அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

தலையங்கம்: இதுவல்லவா ராஜதந்திரம்...

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக சிபு சோரன் வாக்களித்ததற்காக,​​ ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவரது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது பாரதிய ஜனதா கட்சி.​ ""நீங்கள் ஆட்சி அமைத்துக் கொள்ளுங்கள்,​​ நாங்கள் ஆதரவு தருகிறோம்.​ எனக்குத் துணை முதல்வர் பதவி தாருங்கள் போதும்'' என்று முதல்வர் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சொன்னவுடன்,​​ ஆதரவு வாபஸ் என்கிற தீர்மானத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டுவிட்டது.​ இந்த மனமாற்றம் பாஜக எதிர்பாராதது.​ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி பாஜக தலைமை ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது,​​ பாரதிய ஜனதாவின் பலவீனத்தைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ,​​ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இன்னொரு தடால் பல்டி அடித்துவிட்டது.​ முதல்வராகத் தனது தந்தை சிபுசோரனே தொடர்வார் என்கிற மறு அறிவிப்பை வெளியிட்டார் ஹேமந்த்.​ இப்போது சிபு சோரன் ஜாலியாக சிரித்தபடி முதல்வராகத் தொடர,​​ பாஜக தனது முகத்தில் அசடு வழிய நேற்று சிபு சோரன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறது.சிபு சோரன்,​​ காங்கிரஸýக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக வருத்தம் தெரிவித்த அவரது மகன் ஹேமந்த்,​​ இது தெரியாமல் நடந்த பிழை என்று தெரிவித்ததுடன்,​​ அதற்குச் சொன்ன காரணம் என்ன தெரியுமா?​ ​ "மிகவும் மோசமான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துவிடக்கூடாது.​ பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டால் அதன் பின்னர் அங்கே காங்கிரஸ் தனது ஆட்சியை அமைத்துவிடும்' ​ என்பதுதான் சிபு சோரன் தரப்பின் வாதம்.​ அதாவது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்து விடக்கூடாது என்கிற சகதாபம்.​ ஆனால்,​​ மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமைத்துவிடலாகாது என்கிற ஆவேசம்.​ பலே,​​ இதுவல்லவா அரசியல் நேர்மை!ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் ஆதரவுடன் சிபு சோரன் ஆட்சி தொடரும் என்றும்,​​ அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் பதவியையும் தன் மகனுக்கு துணை முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டு,​​ மத்திய அமைச்சர் பதவிக்கு சிபு சோரன் வருவார் என்றும் பேச்சு எழுந்தது.​ இன்னொரு பக்கம்,​​ ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமைப்பார்கள் என்றும் பேசப்பட்டது.​ இப்போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல,​​ எதுவுமே நடக்காததுபோல சிபுசோரன் முதல்வராகத் தொடர்கிறார்.​ பாரதிய ஜனதா வாய்மூடி கண்கட்டி,​​ காதுகளைப் பொத்திக் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறது.​ இதுவல்லவா அரசியல் நேர்மை!மத்தியில் ஆதரவு,​​ மாநிலத்தில் எதிர்ப்பு என்பது இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளும் மேற்கொண்டுள்ள அதிசயக் கொள்கை.​ அமைச்சரவையில் பங்குபெறாமல்,​​ பெரிதாக ஆதாயம் ஏதும் இல்லாதபோதிலும்கூட,​​ கம்யூனிஸ்ட் கட்சிகளும்,​​ மத்திய கூட்டணியில் ஆதரவாகவும்,​​ மாநிலத்தில் அதே கூட்டணிக் கட்சிக்கு எதிராகவும் செயல்படும் அரசியலை கையில் எடுத்துக்கொள்ளும்போது,​​ பதவி மோகத்தில் இருக்கும் சிபு சோரன் போன்றவர்கள் எத்தகைய அரசியலை கையில் எடுத்தாலும் ஆச்சரியமில்லை.​ ஆகவே,​​ அவர் வெட்டுத் தீர்மானத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக,​​ நாங்கள் கேளாமலேயே வாக்களித்தார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும்கூட,​​ ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.சிபு சோரன் காங்கிரஸýக்கு ஆதரவாக வாக்களித்தபோது,​​ அதைப் பொருள்படுத்தாமல்,​​ அடுத்த வேலையைப் பார்த்திருந்தால் பாரதிய ஜனதாவுக்கு இத்தகைய சங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்காது.​ மேலும்,​​ சிபு சோரன் இந்த வெட்டுத் தீர்மானத்தில் பாஜகவுடன் துணை நின்று,​​ காங்கிரஸýக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி வந்திருக்கப் போவதில்லை.​ இதற்குப் போய் இவ்வளவு கோபப்பட்டு,​​ இப்போது தர்மசங்கடத்தில் ஆள்பட்டு...​ பாஜக-வுக்கு இது ஒரு சோதனைக் காலம் போலும்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் ​(20 இடங்கள்)​ வெற்றி பெற்றுள்ள கட்சி என்ற முறையிலும்,​​ பெரும்பான்மை இல்லாத ஒரே காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாத ஏக்கத்திலும்,​​ ஏதோ அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியாகப் பங்கு பெறும் வாய்ப்பையும் ஏன் இழக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறதுபோலும்.​ ​ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன்,​​ சசிநாத் ஜா கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெற்றபோது,​​ அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று பாஜக செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்சமல்ல.​ ஆனால்,​​ அதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல்தான் பாஜக,​​ சிபு சோரனுக்கு ஆதரவு தந்தது.​ அவரும் பழைய கதைகளை நினைக்காமல்தான் ஆதரவை ஏற்றார்.​ ​பதவிக்காக எதையும் செய்யத் துணிந்த கட்சி என்று காங்கிரûஸ வர்ணிக்கும் ஏனைய கட்சிகளும் காங்கிரஸ் காட்டிய பாதையில்தான் பயணிக்கின்றன என்பதற்கு இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம் ஏராளம்.​ குழந்தைகளைக் கமர்கட்டைக் காட்டி ஏமாற்றுவதுபோல,​​ நீங்கள் ஆட்சி அமையுங்கள் என்று பதவி ஆசை காட்டி ஏமாற்றி,​​ இப்போது அதுவும் இல்லாமல் செய்திருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ராஜதந்திரத்தை பாராட்டத்தான் வேண்டும்.படித்த முட்டாள்களைப் படிக்காத புத்திசாலி ஜெயித்துவிட்டாரே!
 
 
thanks : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=236625&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites