அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

6-மாதவிடாய்


அத்தியாயம் : 6
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) மாதவிடாய் பற்றியும் உங்களிடம் வினவுகிறார்கள்; கூறுக: அது (ஓர் உபாதை யான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உறவுகொள்ள) அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களை விட்டு மீள்பவர்களை திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (2:222)
பாடம் : 1
மாதவிடாய் எப்படி ஆரம்பமானது?
நபி (ஸல்) அவர்கள், இ(ந்த மாதவிடா யான)து, ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய விஷயமாகும் என்று சொன்னார்கள்.
சிலர், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்களிலிருந்தே முதன் முத-ல் மாதவிடாய் ஆரம்ப மானது என்று கூறுகின்றனர்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட பொன் மொழி பொதுப்படையானது (ம், அடிப்படை உள்ளதும்) ஆகும்.
பாடம்
பூப்படைந்த பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால்...
294 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜிற்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணவில்லை. (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப் என்ற இடத்தில் நாங்கள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருக்கவே, உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது (மாதவிடாய்) அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு விதியாக்கிய விஷயமாகும். ஆகவே நீ, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நிறைவேற்று! ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின் போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.
பாடம் : 2
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும் அவரது தலைமுடியை வாரிவிடுவதும்.
295 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன்.
296 ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடம் மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்கு பணிவிடை செய்யலாமா? பெருந்துடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு, (மாதவிடாயிலிருப்பவள் பணிவிடை செய்வது, குளியல் கடைமையானவள் நெருங்குவது ஆகிய) இதுவெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் இயல்பான விஷயம்தான். (மாதவிடாய் அல்லது பெருந்துடக்கு ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்கு பணிவிடை செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலைவாரிவிடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாச-ல் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தார்கள். (பள்ளி வாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களுக்கு தலைவாரிவிடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 3
மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது.
அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் மாதவிடாய் நிலையிலிருக்கும் தம் பணிப் பெண்ணை (தம் முன்னாள் அடிமையான) அபூரஸீன் (மஸ்ஊத்பின் மாலிக் - ரஹ்) அவர்களிடம் அனுப்பிவைத்து, திருக்குர்ஆனை வாங்கி வரச் சொல்வார்கள். அவள் அந்தக் குர்ஆனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம் வருவாள்.
297 (நபி ளஸல்ன அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.
பாடம் : 4
பிரசவத் தீட்டைக் குறிக்கும் நிஃபாஸ் எனும் சொல்லை மாதவிடாய் (-ஹைள்)க்கும் பயன்படுத்துவது.
298 ள நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன் உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.
பாடம் : 5
மாதவிடாய் ஏற்பட்டுள்ள மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.
299 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருந்துடக்குடனிருந்த நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.
300 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக் கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்.) அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்.
301 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாச-ல்) இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்த போது அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாத விடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவுவேன்.
302 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் போகுமிடமிடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிலிருந்தும் ஆடைக்குமேல் தான் அனுபவித்தார்கள்.)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இன்னும் சில அறிவிப்பாளர்களும் இணைகி றார்கள்.
303 மைமூனா(ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.
பாடம் : 6
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட்டுவிடுவது.
304 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெரு நாள் அல்லது நோன்புப் பெரு நாள் தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)? எனப் பெண்கள் கேட்டதும். நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த்தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன் என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள், மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், ஆம் (பாதியளவுதான்) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்: என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை) என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது தான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும் என்று கூறினார்கள்
பாடம் : 7
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கடமைகள்அனைத்தையும் நிறைவேற்றலாம்.
இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் தவறேதுமில்லை என்று கூறியுள்ளார்கள்.
பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருப்பவர் குர்ஆனை ஓதுவதில் எந்தத் தவறுமில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்.
(பெரு நாள் தினத்தன்று) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களை(யும்) (தொழுகைத் திடலுக்கருகில்) அழைத்துச் சென்று ஆண்களைப் போன்று தக்பீர் சொல்லவும் பிராத்திக்கவும் நாங்கள் பணிக்கப்பட்டோம் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமக்கு எழுதியிருந்த கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி மன்னர் ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அதில் : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா க-மத்தின் ... அளவிலா அருளாளன் நகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்குமிடையில் பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள் (3:64) என்று தொடங்கும் (குர்ஆன் வசனங்கள்) எழுதப்பட்டிருந்தது.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின் போது) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்கள்; ஆனால் தொழவில்லை.
இதை அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
 நான் பெருந்துடக்குடையவனாக (குளியல் கடமையான) நிலையிலும் (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆடுமாடுகளை) அறுப்பேன். (ஏனெனில்) வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ், அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் புசிக்க வேண்டாம் (6:121) என்று கூறியுள்ளான்.
305 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்(ஜத்துல் வதாஉ) செய்யும் எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப் என்ற இடத்தில் நாங்கள் வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் நான் அழுதுகெண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, ஏன் அழுகிறாய்? என்று கேட் டார்கள். நான், இந்த வருடம் அல்லாஹ்வின் மீதானையாக என்னால் ஹஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன் நபி (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் ஆதமின் பெண்மக்களுக்கு விதியாக்கிவிட்ட ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக் கொள். ஆயினும் தூய்மை யாகும் வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே! என்றார்கள்
பாடம் : 8
உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா).
306 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), அல்லாஹ்வின் தூதரே! (நான் உயர் இரத்தப்போக்கு ள-இஸ்திஹாளான ஏற்படும் பெண் ஆவேன்; தொடர்ந்து எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருப்பதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இல்லை; தொழுகையை விட்டுவிடாதே! ஏனெனில்,) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே) யாகும்; மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்து (குளித்து)விட்டுத் தொழுது கொள்! என்று சொன்னார்கள்.
பாடம் : 9
மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல்.
307 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்து விட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம் என்று கூறினார்கள்.
308 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி ளஸல்ன அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவர் தமது ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்ய நினைத்தால் ஆடையிலிருந்து (காய்ந்து விட்ட) இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவுவார். பின்னர் ஆடையின் மற்ற பகுதிகளிலும் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் (மாதவிடாய் குளியலுக்குப் பின்) தொழுது கொள்வார்.
பாடம் : 10
உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) உள்ள பெண் பள்ளிவாச-ல் இஃதிகாஃப் இருப்பது.
309 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவி யரில் ஒருவர் இஃதிகாஃப்- தங்கியிருந்தார். அவர் உயர் இரத்தப்போக்கினால் இரத் தத்தைக் காண்பவராயிருந்தார். இந்நிலையில் சில சமயங்களில் இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே கையலம்பும் பாத்திரத்தை வைப்பார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கா-த் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு முறை) குசும்பப்பூவின் (சாய) நீரைப் பார்த்து விட்டு, இ(தன் நிறமான)து இன்னவளுக்கு ஏற்படுகின்ற ஒன்றைப் போன்றுதான் என்று குறிப்பிட்டதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளர்கள்.
310 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்னாரின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். அப்போது அவர் குசும்பப்பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும் போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.
311 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவர் உயர் இரத்தப்போக்குடையவராய் இருக்கும் நிலையில் இஃதிகாஃப் இருந்தார்.
பாடம் : 11
ஒரு பெண் மாதவிடாய் ஏற்பட்ட ஆடையுடன் தொழலாமா?
312 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் சிலருக்கு ஒரேயொரு ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவருடை மாதவிடாய் ஏற்படும். இரத்தம் ஏதேனும் அந்த ஆடையில் பட்டு(க் காய்ந்து)விட்டால் தமது உமிழ் நீரைத் தொட்டு அந்த இடத்தில் வைத்து தமது நகத்தால் சுரண்டிவிடுவார்கள்.
பாடம் : 12
மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது நறுமணத்தைப் பயன்படுத்துதல்.
313 உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூ-ல் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.)
எங்களில் ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது ளிஃபார் நகரத்து குஸ்த் (கோஷ்டம் அல்லது அகில்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நாங்கள் ஜனாஸாவைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடைவிதிக்கப்பட்டிருந்தோம்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 13
ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் போது தமது உடலைத் தேய்த்துக் கழுவுவதும், அவள் எப்படிக் குளிக்க வேண்டும் என்பதும், இரத்தம்போன இடத்தில் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்செடுத்து இரத்தம் படிந்த இடத்தை எப்படித் துடைக்க வேண்டும் எனும் முறையும்.
314 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயிலிருந்து நீங்கிக் கொள்ள தாம் எவ்வாறு குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையைக் கூறினார்கள். கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக் கொள்! என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண்மணி, அதனால் நான் எப்படித்தூய்மைப்படுத்த வேண்டும்? என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் அதனால் தூய்மைப்படுத்திக் கொள்! என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் எப்படி(த்தூய்மைப்படுத்த வேண்டும்)? என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்டவாறு) சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக் கொள்! என்று பதிலளித்தார்கள்.
(நபியவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக! என்று கூறினேன்.
பாடம் : 14
மாதவிடாய்க் குளியல்.
315 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), மாதவிடாயிலிருந்து தூய்மையாகிக் கொள்ள நான் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்ட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து மூன்று முறை சுத்தம் செய்! என்றோ அல்லது அதன் மூலம் சுத்தம் செய்! என்றோ சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்ட்டுக் கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து நபி (ஸல்) அவர்கள் சொல்லவருவதை அவருக்கு விளக்கிக் கொடுத்தேன்.
பாடம் : 15
ஒருபெண் மாதவிடாய் நின்றபின் குளியலின் போது சீப்பினால் தலையை வாரிக் கொள்ளுதல்.
316 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜத்துல் வதா எனும்) விடைபெறும் ஹஜ்ஜின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டினேன். அப்போது நான் குர்பானிப் பிராணியைக் கொண்டுவராத தமத்துஉ வகை இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. (துல்ஹஜ் எட்டாம் நாள்) அரஃபாவுடைய இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. (மாதவிடாயிலிருந்து நீங்கிய அந்த இரவு) நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! இது அரஃபாவுடைய இரவு; நான் உம்ரா செய்து விட்டுத் திரும்ப இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன். ஆனால், என்னால் உம்ரா செய்யமுடியாமற் போய்விட்டது என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள்! உம்ரா செய்வதை நிறுத்திவிடு! (ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்!) என்றார்கள் நானும் அவ்வாறே செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை நான் செய்து முடித்த போது (மதீனா செல்லும் வழியில்) முஹஸ்ஸப் (எனுமிடத்தில் நாங்கள்) இரவில் (தங்கியிருந்த போது என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்ஈம் என்ற இடத்திலிருந்து (இஹ்ராம் கட்டி) புறப்பட்டுச் சென்று என்னை உம்ரா செய்விக்குமாறு பணித்தார்கள். இந்த உம்ரா (மாதவிடாயினால் செய்ய முடியாமற்போன) அந்த உம்ராவின் இடத்தில் (பதிலாக) அமைந்தது.
பாடம் : 16
ஒருபெண் மாதவிடாய் நின்ற பின் குளியலின் போது தனது தலைமுடியை அவிழ்த்து விடுவது (அவசியமா?).
317 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
துல்ஹஜ் மாதப் பிறை நெருங்கிக் கொண் டிருந்த நிலையில் நாங்கள் (மதீனாவிலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்து கொள்ளலாம். ஏனெனில் குர்பானிப் பிராணியை நான் கொண்டுவராமல் இருந்தி ருந்தால் கட்டாயம் நானும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருப்பேன் என்று கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். மற்ற சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினர். நான் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால் முத-ல் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்! என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.
ஹஸ்பா (முஹஸ்ஸப்) எனுமிடத்தில் நாங்கள் தங்கியிருந்த இரவில் (உம்ரா செய்வதற்காக) என்னுடன் என் சகோதரர் அப்துர்ரஹ்மானை அனுப்பிவைத்தார்கள். (அவருடன்) நான் தன்ஈம் என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டுப்போன எனது உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் கட்டினேன்.
ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(மூவகை இஹ்ராம் முறைகளான தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய) இந்த முறைகள் எதிலும் (பரிகாரமாக) குர்பானி கொடுப்பதோ நோன்பு நோற்பதோ தான தர்மங்கள் செய்வதோ இருக்கவில்லை.
பாடம் : 17
(பெண்ணின் கருவறையில்) வடிவமைக்கப்படும் சதைக்கட்டியும் வடிவமைக்கப்படாத (விழு) கட்டியும்.
318 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ் (பெண்ணின்) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான். (அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்ட்டு பரிணமா மாற்றங்கள் ஏற்படும் போது) அந்த வானவர், என் இறைவா! (இது ஒரு துளி) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. என்இறைவா! இது மெல்லப்ட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு என்று கூறிக் கொண்டிருப்பார். அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும் போது அவ்வானவர், என் இறைவா! (இது) ஆணா அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு? என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையணைத்தும் நிர்ணயிக் கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போது எழுதப்படும்.
இதை அனஸ் பின்மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 18
மாதவிடாய் ஏற்பட்டுவிட்ட பெண் எப்படி ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும் இஹ்ராம் கட்ட வேண்டும்?
319 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென்றோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். மற்ற சிலர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டினர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உங்களில்) எவர் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் (உம்ராவின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலகிக் கொள்ளலாம். எவர் தம்முடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்து இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது குர்பானிப் பிராணியை அறுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள் வரை தமது இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம்.
(உங்களில்) எவர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவாக்கட்டும் என்று சொன்னார்கள்.
(இந்நிலையில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபி ளஸல்ன அவர்களிடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக் கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்துமுடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக உம்ராச் செய்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.
பாடம் : 19
மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும்.
சில பெண்கள் (தங்கள் மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா என்பதை அறிய) மாதவிடாய் காலத்தில் அணையாடைக்குள் பயன்படுத்திய பஞ்சை ஒரு சிறிய கூடைக்குள் வைத்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அந்தப் பஞ்சில் மஞ்சள் நிறம் இருந்தது. (இதைக் காணும்) ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த பஞ்சில் (நிறமேதும் படாமல்) வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டுவிடாதீர்கள் என் றார்கள். அதாவது மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள் என்றார்கள். சில பெண்கள் நடு நிசி நேரத்தில் விளக்குகளைக் கொண்டு வரச் சொல்லி மாதவிடாயிலிருந்து தூய்மைய டைந்து விட்டோமா என்பதை (சிரமப்பட்டு) பார்க்கிறார்கள் என்ற செய்தி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் புதல்விக்கு எட்டியது. அப்போது அவர் (நபி ளஸல்ன அவர்களது காலத்தில் வாழ்ந்த) அந்தப் பெண்கள் இப்படிச் செய்ததில்லை என்று கூறி அச்சிலரைக் கடிந்து கொண்டார்கள்.
320 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) உடையவராக இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்ட போது, இது இரத்தக் குழா(யிலிருந்து வெளிவருவதே)யாகும்; மாதவிடாயன்று. எனவே மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுது கொள்! என்றார்கள்.
பாடம் : 20
மாதவிடாய் காலத்தில் விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்:
(மாதவிடாய் ஏற்பட்ட) அந்தப் பெண் தொழுகைகளை விட்டுவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
321 முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பெண்களாகிய நாங்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமானதற்குப் பின்புள்ள தொழுகைகளைத் தொழுதால் போதுமா? (அல்லது மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டத் தொழுகைகளையும் தொழ வேண்டுமா?)என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் நீ (காரிஜிய்யா கூட்டத்தாரின் பிறப்பிடமான கூஃபா நகருக்கு அருகிலுள்ள) ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது விடுபட்டத் தொழுகைகளை தொழுமாறு எங்களை நபி (ஸல்) அவர்கள் பணிக்க மாட்டார்கள் அல்லது அத்தொழுகைகளை நாங்கள் தொழ மாட்டோம் என்று கூறினார்கள்.
பாடம் : 21
மாதவிடாய் இரத்தம்பட்ட ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் அவளுடைய கணவன் உறங்குவது.
322 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப்போர்வைக்குள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது .மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக போர்வைக்குளிருந்து மெல்ல நழுவிச் சென்று அதை அணிந்து கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (த் தம்மருகில்) அழைத்து அந்தப் போர்வைக்குள் என்னைக் கிடத்திக் கொண் டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றி ருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி (ஸல்) அவர்களும் (ஒருமித்து) ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் மொண்டு) பொருந்துடக்கின் (கடமையான) குளியலை நிறைவேற்றுவோம்.
பாடம் : 22
சுத்தமாக இருக்கும் போது அணியும் துணி அல்லாமல் மாதவிடாய்க் காலத்திற்கென பிரத்யோக துணியை ஒருபெண் வைத்துக் கொள்வது.
323 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக ள நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாத வாறு போர்வைக்குள்ளிருந்துன மெல்ல நழுவினேன். (அதை எடுத்து அணிந்து கொண்டேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (த் தமக்கருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களோடு அந்தப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.
பாடம் : 23
மாதவிடாயுள்ள பெண்கள் இரு பெரு நாள் தொழுகைகளிலும் முஸ்லிம்களுடைய பிரசாரத்திலும் கலந்து கொள்வதும் அப்போது தொழும் இடத்தை விட்டும் அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்பதும்.
324 ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இரு பெரு நாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.
-என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா -ரலி) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறுபோர்களில் தம் கணவரோடு இருந்தார்.-
என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:
(பெண்களாகிய) நாங்கள் ளநபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில்ன காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள்.
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் ளநபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்ன என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.
-நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்-
வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெரு நாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா.
(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், மாதவிடாயுள்ள பெண்களுமா (பெரு நாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்த-ஃபா, போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
பாடம் : 24
ஒரு பெண்ணுக்கு ஒரே மாதத்தில் மூன்றுமுறை மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாய், கர்ப்பம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கூற்றை ஏற்றுக் கொள்வதும், மாதவிடாய் தொடர்பாக சாத்தியமுள்ள கூற்றே ஏற்கப்படும் என்பதும்.
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
(அப்பெண்கள்) தங்கள் கருவறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது (2:228).
ஒரு பெண் மார்க்கப்பற்றுள்ள தன் நெருங்கிய உறவினர்களில் ஒரு சாட்சியைக் கொண்டு வந்து (வழக்கமாக தனது குடும்பத்துப் பெண்களுக்கு ஏற்படுவது போன்று) தமக்கும் ஒரே மாதத்தில் மூன்று முறை மாதவிடாய் ஏற்பட்டதாகக் கூறினால் அவளது கூற்று ஏற்கப்படும் என அலீ (ரலி) , ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
(விவகாரத்துச் செய்யப்பட்ட) ஒரு பெண்ணின் இத்தா காலம் (விவாகரத்துக்கு) முன்னாலுள்ள அவளது (மாதவிடாய்கால) வழக்கத்தை ஒட்டியே கணிக்கப்படும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மாதவிடாய் (குறைந்தது) ஒரு நாளிலிருந்து (அதிகபட்சமாக) பதினைந்து நாட்கள் வரை நீடிக்கலாம்.
சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் மாதவிடாய் நின்று தூய்மையடைந்ததிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து ஒரு பெண் இரத்தத்தைக் காண்பது குறித்து (அது மாதவிடாயாகக் கருதப்படுமா? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், இது விஷயமாக பெண்களே நன்கறிவார்கள் என்று பதிலளித்தார்கள்.
இதைத் தம் தந்தை சுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஅதமிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
325 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), நான் உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை (தொழுகையை விட்டுவிடாதே!) (உனக்கு ஏற்பட்டுள்ள) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்கு தொழுகையை விட்டுவிடு! பிறகு குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுது கொள்! என்றார்கள்.
பாடம் : 25
மாதவிடாய் அல்லாத நாட்களில் மஞ்சளாகவோ கலங்கலான நிறமாகவோ வெளிப்படும் இரத்தம்.
326 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மாதவிடாய் அல்லாத நாட்களில் வெளிப்படும்) மஞ்சள் நிற நீர்மத்ûயும் கலங்கல் நிற நீர்மத்தையும் நாங்கள் (நபிளஸல்னஅவர்களது காலத்தில்) மாதவிடாயாகக் கருதவில்லை.
பாடம் : 26
உயர் இரத்தப்போக்கு நோய்.
327 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு
ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) ஏற்பட்டது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கேட்ட போது (அதற்காக குளியல் கடமை இல்லாவிட்டாலும் நல்லது என்ற அடிப்படையில்) குளித்துக் கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்த நாள நோயாகும். (மாதவிடாயன்று) என்று கூறினார்கள். எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்.
பாடம் : 27
ஹஜ்ஜில், தவாஃபுல் இஃபாளா எனும் தவாஃபை முடித்தபின் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் (அவளுக்கு கடைசித் தவாஃபான தவாஃபுல் விதாஉ செய்ய அனுமதி உண்டா?)
ளகுறிப்பு: ஹாஜிகள் துல்ஹஜ் 10ஆவது நாள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்தபின் மக்காவை நோக்கிப் புறப்பட்டுச் சென்று மீண்டும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வர வேண்டும். இதனை தவாஃபுல் இஃபாளா எனப்படுகிறது. இது தவாஃபுஸ் ஸியாரா, தவாஃபுர் ருக்ன் ஆகிய பெயர்களிலும் அறியப்படுகிறதுன
328 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் நம்மை (ஊருக்குச்) செல்லவிடாமல் தடுத்து விடுவார் போலிருக்கிறதே! என்று கூறிவிட்டு அவர் உங்களுடன் தவாஃப் (அல்இஃபாளா) செய்ய வில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தோர், ஆம் (தவாஃப் செய்தார்) என்று பதிலளித்தார்கள்.
அப்படியானால் புறப்படு! (போகலாம்) என்றார்கள்.
329 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜில் தவாஃபுல் இஃபாளாவை முடித்த) ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் (மக்காவை விட்டுச்) சென்றுவிடுவதற்கு அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
330 தாவூஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாதவிடாய் ஏற்பட்ட பெண் (கடைசித் தவாஃபான தவாஃபுல் விதா செய்யாமல்) மக்காவை விட்டுச் செல்லக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுக்கு (மட்டும் கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை செய்யாமலேயே மக்காவை விட்டும் செல்ல) அனுமதி வழங்கினார்கள் என்று கூறியதைக் கேட்டேன்.
பாடம் : 28
உயர் இரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு பெண் தமது இரத்தம் மாதவிடாய்க் கால இரத்தமல்ல என்று அறிந்து கொண்டால் (என்ன செய்யவேண்டும்?)
சிறிது நேரம் அவள் சுத்தமானாலும் குளித்து விட்டு அவள் தொழுகையை நிறை வேற்றவேண்டும்; மிகப் பெரிய விஷயமான தொழுகையையே அவள் நிறைவேற்றலாம் எனும் போது அவளுடன் கணவன் தாம்பத்திய உறவுகொள்வதில் தவறில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
331 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உயர் இரத்தப் போக்கு ஏற்பட்டுவந்த ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணியிடம்) (வழக்கம் போல்) மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைக் கழுவிட்டுத் தொழுது கொள்! என்று சொன்னார்கள்.
பாடம் : 29
பிரசவ இரத்தப் போக்கின் போது உயிர்நீத்த பெண்ணுக்கு இறுதித் தொழுகை (ஸலாத்துல் ஜனாஸா) தொழுவதும், அதன் வழிமுறையும்.
332 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிரசவ இரத்தப்போக்குடனேயே ஒருபெண் இறந்து விட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது நபியவர்கள் மய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.
பாடம் : 30
333 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு நான் தொழாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் இடத்திற்கு அருகில் படுத்திருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட) தொழுகைவிரிப்பில் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது அவர்கள் அணிந்திருந்த அடையின் ஒரு பகுதி என் மீது படும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites