' என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உன்தாய் உன்னை இழக்கட்டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைதான் என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
789 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகச் சென்றால் நிலையில் நின்று தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉச் செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தமது முதுகை உயர்த்தும் போது சமி அல்லாஹு -மன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறுவார்கள். பிறகு நிலையில் நின்றவாறு ரப்பனா ல(க்)கல் ஹம்து' (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்பார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ரப்பனா வல(க்) கல் ஹம்து' என்று இடம்பெற்றுள்ளது.-
பின்னர் (சஜ்தாவுக்காகக்) குனியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (அந்த சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் வரை தொழுகையின் எல்லா ரக்அத் களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து (அத்தஹிய்யாத் முதல்) இருப்பை முடித்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.
பாடம் : 118
ருகூஉவின் போது உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைப்பது.
பூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ
-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்) நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்)கைகளை முழங் கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
790 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டி ருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம் என்று கூறினார்கள்.
பாடம் : 119
ருகூவைப் பூரணமாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் குற்றம்).
791 ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் (முறைப்படி) முழுமையாக்காத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), நீர் தொழவே இல்லை (இந்த நிலையில்) நீர் இறந்துவிட்டால் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமானதிலேயே இறக்கிறீர் என்று கூறினார்கள்.
பாடம் : 120
ருகூவில் முதுகைச் சமமாக வைப்பது.
அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்), நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக) சாய்த்தார்கள் என்று கூறியுள்ளார்கள்.
(குறிப்பு: காண்க: பின் வரும் ஹதீஸ்-828)
பாடம் : 121
ருகூஉவைப் பூரணமாக்குதல், (அதில்) நிலைகொள்ளுதல், (ஆடாமல் அசையாமல்) நிதானித்தல் ஆகியவற்றிற்குரிய வரம்பு.
792 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ளதொழுகையில் நபி (ஸல்) அவர்களதுன நிலைநிற்றல், (அத்தஹிய்யாத்) இருப்பு ஆகியவை நீங்கலாக அவர்களது ருகூஉ, அவர்களது சஜ்தா, இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளி, ருகூஉவிலிருந்து அவர்கள் நிமிர்ந்தால் (நிலை கொள்ளும் நேரம்), ஆகிய அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன.
பாடம் 122
ருகூஉவை முழுமைப்படுத்தாத ஒருவரை திரும்பத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தது.
793 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் வந்து (ருகூஉ சஜ்தா ஆகியவற்றை முழுமையாக்காமல்) தொழுதார். பிறகு அவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் (சலாம்) சொல்லிவிட்டு, திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். அந்த மனிதர் (திரும்பிச் சென்று முன்போன்றே அவசர அவசரமாக) தொழுதுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், சத்திய (மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிட அழகாக எனக்குத் (தொழத்) தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத் தாருங்கள்! என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும் (அல்லாஹு அக்பர் எனத்) தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉவில் (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு (ஆற அமர நிதானத்துடன்) ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் (மீண்டும்) சிரவணக்கம் செய்வீராக! பிறகு இதையே (இதே வழிமுறையையே) உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!
பாடம் : 23
ருகூவில் பிரார்த்திப்பது.
794 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்ஹானக்கல்லா ஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ (இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.
பாடம் : 124
ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் (தொழுவிக்கும்) இமாமும் அவரைப் பின் பற்றித் தொழுவோரும் கூற வேண்டியவை.
795 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' எனக் கூறிய பின் அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யும் போதும் (ருகூஉவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போதும் (அல்லாஹு அக்பர் எனத்) தக்பீர் கூறுவார்கள். இரண்டு சஜ்தாக்களை முடித்து (நிலைக்கு) எழும் போது அல்லாஹு அக்பர் என்று (தக்பீர்) கூறுவார்கள்.
பாடம் : 125
அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து' என்று கூறுவதன் சிறப்பு.
796 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் (தொழுகையில்) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து ' (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்துஅமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 126
797 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர் , இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் (மக்காவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த) இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
798 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆரம்ப காலத்தில்) குனூத் (எனும் சிறப்புப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலுமே (நடைமுறையில்) இருந்தது.
799 ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய போது சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ ளஎங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்ன என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், (தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான்தான் என்றார். முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என (த் தமக்கிடையே) போட்டியிட்டுக்கொள்வதை நான் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 127
ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி, நிதானத்துடன் நிலைகொள்வது.
நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தி (தமது) ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமர்ந்து நிற்பார்கள் என அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ -ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(குறிப்பு: விவரம் அறியக் காண்க: ஹதீஸ்எண்-828)
800 ஸாபித் (அல்புனானீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுத முறையை விவரிக்கும் முகமாக தொழுது காட்டுவார்கள். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் (தாம் தொழுகையில் இருக்கிறோம் என்பதையே) அவர்கள் மறந்துவிட்டார்கள்' என்று நாங்கும் சொல்லும் அளவுக்கு (நிலை கொண்டு) நிற்பார்கள்.
801 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது ருகூஉவும், சஜ்தாவும், ருகூஉவிலிருந்து அவர்கள் எழுந்தா(ல் நிலை கொள்ளுத)லும், இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.
802 அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழுவார்கள் என எங்களுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் (தொழுது) காட்டினார்கள். இ(வ்வாறு அவர்கள் செய்து காட்டிய)து எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை.
அப்போது அவர்கள் நிலையில் (நன்கு) நிலை கொண்டு நின்றார்கள். பின்னர் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் நின்றார்கள். அப்போது அவர்கள் இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அபூபுரைத் (ரஹ்) அவர்கள் தொழுவது போன்று எங்களுக்குத் தொழுதுகாட்டினார்கள்.
தொடர்ந்து அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூபுரைத் (அம்ர் பின் சலமா-ரஹ்) அவர்கள் (தொழுகையின் இரண்டாம்) சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போது (சற்று நேரம்) நேராக அமர்ந்திருப்பார். பிறகுதான் எழுவார்.
பாடம் : 128
சஜ்தாச் செய்யும் போது தக்பீர் கூறியவாறே குனிய வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் (சஜ்தாவிற்குச் செல்லும் போது) முழங்கால்களைத் தரையில் வைப்பதற்கு முன் தம் (உள்ளங்)கைகளை வைப்பார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
803 அபூபக்ர் பின் அப்திர்ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்), அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
(மதீனாவின் ஆளுநராயிருந்த போது) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கடமையானத் தொழுகைகளிலும் அஃதல்லாத (உபரித்) தொழுகைகளிலும் ரமளான் மாதத்திலும் ரமளான் அல்லாத மாதத்திலும் ஒவ்வொரு தொழுகையிலும் தக்பீர்'கூறுவார்கள்.
இந்த வகையில், தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தாச் செய்வதற்கு முன் (நிலை கொண்டு நின்று) ரப்பனா வல(க்)கல் ஹம்து' (எங்கள் இறைவா! உனக்கே புகழனைத்தும் உரியது) என்று கூறுவார்கள். பின்னர் சஜ்தாவுக்காகக் குனியும் போது அல்லாஹு அக்பர்' என்று (தக்பீர்) கூறுவார்கள். பிறகு சஜ்தாவிலிருந்து (சிறு இருப்பிற்காக) தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் (இரண்டாம்) சஜ்தா செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள்.
பின்னர் இரண்டாம் ரக்அத்தில் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமர்ந்துவிட்டு (மூன்றாம் ரக்அத்திற்காக) எழும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும்வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்வார்கள். தொழுகை முடிந்ததும், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவது போன்றே உங்களுக்கு நான் தொழுவிக்கிறேன். இவ்வுலகைப் பிரியும் வரை இதுவே நபி (ஸல்) அவர்களின் தொழுகை யாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள்.
804 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும் போது சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறியபின் சில மனிதர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களு(டைய நலனு)க்காக பிரார்த் திப்பார்கள். அப்போது இறைவா! வலீத் பின் வலீத், சலமா பின் ஹிஷாம் மற்றும் அய்யாஷ் பின் அபீரபிஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் (இவர்களுக்கும்) அளிப்பா யாக! என்று பிரார்த்திப்பார்கள்.
(மதீனாவுக்கு) கிழக்கில் வாழ்ந்த முளர் குலத்தார் அன்று நபி (ஸல்) அவர்களுக்கு எதிரி களாய் இருந்தனர்.
805 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்த) குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது வலது (கணைக்கால்/தோள்பட்டை)ப் பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. இதையொட்டி நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். நாங்களும் அமர்ந்து கொண்டோம் -சுஃப்யான் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் நாங்கள் அமர்ந்தவாறே தொழுதோம்' என்று இடம்பெற்றுள்ளது.- அவர்கள் தொழுகையை முடித்ததும் பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால் நீங்களும் ரப்பனா வல(க்)கல் ஹம்து' (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள்; அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்களிடம், இவ்வாறுதான் மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்களா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (இவ்வாறே அறிவித்தார்கள்) என்று பதிலளித்தார்கள்.
உறுதியாக மஅமர் (ஸுஹ்ரீ ளரஹ்ன அவர்களிடமிருந்து இதை) (நன்கு) மனனமிட்டார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் (ருகூஉவிலிருந்து எழும் போது கூறவேண்டிய துதிச் சொல்லை) வல(க்)கல் ஹம்து' என்றே அறிவித்தார்கள்.
மேலும் (நபி ளஸல்ன அவர்களுக்கு சிராய்ப்பு ஏற்பட்டது தொடர்பாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிட மிருந்து) நபி (ஸல்) அவர்களின் வலப் பாகத்தில் (சிராய்ப்பு ஏற்பட்டது) என்றே நான் மனனமிட் டேன். நாங்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றபோது இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள், நான் ஸுஹ்ரீ அவர்களுக்கு அருகில் இருந்தேன் நபி (ஸல்) அவர்களது வலது கணைக்காலில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது' என்றே அறிவித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள்
பாடம் : 129
சஜ்தாவின் சிறப்பு.
806 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (நபி ளஸல்ன அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்), அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், இல்லை என்று பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:
மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது (உலகத்தில்)யார் எதனை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும் என்பான் (இறவைன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான சாத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்களிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும். அப்போது வ-வும் மான்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நான் உங்கள் இறைவன் என்பான். உடனே அவர்கள் எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம் என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நானே உங்கள் இறைவன் என்பான். அப்போது அவர்கள், நீ எங்கள் இறைவன்தான் என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறுயாரும் பேச மாட்டார்கள். அன்றைய தினத்தில் இறைவா! காப்பாற்று! காப்பாற்று!' என்பதே இறைத்தூதர்களின் பிரார்த்தனையாகும். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) சஅதான்' செடியின் முள்ளைப் போன்றிருக்கும் என்று கூறிவிட்டு, சஅதான்' செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்(பார்த்திருக் கிறோம்) என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள் அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக் கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர் களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடு மாறிய பின் தப்புபவர்களும் உண்டு.
இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்களிடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளி யேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர் களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள் .சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங் களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும். இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்.
பின்னர் அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான். இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. என்று கூறுவான். அப்போது அல்லாஹ், (உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப் பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்) என்பான். அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக் கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன், முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது! என்று கூறுவான். அதற்கு இறைவன், (நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா? என்பான். அம்மனிதன், இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பா யாக! என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே! என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! உன் படைப்பு களிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே! என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், நீ ஆசைப்படுவதைக் கேள்! என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும் போது (அவனிடம்) இறைவன், இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு! என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதனாகிய அல்லாஹ் உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு என்பான்.
இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம், உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு' என்றா அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடங்கும் உண்டு' என்றே இறைவன் கூறியதாகவே மனனமிட்டேன் என்றார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடங்கும் உண்டு' என்றே நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
பாடம் : 130
சஜ்தா செய்யும் போது புஜங்களை (விலாவுடன் சேர்க்காமல்) இடைவெளிவிட்டு வைக்கவேண்டும்; (தொடைகளைவிட்டும் வயிற்றைப்) பிரித்துவைக்க வேண்டும்.
807 அப்துல்லாஹ் பின் மா-க் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (சஜ்தாவில்) தமது இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு ஒரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.
இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.
பாடம் : 131
சஜ்தாவின் போது கால் விரல்களைக் கிப்லாவை நோக்கி வைப்பது.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-828)
பாடம் : 132
சஜ்தாவை பூரணமாக (நிதானத்துடன்) செய்யாவிட்டால் (ஏற்படும் கேடுகள்).
808 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (ஆற அமர முறைப்படி) முழுமையாக்காத
ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள், நீர் தொழவே இல்லை. (இந்த நிலையில்) நீர் இறந்துவிட்டால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதிலேயே இறந்தவராவீர் என்று கூறினார்கள்.
பாடம் : 133
ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிரவணக்கம் (சஜ்தா) செய்தல்.
809 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நெற்றி, இரு(உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரண்டு கால் (நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் (இறைவனால்) கட்டளையிடப்பட்டார்கள். (சஜ்தாவில்) தலை முடியோ ஆடையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டார்கள்.
810 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்; ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
811 அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின் வருமாறு) அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்கு சென்று) நெற்றியைத் தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தம் முதுகை வளைக்க  மாட்டார்கள்.
பாடம் : 134
மூக்கு தரையில் படுமாறு சஜ்தாச் செய்தல்.
812 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெற்றி, இரு(உள்ளங்)கைகள், இரு முழங் கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும் போது) தமது மூக்கின் மீது தமது கையால் (மூக்கு உட்பட என்பதுபோல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 135
களிமண்ணில் சஜ்தாச் செய்யும் போதும் மூக்குத் தரையில் படுமாறு சஜ்தாச் செய்வது.
813 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக்கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக் கொண்டிருக்கலாமே! என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அவர்களிடம்) நான், லைலத்துல் கத்ர் (எனும் கண்ணியமிக்க இரவு)' பற்றி நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் இஃதிகாஃப்' இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் தேடக் கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது என்றார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் நடுப்பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது) என்று கூறினார்கள்.
ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:
யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்ட்டுவிட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் கூரை, பேரீச்ச மட்டையினால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக்கான அறிகுறி) எதையும் நாங்கள் காண வில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருக்கக் கண்டேன்.
பாடம் : 136
(தொழும் முன்) ஆடையை முடிச்சிட்டுக் கொள்வதும், அதை இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும், (தொழுது கொண்டிருக்கும் போது ஆடை நழுவி) மறைக்க வேண்டிய உறுப்புக்கள் வெளியில் தெரிந்துவிடும் என அஞ்சினால் தொழுகையிலேயே ஆடையை அணைத்துப் பிடித்துக்கொள் வதும்.
814 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி ளஸல்ன அவர்கள் காலத்து) மக்கள் தங்கள் கீழாடை சிறியதாக இருந்தால் அதைத் தம் பிடரிகள் மீது முடிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். எனவேதான், ஆண்கள்' இருப்பில் நேராக அமராத வரை நீங்கள் உங்கள் தலையை (சஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம்' என பெண்களுக்குக் கூறப்பட்டிருந்தது.
பாடம் : 137
(சஜ்தாவின் போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது.
815 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். தமது ஆடையையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டார்கள்.
பாடம் : 138
தொழும் போது (தரையில் படாதவாறு) தமது ஆடையைப் பிடிக்கக் கூடாது.
816 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 139
சஜ்தாவில் துதிப்பதும் பிரார்த்திப்பதும்.
817 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஹ்ஃபிர்லீ' (இறைவா! எங்கள் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம். இறைவா எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.
பாடம் : 140
இரு சஜ்தாக்களுக்கு இடையே (இருப்பில் சிறிது நேரம்) நிலைகொள்வது.
818 அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தம் தோழர்களிடம், அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்.-அது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை.-
அவர்கள் (நிலையில்) நின்றார்கள். பின்னர் தக்பீர் கூறியவாறு ருகூஉச் செய்தார்கள். பிறகு தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் (நிலை கொண்டு) நின்றார்கள். பின்னர் (முதல்) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (நிலை கொண்டு) இருந்தார்கள். (சுருங்கச் சொன்னால்) இதே நம்முடைய இந்தப் பெரியவர் அம்ர் பின் சலமா (ரஹ்) அவர்கள் தொழுவது போன்றே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழுது காட்டினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அ(ந்தப் பெரிய)வர் (தொழும் போது) ஒரு முறையைக் கையாளுவார். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை என்னால் காணமுடியவில்லை. அவர் மூன்றாவது ரக்அத்தில் அல்லது நான்காவது ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டே எழுபவராக இருந்தார்.
819 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இளைஞர்களான) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும் போது) நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள்.
820 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, அவர்களுடைய இரு சஜ்தாக்களுக்கு இடையிலான அமர்வு ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன.
821 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்று நான் உங்களுக் குத் தொழுவிப்பதில் எந்தக் குறைவும் வைக்க மாட்டேன் என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்த போது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால் அதை நீங்கள் கடைப்பிடிப்பதைக் காணமுடியவில்லை. அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம் நிலை கொண்டு) நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்' என்று ஒருவர் கூற இடமுண்டு. இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் நிலை கொண்டிருப்பார்கள்). எந்த அளவிற்கென்றால் அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்' என்று ஒருவர் கூற இடமுண்டு.
பாடம் : 141
சஜ்தாவில் கைகளைப் பரப்பி வைக்கலாகாது.
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காமலும் சஜ்தாச் செய்தார்கள் என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) கூறியுள்ளார்கள்.
822 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் எவரும் நாய் பரப்பிவைப்பது போன்று தமது கைகளைப் பரப்பி வைக்கவேண்டாம்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 142
தொழுகையில் ஒற்றைப் படையான ரக்அத்களை முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டுப் பிறகு எழுவது.
823 மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தம் தொழுகையின் ஒற்றைப் படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழ மாட்டார்கள்.
பாடம் : 143
ஒரு ரக்அத்தை முடித்து அடுத்த ரக்அத்திற்காக எழும் போது பூமியில் கைகளை ஊன்றி எழ வேண்டுமா?
824 அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவிலிருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையானத்)தொழுகையை தொழுவிப்பது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக்கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம் என்று கூறிவிட்டு எங்களுடைய இப்பள்ளிவாசலில் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர் களிடம், மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலமா அவர்கள்-தொழுவது போன்றிருந்தது என்று பதிலளித்தார்கள்.
அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:
அந்தப் பெரியவர் தக்பீரை முழுமையாக்கு பவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக எழும் போது அமர்ந்து விட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி எழுவார்.
பாடம் : 144
இரண்டாம் சஜ்தாவிலிருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போது தக்பீர் கூறவேண்டும்.
இரண்டாம் சஜ்தாவிலிருந்து எழும் போது அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள்.
825 சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போதும் சஜ்தாச் செய்யும் போதும் (சஜ்தாவிலிருந்து தமது தலையை) உயர்த்தும் போதும் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள். (அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது) நபி (ஸல்) அவர்களை இவ்வாறே நான் (தொழக்)கண்டேன் என்று கூறினார்கள்.
826 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகையைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தாச் செய்யும் போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவிலிருந்து தலையை) உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுதது போன்று தொழுவித்தார்' அல்லது இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டினார் என்று கூறினார்கள்.
பாடம் : 145
அத்தஹிய்யாத் இருப்பில் அமரும் முறை.
உம்முத் தர்தா அஸ்ஸுஃக்ரா (ரஹ்) அவர்கள் தமது தொழுகையில் ஆண்கள் உட்காருவது போன்றே உட்காருவார்கள். அவர் மார்க்கச் சட்டங்களை நன்கு விளங்கிய பெண்மணியாக இருந்தார்கள்.
827 அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்ப்பேன். ஆகவே நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் சிறு வயதுடையவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாதென என்தைத் தடுத்துவிட்டு, தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால் உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து (படுக்க) வைப்பதாகும் என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் கால்கள் என்னைத் தாங்காது என்று பதிலளித்தார்கள்.
828 முஹம்மது பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும் போது தமது கைகளை தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉ (குனிவு) செய்யும் போது தம் கைகளை முழங்கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்த்தார்கள். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும் போது தம் ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தாச் செய்யும் போது அவர்கள் தமது கைகளைப் பரப்பி வைக்கவு மாட்டார்கள்; அவற்றை விலாவுடன் ஒடுக்கி வைக்கவும்  மாட்டார்கள்; தம் கால்விரல் முனைகளை கிப்லாவை நோக்கி வைப்பார்கள்.
இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக்காலை நட்டு வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது இடது காலை (குறுக்கு வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை நட்டு வைத்து தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 146
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டு மீண்டும் உட்காரவில்லை. ஆகவே, முதலாம் அத்தஹிய்யாத்' இருப்பு' கட்டாயம் அல்ல.
829 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை எங்களுக்கு லுஹ்ர் தொழுகைத் தொழுவித்துக் கொண்டிருந்த போது முந்திய இரு ரக்அத் முடிந்ததும் (அத்தஹிய்யாத் இருப்பில்) உட்காரமலேயே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டனர். தொழுகையை முடிக்கும் தருணத்தில் நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அமர்ந்தபடியே அவர்கள் தக்பீர் கூறினார்கள்; சலாம் கொடுப்பதற்கு முன் (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள்.
பாடம் : 147
முதல் அத்தஹிய்யாத்' இருப்பு.
830 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (முதலாம் அத்தஹிய்யாத்) இருப்பில் அமரவேண்டியதிருக்க, அவர்கள் அதில் அமராமலேயே எழுந்து விட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும் (சலாமுக்கு முன்) உட்கார்ந்தபடியே (மறதிக்குரிய) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
பாடம் : 148
கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்' ஓதுவது.
831 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழும் போது அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, வ மீக்காயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலான் வஃபுலான்' (ஜிப்ரீல் மீதும் மீக்காயீல் மீதும் சலாம் உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார் மீதும் சலாம் உண்டாகட்டும்)
என்று கூறுபவர்களாக இருந்தோம். (தொழுகை முடிந்ததும்) எங்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி, நிச்சயமாக அல்லாஹ்தான் ஸலாம்' ஆக இருக்கிறான். உங்களில் ஒருவர் தொழு(கையின் இருப்பில் இருக்கு)ம் போது,
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக் காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா, வஅலா இபாதில்லாஹிஸ் ஸா-ஹீன் ள(சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சலாமும் அல்லாஹ் வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர் மீதும் சலாம் உண்டாகட்டும்ன என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' ளஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்ன என்றும் கூறட்டும் என்றார்கள்.
பாடம் : 149
சலாம் கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய பிரார்த்தனை.
832 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது, அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜா-, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்' ளஇறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜா-ன் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகப்புத்தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்ன என்று கூறுவார்கள்.
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.
833 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜா-ன் குழப்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன்.
834 அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம் ளஇறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய்ன என்று கூறுங்கள்! என்றார்கள்.
பாடம் : 150
அத்தஹிய்யாத்துக்குப் பின் (சலாம் கொடுப் பதற்கு முன்) விரும்பிய பிரார்த்தனை செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள் ளது. அது கட்டாயம் கிடையாது.
835 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வஃபுலான்' (அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும்) என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டும்' என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் ஸலாம்' ஆக இருக்கிறான். மாறாக, (சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சலாமும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர் மீதும் சலாம் உண்டாகட்டும்' எனக் கூறுங்கள். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்' என்றும் கூறட்டும் இதன் பிறகு உங்களுக்கு பிடித்தமான பிரார்த்தனையை தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள்.
பாடம் : 151
தொழுது முடிக்கும்வரை நெற்றி, மூக்கு ஆகியவற்றில் படிந்தவற்றைத் துடைக்காமலிருப்பது.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தொழும் போது நெற்றியைத் துடைக்கலாகாது என்று ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர்-ரஹ்) அவர்கள் கூறக் கண்டேன்.
836 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதை நான் கண்டேன். அவர்களது நெற்றில் களிமண் படிந்திருந்ததையும் நான் கண்டேன்.
பாடம் : 152
(தொழுகை முடிவில்) சலாம் கொடுப்பது.
837 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப் பார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகை யில், அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவ தற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன் என்றார்கள்.
பாடம் : 153
இமாம் சலாம் கொடுக்கும்போதே (பின்பற்றித் தொழுபவர்களும்) சலாம் கொடுப்பது.
இமாம் சலாம் கொடுக்கும்போதே (அவரைப் பின்பற்றி) பின்னால் தொழுவோரும் சலாம் கொடுப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் விரும்பக் கூடியவர்களாய் இருந்தார்கள்.
838 இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவோம். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுக்கும் போது நாங்களும் சலாம் கொடுப்போம்.
பாடம் : 154
இமாமுக்கு, பதில் சலாம் கூறாமல் தொழுகைக்காக மட்டும் சலாம் கொடுப்பது.
839,840 முஹம்மது பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த வாளியொன்றிலிருந்து நீர் அள்ளி ஒரு முறை உமிழ்ந்ததையும் எனக்கு நினைவிருக்கிறது.
பனூசாலிம் குலத்தாரும் அன்சாரியுமான இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் என் சமுதாயத்தாரான பனூசாலிம் குலத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திவந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அல்லாஹ்வின் தூதரே!) நான் என் கண்பார்வையை இழந்துவருகிறேன். (மழைக் காலங்களில்) என(து இல்லத்து)க்கும் என் சமுதாய மக்களின் பள்ளிவாசலுக்கும் குறுக்கே (உள்ள பள்ளத்தாக்கில்) தண்ணீர் ஓடுகிறது. (ஆகவே என்னால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை.) எனவே, நீங்கள் வந்து, என் இல்லத்தில் (ஓர் இடத்தில்) தொழவேண்டும். அதை நான் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் (அவ்வாறே) செய்கிறேன் என்று கூறினார்கள். மறுநாள் நண்பகலில் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் வர) அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன் அவர்கள் உட்காரக் கூட இல்லை. (அதற்குள்), (இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர்கள் (என் வீட்டில்) எந்த இடத்தில் தொழவேண்டும் என நான் விரும்பினேனோ அந்த இடத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன். (அந்த இடத்தில்) நபி (ஸல்) அவர்கள் (தொழ) நின்றார்கள். உடனே நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். (தொழுகை முடியும் போது) அவர்கள் சலாம் கொடுத்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்த போது நாங்களும் சலாம் கொடுத்தோம்
பாடம் : 155
தொழுகைக்குப் பின் இறைவனைப் போற்றித் துதிப்பது.
841 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் கடமையான (ஃபர்ள்) தொழுகையை முடிக்கும் போது சப்தமாக (இறைவனைப் போற்றி) திக்ரு செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. அவ்வாறு மக்கள் கூறக்கேட்டால் அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.
842 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை தக்பீரை வைத்து நான் அறிந்து கொள்வேன்.
843 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படி யான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின் றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே) என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும் என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவைக் கூறியதாக அமையும் என்று பதிலளித்தார்கள்.
844 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு என்னை எழுதச் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்- ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ -மா அஉதைத்த, வலா முஉத்திய -மா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத் ளஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன். அவனுக்கு நிகர் எவருமில்லை (எதுவுல்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மிதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. எச் செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனுமளிக்க முடியாது.ன
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) அல்ஜத்' எனும் சொற்சொடருக்கு செல்வம்' என்று பொருள்.
பாடம் : 156
சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.
845 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுவித்து முடித்ததும் எங்களை நோக்கித் தமது முகத்தை நேராகத் திருப்பி (அமர்ந்து)விடுவார்கள்.
846 ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா' எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினர்.
அப்போது என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
847 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையை பாதி இரவுவரை பிற்படுத்தினார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். பிறகு (எங்களுக்கு) தொழுவித்துவிட்டு தம் முகத்தை எங்களை நோக்கி நேராகத் திருப்பி (அமர்ந்து), மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் ஓர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வரை அத்தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்) என்று சொன்னார்கள்.
பாடம் : 157
சலாம் கொடுத்த பின் இமாம் தொழுத இடத்திலேயே இருப்பது.
848 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (சுன்னத், நஃபில் தொழுகைகளைத்) தொழுவார்கள். (அபூபக்ர் ஸித்தீக் ளரலின அவர்களின் பேரர்) காசிம் (ரஹ்) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். இமாம் (கடமையான தொழுகையைத் தொழுவித்த) அதே இடத்திலேயே உபரியானத் தொழுகைகளை தொழக்கூடாது' என நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த தாகக் கூறப்படுகிறது. அது ஆதாரபூர்வமானதன்று.
849 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் (அமர்ந்து) இருப்பார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தொழுகையை முடித்தப் பெண்கள் (முதலில்) சென்றுவிடட்டும் என்பதற்காகவே ளநபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்து கொண்டிருந்தார்கள்ன என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கறிந்தவன்.
850 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பார்கள். அவர்கள் (தம் இல்லத்திற்கு) திரும்புவதற்கு முன் பெண்கள் திரும்பிச் சென்று தம் இல்லங்களுக்குள் நுழைந்திருப்பார்கள். ள குறைந்த பட்சம் அவ்வளவு நேரம் நபி (ஸல்) அவர்கள் வீற்றிருப்பார்கள்.ன
இன்னும் பல அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் சில வற்றில் இந்த ஹதீஸை உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் ஹிந்து பின்த் அல்ஹாரிஸ் ஃபிராஸிய்யா' என்றும் வேறு சில அறிவிப்புகளில் ஹிந்து பின்த்தில் கர்ஷிய்யா' என்றும் இன்னோர் அறிவிப்பில் குறைஷிப் பெண்மணி' என்றும் பலவாறாக வந்துள்ளது.
பாடம் : 158
தொழுகை நடத்திவிட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் இமாம் (அமராமல்) மக்களைக் கடந்து செல்வது.
851 உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்த போது தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்றிருப்பதைக் கண்டார்கள். எனவே, எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டி ருக்கும் போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகையில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே நான் (சென்று) அதைப் பங்கிட்டுவிடுமாறு பணித்(துவந்)தேன் என்று கூறினார்கள்.
பாடம் : 159
(தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும், திரும்பிச் செல்வதும்.
னஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்த பின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப்பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கம் திரும்புவதை மட்டுமே தேர்வு செய்வோரை அவர்கள் கண்டிப்பார்கள்.
852 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வலப் பக்கம் திரும்புவதே கடமை என்று எண்ணிக்கொள்வதன் மூலம் உங்களில் எவரும் தம் தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்து விடவேண்டாம். நபி (ஸல்) அவர்கள் நான் பார்த்திருக்கிறேன். பலசமயங்களில் அவர்கள் தம் இடப் பக்கமும் திரும்புவார்கள்.
பாடம் : 160
சமைக்கப்படாத வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டுள்ளி (போன்ற வாடையுள்ளவற்றைச்) சாப்பிடுவது குறித்து வந்துள்ளவையும், பசி காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளிவாசலுக்கு நெருங்கவேண்டாம் எனும் நபி மொழியும்.
853 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இந்தச் செடியிலிருந்து -அதாவது வெள்ளைப்பூண்டுடைச்- சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்கு நெருங்கவேண்டாம் என்று கூறினார்கள்.
854 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு இந்தச் செடியிலிருந்து சாப்பிட்டவர் நம் பள்ளிக்குள் வர வேண்டாம் என்று கூறினார்கள்' என்றார்கள். அவர்களிடம் நான்,எந்த வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்ட நபியவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், சமைக்கப் படாத வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கன் என்றே நான் கருதுகிறேன் என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் நெடிவீசும் பூண்டைக் கருத்தில் கொண்டே கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
855 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மை விட்டும் விலகியிருக்கட்டும்' அல்லது நம் பள்ளிவாசலை விட்டும் விலகியிருக்கட்டும்' அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும் என்று சொன்னதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் சில கீரைகள் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அதில் நெடிவீசக் கண்டார்கள். ஆகவே அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அதைச் சாப்பிட்ட அத்தோழரும் வெறுப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சாப்பிடுங்கள் ஏனெனில், நீங்கள் உரையாடாத சில (வானோ)ரிடம் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிட வில்லை) என்று கூறினார்கள்.
அஹ்மது பின் சா-ஹ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் வட்ட வடிவப் பாத்திரம் (பத்ர்) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது' என்று அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாகவும் பத்ர்' என்பது கீரைகள் இருந்த தட்டையே' குறிக்கும் என்று அதற்கு விளக்கம் கூறிய தாகவும் இடம்பெற்றுள்ளது.
லைஸ் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் பாத்திரம் சம்பந்தமான குறிப்பெதையும் கூறவில்லை ஆகவே, அது அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் உரையா அல்லது நபி மொழியின் மூலத்திலேயே உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.
856 அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், வெள்ளைப் பூண்டு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் என்ன செவியேற்றுள்ளீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது நம்முடன் தொழ வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
பாடம் : 161
சிறுவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பருவத்தில் கடமையாகும் என்பதும், கூட்டுத் தொழுகை (ஜமாஅத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸாத் தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்து கொள்வதும், அவர்கள் தொழுகை வரிசை யில் (மற்றவர்களுடன்) நிற்பதும்.
857 சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மையவாடியின்) ஓரத்திலிருந்த ஒரு அடக்கக்குழி (கப்று)அருகே சென்று மக்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். மக்கள் அந்த அடக்கக்குழி அருகில் அணிவகுத்து நின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் என்னிடம் கூறினார் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் , அபூஅம்ரே! உங்களுக்கு இதைக் கூறிய அவர் யார்? என்று கேட்டேன். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்று பதிலளித்தார்கள்.
858 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
859 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டு, இரவின் ஒரு பகுதி ஆனதும் எழுந்து (சென்று) தொங்கவிடப்பட்டி ருந்த தோல்ப்பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) அங்கசுத்தி (உளூ) செய்தார்கள்.-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் (உறுப்புக்களை அதிகம் தேய்க்காமல் தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை மட்டுமே கழுவிய) நபி (ஸல்) அவர்களின் அந்த உளூ எளிமையாகவும் அதே சமயத்தில் மிகக் குறைந்த பட்ச அளவிலும் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுதார்கள். உடனே நானும் எழுந்து அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டு வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே (தொழுது கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தம் வலப் பக்த்தில் நிறுத்திக் கொண்டார்கள். பிறகு அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து (ஃபஜ்ர்) தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்கள் எழுந்து அவருடன் தொழுகைக்குப் போய் தொழுவித்தார்கள். ஆனால் அவர்கள் (உறங்கியதற்காக புதிதாக) உளூ செய்யவில்லை.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் கண்கள் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது' என்று மக்கள் கூறுகின்றனரே! (அது உண்மையா?) என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், இறைத்தூதர் களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (வஹீ) ஆகும்' என்று உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறக்கேட்டுள்ளேன் என்றார்கள்.
பிறகு, (மகனே!) உன்னை நான் அறுத்து (குர்பானி செய்து) விடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன் எனும் (37:102ஆவது) இறை வசனத்தையும் (தம் கருத்தக்குச் சான்றாக) ஓதிக் காட்டினார்கள்
860 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (தாய் வழிப்)பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் உணவு சமைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக் காக நான் (உபரியான தொழுகையை) தொழுவிக் கிறேன் என்று கூறினார்கள். (தொழுவதற்காக) நான் எங்களுக்குரிய பாயொன்றை (எடுக்க அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கறுப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயில் தொழுகைக்காக) நின்றார்கள். நானும் என்னுடன் ஓர் அநாதைச் சிறுவரும் (முதல் வரிசையில்) நிற்க அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தெழுவித்தார்கள்.
861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும்' ஹஜ்ஜின்போது) மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன்-அந்நாளில் நான் பருவவயதை நெருங்கிவிட்டிருந்தேன்- (தொழுது கொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.
862 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து, (தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களு:ம உறங்கிவிட்டனர் என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை என்று கூறினார்கள்.
அன்றைய நாளில் மதீனாவாசிகளைத் தவிர வேறுயாரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.
863 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாட்களில் (பெண்கள் பகுதிக்குப்) புறப்பட்டுச் சென்றபோது அவர்களுடன் நீங்களும் இருந்தீர் களா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆம் (இருந்தேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்தநான் அவர்களுடன் (பெண்கள் பகுதிவரை சென்று) இருந்திருக்க முடியாது. (பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு) நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் ஸல்த் (ரலி) அவர்களின் வீட்டருகேயுள்ள அடையாள(க் கம்ப)ம் அருகில் வந்து (மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். மேலும் (ஏழை எளியோருக்காக) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அப் பெண்கள் தங்களின் ஆபரணங்களை நோக்கி தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவற்றைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் (கையில் ஏந்தப்பட்டிருந்த) ஆடையில் போடலானார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் சென்றனர்.
பாடம் : 162
இரவிலும் பின்னரவின் இருட்டிலும் பெண்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வது.
864 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாத் தொழுகையை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுதுவந்தனர்
865 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 163
(தொழுகை முடிந்தபின்) இமாம் எழுவதை எதிர்பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது.
866 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் சலாம் கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர்களுடன்) தொழுகையில் கலந்து கொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள். (பெண்கள் சென்றபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள்
867 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவிப்பார்கள். அப்போது பெண்கள் தங்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு (தொழுதுவிட்டு) திரும்பிச் செல்வார்கள். அவர்கள் (யார் யாரென) அறியப்பட மாட்டார்கள்.
868 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதைக் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.
இதை அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
869 அம்ரா பின்த் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் (இன்று) நடந்துகொள்ளும் முறையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இன்று) கண்டிருந்தால் பனூஇஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதுபோன்று இந்தப் பெண்களையும் (பள்ளிவாசலுக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். (அந்த அளவுக்கு இன்று பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வருகிறார்கள்) என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அம்ரா (ரஹ்) அவர்களிடம், பனூஇஸ்ராயீல் பெண்கள் (பள்ளி வாசலுக்கு வரக்கூடாதென) தடுக்கப்ட்டிருந்தனரா? என்று கேட்டேன். அதற்கு அம்ரா அவர்கள், ஆம்' என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 164
ஆண்கள் (வரிசைக்குப்) பின்னால் பெண்கள் தொழுவது.
870 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்றுநேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள்
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற் காகத்தான்' என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
871 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (உபரித் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் அவர்கள் எங்களுக் குப் பின்னால் நின்றார்கள்.
பாடம் : 165
சுப்ஹுத் தொழுகை முடிந்ததும் விரைவாகப் பெண்கள் (பள்ளியிலிருந்து) திரும்பி விடுவதும் குறைந்த நேரமே அவர்கள் பள்ளியில் தங்குவதும்.
872 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையை இருட்டிருக்கவே தொழுவிப்பார்கள். இறை நம்பிக்கையுள்ள பெண்கள் (தொழுகையை முடித்து இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்கள் (யார் யாரென) அறியப்பட மாட்டார்கள்' அல்லது அவர்களில் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ள  மாட்டார்கள்.
இதை காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 166
பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்கள் தம் கணவரிடம் அனுமதி பெறுவது.
873 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் ƒதுணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 167
ஆண்களுக்குப் பின் பெண்களும் தொழுவது.
874 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் தொழுதார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்முசுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.
875 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று)விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள், எழுவதற்கு முன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள். அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்கள் பெண்களை நெருங்குவதற்கு முன் பெண்கள் திரும்பிச் சென்றுவிடட்டும் என்பதற்காகத்தான்' என்றே கருதப்படுகிறது. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites