அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

விளையாட்டு

(1).    சதுரங்கம் (சூதாட்டம்) விளையாடுபவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் முக்கியவரைப் போன்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : புரைதா
நூல்  : ( முஸ்லிம் 4194 )
(2).    எனது சிறிய சகோதரனிடத்தில் அபூ உமைரே உனது கிளி என்ன செய்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கும் அளவுக்கு  அவர்கள் எங்களுடன் கலந்தே இருந்தார்கள்.
அறிவிப்பாளர்  : அனஸ் பின் மாலிக்
நூல்  : ( புகாரி 6129 )
(3)    இப்னு உமர் (ரலி) அவர்கள் யஹ்யா பின் சயீத் அவர்களிடம் வந்தார்கள். யஹ்யாவுடைய மக்களில் ஓரு சிறுவன் கோழியை கட்டிவைத்து அம்பால் எரிந்துகொண்டிருந்தான். இப்னு உமர் (ரலி) அவர்கள் அக்கோழிக்கருகில் சென்று அதை அவிழ்த்து விட்டார்கள். பிறகு அக்கோழியுடனும் அச்சிறுவனுடனும் (யஹ்யா பின் சயீத் அவர்களிடத்தில்) வந்தார்கள். கொல்வதற்காக இந்தப் பறவையை கட்டிப்போடுவதை விட்டும் உங்கள் பிள்ளையை கண்டியுங்கள்.ஏனெனில் கால்நடைகளையோ அல்லது மற்றவைகளையோ கொல்வதற்காக கட்டிவைப்பதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பாளர்  : இப்னு உமர்
நூல்  : ( பகாரி : 5514 )
(4) நடுவிரலில் சிறு கல்லை வைத்து எரிந்து விளையாடுவதை விட்டும் நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். அது (சிறிய கல்) வேட்டைப் பிராணியைக் கொல்லாது. எதிரியைக் காயப்படுத்தாது. கண்னை பிளந்து பல்லை உடைத்துவிடும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்
நூல் : ( புகாரி 6120 )
மேலுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கும் விஷயங்கள்
1.    சதுரங்கம் போன்ற சூதாட்டம் உள்ள விளையாட்டுக்கள் விளையாடக் கூடாது.
2.    கிளி போன்ற பறவைகளை துன்புறுத்தாமல் வளர்த்து விளையாடுவதற்கு அனுமதி உள்ளது.
3.    எந்த உயிரினத்தையும் நோவினை செய்யும் விதத்தில் நமது விளையாட்டு இருக்கக் கூடாது.
4.    பயனில்லாத பிறருக்கு இடஞ்சல் தரும் விளையாட்டுக்களை விளையாடக் கூடாது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites