அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

8-தொழுகை -A


அத்தியாயம் : 8

பாடம் : 1
விண்ணுலகப்பயணம் -மிஅராஜ் நடந்தன இஸ்ரா இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது?
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:
(ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், தொழுகையை நிறைவேற்றும்படியும் தானதர்மம் செய்யும் படியும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழும் படியும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுகின்றார்கள் என்று தாம் (ஹெராக்ளியஸிடம்) கூறியதாக என்னிடம் கூறினார்கள்.
349 அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்த போது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வாவனர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் ஈமான் எனும் இறை நம்பிக்கை யாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழைய படியே நெஞ்சை) மூடிவிட்டார்கள்.
பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் சாவலரிடம், திறங்கள் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், யார் இவர்? எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஜிப்ரீல் என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா? எனக் கேட்டார். அவர்கள், ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், (அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா? என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஆம் என்று கூறினார்கள்.
(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும் போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், இவர் யார்? எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள் என்று பதிலளித்தார்கள்.
பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் திறங்கள் என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.
அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன? என்பதுபற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது* வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக! என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், இவர் யார்? என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் இத்ரீஸ் என்று பதிலளித்தார்கள்.
பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக! என்று கூறினார்கள். நான், இவர்யார்? என்று (ஜீப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர்கள்தாம் மூசா என்று பதிலளித்தார்கள்.
நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக! என்று கூறினார்கள். நான், இவர் யார்? என்று (ஜிப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர்தாம் ஈசா என்று பதிலளித்தார்கள்.
பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார்கள். நான், இவர் யார்? என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் இப்ராஹீம் என்று கூறினார்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின்
முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறிவந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (இன்னும்) மேலே ஏறிச் சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக் கொண்டிருந்த போது (வானவர்கள் விதிகளை பதிவு செய்து கொண்டிருக்கும்) எழுது கோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர் மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக் கொண்டு நான் திரும்பிய போது மூசா (அலை) அவர்களை கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், உங்களிடம் உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்? என்று கேட்டார்கள். நான், (என் சமுதாயத்தார் மீது) ஐம்பது தொழுகைகளை கடமையாக்கியுள்ளான் என்று பதிலளித்தேன். அவர்கள், அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும் படி சொ)ல்லுங்கள்! ஏனெனில் உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கேட்ட போது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான் என்று சொன்ன போது மீண்டும் அவர்கள், உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமூதாயத்தாரால் தாங்க முடியாது என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும் (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்த சொல் (இனி) மாற்றப் படாது என்று கூறிவிட்டான்.
உடனே நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் என்றார்கள். நான், என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன் என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) சித்ரத்துல் முன்தஹாவுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பலவண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு என்னை சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கச் செய்யப்பட்டது. அங்கே முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.
350 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மிஅராஜ் இரவில்) அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது சொந்த ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கினான். பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டு இரண்டு ரக்அத் களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் தொழும் தொழுகையில் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகியவற்றில்) தலா இரண்டு ரக்அத்கள் கூடுதலாக்கப்பட்டது.
பாடம் : 2
ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும், ஆதமுடைய மக்களே! தொழும் இடந் தோறும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் எனும் (7:31ஆவது) இறைவசனமும், ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும்.
(ஒரே ஒரு துணி மட்டும் அணிந்து தொழும் ஒருவர்) ஒரு முள்ளினாலாவது அதை மூட்டிக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சலமா பின் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற் கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத வரை அதை அணிந்து கொண்டு தொழலாம்.
நிர்வாணர்கள் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
351 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு பெரு நாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பிவைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்! என்றார்கள்.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 3
தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில் முடிச்சிட்டுக் கொள்வது.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர்.
352 முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்கள் (ஒரு முறை) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தமது பிடரியின் பாகத்தில் முடிச்சுப்போட்டுக் கொண்டவர்களாகத் தொழுவார்கள். அவர் களது இதர ஆடைகளோ துணி மாட்டும் கொளுகியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவர்களிடம் ஒருவர், ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உம்மைப் போன்ற விவரங்கெட்டவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் எவருக்குத் தான் இரு ஆடைகள் இருந்தன? என்று வினவினார்கள்.
353 முஹம்மது பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான் பார்த்தேன். மேலும் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான் கண்டேன் என்றும் கூறினார்கள்.
பாடம் : 4
(விசாலமான) ஒரே ஆடையில் அதன் இரு ஓரங்களையும் வல-இடத்தோள்கள் மீது மாற்றிப் போட்டு, (நெஞ்சில் முடிந்து கொண்டு) தொழுவது.
இது குறித்த தமது ஹதீஸில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள்
 முல்தஹிஃப் என்பதற்கு முத்தவஷ்ஷிஹ் என்று பொருள் என்று கூறினார்கள். இதுவே முகாலிஃப் ஆகும்..
(அதாவது,) ஒருவர் தமது வேஷ்டியின் (வலப்பக்க ஓரத்தை இடது தோளின் மீதும் இடப்பக்க ஓரத்தை வலது தோளின் மீதும் இருக்கும் அமைப்பில்) இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது போட்டுக் கொள்வது(ம், பிறகு வலத் தோள் மீது இட்ட ஓரத்தை இடக்கரத்திற்கு கீழேயும், இடத் தோள் மீது இட்டட ஓரத்தை வலக்கரத்திற்கு கீழே கொண்டுவந்து இரண்டையும் நெஞ்சின் மீது முடிந்து கொள்வது) ஆகும்.
இதற்கே அல்இஷ்திமாலு அலல் மன்கிபைனி  எனப்படுகிறது.
உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை சுற்றிக் கொண்டு அதன் இரு ஓரங்களையும் தமது (வல-இடத்) தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்..
354 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் ஒரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்.
355 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்து அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
356 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுவதை நான் பார்த்தேன்.
357 உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டி ருப்பதைக் கண்டேன். அப்போது அவர்களுக்கு நான் சலாம் (முகமன்) சொன்னேன். (அதைக் கேட்ட) அவர்கள், யாரம்மா இவர்? எனக் கேட்டார்கள். அதற்கு நான் உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் என்றேன்.உம்மு ஹானியே வருக! வருக! என்று சொன்னார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (வல-இடத் தோள்கள் மீது) மாற்றிப் போட்டுக் கொண்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள், அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வின் தூதரே! என் தாயாரின் மகன் (என் சகோதரர் அலீ,) நான் புக-டம் அளித்திருக்கும் ஒரு மனிதரை- ஹுபைராவின் மகன் இன்னாரை - தாம் கொல்லப் போவதாக கூறுகிறார் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்) என்று கூறினார்கள். ள நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றனஅந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.
358 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உள்ளனவா? என்று கேட்டார்கள்.
பாடம் : 5
ஒரே ஆடையை அணிந்து தொழும் போது அதன் இரு ஓரங்களையும் தோள்கள் மீது போட்டுக் கொள்ள வேண்டும்.
359 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தமது தோள்கள் மீது (அதில்) ஒரு பகுதியேனும் இல்லாதிருக்கத் தொழவேண்டாம்..
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
360 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே ஆடையை அணிந்து கொண்டு எவரேனும் தொழுதால் அதன் இரு ஓரங்க ளையும் (வலப்புற ஓரத்தை இடது தோளிலும் இடப்புற ஓரத்தை வலது தோளிலுமாக) மாற்றிப் போட்டுக் கொள்ளட்டும். என்று கூறியதை நான் கேட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
பாடம் : 6
ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)
361 சயீத் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ஒரே ஆடை அணிந்து கொண்டு தொழுவது பற்றிக் கேட்டோம். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் செய்த ஒரு பயணத்தில் நான் அவர்களுடன் சென்றேன். ஒரு (நாள்) இரவு எனது தேவையொன்றிற்காக நான் வந்த போது நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அப்போது என் மீது ஒரே ஆடை மட்டுமே இருந்தது . அதை நான் என் உடல் முழுதும் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுது முடிந்ததும் என்ன, இரவு நேரத்தில் வந்திருக்கிறீர், ஜாபிரே? என்று கேட்டார்கள். அப்போது நான் எனது நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நான் சொல்லிமுடித்ததும், என்ன இப்படி (கைகள்கூட வெளியில் தெரியாமல்) போர்த்திக் கொண்டிருக்கிறீர்? என்று கேட்டார்கள். நான் ஆடை சிறியது (அதனால் இப்படிப் போர்த்தியுள்ளேன்) என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஆடை விசாலமானதாக இருந்தால் அதனை (கீழேயும் தோள்மீதும்) சுற்றிக் கொள்ளுங்கள்; ஆடை சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் (வேட்டியாக) அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
362 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள் என்று சொன்னார்கள்
பாடம் : 7
(இறைமறுப்பாளர்களின் நாடாயிருந்த) ஷாம் நாட்டு நீளங்கி அணிந்து தொழுவது.
அக்னி ஆராதகர்கள்(மஜூசிகள்) நெய்யும் ஆடைகளை (கழுவப்படுவதற்கு முன்பே) அணிந்து தொழுவது தவறன்று என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஆடு, மாடு, ஒட்டக) மூத்திரத்தில் நனைத்துச் சாயமேற் பட்ட யமன் நாட்டு ஆடையை அணிந்து தொழுவதை நான் பார்த்தேன் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) கூறுகின்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அடர்த்தி குறைக்கப்படாத (உடலோடு அப்பிக் கொள்ளும்) ஆடையுடன் தொழுதார்கள்.
363 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், முஃகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடுங்கள்! என்றார்கள். நான் அதை எடுத்துக் கெண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து (கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் (இறைமறுப்பாளர்கள் நெய்த) ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள். (உளூ செய்வதற்காக) அதன் கை பகுதியிலிருந்து தமது கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கைப் பகுதி குறுகலாக இருந்ததால் தமது கையை அதன் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் (அவர்கள் உளூ செய்வதற்காக) அவர்க(ளின் உறுப்புக்)கள் மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவுவதற்கு பதிலாக கால்களில் அணிந்திருந்த) தமது காலுறைகள் மீது ஈரக்கையால் தொட்டுத் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பிறகு தொழுதார்கள்.
பாடம் : 8
தொழுகையின் போதும். மற்ற நேரங்களிலும் பிறந்த மேனியுடன் இருக்கலாகாது.
364 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களின் காலத்தில் குறைஷியரால் இறையில்லம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது) அவர்களுடன் (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கஅபாவிற்காக கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் மீது வேட்டி (மட்டுமே) இருந்தது. அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள் (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர் களிடம், என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்துத் தோள் மீது (வைத்துள்ள) கல்லுக்கு கீழே வைத்து (கற்களைச் சுமந்து) கொண்டு வரலாமே! என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தமது வேட்டியை அவிழ்த்து தமது தோள்கள் மீது வைத்தார்கள். (வைத்த) உடன் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் (ஒரு போதும்) பிறந்த மேனியுடன் (ஒரு போதும்) காணப்பட்டதில்லை.
பாடம் : 9
(முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை, வெளிப்புற மேலங்கி ஆகியவற்றை அணிந்து தொழுவது.
365 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, ஓரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவரும் இரு ஆடைகள் வைத்துள்ளனரா? என்று கேட்டார்கள்.
பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தில் இது பற்றிக்) கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் உங்களுக்கு (ஆடைகளை) தாராளமாகத் தந்திருந்தால் நீங்களும் தாராளமாக அணிந்து கொள்ளுங்கள். (அதாவது:)
- ஒருவர் தமது ஆடை (வகை)கள் அனைத்தையும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் கீழங்கியும் மேல்துண்டும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் கீழங்கியும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் கீழங்கியும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் மேல்துண்டும் அணிந்து தொழட்டும்.
- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் அரைக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்.
- மற்றொருவர் அரைக்கால் சட்டையும் (முழு நீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..
(இறுதியாகக் குறிப்பிட்ட அரைக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் என்பதற்கு பதிலாக) உமர் (ரலி) அவர்கள் அரைக்கால் சட்டையும் (விசாலமான) மேல்துண்டும் அணிந்து தொழட்டும் என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்.
366 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இஹ்ராம் கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணிய மாட்டார்; முழுக்கால் சட்டை அணிய மாட்டார்; முக்காடுள்ள மேலங்கி (இமதசஞஞநஊ) அணிய மாட்டார்; குங்குமப் பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடை களையும் அணிய மாட்டார். (காலுறைகள் அணிய மாட்டார்) காலணிகள் கிடைக்காத வர், காலுறைகள் அணியட்டும்.; காலுறை களைக் கணுக்கால்களுக்கு கீழே இருக்கும் படி கத்தரித்து அணிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
இதை சாலிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம் : 10
அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்.
367 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால்கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
(குறிப்பு: இதுபற்றி விரிவாக அறியக் காண்க: பாகம்-6, ஹதீஸ் எண்கள்: 5819-5822)
368 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் -மாஸ் (முலாமஸா), நபாத் (முனாபஃதா) எனும் இரு வியாபார முறைகளுக்குத் தடைவிதித்தார்கள். மேலும் ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற் கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள்.
ளகுறிப்பு: இவ்விரு முறைகளிலும் மர்ம உறுப்பு வெளியே தெரிவதற்கு வாய்ப்பு இருப்பதால் இவ்விதமாக ஆடை அணிவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். அடுத்து, லிமாஸ் அல்லது முலாமஸா என்பதற்குத் தொடுதல் என்று பொருள். ஒருவர் தாம் வாங்க விரும்பும் துணியைக் கையால் தொட்டுப் பார்த்து விட்டாலே வியாபார ஒப்பந்தம் நிறைவேறியதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்க்கும் போது குறையிருந்தாலும் வியாபாரத்தை ரத்துச் செய்யமுடியாத வணிக முறைக்கே முலாமஸா என்று பெயர். நபாத் அல்லது முனாபஃதா என்பதற்கு எறிதல் என்று பொருள். வாங்கவந்தவர் மீது துணியைத் தூக்கி எறிந்து விட்டாலே அதை அவர் வாங்கிவிட்டதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்த்த பின் குறைதென்பட்டாலும் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத வியாபார முறைக்கே முனாபஃதா என்பர். இந்த இரு முறைகளாலும் நுகர்வோர் பாதிக்கப்பட இடமுண்டு என்பதால் இவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.ன
369 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தலைமையில் ஹஜ்ஜத்துல் வதாவிற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின் போது இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க்கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அனுப்பினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்) பின்னால் அலீ (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) பொறுப்பு விலகிக் கொண்டது குறித்து பிரகடனம் செய்யும்படி(யும்) அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொறுப்பு விலகிக் கொண்டது குறித்தும்,) இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்ய மாட்டார் என்றும், இறையில்லம் கஅபாபவை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.
பாடம் : 11
மேலாடையின்றித் தொழுவது.
370 முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரே ஆடையை தம்மீது சுற்றியபடி தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய மேலாடை (துணி மாட்டும் கொளுகியில் மாட்டி) வைக்கப்பட்டிருந்தது. தொழுது முடித்ததும் அவர்களிடம் அபூஅப்தில்லாஹ்! உங்களது மேலாடையை (மாட்டி) வைத்து விட்டு (ஒரே ஆடையில்) தொழுகின்றீரே? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம்; உங்களைப் போன்ற விவரம் புரியாதவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே நான் விரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை நான் கண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 12
தொடை (மறைக்க வேண்டிய பகுதியா? என்பது) பற்றிய குறிப்பு.
தொடை மறைக்க வேண்டிய பகுதியாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி), ஜர்ஹத் (ரலி), முஹம்மத் பின் (அப்தில்லாஹ் பின்) ஜஹ்ஷ் (ரலி) ஆகியோர் வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் தமது தொடைப் பகுதியை திறந்தார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதில் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பே வலுவான அறிவிப்பாளர்தொடருடையதாகும்.
ஜர்ஹத் (ரலி) அவர்களின் அறிவிப்பு(ப் பிரகாரம் செயல்படுவதே) மார்க்கத்தை (கவனித்து)ப் பேணுவதாகும். இவ்வாறு கூறுவதன் மூலமே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்..
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த தோட்டத்திற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் நுழைந்த போது நபி (ஸல்) அவர்கள் (திறந்திருந்த) தமது முழங்கால்களை மூடிக் கொண்டார்கள்.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை எனது தொடை மீதிருக்க, அவர்கள் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். அப்போது எனது தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி) விட்டது.
371 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் மீது (ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு) போர் தொடுத்தார்கள். (அந்தப் போரின் போது) கைபருக்கு அருகில் (அதன் புறநகரில்) நாங்கள் (கடைசி இரவின்) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் சாலையில் (தமது வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முழங்கால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையில் உராய்ந்து கொண்டிருந்தது. பின்னர் அவர்கள் தமது தொடையிலிருந்த வேட்டியை விலக்கினார்கள். எந்த அளவிற்கென்றால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன். (பிறகு) அந்த நகருக்குள் அவர்கள் பிரவேசித்த போது, அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்கு வோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று மூன்று முறை கூறினார்கள். அந்த ஊர் மக்கள் தங்களது அலுவல்களுக்காப் புறப்ட்டு வந்த போது (எங்களைக் கண்டதும்), முஹம்மது (வந்து விட்டார்.) என்று கூறினர்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எமது நண்பர் களில் சிலர் (முஹம்மதும், அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்ற னர்) என்று அறிவித்தனர்.-
பிறகு (கைபர் வாசிகளை ஒடுக்கி) அதை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தோம். போர்க் கைதிகளைத் திரட்டப்பட்ட போது திஹ்யா (அல்கல்பீ- ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சென்று ஓர் அடிமைப்பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று சொன்னார்கள். அவ்வாறே திஹ்யா (ரலி) அவர்கள் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயை எனும் பெண்மணியைப் பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, அல்லாஹ்வின் தூதரே குறைழா, நளீர் குலத்தாரின் தலைவியான ஸஃபிய்யா பின் ஹுயை அவர்களை திஹ்யா அவர்களுக்கு வழங்கிவிட்டீர்களே! ஸஃபிய்யா, உங்களுக்கல்லாமல் வேறெவருக்கும் தகுதியாக மாட்டார் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அவரையும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள்! என்றார்கள். ஸஃபிய்யா அவர்களுடன் திஹ்யா (ரலி) அவர்கள் வந்தார்கள். ஸஃபிய்யா அவர்களைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ளதிஹ்யா (ரலி) அவர்களிடம்ன, கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப்பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
(இந்த ஹதீஸை அறிவிக்கின்ற) அனஸ் (ரலி) அவர்களிடம் ஸாபித் (அல்புனானீ -ரஹ்) அவர்கள், அபூஹம்ஸா! நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மணக் கொடையாக (மஹ்ர்) எனன கொடுத்தார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், அவரையே மணக் கொடையாக ஆக்கினார்கள்; அதாவது) அவரை விடுதலை செய்வதையே மணக் கொடையாக ஆக்கி அவரை மணந்து கொண்டார்கள் என்று பதிலளித்தார்கள். நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் (சத்துஸ் ஸஹ்பா எனுமிடத்தில்) இருந்த போது (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அலங்கார) ஆயத்தம் செய்து அன்னாரிடம் ஒப்படைத்தார்கள். புது மாப்பிள்ளையாக காலையில் எழுந்த நபி (ஸல்) அவர்கள், எவரிடமேனும் ஏதேனும் (உணவுப்) பொருள் இருப்பின் அதை (எம்மிடம்) கொண்டு வாருங்கள். அப்போது (அங்கிருந்த நபித்தோழர்களில்) ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரலானார். மற்றொருவர் நெய்யைக் கொண்டுவரலானார்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், (மற்றொருவர்) மாவு ( கொண்டு வரலானார் என்பது) பற்றிக் குறிப்பிட்டதாகவே நான் கருதுகிறேன்.-
அவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து ஹைஸ் எனும் (ம-தா போன்ற) ஒருவகை பலகாரத்தை தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலீமா-மண விருந்தாக அமைந்தது.
பாடம் : 13
ஒரு பெண் எத்தனை ஆடைகளை அணிந்து தொழ வேண்டும்?
இக்ரிமா (ரஹ்) அவர்கள், ஒரு பெண் ஒரே ஆடையில் தன் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டாலும் போதுமானதாகும். என்று கூறினார்கள்.
372 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள் அப்போது இறை நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) கலந்து கொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறிய மாட்டார்கள்.
பாடம் : 14
வேலைப்பாடு மிக்க ஆடையணிந்து தொழும் போது அதன் வேலைப்பாடு கவனத்தை ஈர்த்தால் (என்ன செய்வது?)
373 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
பாடம் : 15
சிலுவை பொறிக்கப்பட்ட அல்லது (உயிரினங்களின்) உருவப் படம் வரையப்பட்ட ஆடையுடன் தொழுதால் தொழுகை பாழாகிவிடுமா? என்பது பற்றியும், இவற்றுக்கு வந்துள்ள தடை பற்றியும்.
374 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், இந்த திரைச் சீலையை நம்மிடமி ருந்து அகற்றிவிடு! ஏனெனில், இதிலுள்ள உருவப் படங்கள் என் தொழுகையில் (என்னிடம்) குறுக்கிட்டுக் கொண்டேயிருக் கின்றன என்று சொன்னார்கள்.
பாடம் : 16
ஒருவர் நீண்ட பட்டு உடுப்பை அணிந்து தொழுது விட்டுப் பின்னர் அதைக் கழற்றி விடுவது.
375 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆண்கள் பட்டு அணிவது தடை செய் யப்படுவதற்கு முன்பு) நபி (ஸல்) அவர்களுக்கு (ஃபர்ரூஜ் எனும்) நீளமான பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுது விட்டுத்) திரும்பியதும், அதை வெறுப்பவர்கள் போன்று கடுமையாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று எனக் கூறினார்கள்.
பாடம் : 17
சிவப்பு நிற ஆடையணிந்து தொழுவது (செல்லும்).
376 அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ-ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின் போது அப்தஹ் எனுமிடத்தில்) தோ-னாலான சிவப்பு நிற கூடாரமொன்றில் (தங்கியிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ (அங்கசுத்தி) செய்து விட்டு எஞ்சிய தண்ணீரை பிலால் (ரலி) அவர்கள் எடுத்துவருவதைக் கண்டேன். மேலும்யும், அந்த எஞ்சியத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிது கிடைத்த ஒருவர் அதைத் (தமது உடம்பில்) தடவிக் கொண்டார்.
பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை எடுத்து வந்து அதை ஊன்றுவதை நான் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேலங்கியை (தமது கணைக்கால்கள் தெரியுமளவிற்கு) உயர்த்திப்பிடித்தபடி வெளியில் வந்து (தடுப்பாக வைக்கப் பட்டிருந்த) அந்த கைத்தடியை நோக்கி மக்களுடன் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அந்த கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால் நடைகளும் கடந்து செல்வதையும் நான் பார்த்தேன்.
பாடம் : 18
மாடியிலும் மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
பனிக்கட்டியின் மீதும் பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லை; அதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில் மூத்திரம் (போன்றவை) இருந்தாலும் சரியே! ஆனால், தொழுபவருக்கும் அந்த பாலத்திற் கும் இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாச-ன் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் பனிக் கட்டியின் மேல் நின்று தொழுதார்கள்.
377 அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்களில் சிலர்) சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் பயன் படுத்திய) அந்த சொற்பொழிவு மேடை (மிம்பர்) எதனால் செய்யப்பட்டது? என்று வினவினர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், மக்களில் என்னைவிட (இது பற்றி) நன்கு தெரிந்தவர்கள் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. அது ஒரு வகை சவுக்கு மரத்தினால் செய்யப்பட்டதாகும்; அதை இன்ன பெண்மணியின் அடிமையான இன்னாரே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக செய்(து கொடுத்)தார்.
அது செய்யப்பட்டு (உரிய இடத்தில்) வைக்கப்பட்ட போது அதன் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறி) நின்று கிப்லாவை முன்னோக்கித் (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) சொன்னார்கள். மக்களும் அன்னாருக்குப் பின்னால் (தொழுகையில்) நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குர்ஆன் வசனங்களை) ஓதிவிட்டு, ருகூஉச் செய்தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் ருகூஉச் செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி (நிமிர்ந்து நின்றுவிட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து தரையில் (இறங்கி) சஜ்தா செய்தார்கள். பிறகு திரும்பவும் மேடைக்குச் சென்று ஓதினார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள். அதன் பின்னர் தலையை உயர்த்தி (நிமிர்ந்து நின்று விட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து வந்து தரையின் மீது சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். இது தான் நடந்த நிகழ்ச்சியாகும்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்.
அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறுகையில், (தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள், (பின் பற்றித் தொழுத) மக்களைவிட உயரமான இடத்தில் (நின்று கொண்டு) இருந்தார்கள் என்பது பற்றிய இந்த ஹதீஸின் கருத்திலிருந்து மக்களைவிட உயரமான இடத்தில் இமாம் இருப்பதில் தவறில்லையென்றே நான் கருதுகின்றேன் என்றார்கள். அப்போது நான் (இது சம்பந்தமாக) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் ஏராளமாகக் கேட்கப்படுகிறதாமே! அவரிடமிருந்து இந்த ஹதீஸை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள், இல்லை (நான் அவரிடமி ருந்து இந்த ஹதீஸை செவியுறவில்லை) என்று பதிலளித்தார்கள்.
378 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால் அல்லது தோள்பட்டை கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள் ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காக இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள்.
(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கிவந்தார்கள். அப்போது மக்கள், ஒரு மாதகாலம் தங்கள் மனைவிமார்களை நெருங்க மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இந்த மாதத்திற்கு இருத்தொன்பது நாட்கள்தாம் என்று கூறினார்கள்.
பாடம் : 19
சஜ்தா செய்யும் போது தொழுது கொண்டிருப்பவரின் ஆடை அவருடைய மனைவியின் மேல் பட்டுவிட்டால் (அவருடைய தொழுகை பாழாகிவிடுமா?)
379 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுக்கு எதிரில் நான் படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது சில நேரங்களில் அவர்களது ஆடை என் மீது படும். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.
பாடம் : 20
பாயில் தொழுதல்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கப்பலில் நின்ற வண்ணம் தொழுதார்கள்.
(நீ கப்பலில் செல்லும் போது) உன் சகாக்களுக்கு சிரமம் ஏற்படாமலிருக்குமானால் நின்ற நிலையில் கப்பல் செல்லும் திசையிலேயே தொழுது கொள்; அவர்களுக்கு சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
380 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில்
சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டி ருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.
பாடம் : 21
பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பில் தொழுவது.
381 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பின் மீது தொழுவார்கள்.
பாடம் : 22
படுக்கை விரிப்பில் தொழுவது.
அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
382 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (ப்படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் சஜ்தா செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் சஜ்தாவிற்கு வரும் போது என்னை தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.
383 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் படுத்திருக்கும்) எனது படுக்கை விரிப்பில் தொழுவார்கள். அப்போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே ஜனாஸாவைப் போன்று குறுக்கே படுத்திருப்பேன்.
384 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாமும் தம் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களும் உறங்கும் படுக்கை விரிப்பில் (இரவில்) தொழுவார்கள். அப்போது (என் சிறிய தாயாரான) ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்கள் சஜ்தா செய்யும்) கிப்லா திசைக்கும் இடையே குறுக்கே படுத்திருப்பார்கள்.
பாடம் : 23
கடுமையான வெப்பநேரத்தில் (தாம் அணிந்திருக்கும்) துணியின் மீது சிரவணக்கம் செய்வது.
நபித்தோழர்கள் (தாம் அணிந்திருக்கும்) தலைப்பாகையின் (ஓர் ஓரத்தின்) மீதும் தொப்பியின் மீதும் (வெயில் நேரத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்; இருகைகளையும் (நிலத்தில் ஊன்றும் போது) சட்டைக் கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
385 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (நண்பகல் நேரத்தில்) தொழும் போது எங்களில் சிலர் கடுமையான வெப்பம் காரணமாக ஆடையின் ஒரு பகுதியை சிரவணக்கம் (சஜ்தா) செய்யுமிடத்தில் வைத்துக் கொள்வார்கள்.
பாடம் : 24
செருப்பணிந்து தொழுதல்.
386 சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர் களிடம் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 25
காலுறைகள் அணிந்து தொழுதல்.
387 ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக்கையால் தடவி) தமது காலுறைகள் மீது மஸ்ஹுச் செய்தார்கள் பிறகு (காலுறை களுடனேயே) எழுந்து தொழுவதை நான் கண்டேன். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(காலுறைகளின் மீது மஸ்ஹுச் செய்து தொழலாம் என்ற கருத்துடைய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் முதலான) மக்களுக்கு ளஜரீர் (ரலி) அவர்களின் ன இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளிப்பதாய் அமைந்தது. ஏனெனில் ஜரீர் (ரலி) அவர்கள் ளநபி (ஸல்) அவர்களின் காலத்தில்னகடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார்.
388 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். (அவர்கள் உளூவின் இறுதியில், தமது கால்களைக் கழுவாமல்) தமது காலுறைகள் மீது (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்து)விட்டு (காலுறைகளுடனேயே) தொழுதார்கள்.
பாடம் : 26
(தொழுகையின் ஓர் அங்கமான) சிரவணக்கத்தை முழுமையாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் விளைவு).
389 அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தமது (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (பின் அல்யமான்-ரலி) அவர்கள், அவர் தொழுது முடித்த போது நீர் (உரியமுறையில்) தொழவில்லை என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், (இதே நிலையில்) நீர் இறந்து விட்டால் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழி முறைக்கு மாற்றம் செய்தவராகவே இறக்கின்றீர் என்று சொன்னதாகவும் நான் எண்ணுகிறேன்.
பாடம் : 27
சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது இரு புஜங்களையும் (விலாவோடு சேர்க்காமல் அவற்றை) இடைவெளிவிட்டு வைக்க வேண்டும்.
390 அப்துல்லாஹ்பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (சிரவணக்கத்தில்) அவர்களின் இரு அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.
இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 28
(இறையில்லம் கஅபாவின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு.
(சிரவணக்கம் செய்யும் போது) ஒருவர் தமது இருகால் (விரல்)களின் நுனிகளை கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறினார்கள்.
391 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனுடைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு. எனவே (இப்படிப்பட்டவர் மீது) அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பி(னைப் பாழாக்கும் விஷயத்தி)ல் அல்லாஹ்வுக்கு(ம் அவனுடைய தூதருக்கும்) வஞ்சனை செய்து விடாதீர்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
392 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி, நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்; மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
393 மைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், அபூஹம்ஸா! ஓர் அடியாரின் உயிரையும் பொருளையும் தடைசெய்வது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு; மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு. என்று கூறினார்கள்.
பாடம் : 29
மதீனா வாசிகள், ஷாம்வாசிகள், கிழக்கில் வசிப்பவர்கள் ஆகியோரின் தொழும்திசை (கிப்லா).
கிழக்கிலோ மேற்கிலோ (மதீனா வாசிகளுக்கும் ஷாம் வாசிகளுக்கும்) கிப்லா இல்லை.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (மதீனாவாசிகளிடம்), மலஜலம் கழிக்கும் போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்காதீர்கள். அப்போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ, திரும்பிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
(குறிப்பு: இந்தியா போன்ற நாடுகளுக்கு மேற்குத் திசையில் தான் கிப்லா அமைந்துள்ளது. இது மதீனாவாசிகளைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும் என்பதை நினைவில் கொள்க!)
394 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் கிப்லா (கஅபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.
இதை அறிவித்த அபூஅய்யூப் (கா-த் பின் ஸைத்-ரலி) அவர்கள், நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்த போது (அங்குள்ள) கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம் ஆகவே நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்; அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம் என்று சொன்னார்கள்..
பாடம் : 30
இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக (கிப்லாவாக) வைத்துக் கொள்ளுங்கள் எனும் (2:125 ஆவது) இறைவசனத் தொடர்.
395 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்ராவிற்காக (இஹ்ராம் கட்டிய) ஒருவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார். ஆனால் ஸஃபா - மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள லாமா? என்று நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்த போது கஅபாவை ஏழுமுறைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பிறகு ஸஃபா - மர்வாவிற்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் (சயீ) ஓடினார்கள். (ஆகவே, நாமும் அவ்வாறே செய்யவேண்டும்.) என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன் மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள்.
396 அம்ர் பின் தினார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (இதுபற்றி) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், ஸஃபா-மர்வா(மலை)களுக்குகிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடாதவரை மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கவே கூடாது என்று கூறினார்கள்.
397 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்களிடம், இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் நுழைந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்து கொண்டிருந்த போது நான் அங்கு சென்றேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் இரு கதவுகளுக்கிடையே நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், கஅபாவிற்குள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம்; நீங்கள் கஅபாவிற்குள் நுழையும் போது இடப்பக்கமிருக்கின்ற இரு தூண்களுக்கு மத்தியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பிறகு வெளியே வந்து கஅபாவின் கதவை முன்னோக்கியபடி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்றார்கள்.
398 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றி கொண்ட நாளில்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும் பிராத்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு, இது தான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.
பாடம் : 31
எங்கிருந்தாலும் (தொழும் போது) கிப்லா (-கஅபாவின்) திசையையே முன்னோக்க வேண்டும்.
நீங்கள் கிப்லாவை முன்னோக்கித் (தொழுகையில்) தக்பீர் (தஹ்ரீமா) சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்
399 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு வந்து) பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் (ஜெரூசலே மிலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) கஅபாவை நோக்கித் தாம் திருப்பப்பட வேண்டுமென்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே (தொழுகையில் கஅபாவை முன்னோக்கும் படி ஆணையிட்டு) அல்லாஹ், (நபியே!) நாம் உமது முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்... எனும் (2:144 ஆவது) வசனத்தை அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் கஅபாவை முன்னோக்கி(த் தொழலா)னார்கள். (இதைக் கண்ட) அறிவற்ற மக்கள்: (முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது? என்று கூறினர். (அதற்கு அல்லாஹ்,) (நபியே!) கூறுக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான். (2:142) என்று சொன்னான்.
- இந்த வசனத்திலுள்ள அறிவற்ற மக்கள் எனும் சொற்றொடர் யூதர்களையே குறிக்கின்றது. -
(கஅபாவை நோக்கி கிப்லா மாற்றம் நடை பெற்ற அந்தத் தொழுகையில்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதர் தொழுதார். தொழுது விட்டு அவர் புறப்பட்டு(ச் செல்லும் வழியில்) பைத்துல் மக்திஸை நோக்கி அஸ்ர் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த அன்சாரிகளில் சிலரைக் கடந்து சென்றார். அப்போது அவர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன்; அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன் என்றார். உடனே (தொழுகையிலிருந்த) அம்மக்கள் கஅபாவின் திசையில் திரும்பிக் கொண்டார்கள்
400 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (அமர்ந்து சைகை செய்தவாறு,) அது செல்கின்ற திசையை நோக்கி (உபரித் தொழுகைகளை) தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையானத் தொழுகையினை அவர்கள் தொழநாடும் போது (வாகனத்திலிருந்து) இறங்கி, கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்.
401 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்து விட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-
(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்த போது அவர்களிடம், இந்தத் தொழுகையின் போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்) என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்து விட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பிய போது, ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடு கின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்து விடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்த தாகவோ குறைத்து விட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்யட்டும் என்று கூறினார்கள்.
பாடம் : 32
கிப்லா குறித்து வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாகக் கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும் போது) அந்தத் தொழுகையைத் திருப்பித் தொழவேண்டியதில்லை என்பதும்.
நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுத்து விட்டு மக்களை நோக்கி அமர்ந்த (நபித் தோழர்களால் நினைவூட்டப்பட்டதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதிருக்கிறார்கள்.
402 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்:
1.. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடத்தை (கஅபாவை) தொழும் திசையாக (கிப்லாவாக) நாம் ஆக்கிக் கொள்ள லாமே! என்று கேட்டேன். அப்போது, இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக (கிப்லாவாக) வைத்துக் கொள் ளுங்கள் எனும் (2:125 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
2. பர்தா (சட்டம்) குறித்த இறைவசனமும் (என் கருத்துக்கு இசைவாகவே அருளப் பெற்றது.) :
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மனைவி மார்களை பர்தா அணியும்படி தாங்கள் பணிக்கலாமே! ஏனெனில் அவர்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) உரையாடலாம் என்று சொன்னேன். அப்போது (பர்தா (சட்டம்) குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.
3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது நான் அவர்களிடம், இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்து விட்டால், உங்களைவிடச் சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறே) இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
403 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (மஸ்ஜித்) குபாவில் சுப்ஹுத் தொழுகையை தொழுது கொண்டிருந்த போது அவர் களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கடந்த இரவொன்றில் கஅபாவைத் தொழுகையில் முன்னோக்கும்படி ஆணையிட்டு அவர்களுக் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே நீங்களும் கஅபாவையே முன்னோக்கித் தொழுங்கள்! என்று கூறினார். உடனே (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுது கொண்டிருந்த அவர்கள் கஅபாவை நோக்கி அப்படியே தொழுகையிலேயே) சுழன்று (திரும்பிக்) கொண்டனர்.
404 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழு(வித்)து விட்டார்கள். (தொழுகை முடிந்து திரும்பியமர்ந்த நபியவர்களை நோக்கி) மக்கள், தொழுகையில் (அதன் ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்)? என்று கேட்டார்கள். மக்கள், நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழு(வித்) தீர்கள் (அதனால் தான் வினவினோம்.) என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வது போன்று) தமது கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கித் திரும்பி மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.
பாடம் : 33
பள்ளி வாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது.
405 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டி ருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு உங்களில் ஒருவர் தொழுகையில் நின்று கொண்டிருக்கும் போது அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார் அல்லது அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான். ஆகவே, எவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும் என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
406 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி) ய பின்னர், உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) உமிழவேண்டாம். ஏனெனில், அவர் தொழும் போது அல்லாஹ் அவரது முகத்திற்கெதிரே இருக்கின்றான் என்று கூறினார்கள்.
407 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாச-ன்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் மூக்குச் சளியை அல்லது எச்சிலை அல்லது காறல் சளியைக் கண்டார்கள். உடனே அதை சுரண்டி (சுத்தப்படுத்தி)விட்டார்கள்..
பாடம் : 34
பள்ளியில் (சிந்தப்பட்ட) மூக்குச் சளியை சிறுகற்களால் சுரண்டி (அப்புறப்படுத்தி) விடுதல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அருவருப்பானவற்றை நீ மிதித்து விட்டால் அது பச்சையாக இருந்தால் உடனே அதை கழுவிக் கொள்! அது காய்ந்து இருந்தால் (கழுவ) வேண்டியதில்லை என்றார்கள்.
408,409 அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் (கிப்லாத் திசை) சுவரில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு, உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே (கிப்லாத்திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்.. தமது இடப் புறமோ தமது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
பாடம் : 35
தொழும் போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்பலாகாது.
410,411 அபூஹுரைரா (ரலி) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பின்னர், உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழவேண்டாம்; தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்; தம் இடப்புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும் என்று சொன்னார்கள்.
412 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கு முன்புறமோ தமக்கு வலப்புறமோ உங்களில் எவரும் துப்பக் கூடாது. எனினும் தமக்கு இடப் புறமோ காலுக்கடியிலோ (துப்பலாம்).
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 36
இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம்.
413 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறை நம்பிக்கையாளர் (மூமின்) தொழுது கொண்டிருக்கும் போது தம் இறைவனிடமே அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே அவர் தமது முன்புறத்திலும் உமிழ வேண்டாம்; தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்.. எனினும் இடப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
414 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் கிப்லாத் திசைச் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றினால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு (தொழுகையிலிருக்கும்) ஒருவர் தம் முன்புறமோ அல்லது வலப் புறமோ துப்பக்கூடாது என தடைவிதித்து விட்டு, எனினும் அவர் தமது இடப்புறமோ அல்லது இடப் பாதத்திற்கு கீழேயோ உமிழட்டும் என்று சொன்னார்கள்.
இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 37
பள்ளிவாச-னுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம்.
415 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளி வாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 38
பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) சளியை மண்ணுக்குள் புதைத்து விட வேண்டும்.
416 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும் போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அதேபோல்) அவர் தம் வலப் புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்து விட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 39
(தொழுது கொண்டிருக்கும்) ஒருவரை எச்சில் முந்திக் கொள்ளும் போது அவர் தமது ஆடையின் ஓர் ஓரத்தைப் பிடித்து (அதில் உமிழ்ந்து)கொள்ளலாம்.
417 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லாத் திசையில் (உள்ள சுவரில்) சளியைக் கண்டார்கள். (இதைக் கண்ட) உடன் நபி (ஸல்) அவர் களிடம் வெறுப்புக் காணப்பட்டது அல்லது இந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதும் அதன் மீது அவர்கள் காட்டிய வேகமும் நேரடியாகத் தெரிந்தது. உடனே அவர்கள் அதைத் தமது கரத்தால் சுரண்டி விட்டு, உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும் போது தமது கிப்லா திசையில் கட்டாயமாக அவர் உமிழ வேண்டாம்.. எனினும் அவர் தம் இடப் புறமோ அல்லது வலப் புறமோ தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழ்ந்து கொள்ளட்டும். என்று கூறினார்கள். பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சுருட்டி(க் கசக்கி)விட்டு அல்லது அவர் இவ்வாறு செய்து கொள்ளலாம் என்றார்கள்.
பாடம் : 40
(தொழுகையை முழுமையாக நிறைவேற்றா) மக்களிடம் இமாம், தொழுகையை குறைவின்றிப் பூர்த்தி செய்யுமாறு அறிவுரை கூறுவதும், கிப்லா பற்றிய குறிப்பும்.
418 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த (கிப்லா) திசையில் முன்னோக்கிக் கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் நீங்கள் செய்வதையெல்லாம் நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களின் பணிவும் (சஜ்தாவும்) உங்களின் குனிவும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
419 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக ஓர் தொழுகையை தொழுவித்த பின்னர், சொற்பொழிவு மேடை (அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக ஓர் தொழுகையை தொழுவித்த பின்னர், சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி தொழுகையைப் பற்றியும் (அதன் முக்கிய நிலைகளில் ஒன்றான) ருகூஉ பற்றியும் (அவற்றை குறைவின்றி நிறைவேற்றுமாறு) கூறினார்கள். அப்போது, (உங்களை முன்புறமாக) நான் காண்பது போன்றே எனது முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காண்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
பாடம் : 41
(ஒரு பள்ளிவாசல் குறித்து இது) இன்ன குலத்தாரின் பள்ளிவாசல் என்று கூறலாமா?
420 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே ஹஃப்யா எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை சனிய்யத்துல் வதா எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெ-யவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வார்கள்.
பாடம் : 42
பள்ளிவாசலுக்குள் காசு பணங்களைப் பங்கீடு (தானம்) செய்வதும், பழக்குலை களைப் தொங்கவிடுவதும் (செல்லும்).
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
அல்கின்வு எனும் சொல்லுக்கு, பழக் குலை என்று பொருள். இருமை : கின்வானி. இதன் பன்மை கின்வான் என்பதேயாகும். (வாய்பாட்டில்) ஸின்வ், ஸின்வானி எனும் சொற்களைப் போனறே (இதுவும் அமைந் துள்ளது).
421 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி (கப்பம்) கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், இதைப் பள்ளி வாச-ல் பரப்பி வையுங்கள் என்று உத்தரவிட்டார்கள். -அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏறிட்டுப் பார்க்காமல் தொழுகைக்காச் சென்றார்கள். தொழுகையை முடித்து விட்டு அந்த செல்வம் நோக்கி வந்து (அதனருகில்) அமர்ந்து கொண்டு ஒருவர்விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தையார்) அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப்போரில் தங்களால் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கின்றேன் என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளி) அள்ளிப் போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவரை இதை எனக்குத் தூக்கிவிடப் பணியுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இல்லை (நான் எவரையும் பணிக்க மாட்டேன்) என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீங்களாவது என் (தோள்) மீது தூக்கிவையுங்கள் என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், இல்லை (முடியாது) என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அதிலிருந்து சிறிதைக் கொட்டிவிட்டு பிறகு அதை தூக்கிச் சுமக்க முயன்றார்கள். (அப்போதும் அவர்களால் அதை தூக்க முடியவில்லை.) எனவே ள நபி (ஸல்) அவர்களிடம்ன, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கிவிடுமாறு இவர்களில் ஒருவரைப் பணியுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இல்லை (பணிக்க மாட்டேன்) என்று சொல்லிவிட்டார்கள். நீங்களாவது என்(தோள்) மீது இதைத் தூக்கி வையுங்கள் என்று கேட் டார்கள். நபி (ஸல்) அவர்கள் இல்லை (முடியாது) என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதிலிருந்து இன்னும் சிறிதைக் கீழே கொட்டிவிட்டு அதைத் தூக்கி தமது தோள்களுக்கிடையில் வைத்துக் கொண்டு நடக்கலானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டேயிருந்தார்கள அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம்கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்து விட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இடத்தை விட்டு எழுந்தார்கள்.
பாடம் : 43
பள்ளிவாசலுக்குள் வைத்து ஒருவர் (மற்றவரை) விருந்துக்கு அழைப்பதும், பள்ளிவாச-லேயே அதை ஏற்றுக் கொள்வதும் (குற்றமல்ல).
422 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களை பள்ளிவாச-ல் இருக்கக் கண்டேன். அவர்களுடன் மக்கள் சிலரும் இருந்தனர். (அவர்களுக்கு முன்னால் சென்று) நான் நின்றேன். உடனே, அவர்கள் என்னிடம், உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உணவு அருந்துவதற்காகவா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் இருந்தவர்களிடம், எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் முன்னால் நடந்தேன்.
பாடம் : 44
பள்ளிவாசலுக்குள் வைத்து வழக்குகளுக்கு தீர்ப்பளிப்பதும், (தகுந்த சாட்சிகளின்றி மனைவியர் மீது கணவர்கள் விபசாரக் குற்றம் சாட்டுவதன் பேரில்) கணவர்- மனைவியருக்கிடையே சாப அழைப்புப் பிரமாணம் (--ஆன்) செய்விப்பதும் (செல்லும்).
குறிப்பு: தன் மனைவி மற்றொரு ஆடவனுடன் தகாத உறவு கொண்டுவிட்டாள் என்று கணவன் குற்றம் சுமத்தி, இதற்கு நான்கு சாட்சிகளையும் கொண்டு வராத போது மனைவியும் அக்குற்றத்தை மறுத்தால், அவ்விருவரும் நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தாங்கள் உண்மையானவர்கள் எனக் கூற வேண்டும். ஐந்தாவது தடவையில் தாம் பொய் சொல்லி இருந்தால் தம் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று இருவரும் கேட்க வேண்டும். இதுவே லிஆன் எனப்படும். இவ்வாறு செய்த பின் அவ்விருவரும் ஒரு காலத்திலும் சேர முடியாது)
423 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ளநபி (ஸல்) அவர்களிடம் வந்துன, அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனை (தகாத உறவு கொண்டபடி இருக்க)க் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? என்று கேட்டார். (இந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.) எனவே, பள்ளி வாசலுக்குள் அத்தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (-லிஆன்) செய்தனர். அப்போது நான் அந்த இடத்தில் ளநபி (ஸல்) அவர்களுக்கு அருகில்ன இருந்தேன்.
பாடம் : 45
(அழைப்பின் பேரில்) அடுத்தவர் வீட்டுக்குச் சென்ற ஒருவர் அவ்வீட்டில் தாம் விரும்பிய இடத்தில் தொழுது கொள்ளலாமா? அல்லது வீட்டுக்காரர் பணித்த இடத்தில் தொழ வேண்டுமா? என்பதும், (வீட்டுக்காரர் குறிப்பிடும் இடத்தில் தொழும் போது அவ்விடத்தின் தூய்மை பற்றித்) துருவி விசாரிக்க வேண்டியதில்லை என்பதும்.
424 இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(எனது வீட்டில் ஓர் இடத்தில் தொழுவித்து அந்த இடத்தை எனது தொழுமிடமாக்க வருமாறு நான் அழைத்ததன் பேரில்) நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்கள். (வீட்டுக்குள் வந்ததும்) உமது வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீர் விரும்புகின்றீர்? என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் (குறிப்பிட்ட) ஓர் இடத்தைக் காட்டியதும் (அந்த இடத்தில் நின்று) நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறி(த் தொழலா)னார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால், அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.
பாடம் : 46
வீடுகளிலேயே தொழுமிடத்தை அமைத்துக் கொள்வது.
பராஉபின் ஆஸிப் (ரலி) அவர்கள் தமது வீட்டிலுள்ள தொழுமிடத்தில் கூட்டாகச் சேர்ந்து (ஜமாஅத்தாக) தொழுதார்கள்.
425 மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப்போரில் கலந்து கொண்ட அன்சாரிகளில் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்போய்)விட்டது. நான் என் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி வருகிறேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் அவர்களுக்குமிடையே உள்ளபள்ளத் தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழவேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என ஆசைப்படு கிறேன் என்று சொன்னார்கள். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறே நான் செய்வேன் என்று கூறினார்கள்.
இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களே கூறுகின்றார்கள்:
(மறுநாள்) முற்பகல் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (எனது இல்லத்துக்குள்) நுழைய அ.னுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன். வீட்டில் நுழைந்ததும். உட்காராமலேயே, உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டு மென விரும்புகிறீர்கள்? என்று (என்னிடம்) கேட்டார்கள். உடனே நான் அவர்களுக்கு வீட்டின் ஒரு பகுதியைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) நின்று தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)து விட்டு சலாம் கொடுத்தார்கள்.
(கொத்துக் கறியும் மாவும் கலந்து) நபி (ஸல்) அவர்களுக்கு நாங்கள் தயாரித்து வைத்திருந்த ஒரு வகை உணவைச் சாப்பிட்டு விட்டுத் தான் செல்லவேண்டுமென நாங்கள் அவர்களை வற்புறுத்தினோம். கலைந்து சென்ற எனது குடும்பத்தார் பலர் மீண்டும் வீட்டில் குழுமிவிட்டனர். அப்போது அவர்களில் ஒருவர், மாலிக் பின் துகைஷின் அல்லது இப்னு துக்ஷுன் எங்கே என்று கேட்டார். மற்றொருவர், அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைக் காண அவர் வரவில்லை) என்று சொன்னார்.
(இதைச் செவியுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு சொல்லாதே! அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை(லாயிலாஹ இல்லல்லாஹ்) என அவர் சொல்லிவிட்டிருப்பதை நீ பார்க்கவில்லையா? என்று கேட்டார்கள். அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறிவிட்டு, அவரது முகமும் அவரது அபிமானமும் நயவஞ்சகர்களை நோக்கியே அமைந்திருக்கக் காண்கிறோமே? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்து விடுகிறான் என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ- ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு நான் பனூசாலிம் குலத்தாரும் அவர்களின் பிரமுகர்களில் ஒருவருமான ஹுசைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களின் ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவருடைய ஹதீஸை ஹுசைன் பின் முஹம்மத் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
பாடம் : 47
பள்ளியில் நுழையும் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் வலப் பக்கத்திற்கு முதலிடம் அளித்தல்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வலக் காலை முத-ல் வைத்துப் பள்ளியில் நழை வார்கள். வெளியேறும் போது தமது இடக் காலை முத-ல் வைத்து வெளியேறுவார்கள்.
426 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும் போதும், தலைவாரும் போதும், செருப்பணியும் போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள்அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.
பாடம் : 48
அறியாமைக் காலத்தில் வாழ்ந்த இணை வைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப் படலாமா? அவ்விடத்தில் பள்ளி வாசல் கட்டலாமா? (என்றால் கட்டலாம்.)
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (மரணப்படுக்கையில் இருந்த போது), அல்லாஹ் யூதர்களைத் தம் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.
சவக்குழி (கப்று)களின் (அருகில் அல்லது அவற்றை நோக்கி அல்லது அவற்றின்)மீது தொழுவது தகாத செயலாகும்.
ஒரு சவக்குழிக்கு அருகில் தொழுது கொண்டிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் சவக்குழி(களைத் தவிருங்கள்! அதன் அருகில் தொழாதீர்கள்) சவக் குழி(களைத் தவிருங்கள்; அதன் அருகில் தொழாதீர்கள்) என்று கூறினார்கள். ஆனால், (அங்கு தொழுத தொழுகையை) திருப்பித் தொழுமாறு அனஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் பணிக்கவில்லை.
427 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமைநாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள் என்று கூறினார்கள்.
428 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்த போது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் பனூ அம்ர் பின் அவ்ஃப் என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரி டம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன் றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் வாகனம் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது.- தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்று வார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள்* - பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்த போது), பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம் என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர். நான் உங்களிடம் கூறப்போனவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளி வாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும் படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாச-ன் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.
பள்ளிவாச-ன் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். ரஜ்ஸ் எனும் ஒரு வித யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர்.
இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே (மறுமையின் நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர் களாக) இருந்தார்கள்.
பாடம் : 49
ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது.
429 ஷுஅபா (பின் அல்ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவித்துவந்தார்கள். பின்னர் பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு முன்னால் நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறு) ஆட்டுத் தொழுவங் களில் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று (காலவரையறையுடன் சேர்த்துக்) கூறக் கேட்டேன்.
பாடம் : 50
ஒட்டக(த் தொழுவ)ங்களுள்ள இடங்களில் தொழுவது.
430 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை நோக்கித் தொழுது விட்டு, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
பாடம் : 51
தனக்கு முன்னால் அடுப்போ நெருப்போ அல்லது (பிறரால்) வணங்கப்படும் எதோ ஒன்று இருக்கும் போது அவற்றை (சட்டை செய்யாமல்) ஏகயிறை அல்லாஹ்வை எண்ணித் தொழுவது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் தொழுது கொண்டிருக்கும் போது எனக்கு நரகத்தை எடுத்துக் காட்டப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
431 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சூரிய கிரகணத் தொழுகையை) தொழு(வித்)தார்கள். பிறகு, (இத்தொழுகையில் நான் இருந்த போது) எனக்கு நரகத்தை எடுத்துக்காட்டப்பட்டது. இன்று (நான் கண்டது) போன்று படு (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் ஒரு போதும் கண்டதில்லை என்று சொன்னார்கள்.
பாடம் : 52
அடக்கத்தலங்களில் தொழுவது வெறுக்கப்பட்ட காரியமாகும்.
432 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.
பாடம் : 53
(அக்கிரமம் புரிந்த மக்கள்) பூமிக்குள் புதையுண்ட இடங்களிலும் (பொதுவாக இறைவனின்) வேதனை இறங்கிய இடங்களிலும் தொழுவது.
(நும்ரூதும் அவனுடைய மக்களும் உயிருடன்) புதையுண்ட (இராக்கிலுள்ள) பாபில் எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்கள் தொழுவதை (விரும்பவில்லை; அதை) வெறுத்தார்கள் என்று கூறப்படுகிறது.
433 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ர் வாசிகளைக் குறித்து), இவர்களைத் தீண்டியது போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று (அஞ்சி) அழுதபடியே தவிர, வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள். உங்களால் அழமுடியா விட்டால் அந்த இடத்திற்கே செல்லாதீர்கள்! என்று (ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது எங்களிடம்) கூறினார்கள்.
பாடம் : 54
கிறிஸ்தவ ஆலயங்களில் தொழலாமா?
உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத் தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உருவச் சிலைகள் இல்லாத கிறிஸ்தவ ஆலயங்களில் தொழுவார்கள்.
434 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபிசீனிய நாட்டில் தாம் கண்ட மரியா என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே நல்ல அடியார் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள் என்று சொன்னார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites