அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

ஜாக் தமுமுக வின் பாகம் 2

ஆணையருடன் சந்திப்பு
இந்தத் தகவல் தெரிந்ததும், மாநகரக் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோரை மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து, "ஏர்வாடி சிராஜ் என்பவர் கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லி நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகம் ஷம்சுல்லுஹாவின் கையில் தான் இருக்கிறது. நீதிமன்றத்தில் பொய்யான தகவல் கொடுத்து, ஒருதலைப் பட்சமாக இந்த உத்தரவை வாங்கியிருப்பதால் நாங்கள் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பை விளக்கி, உத்தரவைப் பெறுகின்ற வரை எங்கள் பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர். காவல்துறையும் நமது தரப்பு நியாயத்தைப் புரிந்து கொண்டது.
திருத்தப்பட்ட தீர்ப்பு
இந்நிலையில் நீதிமன்றத்தில் நமது தரப்பில் 13.07.06 அன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
நீதிமன்றத்தை நாம் அணுகிய அதே நேரத்தில் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கின்றது. இரு தரப்பையும் விசாரித்தார்.
அந்த விசாரணையின் போது, மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகத்தைத் தாங்கள் தான் பார்த்து வருவதாகவும், அனைத்து செலவுகளையும் தாங்களே செய்து வருவதாகவும் நா கூசாமல், அல்லாஹ்வின் அச்சமின்றி ஏர்வாடி சிராஜுதீன் மற்றும் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பொய் சொன்னார்கள். இரு தரப்பையும் விசாரித்த காவல்துறை துணை ஆணையர் அன்று மாலை நடைபெறும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறி விட்டார்.
இதற்கிடையே நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த நமது தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவு ஒரு பள்ளிவாசல் சம்பந்தப்பட்டது என்ற விபரத்தை விளக்கிய பின் 25.07.06 வரை வழங்கிய தடையுத்தரவை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் தீர்ப்பு திருத்தப் பட்டது.
பள்ளிவாசலில் நுழைந்து தகராறு செய்து, அதைக் காரணம் காட்டி பள்ளியை இழுத்து மூட ஜாக் மற்றும் தமுமுகவினர் செய்த சதி இதனால் முறியடிக்கப்பட்டது.
ஆனால் அதே சமயம் மஸ்ஜிதுர்ரஹ்மானை ஜாக் மற்றும் தமுமுகவினர் கைப்பற்றி விட்டதாகவும்  பூட்டப்பட்டு விட்டதாகவும் பல்வேறு விதமான வதந்திகளை தமுமுகவினர் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பரப்பி விட்டிருந்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதற்கிடையே 13ம் தேதியன்று இரு தரப்பாரும் ஆர்.டி.ஓ. முன் அழைக்கப்பட்டனர்.
மேலப்பாளையத்தில் ஜாக் மற்றும் தமுமுகவுக்கு ஆள் இல்லாததால் தென்காசி, நாகர்கோவில், ஏர்வாடி என்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியாட்களை அழைத்துக் கொண்டு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஜாக் மற்றும் தமுமுக கும்பல் வந்திருந்தது.
30.11.05 முதல் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகத்தைத் தானே பார்த்து வருவதாக ஆர்.டி.ஓ. முன்னிலையிலும் ஜாக் மாவட்டத் தலைவர் ஏர்வாடி சிராஜ் மற்றும் தமுமுகவினர் கூசாமல் பொய் சொன்னார்கள். இரு தரப்பையும் மறு நாள் விசாரணைக்கு வருமாறு கூறி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஜாக் மற்றும் தமுமுக கும்பல் அங்கு நின்றிருந்த மேலப்பாளையம் நகரக் காவல் ஆய்வாளரை அடிக்காத குறையாக, மிகக் கடுமையாகத் திட்டினார்கள்.
மறுநாள் 14.07.06 அன்று ஜும்ஆ நாள் என்பதால் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஜும்ஆ முடிந்ததும் மீண்டும் ஆர்.டி.ஓ. விசாரணை! அதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
அதன் பின்னர் ஜாக் மற்றும் தமுமுக தரப்பினர் திரும்பத் திரும்ப காவல்துறையை வற்புறுத்தியதன் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145வது பிரிவின் கீழ் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை எழுத்துப்பூர்வமான உத்தரவைப் பிறப்பித்தது.
இவ்வாறு அவர்கள் ஆர்.டி.ஓ. விசாரணையை வலிந்து வலிந்து கோருவதற்குக் காரணம் அவர்களது கடையநல்லூர் அனுபவத்தின் அடிப்படையில் தான். நீதிமன்றத்தை வளைக்க முடியாது. நிர்வாகத் துறையை வளைத்து விடலாம் என்ற நம்பிக்கை. கடையநல்லூர் ஃபார்முலாவில் பள்ளியை இழுத்து மூடலாம் என்பது அவர்களது கணக்கு!
இந்த விசாரணையில், தற்போது யாரிடம் நிர்வாகம் இருக்கின்றது என்பது மட்டும் முடிவு செய்யப்படும்.  நிர்வாகத் துறை என்பதால் ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்தின் மூலம் சரிக் கட்டி, தங்களிடம் தான் நிர்வாகம் இருக்கின்றது என்று தீர்ப்பு வாங்கி, அதன் அடிப்படையில் பள்ளிவாசலில் நுழைந்து சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தி, பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்பது இந்தச் சதிகாரர்களின் திட்டம்.
பைக் எரிப்பு நாடகம்
நீதிமன்றத்தில் அவர்கள் பெற்ற இடைக்காலத் தடையை அல்லாஹ் முறியடித்து விட்டதால், அவர்கள் பெற்ற ஒருதலைப்பட்சமான தீர்ப்பு செல்லாது என்றாகி விட்டது. இந்த உண்மை எதிர்த் தரப்பாருக்குப் பெரும் ஆட்டத்தையும், அச்சத்தையும் கொடுத்து விட்டது. அதன் விளைவு தான் அடுத்த நாள் நடைபெற்ற பைக் எரிப்பு நாடகம்.
தாங்கள் நினைத்தது போல் காரியம் கைகூடவில்லை என்பதால் கதிகலங்கிப் போன தமுமுகவினர், தங்களின் ஆளும் கட்சித் தொடர்பைப் பயன்படுத்தியும் பள்ளிவாசலைக் கைப்பற்றவும், இழுத்து மூடவும் இயலாமல் போனதால் வேறு வகையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தத் திட்டமிட்டனர்.
தமுமுகவின் மாநிலச் செயலாளராகவுள்ள ஜே.எஸ். ரிபாயி என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட பைக் எரிந்து விட்டதாக, புகார் கூறி ஷம்சுல்லுஹா, ஸய்யது இப்ராஹீம் (ஏகத்துவம் துணை ஆசிரியர்), ஞானியார், சேப்பிள்ளை மைதீன் ஆகியோர் மீது ரிபாயி புகார் கொடுத்தார். புகாரையும், புகாரின் பின்னணியையும் ஆய்வு செய்த காவல் துறையினர் அது பொய்ப் புகார் என்பதைக் கண்டறிந்தனர்.
இதில் ஞானியார் என்பவர் எம்.காம் படித்த ஊனமுற்ற இளைஞர்.
பைக்குக்குத் தீ வைத்து விட்டு ஓடி விட்டதாக ரிபாய் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் ஞானியார் என்ற இந்தச் சகோதரர் நடக்கும் போதே அடிக்கடி கீழே விழும் நிலையில் உள்ளவர். இவர் எப்படி தீ வைத்து விட்டு ஓட முடியும்? என்ற நியாயமான, இரக்க சிந்தனை காவல்துறையினருக்கு ஏற்பட்டது.
மேலும் பைக்கில் ஒன்றரை லிட்டர் பெட்ரோல் இருந்துள்ளது. பைக்கில் தீ வைக்கப்பட்டால் பைக் முழுவதும் எரிந்து நாசமாகியிருக்கும். பைக்கின் சீட் மட்டும் இலேசாக எரிக்கப்பட்டு அணைக்கப்பட்டுள்ளது. பைக் முழுவதும் எரிந்து விடக் கூடாது என்று கவனமாக எரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் ஹாஜா நூஹ், மாவட்டத் தலைவர் யூசுப் அலீ, மாவட்டச் செயலாளர் சாதிக் ஆகியோர் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்தச் சதிக் கும்பலின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் தோற்றுப் போனதால் இப்போது இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பதைக் காவல் துறையிடம் எடுத்துரைத்தார்கள்.
இறுதியில் பைக் எரிப்பு சம்பவத்தின் உண்மை நிலை காவல்துறைக்குப் புரிய வந்தது.
பொய் வழக்கு
எனவே இரு தரப்பினரிலும் சிலரைப் பிடித்து விசாரித்து விட்டு, ஷம்சுல்லுஹா தரப்பில் ஞானியார், சேப்பிள்ளை மைதீன் ஆகியோரை சாதாரண வழக்கில்  கைது செய்து உடனடியாக ஜாமீனில் விடுவித்தனர்.
பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாகவே நமது தரப்பில் இருவர் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களின் ஆளுங் கட்சித் தொடர்பினால் அதிகபட்சமாக இதைத் தான் செய்ய முடிந்தது.
அவர்கள் நினைத்தவாறு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்ய காவல்துறையே மறுத்துவிட்டது.
பொய்ப் புகார் அளிப்பதே தொடர் வேலை
ஏற்கனவே மதுரை மாவட்ட தமுமுக செயலாளர் சிக்கந்தர் என்பவர் தனது பைக்கை தானே எரித்து விட்டு, தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது புகார் கொடுத்தார். இது பொய்ப்புகார் என்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
இது போல் செய்யது அஹமது சலபி என்பவர் (ஜாக் நிர்வாகி) தனது வீட்டு வாசலில் தொங்கிய துணியை எரித்து விட்டு ஷம்சுல்லுஹா மற்றும் ஸய்யது இப்ராஹீம் ஆகியோர் மீது புகார் கொடுத்தார்.
பொய்ப் புகார் கொடுப்பதை இவர்கள் ஒரு கொள்கையாக வைத்துள்ளதை உளவுத்துறை அறிந்து வைத்திருந்ததால், பைக் எரிப்பு விஷயத்தில், ஷம்சுல்லுஹாவைக் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டு அதிரடியாக பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரத்தம் சிந்தச் செய்யும் இவர்களின் திட்டமும் தோல்வியில் முடிந்தது.
இதே போன்று கடந்த டிசம்பர் மாதத்தில், ஜாக் பெயரில் ஷம்சுல்லுஹா வசூல் செய்வதாகவும், பத்து இலட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்து விட்டதாகவும் காவல்துறையில் பொய்ப் புகார் ஒன்றை ஜாக் சார்பில் அளித்தனர். அதை விசாரித்த காவல்துறையிடம் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கான வரவு செலவுக் கணக்குகளை நமது ஜமாஅத்தினர் காட்டிய பிறகு அது பொய்ப் புகார் என்பதை காவல்துறை உறுதி செய்தது.
மாவுப் பத்திரிகையின் மடமைத் தனம்
ஜாக்கின் இந்தப் புழுகு மூட்டைகளை மிஞ்சும் வகையில் தமுமுக தனது மாவுப் பத்திரிகையில் அண்டப் புழுகுகளை அள்ளி வீசியுள்ளது. அந்தப் பத்திரிகையைப் படிக்கும் நடுநிலையாளர்கள் மட்டுமல்ல, அவர்களது ஆதரவாளர்கள் கூட காறித் துப்பும் வகையில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது.
ஷம்சுல்லுஹா பத்து லட்சம் வசூலித்தாராம். ஜாக் இயக்கத்தினர் கணக்கு கேட்டார்களாம். அதனால் 26.01.2004 அன்று ஷம்சுல்லுஹா பொதுக்குழுவைக் கூட்டி, ஜாக் இயக்கத்தினர் தொழ வந்தால் வெட்ட வேண்டும் என்று கூறினாராம்.
இப்படிக் கொஞ்சமும் வெட்கமின்றி, அல்லாஹ் ஒருவன் இருக்கிறான்; மறுமை நாள் ஒன்று உள்ளது என்ற அச்சமின்றி எழுதியுள்ளார்கள். ரிபாய், இனாயத்துல்லாஹ் ஆகியோரின் பேட்டியையும் இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளது. இந்த இருவருமே 26.01.04 வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியில் நிர்வாகிகளாக இருந்தவர்கள். ஜாக்குக்கு எதிராக முழு மூச்சுடன் செயல்பட்டவர்கள்.
கமாலுத்தீன் மதனீ ஒரு முறை மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குத் தொழ வந்த போது, ஆட்களைத் திரட்டி, அடிக்கச் சென்று, கமாலுத்தீன் மதனீயை ஓட ஓட விரட்டியவர்கள் இவர்கள்.
26.01.04 அன்று மஸ்ஜிதுர்ரஹ்மான் பொதுக்குழு நடப்பதற்கு முன்பு வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் வரவு செலவு அனைத்தையும் சரி பார்த்து, கையெழுத்தும் போட்டுள்ளார்கள். இன்றளவும் அவர்கள் கையெழுத்துப் போட்ட மினிட் புத்தகம் நம்மிடம் உள்ளது.
பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப் படாததால் ஜமாஅத்தை விட்டு விலகிய இவர்கள், ஏதோ காலம் காலமாக ஜாக்கில் இருந்தது போன்று பேட்டி கொடுத்துள்ளதாக மாவுப் பத்திரிகையில் வந்திருப்பதைக் கண்டு நடுநிலையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேதம் ஓதும் சாத்தான்கள்
மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகம் ஷம்சுல்லுஹாவிடம் தான் இருக்கிறது என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து வைத்திருந்ததால், ஜாக் மற்றும் தமுமுகவின் மோசடிகளுக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இந்த ரவுடிக் கும்பல் ஆர்.டி.ஓ. அலுவலக வாசலிலேயே காவல் ஆய்வாளர் அவர்களைத் தரக்குறைவாகத் திட்டி, தாக்க முனைந்தனர். மாவுப் பத்திரிகையிலும் காவல் ஆய்வாளர் பீர் முஹம்மது லஞ்சம் வாங்கி விட்டதாக அவதூறு கூறியுள்ளனர்.
காவல் ஆய்வாளர் பீர் முஹம்மது நேர்மையான போலீஸ் அதிகாரி என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் தங்கள் ரவுடித் தனத்திற்கு ஒத்துழைக்காத ஒரே காரணத்திற்காக அநியாயமாக ஒரு முஸ்லிம் அதிகாரியின் பதவிக்கு வேட்டு வைக்க நினைக்கும் இவர்கள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோருவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்று உள்ளது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஊரறிந்த, உலகறிந்த விஷயத்தில் கூட இவ்வாறு பித்தலாட்டம் செய்யும் இவர்கள் பொதுமக்களின் கவனத்துக்கு வராத, தங்களது இயக்கத்தின் கணக்கு வழக்குகள் போன்றவற்றில் எத்தகைய பித்தலாட்டங்களில் ஈடுபட்டு உள்ளார்களோ என்றும் பொது மக்கள் பேசத் துவங்கியுள்ளனர்.
இந்த மோசடிக் கும்பலின் துணையோடு ஜாக் இயக்கத்தினர் அரங்கேற்றிய இந்தச் சதிச் செயலால் இந்த இயக்கங்களைப் பற்றிய உண்மை நிலை மக்களுக்குப் புரிந்து விட்டது. அந்த வகையிலும் அல்லாஹ்    நமக்கு மாபெரும் வெற்றியையே அளித்துள்ளான்.
நரகத்திற்கு அழைக்கும் ஜன்னத்
அல்ஜன்னத் பத்திரிகையும் மாவுப் பத்திரிகையை மிஞ்சும் வகையில் பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளது. ஜன்னத் என்று சுவனத்தின் பெயரை வைத்துக் கொண்டு, நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பொய்யை, கொஞ்சமும் கூச்சமின்றி எழுதியுள்ளனர்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜாக் அமைப்பிற்கு உரியது தான் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியதாம்.
ஷம்சுல்லுஹா கூட்டத்தினர் ஆயுதங்களுடன் பள்ளியில் தங்கியுள்ளனராம்.
காவல்துறையினர் அவர்களை அழைத்து எச்சரித்தார்களாம்.
ரிபாய் என்பவரின் வீட்டை இரவோடு இரவாக தரைமட்டமாக்க வேண்டும் என்பதற்காக பைக்கை தீயிட்டுக் கொளுத்தினார்களாம்.
மஸ்ஜிதுர்ரஹ்மானில் பெண்கள், பிள்ளைகளுடன் பள்ளியில் குடியிருக்கின்றனராம்.
மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனராம்.
இவ்வாறு அல்ஜன்னத்தில் எழுதியுள்ளனர்.
ஏர்வாடி சிராஜின் கையில் நிர்வாகம் இருப்பதாக நீதிமன்றத்தில் பச்சைப் பொய் சொன்னவர்கள், தங்கள் பத்திரிகையில் ஷம்சுல்லுஹா  ஆயுதங்களுடனும், பெண்கள், குழந்தைகளுடன் பள்ளியில் தங்கியிருப்பதாக எழுதியுள்ளனர். (பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்)
உண்மையில் ஜும்ஆ நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் பெண்கள் பள்ளிக்கு வரவோ, தங்கவோ இல்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதிலும் இப்படி நா கூசாமல் பொய் சொல்வதைப் பார்க்கும் போது இவர்கள் உண்மையில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புபவர்கள் தானா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
பத்திரிகையில் எதையும் எழுதி, தனது இயக்கத்தினரைத் திருப்திப் படுத்தலாம். ஆனால் அல்லாஹ் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற நம்பிக்கை கூட இவர்களிடம் இல்லாமல் போய் விட்டதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறத் தயாரா? என்று கேட்பதற்கும் யோசிக்க வேண்டியுள்ளது. இவ்வளவு தைரியமாகப் பொய் சொல்பவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் சத்தியம் செய்யத் தயங்க மாட்டார்கள். எனவே, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கூறி, இவர்களை அவனிடமே விட்டு விடுவோம்.
போதிப்பது குர்ஆன்
பூட்டுவதோ பள்ளிவாசல்
பள்ளிவாசலை இழுத்து மூடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? அல்லாஹ்வையும் அவனது தூதரையுமா? அல்லது அபூஜஹ்லையா?
இவர்களின் இந்த நடைமுறை, அபூஜஹ்லைப் பற்றி அல்லாஹ் கூறும், "குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி'' என்ற அந்தத் தீய பண்புகளுக்கு அப்படியே ஒத்திருக்கவில்லையா?
நி    20.11.2005 அன்று ஷம்சுல்லுஹா ஜாக்கிலிருந்து நீக்கப்பட்டாராம்.
நி    20.11.2005 வரை அவர்கள் ஷம்சுல்லுஹாவுக்குச் சம்பளம் கொடுத்தார்களாம்.
நி    30.11.2005 முதல் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகத்தை ஏர்வாடி சிராஜ் என்பவர் பார்த்து வருகின்றாராம்.
நி    27.06.06 அன்று ஷம்சுல்லுஹா மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குச் சென்று ஏர்வாடி சிராஜிடம் தகராறு செய்தாராம்.
நி    மஸ்ஜிதுர்ரஹ்மானைக் கைப்பற்றுவேன் என்று 02.07.06 முதல் ஷம்சுல்லுஹா பிரச்சாரம் செய்து வருகிராராம்.
இப்படிப் பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர்கள் தான் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்களா?
ஏர்வாடி சிராஜ் என்ற கடைந்தெடுத்த பொய்யனுக்கு, உலக அமீர் (?) கமாலுத்தீன் மதனீ சாட்சி கூறுகின்றார். 20.11.05 அன்று முதல் ஷம்சுல்லுஹாவை நீக்கி விட்டதாகவும், அன்றிலிருந்து அவருக்குச் சம்பளம் கிடையாது என்றும் கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்திருக்கின்றார்.
2001ம் ஆண்டு ஷம்சுல்லுஹாவுக்கு எதிராக சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக்கினர் வழக்கு தொடர்ந்தனர். 2001ல் நீதிமன்றத்தில் எதிரியாக நிறுத்தி விட்டு இப்போது நீக்கி விட்டோம் என்று சொல்வது பச்சைப் பொய்யல்லவா?
20.11.2005 வரை ஷம்சுல் லுஹாவுக்குச் சம்பளம் கொடுத்ததாகக் கூறும் இவர்கள் அதற்கான ஒரேயொரு வவுச்சரையாவது காட்ட முடியுமா?
ஊரறிந்த விஷயத்தில் கூட இப்படிக் கூசாமல் பொய் சொல்கின்றார்கள் என்றால் இவர்களைப் பற்றி மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களது சதியை முறியடிக்க அல்லாஹ் போதுமானவன். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளனான அல்லாஹ் இவர்களது சதியை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டிருக்கின்றான்.
சத்தியம் வென்றது
இவர்கள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆர்.டி.ஓ. விசாரணையில் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வாங்கி விடலாம் என்று எண்ணித் தான் காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.டி.ஓ. விசாரணை கோரினார்கள். ஆனால் அதிலும் அல்லாஹ் இவர்களது சதியை முறியடித்து விட்டான், அல்ஹம்துலில்லாஹ்.
இரு தரப்பையும் விசாரணை செய்து, இரு தரப்பு ஆதாரங்களையும் ஆய்வு செய்த ஆர்.டி.ஓ. துரைராஜ் அவர்கள் இது குறித்து தனது தீர்ப்பை 26.07.06 அன்று வழங்கினார்.
தீர்ப்பு விபரம்
இந்த நீதிமன்றம் இரு தரப்பிலும் ஆவணங்கள், வாதப் பிரதி வாதங்களைப் பரிசீலித்தது. "ஏ' பார்ட்டியாகிய ஏர்வாடி சிராஜுதீன் தரப்பினர் பள்ளிவாசல் நிர்வாகம் தங்களிடம் இருப்பதற்கான தகுந்த சான்றுகளை, ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
"பி' பார்ட்டியான ஷம்சுல்லுஹா தரப்பு,
நி    மஸ்ஜிதுர்ரஹ்மானில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள வவுச்சர்கள்
நி    மின்சாரக் கட்டணம் செலுத்திய ரசீது
நி    சொத்து வரி
நி    தண்ணீர் கட்டணம்
நி    மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கு வந்த கடிதங்கள்
நி    வரவு செலவுக் கணக்கு அறிக்கை
ஆகியவற்றைச் சமர்ப்பித்தனர்.
பள்ளிவாசலில் பணி புரியும் பணியாளர்களும் தாங்கள் ஷம்சுல்லுஹா தரப்பில் தான் பணி புரிகின்றோம் என்பதற்கான வாக்குமூலங்களையும் சமர்ப்பித்து இருந்தனர். இந்த ஆதாரங்கள், சான்றுகள் அனைத்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் அன்றாடப் பணிகள் ஷம்சுல்லுஹா எனும் "பி' பார்ட்டியால் தான் செய்யப்படுகிறது என்பதை நிரூபிக்கின்றன.
மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், இந்தச் சொத்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் முழுக் கட்டுப்பாடு இவர்களிடம் தான் இருக்கின்றது என்பதை இந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே "ஏ' பார்ட்டியான ஏர்வாடி சிராஜுதீன் என்பவர் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு முடிகின்ற வரை "பி' பார்ட்டியாகிய ஷம்சுல்லுஹா தரப்பினர் செய்து வரும் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. அது வரை இந்த நீதிமன்ற உத்தரவு நீடிக்கின்றது.
மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் "பி' பார்ட்டியாகிய ஷம்சுல்லுஹா தரப்பினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.
இவ்வாறு ஆர்.டி.ஓ. தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் ஜாக் மற்றும் தமுமுகவின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து ஜாக் மற்றும் தமுமுகவினர் செய்த சதிச் செயல்களை அல்லாஹ் தகர்த்தெறிந்து உள்ளான். அல்ஹம்துலில்லாஹ். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் சூழ்ச்சியாளன் அவன் என்பதை நிரூபித்துள்ளான்.
இவர்கள் எவ்வளவு தான் பணத்தை வாரியிறைத்தாலும், ஆளும் கட்சி உறவைக் கொண்டு அராஜகம் செய்தாலும் அத்தனையையும் அல்லாஹ் முறியடித்து வருகின்றான்.
அல்லாஹ்வின் ஆலயத்தை இழுத்து மூட முயற்சித்து அடுக்கடுக்கான பொய்களைக் கூறும் இவர்களை சமுதாயம் அடியோடு புறக்கணிக்கும் காலம் தூரத்தில் இல்லை.


அழைப்பு பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக்
"ஜாக்'' இப்போது ஒரு தெளிவான முடிவில் இருக்கின்றது. எந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மாணம் செய்ய அந்த அமைப்பு உருவாக்கப் பட்டதோ அந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மூலமாக்காமல் விடுவதில்லை என்பது தான் அந்த முடிவு!
அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கும் அக்கிரமத்தில் ஒரு கரை காணாமல் இருக்கப் போவதில்லை என்று கலகக் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான களத்தில் குதித்திருக்கின்றது.
தவ்ஹீதுக்கு எதிரான காரியங்கள் நடக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படித் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் எதையும் செய்யாமல் ஒதுங்கியாவது இருக்க வேண்டும்.
ஆனால் ஜாக் பரிவாரமோ, தானும் செய்யாமல், செய்பவர்களையும் செய்ய விடாமல் தடுத்து வருகின்றது. அதாவது அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கின்றது. இதற்கு அண்மையில் மேலப்பாளையத்தில் நடந்த ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறலாம்.
வண்ண நிறங்களில்
வாண வேடிக்கைகள்
மேலப்பாளையத்தில் உள்ள தர்ஹாக்களில் வழக்கமாக கந்தூரிகள் நடக்கும். ஆனால் இந்த முறை நடந்த கந்தூரிகள், வருடாந்திர உரூஸ் விழாக்கள் வேண்டுமென்றே நமக்கு எதிராகத் திட்டமிட்டு படு விமர்சையாகவும், படோடபமாகவும் அமைந்திருந்தன. உண்மையில்  அவை கோயில் திருவிழாக்களைத் தோற்கடிக்கும் விதமாக இருந்தன.
அதிகமான பணச் செலவில் டிஜிடல் மியூசிக் பேண்ட் வாத்தியங்கள், அதிர வைக்கும் வாண வேடிக்கைகள் என அமர்க்களமாக, ஆர்ப்பாட்டமாக அதிகாலை வரை நடத்தப்பட்டன.
சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்வோர் கூட இந்த அக்கிரமங்களைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் வெறுத்து, வெதும்பிக் கொண்டிருந்தனர்; வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
உடனே நாம் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக் கந்தூரிகளில் நடந்த அட்டூழியங்களையும் அனாச்சாரங்களையும் கண்டித்து, துண்டுப் பிரசுரம் வெளியிட்டோம். இது மக்களிடத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, கந்தூரி நடந்த தெருக்களில் ஒன்றான மேலப்பாளையம் பஸீரப்பா தெருவில், தர்ஹா வழிபாடு எதிர்ப்புப் பொதுக் கூட்டம் என்ற தலைப்பில் 19.08.2006 அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். இதற்காக மேலப்பாளையம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன.
இதைக் கண்ட ஜாக் கலகக் கும்பல், கூட்டத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாகக் காவல் துறையில் புகார் செய்தனர்.
இவர்கள் தங்களது புகாரில், "பஸீரப்பா தெருவில் நடைபெற விருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது'' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட தர்ஹா கூட்டத்தினர் இந்தப் பொதுக் கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று தவமிருக்கின்றனர். தகுந்த முகாந்திரங் களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு ஏற்றவாறு இவர்களும் காவல் துறையில் புகார் கொடுத்து, கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு சூட்சுமத்தையும் சூழ்ச்சி வலையையும் பின்னினர். அது மட்டுமின்றி நமது சகோதரர்களிடம், "கூட்டம் நடக்குமா? பார்த்து விடுவோம்'' என்ற ரீதியில் சவாலும் விட்டுள்ளனர்.
இவர்கள் கொடுத்த இந்தப் புகாரின் காரணமாகவும் இவர்கள் பரப்பி விட்ட வதந்திகள் காரணமாகவும் அன்று பொதுக்கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி நகரமே பரபரப்பில் ஆழ்ந்தது. இதனால் கூட்டம் நடக்கும் தெருவில் காவல்துறை ஏராளமான காவலர்களை நிறுத்தி வைத்தது.
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! சூழ்ந்த ஞானம் படைத்த அவன், இவர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்தான். இறைவனின் மகத்தான கிருபையால் அன்று இரவு கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆயிரக்கணக் கானவர்கள் என்று சொல்லும் அளவுக்கு அலை அலையாய் மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
வந்தவர்கள் அனைவரும் தவ்ஹீதுவாதிகள் அல்ல! சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அந்த அளவுக்கு இந்தக் கந்தூரி வெறியாட்டங்கள் பாதிப்புக்கும் கொதிப்புக்கும் உள்ளாக்கியிருந்ததை நாம் உணர முடிந்தது.
சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கு ஏற்பட்ட இந்த சூடு, கொதிப்பு எல்லாம் அழைப்புப் பணியைச் சொல்லி அரபு நாட்டில் சம்பளம் வாங்கும் ஜாக் கும்பலுக்கு ஏற்படவில்லை.
ஜாக் கலகக் கும்பலின் இந்தப் புகார் மற்றும் வதந்திகளால் ஏற்பட்ட மற்றொரு விளைவு, தொடர்ந்து ஏகத்துவப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடும் கெடிபிடிகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
வழக்கம் போல் அடுத்த வாரம் 26.08.06 அன்று மேலப்பாளையத்தில் ஏகத்துவப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி வாங்கச் சென்ற போது, "நீங்கள் கூட்டம் நடத்துவதால் எங்களுக்கு அதிகமான சிரமம் ஏற்படுகின்றது. பாதுகாப்பு அதிகம் தர வேண்டியுள்ளது. எனவே அனுமதி தர முடியாது'' என்று மறுத்து விட்டனர்.
பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய பின், கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆக, ஜாக் கலகக் கும்பல் செய்த இந்தக் காரியங்களால் ஒட்டு மொத்த ஏகத்துவப் பிரச்சாரமும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டு விட்டது.
இதிலிருந்து இவர்கள் செய்வது அழைப்புப் பணியல்ல! அழைப்புப் பணிக்கு எதிராக ஆப்பு வைக்கும் பணி என்பது நிரூபணமாகின்றது. இனியும் இவர்களை ஏகத்துவவாதிகள் என்று நம்பி நம் ஈமானை இழந்து விடாமலிருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.


கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் திறப்பு
 சதியை முறியடித்த சந்தாதாரர்கள்

ஏகத்துவத்திற்கு எதிராகக் களமிறங்கிய கழகத்தாரை விட்டு தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்தது. அதுவரை கழகத்தாரை காஃபிர்கள் ரேஞ்சுக்குப் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத ஜாக் பரிவாரம், அவர்களுடன் போய் ஒட்டிக் கொண்டது.
இன்னும் தவ்ஹீதுக்கு எதிரான என்னென்ன அமைப்புகள் இருக்கின்றனவோ அவை அனைத்துடனும் சேர்ந்து கொண்டு பள்ளிவாசல்களை இழுத்து மூடும் பணியிலும் ஜாக் பரிவாரம் இறங்கியது.
அதன் உச்சக்கட்டப் பணியாக கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் வெளியூர் அடியாட்களை அழைத்து வந்து ரவுடித்தனம் செய்து பள்ளிவாசலுக்கு மூடு விழா நடத்தியது.
அதே பாணியில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானிலும் அடியாட்களை அழைத்து வந்து பிரச்சனையை ஏற்படுத்தி, இழுத்து மூட ஜாக் பரிவாரம் செய்த சதி இறையருளால் முறியடிக்கப் பட்டது.
எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் ஐவேளைத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கில் ஜாக் மற்றும் தமுமுக ரவுடிகள் புகுந்து ரத்தக்களறியாக்கி அதன் காரணமாக இழுத்து மூடியதை அனைவரும் அறிவார்கள்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் அன்றைய ஆளுங்கட்சியின் துணையுடன் பள்ளியை மூடினார்கள் என்று ஜாக், தமுமுக கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது.
ஆனால் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மார்ச் 25ம் தேதி லுஹர் தொழுகைக்குப் பின் மூடப்பட்டு, ஐந்து மாதங்கள் தொழுகை நடத்தப்படாமல் நிறுத்தப்பட்ட அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் ஆகஸ்ட் 23ம் தேதி மக்ரிப் தொழுகையின் போது திறக்கப்பட்டது.
மஸ்ஜிதுல் முபாரக்கின் கட்டுமானத்தின் ஒவ்வொரு செங்கலும் எந்த ஊர் மக்களின் உழைப்பில் உதிர்த்த வியர்வைத் துளியில் பதிந்து நிற்கின்றதோ அந்த ஊர் மக்களின் - சந்தாதாரர்களின் - சத்திய சந்ததிகளின் கண்ணீர் திவலைகளுக்கு, கவலைகளுக்குக் காணிக்கையாக, 17.08.05 அன்று நெல்லை முதன்மை சார்பு நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
தீர்ப்பு விபரம்
மனுதாரர்கள்
1. வி.கே. மஸ்ஊத்
2. எம்.எஸ். ஷைக் உஸ்மான்
எதிர் மனுதாரர்கள்
1. ஜாக் மாநிலத் தலைவர் மற்றும் அவரது ஆட்கள்
2. கடையநல்லூர் முபாரக் பள்ளி நிர்வாகக் கமிட்டி
....மனுதாரர்கள் கூறியவாறு மனுச் சொத்தில் மனுதாரர்களும் அந்தப் பள்ளிவாசல் மற்ற உறுப்பினர்களும் தொழுகை நடத்தி வக்ஃப் நடவடிக்கை மேற்கொள்வதை எதிர் மனுதாரர்களோ அவரது ஆட்களோ தடை செய்யக் கூடாது என்று நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரியுள்ளதில் மனுதாரர்களுக்கு முதல் நிலை வழக்கும், சமநிலை பாகுபாடும் சாதகமாக அமைந்துள்ளதாகக் கருதுகின்றேன்.
எனவே மனுதாரர்கள் கோரியவாறு பரிகாரத்தைப் பெற தகுதி படைத்தவர்கள் என்று தீர்மானித்து இந்தப் பிரச்சனைக்கு இவ்வாறாக தீர்வு காண்கின்றேன்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
அதன் படி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை ஐந்தரை மணிக்குத் தங்கள் உள்ளங்கள் குளிர, கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடிக்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலைத் திறந்தனர்.
நீதிபதி தனது தீர்ப்பில் எதிர் மனுதாரர்களான 1. ஜாக், 2. மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் ஆகிய இரு சாராரும் தொழுகையைத் தடுக்கக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்.
இந்தத் தீர்ப்பின் படி அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் பள்ளியில் தொழுகை நடத்துவதற்கு மனுதாரர்களான வி.கே. மஸ்ஊத், எம்.எஸ். ஷைக் உஸ்மான் ஆகிய இருவருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். தொழுகையைத் தடுத்து நிறுத்தும் எந்த ஒரு துரோகத் தனத்திலும் இறங்கவில்லை.
ஆனால் ஜாக், தமுமுக கும்பலோ மறுபடியும் வெளியூரிலிருந்து அடியாட்களைத் திரட்டிக் கொண்டு வந்து தகராறு செய்து மீண்டும் பள்ளியை இழுத்து மூடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் பள்ளிவாசலை மூடி விட்டார்கள் என்று இவர்கள் செய்த பொய்ப் பிரச்சாரம் தூள் தூளாகிப் போயுள்ளது.
உண்மையில் இந்த ரவுடிக் கும்பல் வந்து ரத்தக்களறியை ஏற்படுத்தியதால் தான் பள்ளிவாசல் இழுத்து மூடப் பட்டது. அன்று ஆர்.டி.ஓ. தனக்கு அதிகாரமில்லாத ஒரு தீர்ப்பை முதலில் வழங்கி விட்டு, பின்னர் அதனால் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்து தனது தீர்ப்பை மாற்றினார்.
ஆர்.டி.ஓ.வின் இந்தத் தவறான அணுகுமுறையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஜாக், தமுமுக கும்பல் பள்ளிவாசலில் நுழைந்து பிரச்சனை செய்து, ரத்தக்களறி ஏற்படுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடியதுடன், அன்றைய ஆளுங்கட்சியினரின் நெருக்குதலால் தான் ஆர்.டி.ஓ. தனது தீர்ப்பை மாற்றினார் என்று பொய்ப் பிரச்சாரமும் செய்து வந்தனர்.
ஆனால் பள்ளிவாசல் மூடப்பட்ட நாள் முதல் அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் அதைத் திறப்பதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர்.
1. பள்ளிவாசலைத் திறக்கக் கோரி டி.ஜி.பி.க்கு தந்தியடித்தது.
2. பள்ளியைத் திறப்பதற்காக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் ரிட் தாக்கல் செய்தது.
3. பள்ளியைத் திறப்பதற்காக தீர்ப்பாயம் சென்றது.
4. சந்தாதாரர்கள் பள்ளிவாசலைத் திறப்பதற்கு நீதிமன்றத்தை அணுகி உத்தரவு வாங்கிக் கொண்டு வந்த போது அதை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுத்தது.
ஆகிய அடுக்கடுக்கான செயல் பாடுகள் அனைத்தும், பள்ளியைத் திறக்க வேண்டும் என்பதற்கு அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் எடுத்த தூய முயற்சிகளுக்கு சாட்சிகளாகத் திகழ்கின்றன.
ஜாக்கின் சதித் திட்டங்கள்
அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியின் முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக 23ம் தேதி பள்ளிவாசல் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பள்ளியில் தொழுகை தடையின்றி நடந்து வருகின்றது. ஆனால் இதற்கு நேர் மாற்றமாக பள்ளி திறக்கப்பட்டதும் ஜாக் மற்றும் கலகக் கும்பல் தொழுகை நடத்த விடாமல் தடுப்பதற்கு பல்வேறு சதி முயற்சிகளைச் செய்தது.
பள்ளி திறந்ததும் இவர்களது வழக்கப்படி வெளியூரிலிருந்து அடியாட்களை அழைத்து வந்து ஒவ்வொரு தொழுகையிலும் வேண்டுமென்றே இரண்டாவது ஜமாஅத் நடத்தி தகராறு இழுக்க முயற்சி செய்தனர்.
ஜும்ஆ தினத்தன்று பள்ளியில் பெண்கள் அமரும் தளத்தில் திரைகளை விலக்கிக் கொண்டு உள்ளே வந்து பெண்களைத் தொழ விடாமல் தடுத்தனர். இந்த அடாவடித்தன அடியாட்களைக் கண்டு பெண்கள் தொழாமல் வெளியேறும் அநியாயம் நடந்தேறியது.
இவர்கள் ஜும்ஆ தொழுகையை மட்டும் சீர்குலைக்க வரவில்லை; பள்ளியை மீண்டும் இழுத்து மூடும் வெறித்தனத்தில் வந்திருக்கின்றனர் என்று புரிந்து கொண்ட ஜமாஅத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்ததும், அந்தத் தளத்திலிருந்து வெளியேறினர்.
போட்டி ஜும்ஆ
நடத்த முயற்சி
அங்கிருந்து வெளியேறி மூன்றாவது தளத்திற்குச் சென்று, சும்மா உட்காராமல் ஜும்ஆ நடத்த முயற்சி செய்தனர். அதற்கும் காவல்துறையில் முறையிட்ட போது உலக மகாப் பொய்யன் ஏர்வாடி சிராஜ், நீதிமன்ற உத்தரவு தொழுகையைத் தான் எடுத்துக் கொள்ளும்; ஜும்ஆ குத்பா நடத்துவதை எடுத்துக் கொள்ளாது என்று உளறிக் கொட்டியுள்ளான்.
"இனிமேல் ஒன்னுக்கு இருப்பதற்கு ஓர் உத்தரவு, உளூச் செய்வதற்கு ஓர் உத்தரவு என்று தனித்தனி உத்தரவுகள் வாங்க வேண்டியது தான்'' என்று ஜமாஅத்தினர் இடித்துரைத்த பின்னர் ஜும்ஆ நடத்தும் முயற்சியைக் கைவிட்டனர்.
கூட்டி வரப்பட்ட
கூலிப் படையினர்
கடையநல்லூரில் ஜாக் என்று சொல்வதற்கு விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட ஆள் இல்லை என்பதால் வெளியூரிலிருந்து கலகக் கும்பலை - கூலிப் படையை உள்ளே கூட்டி வைத்துத் தான் பள்ளியை பூட்டி மகிழ்ந்தார்கள்.
வெளியூர்களிலிருந்து வேன்களிலும் ஆட்டோக்களிலும் அடியாட்களை அழைத்து வந்து அந்த அக்கிரமத்தை அரங்கேற்றினார்கள். இப்போதும் அதே பாணியில் கூலிப் படையினரை அழைத்து வந்து தான் தகராறு செய்துள்ளனர்.
வந்த இந்தக் கூலிப் படையினருக்கு ஏர்வாடி சிராஜ், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசியதைப் பார்த்து மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர்.
நடுநிலையாளர்களே! நியாயவான்களே! பள்ளியை இழுத்து மூடிவிட்டு, அதைத் திறப்பதற்கு ஒரு துரும்பையும் அசைக்காமல், எள் முனையளவும் முயற்சிக்காமல் இருந்தனர். அந்த ரத்த வெறியோடு மேலப்பாளையத்திலும் வந்து பள்ளியை மூடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இப்போது மஸ்ஜிதுல் முபாரக்கின் சந்தாதாரர்களின் முயற்சியால் இந்த நயவஞ்சகர்களின் சதி முறியடிக்கப் பட்டு பள்ளிவாசல் திறக்கப்பட்டவுடன் கலகக் கும்பலைக் கூட்டி வந்து கலகம் செய்து மீண்டும் பள்ளிவாசலை மூடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் சதியை முறியடிக்க அல்லாஹ் போதுமானவன்.


களியக்காவிளை காட்டுகின்ற அடையாளம்
தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள முக்கிய விவகாரமாகும்.
அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை, இணை வைத்தல் என்று நாம் கூறுகிறோம். ஆனால் அது தான் மறுமை வெற்றிக்கு வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக நமக்கும், அவர்களுக்கும் இடையில் கால் நூற்றாண்டு காலமாக வாதங்கள் நடந்திருக்கின்றன. முபாஹலாவும் நடந்துள்ளது. இந்த வரிசையில் ஒன்று தான் அண்மையில் நடந்த களியக்காவிளை விவாதம்.
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் நீண்ட காலமாக "விவாதத்திற்குத் தயார்' என்று சவால் விடுவதும் நெருங்கினால் நழுவுவதுமாக இருந்தார். கடைசியில் ஒரு வழியாக மாட்டிக் கொண்டதும் விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. களியக்காவிளையில் விவாதம் நடத்துவது என முடிவானது.
இந்த விவாதம் நடைபெறுவதற்கு முன், இதையொட்டி நடைபெற்ற தவ்ஹீது ஜமாஅத்தின் விவாதக் குழுவில் "களியக்காவிளை விவாதம் பற்றி ஜாக் போன்ற அமைப்புகளின் நிலை எப்படியிருக்கும்?' என்ற பேச்சு எழுந்தது.
"அமைப்பு ரீதியாக ஜாக் என்பது நமக்கு எதிராக இருந்தாலும், மார்க்கச் சட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அகீதா (கொள்கை) விஷயத்தில் அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்'' என்று பி.ஜே. கூறினார். அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று கலீல் ரசூல் மறுத்தார்.
விவாதம் குறித்து கமாலுத்தீன் மதனி என்ன நிலையில் இருக்கிறார் என்று பார்த்து விடுவோம் என்று கூறி விவாதக் குழுவில் இருந்த கோவை ரஹ்மத்துல்லாஹ், சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுவதாகக் கூறி, கமாலுத்தீன் மதனீயை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
"நாங்கள் டி.என்.டி.ஜே. பி.ஜே. குரூப்புடன் விவாதம் செய்யவுள்ளோம். அதற்கு மூல கிதாபுகள் தேவை. பிர்தவ்ஸியா மதரஸா அருகில் இருப்பதால் தங்கள் கிதாபுகளைக் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்'' என்று சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் கேட்டார்.
அதற்கு எஸ்.கே. "கிதாபுகள் எல்லாம் இரவல் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் ஜமாலிய்யாவில் கேட்டு வாங்குங்கள்'' என்று கூறினார்கள்.
"ஜமாலிய்யாவில் சில கிதாபுகள் இல்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறோம்'' என்று ரஹ்மத்துல்லாஹ் கூற, அதற்கு எஸ்.கே. "நீங்கள் பாக்கியாத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று ஐடியா கொடுத்தார்.
"பாக்கியாத்தில் சில புது கிதாபுகள் இல்லை. அவை உங்களிடம் இருக்கும் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறோம்'' - ரஹ்மத்துல்லாஹ்
"அப்படியெல்லாம் கொடுப்பதில்லை'' - எஸ்.கே.
ரஹ்மத்துல்லாஹ்: அப்படியானால் பி.ஜே. தவ்ஹீது ஜமாஅத்தினர் இது வரை ஜகாத், அரைக்கால் ட்ரவுஸர், பன்றிக் கறி போன்ற விஷயங்கள் குறித்து முரண்பட்டுப் பேசிய பழைய அல்ஜன்னத் குறிப்புகள் தொகுப்பைத் தர முடியுமா?
எஸ்.கே.: அது என்னிடத்தில் இல்லை. திருச்சியில் (ஒரு பத்திரிகை ஆசிரியரைக் குறிப்பிட்டு) ஒரு ஹஜ்ரத் இருக்கிறார். அவரிடம் ஆரம்பத்திலிருந்து அதன் தொகுப்பு இருக்கிறது. அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.
ரஹ்மத்துல்லாஹ்: உங்களிடத்தில் அந்தத் தொகுப்பு இல்லையா?
எஸ்.கே.: சென்னையில் இருக்கிறது.
ரஹ்மத்துல்லாஹ்: நாளைக்கு விவாதத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு எப்படி நாங்கள் வாங்க முடியும்?
எஸ்.கே.: இல்லை, இல்லை. நீங்கள் திருச்சியிலேயே வாங்கிக்கொள்ளுங்கள்.
ரஹ்மத்துல்லாஹ்: நீங்கள் சொன்னதாக வாங்கிக் கொள்ளலாமா?
...மறுமொழி கூறாமல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
யாருக்கும் யாருக்கும் இடையில், என்ன கொள்கையை நிலை நாட்டுவதற்காக விவாதம் நடைபெறுகிறது? என்பதையெல்லாம் பார்க்காமல், அல்லாஹ்வுக்கு எதிரான ஒரு கூட்டத்திற்கு உதவுகின்றார்கள்.
"எல்லோருமே தவ்ஹீதுவாதிகள் தான்' என்று இன்னும் தமிழகத்தில் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிந்திப்பதற்காக இந்தத் தொலைபேசி உரையாடலைத் தருகிறோம்.
களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் அசத்தியக் கொள்கையை எதிர்த்து நடந்த விவாதமாகும். மக்கத்து முஷ்ரிக்குகளை விட மோசமான கொள்கை கொண்ட ஒரு கூட்டத்துடன் நடந்த விவாதமாகும். அசத்தியத்திற்கு எதிரான இந்த விவாதப் போரில் நேர்முகமாக வந்து தவ்ஹீது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும். அப்படி உதவாவிட்டாலும் மானசீகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லது எதையும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு, அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களது வாதம் நிலைபெறுவதற்காக வழி வாய்க்காலைக் கூறுகிறார் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்?
இது எஸ்.கே.யின் நிலை!
இன்னொரு கூட்டம், "களியக்காவிளை விவாதத்தில் பி.ஜே. தோற்று விட்டார்' என்று ஊர் ஊராகப் பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இவர்களும் தவ்ஹீது வாதிகள் என்ற பெயரால் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! களியக்காவிளையில் ஏகத்துவத்திற்கே அல்லாஹ் வெற்றியை அளித்தான் என்பதை, அதன் ஒளிப் பதிவுகளைப் பார்த்த யாரும் கூறுவார்கள். அது தான் உண்மை! ஒரு வேளை நாம் தோற்றிருந்தால் அசத்திய அணியினர் இதை ஊர் ஊராகக் கொண்டு போய் நம்மைக் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவ்வாறு செய்யாததற்குக் காரணம் அவர்கள் தோல்வியைத் தழுவியதால் தான்.
எந்த அளவுக்கென்றால், "முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கப்ரிலிருந்து எழுந்து வந்து நேரடியாக நமக்கு உதவுவாரா?'' என்று நாம் விவாதத்தில் எடுத்து வைத்த கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கும் போது, "அல்லாஹ் நேரடியாக வந்து உதவுவானா?'' என்று கேட்டார்கள். இதைக் கேட்ட சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூட இந்த வாதத்தில் இருந்த ஷிர்க்கை உணர்ந்து கொண்டார்கள்.
அவர்களே தோல்வியை ஒப்புக் கொண்டு, ஒதுங்கி ஓரத்தில் கிடக்கின்ற வேளையில், தாங்களும் தவ்ஹீது வாதிகள் தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு போலிக் கூட்டம் இதைத் தோல்வி என்று சித்தரிப்பதற்குக் காரணம் என்ன?
களியக்காவிளையில் பி.ஜே. தோற்று விட்டார் என்று சுன்னத் ஜமாஅத்தினருக்கு மத்தியில் பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவதன் மூலம் இவர்கள் என்ன நாடுகிறார்கள்? தொடர்ந்து இந்தப் பிரச்சாரத்தைச் செய்வதன் மூலம் இவர்கள் மறுமையில் என்ன நன்மையை எதிர்பார்க்கிறார்கள்?
இதிலிருந்து இவர்களின் தீய எண்ணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
மகன் இறந்தாலும் பரவாயில்லை! மருமகள் விதவையாக வேண்டும் என்பது போல், ஏகத்துவம் அழிந்தாலும் பரவாயில்லை! பி.ஜே. தோற்க வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு!
இவர்களின் தனி நபர் எதிர்ப்பைப் பற்றிப் பேசும் போது, "ஒரேயொரு இறைவன் தான்'' என்று பி.ஜே. சொல்வதால் அதற்கும் மாற்றமாக, "இல்லையில்லை! இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள்'' என்று சொல்வார்கள் போல் தெரிகின்றதே! என்று நம்மவர்களில் சிலர் கிண்டலாகக் கூறுவதுண்டு.
இன்று களியக்காவிளையில், முஹ்யித்தீனும் கடவுள் தான், அதாவது இரண்டு இறைவன் தான் என்று சொல்லும் கூட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் களமிறங்கிப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அந்தக் கருத்தை இவர்களும் ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள்.
இதிலிருந்து ஜாக் முதல் நமக்கு எதிரான கருத்துடைய இயக்கங்கள் மற்றும் தனி நபர்களின் அடையாளங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். களியக்காவிளை விவாதம் இந்த அடையாளத்தை நன்கு தெளிவாக்கியுள்ளது.

அடையாளம் காணப்பட்ட அசத்திய வாதிகள்
கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு!
இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற வேலைகளைப் பார்த்தால் படு பயங்கரமானதாக இருக்கும். காசுக்காகவும், காழ்ப்புணர்ச்சியினாலும் எதையும் செய்யத் துணிபவர்கள் தான் இவர்கள்.
"அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 158
இது போன்று தான் இன்றைய  ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் இருக்கின்றனர். தாயத்து, தட்டு புத்தகங்களையும், மத்ஹபு புத்தகங்களையும் வைத்து விற்பனை செய்யக்கூடியவர்களும், காயிதே மில்லத்திற்குப் பிறந்த நாள் கொண்டாடி ஃபாத்திஹா ஓதி சாப்பிடக் கூடியவர்களும், வரதட்சணை திருமணங்களில் முன்னிலை வகிக்கக் கூடியவர்களும், தர்ஹா எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடக் கூடியவர்களும் தான் இன்றைக்குப் பல ஊர்களில் பெயரளவில் உள்ள ஜாக் அமைப்பின் நிர்வாகிகளாக உள்ளனர்.
இவர்கள் இந்த அமைப்பில் ஒட்டிக் கொண்டிருப்பதின் நோக்கமே மாதா மாதம் வருகின்ற சல்லிகளுக்காகத் தான். இந்த சல்லிகள் நின்று விட்டால் இவர்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
படம் காட்டி வெளிநாட்டில் பணம் பறித்து வயிறு வளர்க்கும் இந்த இயக்கத்தினர், தவ்ஹீத் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்களையெல்லாம் தங்கள் இயக்கச் சொத்து என்றும், சங்கங்கள் என்றும் அங்கு தொழுகையே நடைபெறவில்லையென்றும் நீதி மன்றங்களில் பொய்களைத் துணிந்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். இது போன்ற வேலைகளுக்காகவே இத்தகையோரை மாநில நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானை, தானே நிர்வகித்து வருவதாகவும், ஷம்சுல்லுஹா வந்து தன்னிடம் சண்டை போட்டதாகவும் கூசாமல் பொய்யெழுதி நீதிமன்றத்தில் கொடுத்தவரெல்லாம் தற்போது ஜாக்கில் மாநில நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல! 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மவ்லவி எம். ஷம்சுல்லுஹா அவர்களுக்குச் சம்பளம் கொடுத்ததாகவும், இனிமேல் சம்பளம் கிடையாது என்றும் பச்சைப் பொய்யை, ஜாக் லெட்டர் பேடில் கடிதமாக எழுதி, கையெழுத்திட்டு அந்தப் போர்ஜரி கடிதத்தை நீதிமன்றத்தில் கொடுத்தவர் தான் மாநில அமீர் எஸ். கமாலுத்தீன் மதனீ!
மேலே நாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் அவர்களே கையெழுத்திட்ட ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் பிரச்சனையில் இவர்களது மோசடிகள் அம்பலமாகி விட்டதால் அதைத் திசை திருப்புவதற்காக இவர்கள் நடத்திய பைக் எரிப்பு நாடகத்தைப் பற்றி ஏற்கனவே ஏகத்துவம் இதழில் எழுதியிருந்தோம். இந்த பைக் எரிப்பைச் செய்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று காவல்துறையில் பொய்ப் புகார் கொடுத்து, தற்போது வழக்கும் நடைபெற்று வருகின்றது. தங்களது அல்ஜன்னத் என்ற பத்திரிகையிலும் பைக்கை எரித்தது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று கூசாமல் எழுதியிருந்தார்கள்.
ஆனால் தற்போது ஜாக் சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "பைக்கை எரித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும்'' என்று கூறியுள்ளார்கள். ஆக, தங்கள் சுயநலத்திற்காக எப்படிப்பட்ட பொய்யையும் சொல்லி, யாரையும் சிறைக்கு அனுப்பத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் உதாரணம்.
உண்மை அவர்களிடம் வந்த போது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் அவர்களிடம் வந்து சேரும்.
அல்குர்ஆன் 6:5
தமக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்த யாவும் அவர்களை விட்டு மறைந்து போகும்.
அல் குர்ஆன் 6:24
"நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
அல் குர்ஆன் 9:107
"நயவஞ்சகர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.
அல்குர்ஆன் 63:1
சல்லடை ஊசியைப் பார்த்துக் கேட்டதாம், உனக்கு பின்னால் ஒரு துளையிருக்கிறதே என்று! அது போலத் தான் இன்றைய ஜாக் இயக்க நிர்வாகிகள் நம்மைப் பார்த்து செய்கின்ற விமர்சனங்களும் இருக்கின்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிரச்சினையைத் தொட்டுப் பேசியுள்ளனர். ஜாக் இயக்க நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் பண மோசடியில் நிரூபிக்கப் பட்டவர்கள். தவறான தொடர்பில் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டவர்கள். திருமணம் செய்து அபலைப் பெண்களை ஏமாற்றியவர்கள். பணத்திற்காகக் கொள்கையில் தடம் புரண்டவர்கள்.
இவையெல்லாம் சாட்சிகளுடன் அந்தந்த நேரங்களில் நிரூபிக்கப்பட்டும், உண்மை தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிப் பெருமைப்பட்ட இவர்கள் நம்மை பார்த்து விமர்சனம் செய்வது வேடிக்கையிலும் வேடிக்கையே!
(இது பற்றி ஆதாரங்களுடன் நாம் வெளியிட்ட ஐந்து சிடிக்களைக் காண்க!)
தடம் மாறும் ஜாக்
நாங்கள் தான் கொள்கைவாதிகள் என்றும், குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும்  கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை ஆட்டம் காணத் துவங்கி விட்டது. ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பு, மார்க்க விஷயத்திலும் கொள்கையிலும் கூட இவர்களை தடுமாறச் செய்துள்ளது. இவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
களியக்காவிளை விவாதம் தொடர்பாக இவர்கள் தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் இதற்குத் தெளிவான சான்றாகும். இவர்களுடைய மாநில அமீர் பேசிய சில பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு ஆதாரமாக இருக்கும் போதே, இவர்கள் கப்ரு வணங்கிகளுக்கு உதவி செய்ய மறுத்ததாக தங்களுடைய பத்திரிகைகளில் எழுதியுள்ளனர். இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இது ஒன்றே மாபெரும் சான்றாகும்.
இவர்கள் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வின் காரணமாக களியக்காவிளை சம்பவம் மட்டுமல்லாது பல நிலைகளில் கொள்கையில் தடம் புரண்டு அசத்தியத்திற்குத் துணை சென்றுள்ளனர் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்.
ஆரம்ப காலத்தில் மார்க்க விஷயங்களில் திருமறைக் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு மட்டும் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறி வந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக "உலக, மார்க்க விஷயங்களில் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்'' எனும் மார்க்கத்திற்குப் புறம்பான புதுக் கொள்கையைப் புகுத்தினார்கள்.
குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் என்று கூறி வந்தவர்கள், "ஸஹாபாக்களுடைய கருத்துக்களையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று திருமறைக் குர்ஆனிலும், நபிவழியிலும் இல்லாத ஈமானுக்கு மாற்றமான மூன்றாவது அடிப்படைக்குச் சென்றார்கள். இன்று வரை அதைத் தங்கள் பத்திரிகையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
ஆதாரப்பூர்வமான ஸஹீஹான நபிமொழிகளைத் தான் மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக இன்றைக்குப் பலவீனமான செய்திகளையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் நிலைக்குச் சென்று விட்டனர்.
தன்னுடைய உறவினர் என்பதற்காக, கொள்கையற்றவர்களை தங்களுடைய மதரஸா நிகழ்ச்சிகளில் பங்கு பெறச் செய்து "உமறுப் புலவர் கனவில் நபிகள் நாயகம் வந்தார்கள்'' என்று அவர் உளறியதையெல்லாம் ரசித்துக் கேட்ட கொள்கை வீரர்கள் தான் இவர்கள்.
அது மட்டுமல்ல! அதே பிர்தவ்சியா மதரஸா ஆண்டு விழாவில், "வந்தே மாதரம்' பாடுவதை ஆதரித்து, அதாவது இணை வைப்பை ஆதரித்து ஒருவர் பேசுகிறார். அவரை இறுதி வரை பேச வைத்து, வந்தே மாதரம் என்பது எவ்வளவு பெரிய இணை வைப்பு வரிகள் என்பதை அந்தக் கூட்டத்தைக் கேட்டவர்களுக்குக் கூட விளக்காமல் அனுப்பி வைத்த இந்தக் கொள்கைச் சிங்கங்கள் தான் சத்தியவாதிகளாம்.
குர்ஆன் அனைவருக்கும் விளங்கும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருவதால், "16 கலைகளைக் கற்றவர்கள் தான் குர்ஆனை விளங்க முடியும்'' என ஜாக்கின் மாநில அமீர், தான் என்ன பேசுகிறோம் என்று கூட அறியாமல் தனிமனித வெறுப்பில் குராபிகளை விட மோசமாகப் பேசியுள்ளார்.
இவர்கள் தனி மனிதக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தான் கொள்கையில் தடம் புரண்டுள்ளார்கள் என்பதற்கு நாம் இன்னும் பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.
ஸஹர் நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டுள்ளன. அதை நாம் நம்முடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்த வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் வெறுப்புற்ற இவர்கள் ஹதீஸை மறுக்கின்றோமே என்பதைக் கூட அறியாமல் "ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்வது குழப்பமானது'' என குராபிகளைப் போன்று அறிவித்தனர்.
பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுவது தான் நபிவழி; எனவே திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால், "திடல் தொழுகை என்று ஒரு தொழுகையே மார்க்கத்தில் கிடையாது' என்று தமிழக முதல்வரையே மிஞ்சும் அளவிற்கு தங்களின் தமிழ் மொழிப் புலமையை வெளிப்படுத்தி, திடலில் தொழ வேண்டும் என்ற சுன்னத்தை மறுத்தனர்.
பெண் வீட்டு விருந்து என்பது நபிவழித் திருமணத்தில் இல்லாத ஒன்று; எனவே பெண் வீட்டுத் திருமண விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் "பெண் வீட்டு விருந்து வைக்கக் கூடாது என ஹதீஸில் வருகிறதா?'' என்ற அபாரக் கேள்வியைக் கேட்டு இன்று ஜாக் இயக்கத்தினர் பெருவாரியாகப் பெண் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டி வருகின்றனர்.
தவ்ஹீத் பெயரில் ஆடம்பரத் திருமணம் நடத்தக் கூடியவர்கள், பெண் வீட்டு விருந்திற்குத் தவ்ஹீத் போர்வை போர்த்தியவர்கள் வர வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் ஜாக் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுத் திருமணத்திற்குத் தங்கள் ஜமாஅத்தின் பேச்சாளரை அனுப்பி வைத்து திருமணத்தையும் நடத்தி வைப்பார்கள். அந்தச் சபையில் என்ன நடந்தாலும் வந்த வேலையை மட்டும் பார்த்து விட்டுச் சென்று விடுவார்கள். அதைக் கண்டித்துக் கூட பேச மாட்டார்கள். இவை நாம் கற்பனை செய்து எழுதவில்லை. ஜாக் இயக்க நிர்வாகிகள் எடுத்த அவதாரங்களை விபரமாகக் கேட்டறிந்து தான் எழுதுகிறோம்.
உணர்வு வார இதழில், "அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, உழவர் சிலை போன்றவை வரலாற்று சிறப்பு வாய்ந்தவை'' எனத் தவறாக எழுதி விட்டோம். பிறகு இதற்கு மறுப்பு வெளியிட்டு மன்னிப்பும் கேட்டு விட்டோம்.
ஆனால் பரிசுத்த வேடம் போடும் இந்தக் கொள்கை வேடதாரிகள், "சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் ததஜ'' என்று தங்கள் பத்திரிகையிலே எழுதி அகமகிழ்ந்து கொண்டனர். ஆனால் என்ன வேடிக்கை என்றால் அதற்கு மறு பக்கத்திலேயே, "கண்ணகிக்குச் சிலை வைத்து பூம்புகாரை அழகு பார்த்தவர் நீங்களல்லவா?'' என கலைஞரைப் புகழ்ந்து எழுதி சிலை வழிபாட்டை ஜாக் இயக்க நிர்வாகிகள் ஆதரித்துள்ளனர். இவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ள முறையற்ற தனி மனித வெறுப்பு தான் இவர்களை இப்படியெல்லாம் தடுமாறச் செய்துள்ளது.
விரலசைப்பது நபி வழி என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து பணப் பட்டுவாடா செய்யக்கூடிய சில சவூதிகள் சரியான ஆய்வில்லாமல் இது தவறு என்று கூறியதாலும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அனைவரும் விரலசைத்து இந்த நபிவழியை நிலைநாட்டி வருவதாலும் வெறுப்புணர்வின் காரணமாக இவர்களின் ஆதரவுப் பத்திரிகைகளில் எந்த விதமான முறையான ஆய்வுமில்லாமல் விரலசைப்பது நபிவழியல்ல, அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் என எழுதியுள்ளனர்.
இட ஒதுக்கீட்டை ஆதரித்து இவர்கள் தங்கள் பத்திரிகைகளில் அதிகமதிகம் எழுதியுள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு தர மறுத்தவர்களைக் கண்டித்தும் எழுதியுள்ளனர். பல மாநாடுகளில் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளனர். ஏன்? ஜாக் மாநில நிர்வாகியாக இருந்து தற்போது அவர்களாலேயே தூக்கியெறியப் பட்டுள்ள கோவை அய்யூப் அவர்கள், "முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காகக் கை சின்னத்தில் வாக்களிப்பீர்'' என நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரசியல் மேடையில் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்தார்.
ஆனால் பாருங்கள், இவர்களின் கயமைத்தனத்தை! ஜனவரி 29 அன்று கும்பகோணம் மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு கொடுத்த போது, "உரிமைகளை இவர்களிடம் கேட்கலாமா?'' என மாநில அமீர் கொள்கை வெறி (?) மேலோங்கி பல இடங்களில் முழங்கியுள்ளார். பல இடங்களில் ஜாக் இயக்கப் பேச்சாளர்கள் வெள்ளிக்கிழமை பயான்களில், இட ஒதுக்கீடு கேட்பது மார்க்கத்திற்கு முரணாணது என்றும் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் உளற ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஆதரித்த ஒன்றையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்கிறது என்பதற்காக மறுத்துப் பேசுவது கொள்கைப் பிடிப்பா? இல்லை தடுமாற்றமா?
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையின் அடிப்படையில் தவ்ஹீது ஜமாஅத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அதைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதே சமயம், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு இயக்கங்களிலிருந்தும் விரட்டப்பட்ட ஒருவருக்கு, பாளை தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வழங்கக் கோரி தங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இவர்களின் கொள்கைத் தடுமாற்றங்கள் இது மட்டுமல்ல! சுருக்கமாகக் கூறினாலே பல பக்கங்களுக்கு எழுதிக் கொண்டே போகலாம். எனவே அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள் யார் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். காசுக்காகவும், தனி மனித வெறுப்பு வழிபாட்டினாலும் தடம் புரண்ட இவர்கள் இனிமேலாவது தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

முதல் பிறை பித்தலாட்டம்
இது மேலப்பாளையத்தில் ஜாக் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி! இது தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ!
1. ஒவ்வொரு மாதமும் பிறை பார்க்கப்பட்டு வருகிறதாம்.
2. அதன் படி புனித ரமளான் துவக்கம் புதன் கிழமையாம்.
இந்த உத்தம புத்திரர்கள், உண்மை சொரூபிகள் மாதா மாதம் பிறை பார்த்து வருகிறார்கள் என்ற கருத்தை இந்தச் சுவரொட்டி தெரிவிக்கின்றது.
"ஒரு மாதம் என்பது 29 இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1907
"பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப் படுத்துங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1909
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பிறை பார்த்து நோன்பு வைப்பது நபிவழியாகும். எனவே, ரமளானின் முதல் நாளை அறிவதற்காக மாதா மாதம் பிறையைப் பார்த்து வந்தால் அதை நாமும் வரவேற்கலாம்.
ஆனால் இவர்களோ முழுக்க முழுக்க கணிப்பின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பவர்கள். அதன் அடிப்படையில் தான் உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத 12.09.07 அன்று முதல் பிறை என்று சுவரொட்டி ஒட்டியுள்ளார்கள்.
இவர்கள் மாதா மாதம் பிறை பார்த்து வருவது உண்மை என்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களது கணக்குப்படியே முதல் பிறை 12.09.07 என்று வைத்துக் கொண்டாலும் 10.10.07 அன்று (இவர்களது கணக்குப்படி பிறை 29) பிறை பார்த்து அன்று பிறை தென்பட்டால் அடுத்த நாள் 11.10.07 அன்று பெருநாள் என்று முடிவு செய்ய வேண்டும். ஆனால் இவர்களோ 12.10.07 அன்று பெருநாள் என்று முடிவு செய்து 13.09.07 அன்றே கடிதம் அனுப்புகின்றார்கள்.
பிறையைப் பார்த்ததன் அடிப்படையில் ரமளான் மாதத்திற்கு முப்பது நாட்கள் தான் என்று 13.09.07 அன்றே எப்படிச் சொல்ல முடியும்?
அதாவது கணிப்பின் அடிப்படையில் 12.10.07 அன்று பெருநாள் என்று முடிவு செய்கிறார்கள். அப்படியானால், "ஒவ்வொரு மாதமும் பிறை பார்க்கப்பட்டு வருவதன் அடிப்படையில்'' என்று போஸ்டர் ஒட்ட வேண்டிதன் அவசியம் என்ன? கணிப்பின் அடிப்படையில் இன்ன தேதியில் நோன்பு, இன்ன தேதியில் பெருநாள் என்று அறிவிக்க வேண்டியது தானே?
"பிறை பார்க்கப்பட்டு வருவதன்'' அடிப்படையில் நோன்பை முடிவு செய்ததாகக் கூறியது பச்சைப் பொய் தானே?
மார்க்க விஷயத்தில், துளியும் இறையச்சம் இல்லாமல் இப்படித் துணிந்து பொய் சொல்பவர்கள் வேறு எதைத் தான் செய்யத் துணிய மாட்டார்கள்? என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
"பிறை பார்க்கப்பட்டு வருவதன் அடிப்படையில்'' என்று இவர்கள் மார்க்க விஷயத்தில் கூறியிருக்கும் பொய் ஏதோ, கவனக்குறைவாக நடைபெற்ற ஒன்றல்ல! கடந்த ஆண்டும் இதே பொய்யைத் துணிந்து கூறினார்கள்.
இவர்களது அகில உலக அமீர் (?) கமாலுத்தீன் மதனி 06.09.06 அன்று கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில் "பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் ரமளான் மாதம் 22.09.06 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது, அதனால் 23.09.06 அன்று நோன்பு துவக்கம்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
22ம் தேதி ரமளான் துவக்கம் என்பதை 6ம் தேதியே கணிப்பின் அடிப்படையில் அறிவித்தார். ஆனால், "பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில்'' என்ற பச்சைப் பொய்யை அந்தக் கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கடந்த அக்டோபர் 2006 ஏகத்துவம் இதழில், "கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு'' என்ற கட்டுரையில் அமீரின் (?) கடிதத்தை அப்படியே வெளியிட்டு விளக்கியிருந்தோம்.
அமீரின் இந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரது அடிவருடிகளும் இன்று அதே பொய்யை போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். எனவே மார்க்க விஷயத்தில் பொய் கூறுவதை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளனர்.
இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், நாம் பிறை பார்த்ததன் அடிப்படையில் அரஃபா நாள் நோன்பு நோற்கும் போது, "சவூதியில் எல்லோரும் பெருநாள் கொண்டாடும் போது இவர்கள் அரஃபா நோன்பு நோற்கிறார்கள்'' என்று நம்மைப் பார்த்து கேலி செய்து வந்தனர்.
ஆனால் இவர்களது குழப்பத்தால் இன்று சவூதியை விட ஒருநாள் முந்தி நோன்பைத் துவக்கியுள்ளனர். உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத அமாவாசை நாளை முதல் பிறை என்று அறிவித்துள்ளனர்.
இப்போது இவர்களுக்கும், சவூதிக்கும் ஒரு நாள் வித்தியாசம் வந்துள்ளது. எனவே இவர்கள் இதுவரை கூறி வந்த அரஃபா நாள் வாதம் வெறும் சந்தர்ப்ப வாதம் தான் என்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
இவர்களது இந்தச் சந்தர்ப்பவாதம், இவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள நாகர்கோவில் மஸ்ஜிதுல் அஷ்ரபில் எடுபடாமல் போனது. அங்கு இவர்களது சர்வதேசப் பிறையை ஏற்றுக் கொள்ளவில்லை.
கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன்... என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தனது சொந்த ஊரிலேயே ஒரு பிறையைக் கொண்டு வர முடியாதவர், உலகத்துக்கெல்லாம் ஒரே பிறையைக் கொண்டு வரப் போகிறாராம். சர்வதேசத்திலும் பிறையில் ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறாராம்.
பிறை மூலம் ஊர் ஊராகக் கூறு போடக் கிளம்பியிருக்கும் இந்தக் குழப்பவாதிகளை ஏகத்துவவாதிகள் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

அடிவருடிகள்
? அக்டோபர் மாத இதழில், முகத்திரையைக் கிழித்த முதல் பிறை என்ற தலைப்பில், "உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத அமாவாசை தினத்தில் முதல் பிறை என்று அறிவித்து உள்ளனர்' என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அதே நாளில் சவூதியிலும், மலேஷியாவிலும் நோன்பைத் துவக்கியுள்ளனர். உலகத்தில் எங்குமே பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்? இரண்டும் வேறு கிரகங்களில் உள்ளதா? மேலும் அதே கட்டுரையில், கமாலுத்தீனின் அடிவருடிகள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மார்க்கப் பத்திரிகையில் இது போன்ற மஞ்சள் பத்திரிகை வார்த்தைகள் இடம் பெறுவது ஏன்?

ஜாக் இயக்கத்தினர் 12.09.07 அன்று முதல் பிறை என்று அறிவித்தனர். 11.09.07 அன்று பிறை பார்த்தால் தான் 12ஆம் தேதி முதல் பிறையாக இருக்க முடியும். ஆனால் 11ஆம் தேதி உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாது என்று நாம் மட்டும் கூறவில்லை. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் கூறுகின்றது. மேலும் அன்றைய தினம் பிறை பார்த்ததாக உலகத்தில் யாருமே கூறவில்லை. முதல் பிறை என்று கூறியவர்கள் கூட பிறை பார்த்ததன் அடிப்படையில் முதல் பிறை என்று சொல்லவில்லை. கணிப்பின் அடிப்படையில் தான் கூறினார்கள்.
சவூதியிலும், மலேசியாவிலும் அன்றைய தினம் (12.09.07) நோன்பைத் துவக்கியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது பச்சைப் பொய். இந்த இரண்டு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். மார்க்க விஷயத்தில் தெளிவடைய வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இருந்திருந்தால் இது போன்ற பொய்யான தகவலைக் கூறியிருக்க மாட்டீர்கள்.
ஒரு வேளை அன்றைய தினம் வேறு எங்காவது நோன்பைத் துவக்கியிருந்தாலும் அதற்காக அன்று பிறை தென்பட்டது என்று கூற முடியாது. கணிப்பின் அடிப்படையில் தான் நோன்பைத் துவக்கியிருப்பார்கள். பிறை பார்த்து நோன்பைத் துவக்க வேண்டும் என்றால் 13 அல்லது 14ஆம் தேதி தான் முதல் நோன்பாகும்.
அடிவருடிகள் என்ற வார்த்தையையும் விமர்சித்துள்ளீர்கள். இது ஒன்றும் கெட்ட வார்த்தை கிடையாது. தமிழில் வழக்கத்தில் உள்ள வார்த்தை தான். தமிழ் அகராதிகளில் எதில் வேண்டுமானாலும் இதற்கான பொருளைப் பார்த்துக் கொள்ளலாம். அடிவருடிகள் என்றால் சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று பொருள். இதில் என்ன தவறு இருக்கின்றது? ஜாக் தலைமையிலிருந்து கிடைக்கும் பணத்திற்காகக் கொள்கையை அடகு வைப்பவர்களை வேறு எந்த வார்த்தையில் அழைப்பது?
சவூதி உட்பட அனைத்து அரபு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். ஆனால் இவர்கள் 12.09.07 அன்றே, அதாவது சவூதிக்கு ஒரு நாள் முன்னதாகவே நோன்பைத் துவக்கினார்கள். இதன் மூலம் சவூதியே பிறை விஷயத்தில் தவறில் இருக்கிறது, நாங்கள் தான் சரியான கருத்தில் இருக்கிறோம் என்று வாதிட்டார்கள். இவர்கள் இதில் உறுதியாக இருந்தால் ஹஜ் பெருநாளிலும் அதே நிலையை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 18.12.07 அன்று கமாலுத்தீன் மதனி பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அரபாவில் மக்கள் கூடுவதால் இன்று தான் அரபா நாள்; அதற்கு அடுத்த நாள் பெருநாள் என்று கூறியுள்ளார். அதைப் பின்பற்றி அவருடைய அடிவருடிகளும் இதே கருத்தை மறு நாள் பத்திரிகையில் அறிக்கையாக வெளியிட்டதுடன் 19.12.07 அன்று பெருநாளும் கொண்டாடினார்கள்.
பிறையின் அடிப்படையில் இன்று பெருநாள் என்று கூறாமல் சவூதியில் அரபாவில் மக்கள் கூடுகிறார்கள் என்பதால் அதற்கு அடுத்த நாள் தான் பெருநாள் என்று கூறுகிறார்கள்.
 "பிறை பார்த்த அடிப்படையில் 12.09.07 அன்று நோன்பு துவக்கம்'' என்று சுவரொட்டி ஒட்டினார்கள். "பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீசுக்கு எதிரானதா?'' என்று பிரசுரம் வெளியிட்டார்கள். "சவூதியில் பெருநாள் என்பதால் நமக்கும் பெருநாள்'' என்று பத்திரிகையில் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
இவர்கள் பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்களா? கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா? அல்லது சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்களா?
மார்க்க விஷயத்தில் இவர்கள் செய்து வரும் இந்தக் குழப்பத்தை நாம் பலமுறை சுட்டிக் காட்டிய பின்னரும் அதைக் கண்டு கொள்ளாமல் ஜாக்கின் தலைமையிலிருந்து தங்களுக்கு வரும் உதவிகளுக்காக மார்க்கத்தில் விளையாடுகிறார்கள் என்றால் இவர்களை அடிவருடிகள் - சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.



நீடூரிலிருந்து வேலூர் வரை

எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிது ஓதிக் கொண்டிருந்தவர்கள் தான். இவ்வாறு ஓதுகின்ற அந்த மவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடைய உள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது.
தாயத்து, தகடுகள், கப்ரு வணக்கங்கள், தர்ஹாக்கள், அவற்றில் நடக்கும் அனாச்சாரங்கள் இவை அனைத்தும் நம்மை வெகுவாகப் பாதித்தன. இவை அந்த நெருப்புப் பொறியைப் பற்றி, கனன்று எரிய வைத்தன. அதன் விளைவாக எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய அருட்கொடை தான் ஏகத்துவ சிந்தனை.
இது எந்தத் தனி மனிதனாலும் நமக்குக் கிடைத்ததல்ல! இறைவனாக நமக்குத் தந்த சிந்தனை!
அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை மக்களிடம் முன் வைத்தோம். அவ்வாறு முன் வைத்த மாத்திரத்திலேயே எதிர்ப்புகள் நம்மை நோக்கி ஏவுகணைகளாகப் பாய்ந்தன. இந்த ஏவுகணைகள் மக்களிடமிருந்து வரவில்லை; உலமாக்களிடமிருந்து தான் வந்தன.
இந்த ஏவுகணைகளை எதிர் கொள்வதற்கு நாம் கையில் எடுத்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த வாதம் என்ற ஆயுதம்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆயுதம் ஏந்தி ஒரே ஒரு முறை தான் சிலைகளை உடைத்தார்கள். ஆனால் வாதம் என்ற ஆயுதம் ஏந்தி அறிவுப் பூர்வமாக எதிரிகளின் தலைகளை உடைத்து விட்டார்கள். இதை அல்குர்ஆனில் அவர்களைப் பற்றிக் கூறும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஷம்சுல்ஹுதாவுடன் ஒரு சந்திப்பு
உண்மை என்று தெரிந்து அதில் உறுதியாக ஆனதும், இதற்கு ஆலிம்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர் கொள்ளும் முகமாக, நீடூர் மிஸ்பாஹுல் ஹுதாவின் முதல்வர், நீடூர் ஜாமிஆ பள்ளிவாசல் இமாம், மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களிடம் சந்திப்பதற்கான நாள், நேரம் கேட்டோம். அவர்களும் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.
ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு,     பி. ஜைனுல் ஆபிதீன், எம். ஷம்சுல்லுஹா, முஹம்மது யூசுப் மிஸ்பாஹி ஆகிய மூவரும் சந்திக்கச் சென்றனர். ஷம்சுல்ஹுதா அவர்கள் முன்னிலையில் அவரது மாணவர்கள் சம்மணமிட்டு உட்காரக் கூடாது; மண்டியிட்டுத் தான் உட்கார வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தியிருந்தார். பி.ஜே.யைத் தவிர மற்ற இருவரும் ஷம்சுல்ஹுதா அவர்களின் மாணவராக இருந்தாலும், மண்டியிட்டு அமர்வதற்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்பதால் சம்மணமிட்டுத் தான் அமர வேண்டும் என்று கண்டிப்புடன் பி.ஜே. தெரிவித்திருந்தார்.
ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு ஜாமிஆ பள்ளிவாசலில் உள்ள அவரது அறையில் சந்திப்பு துவங்கியது. சந்திப்பு துவங்கும் முன், கையில் எடுத்துச் சென்ற டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொள்ளலாமா? என்று அவரிடம் பி.ஜே. அனுமதி கேட்டார். அதற்கு அவர் கூடாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டார். (அப்போது நடைபெற்ற உரையாடல் விபரம் இன்ஷா அல்லாஹ் ஏகத்துவத்தில் பின்னர் வெளியிடப்படும்)
இதனையடுத்து, கிளியனூர் மத்ரஸா ரஹ்மானிய்யாவின் முதல்வர் எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் அவர்களை பி.ஜே. மற்றும் ஷம்சுல்லுஹா ஆகியோர் சந்தித்து விவாதித்தனர். இந்த விவாதத்தின் போது மதரஸா மாணவர்கள் அனைவரும் அருகில் இருந்தனர். பி.ஜே. தொடுத்த கேள்விகளுக்கு அப்துஸ்ஸலாம் அவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. பல கேள்விகளுக்கு, பார்த்துச் சொல்கிறேன் என்ற பதிலைத் தான் தர முடிந்தது. (இந்த விவாதத்தில் நடந்த உரையாடல்களும் பின்னர் வெளியிடப்படும்)
திருப்பந்துருத்தி முஹம்மது அலீ அவர்கள் அத்திக்கடையில் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். இவர் தான் பி.ஜே.யின் ஆசிரியர். அவரையும் அத்திக்கடையில் போய் சந்தித்து, இருவருக்கும் மத்தியில் விவாதம் நடந்தது.
அதிராம்பட்டிணம் ரஹ்மானிய்யா மதரஸாவின் முதல்வராக உள்ள முஹம்மத் குட்டி அவர்களையும் பி.ஜே. சந்தித்து, விவாதித்தார்.
வலிமார்கள் மாநாடு என்ற பெயரில் தஞ்சையில் நஞ்சைக் கக்கும் ஒரு மாநாடு! இறந்து விட்ட பெரியார்களிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று அம்மாநாட்டில் உலமாக்கள் உரத்து முழங்கினர். இதைக் கண்டித்து அன்று சங்கரன்பந்தலில் பணியாற்றிய பி.ஜே. தனது ஒரு மாதச் சம்பளத்தைச் செலவு செய்து, ஒரு நாடகம் அரங்கேறியது என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார்.
இது ஆலிம்கள் வட்டாரத்தில் பெரும் புயலையும், பூகம்பத்தையும் கிளப்பியது. இதை விசாரணை செய்வதற்காக திருப்பந்துருத்தியில் ஜமாஅத்துல் உலமா கூடப் போவதாகவும், அந்த விசாரணையில் பி.ஜே. கலந்து கொள்ள வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அந்த நேரத்தில் பி.ஜே. பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஜமாஅத்துல் உலமா மாவட்டச் செயலாளர். ஷம்சுல்லுஹா செயற்குழு உறுப்பினர்.
இந்தக் கூட்டத்திற்கு பி.ஜே., ஷம்சுல்லுஹா, மறைந்த பி.எஸ். அலாவுதீன் ஆகியோர் சென்றிருந்தனர். மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர் ஷம்சுல் ஹுதா தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் விசாரணை தொடங்கியது. வாதங்கள் நடந்தன. முடிவில் மூவரையும் நீக்கப் போவதாக ஜமாஅத்துல் உலமா அறிவித்தது. தேவையில்லை உங்கள் ஜமாஅத்துல் உலமாவின் பொறுப்பு! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தூக்கி எறிந்து விட்டு வந்தனர்.
இதுவெல்லாம் தனி நபராக இருப்பினும், ஒரு கூட்டமாகக் கூடியிருக்கும் சபையாக இருப்பினும் வாதக் களங்களைச் சந்திப்பதற்கு நாம் தயங்கியதில்லை என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.
முபாஹலாவும் முஜாதலாவும்
ஏகத்துவக் கொள்கை வேர் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் காயல்பட்டிணத்தில், அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்ற தலைப்பில் ஓர் உரை! அந்தத் தலைப்பில் பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, முஹய்யித்தீனிடம் உதவி தேடலாம், இது தொடர்பாக என்னிடம் முபாஹலா செய்யத் தயாரா? என்று ஒரு துண்டுச் சீட்டு மேடைக்கு வருகின்றது. அதைப் பார்த்து விட்டு, "முபாஹலாவுக்குத் தயார்! ஆனால் அதற்கு முன்னால் முஜாதலா (விவாதம்) இருக்கின்றது; விவாதத்திற்குப் பிறகு தான் முபாஹலா'' என்று பி.ஜே. அறிவித்தார்.
இதன் பின்னர் விவாதத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அழைத்தவர் முபாஹலா தான் செய்ய வேண்டும் என்று சாதிக்கவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முபாஹலாவுக்குரிய தேதி குறித்ததும், இர்ர்ந் தங்ஹக்ஹ் என்று சங்கேத வார்த்தையில் தந்தி கொடுப்போம்; ஏனெனில் வேறு யாராவது, வாருங்கள் என்று அழைத்து அசம்பாவிதத்தை ஏற்படுத்தி, அதைக் கொண்டு தவ்ஹீது அணியினருக்குத் தோல்வி என்று கூறி விடக் கூடாது என்பதற்காக இந்த சங்கேத வார்த்தை!
குழுவினர் கூறியது போல் சங்கேத வார்த்தையில் தந்தி வந்தது. பி.ஜே., தனது நான்கு நாள் கைக்குழந்தையுடன் மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு காயல்பட்டிணத்தில் முபாஹலாவில் கலந்து கொண்டார். அன்று ஏகத்துவம் பேசிய எந்த மதனியும் ஜலீல் முஹைதீனின் இந்த முபாஹலா அறைகூவலைக் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அதன் பின்னர்,
 கோட்டாரில் ஏ.எல். பத்ருத்தீனுடன் விவாதம்
கோவையில் காதியானிகளுடன் விவாதம்
மதுரையில் கிறித்தவர்களுடன் விவாதம்
ஏர்வாடியில் பிறை தொடர்பான விவாதம்
சென்னையில் அஹ்லெ குர்ஆன் என்று சொல்லிக் கொள்ளும் 19 குரூப்புடன் விவாதம்
இலங்கையில் ஷர்புத்தீன் பாக்கவி மற்றும் உமர் அலீ ஆகியோருடன் விவாதம்
இப்படி விவாதக் களங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
அவர்கள் நல்லவர்கள்;
இவர்கள் நயவஞ்சகர்கள்
இவையெல்லாம் விவாதக் களமானாலும், முபாஹலா களமானாலும் இது வரை நாம் சந்திக்கத் தயங்கியதில்லை என்பதற்கான சத்திய சாட்சியங்கள்.
நம்முடன் மோதினார்களே அவர்கள் உண்மையில் நல்லவர்கள்; நன்றிக்குரியவர்கள். காரணம், அவர்கள் நடிக்கவில்லை; கபட நாடகம் ஆடவில்லை. சொன்னது சொன்னபடி வந்தார்கள்.
ஆனால் ஒரு சிலர் மட்டும் விவாதத்திற்குத் தயார் என்று வீராவேசமாக அறிவித்து விட்டு களத்திற்கு வராமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத் தக்கவர் ஸைபுத்தீன் ரஷாதி. அண்மையில் இப்படி ஒரு நாடகக் கூட்டமே கிளம்பி விட்டது. தமிழகம் முழுவதும் நடத்தப்படும் நாடக மேடைகளில் நயவஞ்சகமாகப் பேசி நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் ஸைபுத்தீன் ருஷ்டிகளும், ஷேக் அப்துல்லாஹ் கோமாளிகளும் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தோம். பாக்கியாத் உலமாக்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டு நாடகத்தின் உச்சக் கட்டத்திற்கே சென்று விட்டனர். அதனால் இந்த நாடகக் குழுவின் கபட வேடத்தைக் களைவது ஏகத்துவத்தின் கடமையாகி விட்டது. அதற்காகவே இந்த விளக்கக் கட்டுரை!
ஓடிப் போன திருப்பூர் உலமா சபை
தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அழைப்பை ஏற்று திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை 17.7.2003 சனிக்கிழமை அன்று விவாத ஒப்பந்தத்திற்கு வர சம்மதித்தது.
விவாத ஒப்பந்தத்திற்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா நிர்ணயித்த மேற்குறிப்பிட்ட தேதியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எம்.ஐ. சுலைமான், கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி, எஸ். கலீல் ரசூல் ஆகியோர் சென்று விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொண்டனர். ஜமாஅத்துல் உலமா சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார். 27.09.2003 மற்றும் 28.09.2003 ஆகிய தேதிகளில் விவாதம் செய்ய வேண்டும் என்ற விவாத ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதை ஓய்ப்பதற்கான வழியை திருப்பூர் ஜமாஅத்துல் உலமா தேடி அலைந்து கொண்டிருந்தது. மண்டை காய்ந்து போய், மண்டபம் கிடைக்கவில்லை; மண்டபம் கிடைக்கவில்லை என்ற மழுப்பல் மொழியைப் பேசிக் கொண்டிருந்தது. இது சரி வராது என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் ரகசியமாக மண்டபத்தை வாடகைக்குப் பிடித்துக் கொண்டனர். இவர்கள் மழுப்பி, நழுவி விடக் கூடாது என்று கருதி, இவர்களைச் சிக்க வைக்கும் விதமாக திருப்பூர் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒரு வேலையைச் செய்தார்கள். திருப்பூரில் 27.09.2003 அன்று தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், திருப்பூர் ஜமாஅத்துல் உலமாவுக்கும் இடையே விவாதம் நடைறெ உள்ளது. அனைவரும் வருக என்று மண்டபத்தின் பெயரைக் குறிப்பிட்டு மக்களை வரச் சொல்லி சுவரொட்டிகள் ஒட்டினர்.
இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, மண்டபத்திற்கு பார்வையாளர்களாக இரு தரப்பிலும் 200 வீதம் 400 பேர் தான் வர வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கையில், நீங்கள் எப்படி மக்கள் அனைவரையும் அழைக்கலாம் என்று கேட்டு, இதைத் தங்கள் சறுக்கலுக்கு சரியான காரணமாக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தார்கள் இந்த உலமா சபையினர்.
"யார் வராவிட்டாலும்  நான் வருவேன்'' என்று எழுதிக் கையெழுத்துப் போட்ட  ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் ஓட்டம் எடுத்தார்
அன்று ஓட்டம் எடுத்தவர்கள் தான் இந்தத் திருப்பூர் ஜமாஅத்துல் உலமா சபையினர். இன்னும் திரும்பிப் பார்க்கவில்லை.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாளில் தவ்ஹீது ஜமாஅத்தினர் மண்டபத்தில் போய் காத்திருந்தனர். யார் வராவிட்டாலும் நான் மண்டபத்திற்கு வருவேன் என்று சவடாலாகப் பேசி திருப்பூர் ஜமாஅத்துல் உலமாவிற்கு தெம்பு கொடுத்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட எவரும் மண்டபம் இருந்த திசைக்கே வராமல் ஓடி விட்டனர்.
பொதக்குடியில் புறமுதுகு காட்டிய கோமாளிகள்
பொதக்குடியிலும் மேடையில் பேசும் போது, தவ்ஹீது ஜமாஅத்தினருடன் விவாதம் செய்யத் தயார் என்று ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்ற கோமாளி சவடால் அடித்துள்ளார். உடனே நமது ஜமாஅத்தினர் அவரை அங்கேயே பிடித்து, விவாதத்திற்குத் தயாரா? என்று கேட்டவுடன் நான் விவாதத்திற்குத் தயார், ஆனால் இங்கு பேச மாட்டேன், சென்னையில் தான் பேசுவேன் என்று நழுவி ஓடினார்.
அம்மணத்தை மறைக்க அங்கவஸ்திரம்
தவ்ஹீத் ஜமாஅத்தினர் விவாதத்திற்கு அழைத்து விட்டார்களா? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மக்கள் கேட்கும் போது, நாங்கள் தயார் என்று சொல்வது! அதன் பின் ஏதாவது சாக்குப் போக்கைச் சொல்லி தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது பழியைப் போட்டு விட்டுத் தப்பி விடுவது!
தங்கள் அம்மணத்தை மறைப்பதற்கு, திருப்பூர் ஜமாஅத்துல் உலமா இப்படி ஒரு அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொண்டு தன்னைத் தப்பிக்கச் செய்து கொண்டது. திருப்பூர் ஜமாஅத்துல் உலமா கையில் எடுத்த ஆயுதம் வேறொன்றுமில்லை. சாட்சாத் கலீல் அஹ்மத் கீரனூரி, சாகஸ மன்னன் ஸைபுத்தீன் ரஷாதி ஆகியோரின் கை வசமிருக்கும் ஆயுதம் தான்.
கீரனூரியின் கீர்த்தனை
அன்றிலிருந்து இன்று வரை தவ்ஹீத் ஜமாஅத்தினர், இப்ராஹீம் (அலை) அவர்களின் விவாதம் எனும் அணுகு முறையைக் கையாண்டு வருகின்றனர். இதைக் கண்டு அசத்தியவாதிகள் பயந்து ஓடுகின்றனர். அல்லது பேச முன் வந்து தோற்கின்றனர். இவ்விரண்டுக்கும் இடைப் பட்டவர்கள், இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்கள் பாசாங்கு செய்கின்றனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாதப் பொறியிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது; அதே சமயம் மக்களிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கொள்கை விஷயத்தைப் பேச முன் வராமல், எதற்கும் பயன்படாத ஒரு தலைப்பைச் சொல்லி விவாதிக்கத் தயாரா? என்று கேட்கின்றனர்.
பி.ஜே. அப்படிச் செய்தார்; இது பற்றி விவாதிக்கத் தயாரா? என்பது போன்ற சவால்களை விடுவது! அல்லது நாம் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக நினைத்துக் கொண்டு இது பற்றி விவாதிப்போமா? என்று கேட்பது!
தராவீஹ் என்ற வார்த்தை ஹதீஸில் வருவதாக நாம் கூறவேயில்லை. ஆனால் கலீல் அஹ்மத் கீரனூரி, தராவீஹ் 8 ரக்அத்துக்கள் என்று ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்ட முடியுமா? இதைப் பற்றி விவாதம் செய்வோமா? என்று கேட்பார்.
உண்மையில் நாம், தராவீஹ் என்ற வார்த்தையே ஹதீஸில் இல்லை என்று தான் கூறி வருகின்றோம். இரவுத் தொழுகை என்று தான் குறிப்பிடு கிறோம். ஆனால் நாம் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி நாம் விவாதிப்போமா? என்று கேட்பார்கள்.
இதில் உள்ள நடிப்பை, நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் உண்மை என நம்பி விடுகின்றனர். மக்களின் இந்த அப்பாவித்தனத்தை முதலீடாகக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
சறுகல் மன்னன்
ஸைபுத்தீன் ருஷ்டி
தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்த மாதிரியும் இருக்க வேண்டும்; விவாதமும் நடக்கக் கூடாது என்ற நயவஞ்சக நாடக நடிப்புக் கலையில் இவரை மிஞ்சிய ஆளில்லை என்று சொல்லும் அளவுக்குக் கை தேர்ந்தவர் ஸைபுத்தீன் ரஷாதி!
இவர் சிதம்பரத்தில் 3.7.2005 அன்று நடந்த கூட்டத்தில் இந்தப் பாணியைக் கையாண்டு, சவால் விடுகின்றார். கூட்டத்திற்கு வந்திருந்த தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சில சகோதரர்கள் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்ட போது, கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா சபையினர், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
கூட்டம் முடிந்ததும் நமது சகோதரர்கள் அவரைச் சந்தித்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர், பி.ஜே. ஒரு பொய்யர் என்ற தலைப்பில் நான் விவாதிக்கத் தயார் என்று கூறுகின்றார்.
இதைத் தான் நாம் குள்ள நரித்தனம் என்கிறோம். கள்ள சிந்தனை கொண்ட கபட நாடகம் என்கிறோம். காரணம் பி.ஜே. என்ற நபர் தன் பக்கம் மக்களை அழைத்தால் அவர் ஒரு பொய்யர் என்று சொல்லி அவரை விட்டும் மக்களைத் தடுக்கலாம். ஆனால் அவர் குர்ஆன், ஹதீஸின் பக்கம் அல்லவா மக்களை அழைக்கின்றார். அவ்வாறிருக்கையில், அவரது அந்தக் கொள்கை தவறு என்று வாதிக்காமல், அவரைப் பொய்யர் என்று வாதிப்பதில் என்ன பயன்?
எனவே தேவையற்ற நிபந்தனை கூறி தட்டிக் கழிக்க முயல்கின்றார் என்றே அங்கு தெளிவானது. இருப்பினும் விவாதத்தை விட்டுத் தப்பி விடக் கூடாது என்பதற்காக அதற்கும் பி.ஜே. ஒப்புக் கொள்கிறார்.
சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமாவிற்கு பி.ஜே. அளித்த பதில் என்ன? இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்...


சிதம்பரத்தில் நடந்தது என்ன ? விவாதங்கள் ஒய்வதில்லை
03.07.05 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் வழக்கம் போல் ஸைபுத்தீன் ரஷாதி நரகல் நடையில் பேசத் துவங்கியதும், இது குறித்து பி.ஜே.யின் முன்னிலையில் நேரடியாக விவாதிக்கத் தயாரா? என்ற கருத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு துண்டுச் சீட்டு எழுதி மேடைக்கு அனுப்புகின்றார்கள்.
வழக்கம் போல் தயார் என்று அறிவித்து விட்டு பெங்களூர் பறந்து விட்டார் ஸைபுத்தீன் ரஷாதி.
இந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவைத் தொடர்பு கொண்டு விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா, ஸைபுத்தீன் ரஷாதி மேடையில் சொல்லும் வார்த்தைகளை எழுத்து வடிவில் தந்தது.
மார்க்கம் தொடர்பான ஆரோக்கியமான எந்தவொரு விவாதத்தையும் ஜமாஅத்துல் உலமா பேரவை வரவேற்கிறது.... என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், பி.ஜே. பொய்யர் என்று விவாதம் செய்யத் தயார் என்று அறிவித்திருந்தது.
சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமாவிற்கு பி.ஜே. அளித்த பதில் கடிதத்தில்...
ஸைபுத்தீன் ரஷாதி என்பவர் அறைகூவல் விட்டதைப் போல் பி.ஜே. மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியுள்ளாரா? என்ற தலைப்பில் விவாதம் செய்யவும், பி.ஜே. கூறியது பொய் என்று நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்கவும், மார்க்க மேடையில் பேச மாட்டேன் என்று உறுதி மொழி அளிக்கவும் பி. ஜைனுல் ஆபிதீன் ஆகிய நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால் எந்த விவாதமும் ஒரு தரப்பானதாக இருக்கக் கூடாது.
பி.ஜே. மார்க்க விஷயத்தில் பொய் சொல்கிறார் என்பது ஸைபுத்தீன் ரஷாதியின் நிலை, ஜமாஅத்துல் உலமாவின் நிலை.
மத்ஹபு நூல்களில் மார்க்க விஷயத்தில் நிறைய பொய்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும், பைத்தியக்காரத்தனமான உளறல்களும், அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்களும், முரண்பாடுகளும் உள்ளன என்பது எனது நிலை. மேலும் ஸைபுத்தீன் ரஷாதி ஒரு பொய்யர் என்பதும் எனது நிலை.
எனவே ஸைபுத்தீன் ரஷாதி கூறுவதை நான் ஏற்றுக் கொண்டது போல் நான் கூறும் தலைப்பைப் பற்றியும் விவாதிக்க அவர்கள் முன்வர வேண்டும். அந்த விவாதத்தில் மத்ஹபு நூல்களில் மீதான எனது குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் இது வரை மத்ஹபை ஆதரித்ததற்காக ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அத்துடன் மேடையிலேயே மத்ஹபு நூற்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், இனிமேல் மார்க்க மேடைகளில் உலமாக்கள் ஏறுவதில்லை என்றும் எழுதித் தர வேண்டும். ஸைபுத்தீன் பொய்யர், பித்தலாட்டக்காரர் என்பதை நான் நிரூபித்து விட்டால் அவரும் நான் எழுதித் தருவது போல் எழுதித் தர ஒப்புக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு விவாதம் என்றாலும் இரு தரப்புக்கும் சமமானதாக இருக்க வேண்டும். நீங்கள் விவாதிக்க வலியுறுத்தும் தலைப்பை எவ்வித மறுப்புமின்றி நான் ஏற்றுக் கொள்வது போல் நான் வலியுறுத்தும் தலைப்பை ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீ அவல் கொண்டு வா! நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி, ஊதித் தின்னலாம் என்பது போல் ஒரு தரப்பாக விவாதம் இருக்கக் கூடாது. சொல்லப் போனால் நம்மை ஜமாஅத்துல் உலமா எதிர்ப்பதற்குக் காரணமே நமது மத்ஹபு எதிர்ப்பு தான். இது தான் முக்கியமான தலைப்பாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு எட்டப்பட்டு விட்டால் மற்ற விஷயங்கள் யாவும் முடிவுக்கு வந்து விடும்.
இவ்வாறு சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவுக்கு பி.ஜே. பதிலளித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஸைபுத்தீனின் பதில்
நான் விவாதத் தலைப்பில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பி.ஜே. ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்பதை ஏராளமான அத்தாட்சிகளுடன் நிரூபிக்கிறேன்.
அப்படி நிரூபிக்கப்பட்டு விட்டால் இது நாள் வரை மார்க்கப் பிரச்சாரம் செய்ததற்கு சமுதாயத்துடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், இனிமேல் எழுத்தால், பேச்சால், இன்ன பிற எந்த வழிகளிலும் மார்க்கப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என உறுதி மொழி எழுதித் தர வேண்டும்.
இதே கண்டிஷனில் ஸைபுத்தீன் ஆகிய என்னையும் உடன் படுத்துகிறேன் என்று தெளிவு படுத்தி உள்ளேன்.
சுருக்கமாகச் சொன்னால் மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. இன்னும் ஸைபுத்தீன் ஆகிய இருவரில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டங்கள், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்தப்பட வேண்டும் என்பது சமநிலை விவாதம் தானே?
பி.ஜே.யைப் பற்றி மட்டும் தான் விவாதிப்பேன், என்னைப் பற்றி விவாதிப்பதற்கு உடன்பட மாட்டேன் என்று நான் கூறியிருந்தால் அதைச் சமநிலை இல்லாத ஒரு தரப்பான விவாதம் என்று கூறலாம்.
நான் அவ்வாறு கூறவில்லையே.
இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடுடைய ஃபிக்ஹ் சட்டங்களைப் பற்றி விவாதிப்பது அடுத்தக்கட்ட முயற்சி தான். அதுவும் செய்யப்பட வேண்டும். அதையும் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாகச் செய்வோம்.
இவ்வாறு ஸைபுத்தீன் தனது பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.
பி.ஜே.யின் பதில்
மத்ஹபைப் பற்றிய நமது குற்றச்சாட்டுக்களை முதலில் விவாதிக்க வேண்டும் என்பது தான் நமது நிலை. எனினும் ஏதேனும் காரணம் சொல்லி விவாதத்திற்கு வராமல் நழுவி விடும் அவர்களை விவாதத்திற்கு எப்படியும் அழைத்து வர வேண்டும் என்பதால் அவர்களுடைய நிபந்தனையை ஏற்கிறோம்.
மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. இன்னும் ஸைபுத்தீன் ஆகிய இருவரில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டங்கள், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்தப்பட வேண்டும் என்பது சமநிலை விவாதம் தானே? என்று ஸைபுத்தீன் கேட்டிருக்கிறார்.
மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. ஒரு புறம் - ஸைபுத்தீன், ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித் தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்த வேண்டும் என்பது தான் உண்மையிலேயே சமநிலை விவாதமாகும்.
எனவே அவர்களுடைய வார்த்தைப் படி, மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. ஒரு புறம், ஸைபுத்தீன், ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மார்க்கம் கூறும் விஷயத்தில்
பொய் பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்?
குர்ஆன், ஹதீஸில் இல்லாததை இஸ்லாம் என்ற பெயரில் பொய்யாகச் சொல்பவர்கள் யார்?
குர்ஆன் ஹதீஸிற்கு முரணான கருத்தைக் கூறி அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் மோதுபவர்கள் யார்?
குர்ஆன், ஹதீஸ்களின் கருத்துக்களை தனது இச்சைக்கேற்ப வளைத்தவர்கள் யார்?
ஹதீஸ்களில் இல்லாத வார்த்தையை வேண்டுமென்றே இணைத்துக் காட்டி தப்பர்த்தம் செய்தவர்கள் யார்?
ஹதீஸின் முக்கியப் பகுதியை மனமறிந்து நீக்கி தவறான கருத்தை வெளிப்படுத்தியவர்கள் யார்?
இமாம்கள் என்று ஜமாஅத்துல் உலமாவால் கருதப்படுபவர்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்றியவர்கள் யார்?
ஃபிக்ஹ் நூல்களில் சொல்லப்படாத கருத்துக்களை, இருப்பதாக பொய்யான பக்க, பாக விபரங்களை ஜோடித்துக் கூறியவர்கள் யார்?
ஆலிம்களையும் மக்களையும் ஏமாற்றுவதற்காகவே நூல்கள் பதிப்பகம், பதிப்பகத் தேதி போன்ற பொய் அட்டவணையைத் தொகுத்துக் காட்டியவர்கள் யார்?
இது போன்ற மோசடிகள், பித்தலாட்டங்கள், பித்துக்குளித் தனங்கள் செய்த கள்ளப் பேர்வழிகள், கயவர்கள் யார்?
என்ற தலைப்பிலேயே விவாதம் செய்வதற்கு நாம் தயார்.
இவ்வாறு தனது கடிதத்தில் பி.ஜே. குறிப்பிட்டிருந்தார்.
ஸைபுத்தீன் எழுதிய பதில் கடிதம்
விவாதத் தலைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள பி.ஜே.,
ஒரு புறம் பி.ஜே. மற்றொரு புறம் ஸைபுத்தீன் இன்னும் ஜமாஅத்துல் உலமா அவர்களின் அனைத்து அறிஞர்கள் என்ற நிலையில் தான் விவாதம் நடைபெற வேண்டும் என்று எழுதியுள்ளார்.
ஆனால் அவர், ஸைபுத்தீன் மற்றும் ஜமாஅத்துல் உலமா இன்னும் அறிஞர்கள் அனைவரின் மீதும் குற்றச்சாட்டு கூறுவாராம். அவ்வனைவர்கள் சார்பாகவும் நான் பதில் கூற வேண்டுமாம்.
இது தான் சம நிலை விவாதமாம்.
இதை சமநிலை என்று அறிவுள்ள யாரும் கூற மாட்டார்கள்.
நான் பி.ஜே. மீது பொய், பித்தலாட்டம், அவதூறு, போக்கிரித் தனம் போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறேன். அதை நிரூபிக்கிறேன் என்று அழைக்கிறேன். அவர் விவாத அரங்கில் மக்கள் முன்னிலையில் மறுக்கட்டும். அல்லது மாட்டிக் கொண்டு முழிக்கட்டும்.
அதே போன்று என் மீது மேற்படி குற்றச்சாட்டுகளைக் கூறி நிரூபிக்கட்டும். நான் மறுக்கிறேன். அல்லது அதற்குரிய தண்டனையை ஏற்கிறேன்.
இது தான் எல்லோரும் ஏற்கும் படியான அறிவுப்பூர்வமான சமநிலை விவாதமாகும்.
இது ஸைபுத்தீனின் பதில் கடிதம்.
பி.ஜே.யின் பதில்
நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவாதிக்க நீங்கள் மறுப்பதால் விவாதத்திற்கு முன்பே தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அல்லாஹ் வெற்றியைத் தந்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.
மார்க்க விஷயத்தில் பி.ஜே. பொய் சொல்லியிருக்கிறார் என்ற தலைப்பை மட்டும் தான் விவாதிப்போம் என்று நீங்கள் கூறினீர்கள்.
எங்களைப் பொருத்த வரை இது தேவையற்ற தலைப்பு என்ற போதும் உங்களை விடக் கூடாது என்பதற்காக அத்தலைப்பு முழுமையானதாகவும் சம நிலையிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொண்டோம்.
சமநிலை என்பது விவாதிக்கும் மனிதர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. நிலைபாட்டில் சமநிலை என்பது தான் சரியானதாகும்.
பி.ஜே. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து மார்க்கத்தைக் கூறுகிறார். தவ்ஹீத் உலமாக்களும் அவ்வாறே கூறுகின்றார்கள்.
ஆனால் ஸைபுத்தீன் ரஷாதி அவ்வாறு கூறுவதில்லை. மற்றவர்கள் செய்த முடிவைச் சொல்பவராகத் தான் இருக்கிறார்.
எனவே சம நிலை என்பது,
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை ஆய்வு செய்திருப்பதாக ஸைபுத்தீன் ரஷாதி நம்புகின்ற மத்ஹபு முன்னோடிகள் மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியிருக்கின்றார்களா?
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை ஆய்வு செய்து கூறும் ஜைனுல் ஆபிதீன் மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியிருக்கின்றாரா?
என்பது தான் சம நிலையாகும்.
மத்ஹபு முன்னோடிகள் உயிருடன் இல்லாததால் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஸைபுத்தீன் ரஷாதி, மத்ஹபு முன்னோடிகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.
இந்த சமநிலையைத் தான் நாம் குறிப்பிட்டோம்.
மத்ஹபைப் பின்பற்றக் கூடாது, குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை அறிந்து தான் ஒருவர் மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிறர் ஆய்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்வது தவறு என்று ஜைனுல் ஆபிதீன் கூறுகின்றார்.
மத்ஹபைப் பின்பற்ற வேண்டும். மத்ஹபு முன்னோடிகளின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று ஸைபுத்தீன் ரஷாதி கூறுகின்றார்.
எனவே நிலைபாட்டைப் பொருத்த வரை ஸைபுத்தீனும், ஜைனுல் ஆபிதீனும் சமநிலையில் இல்லை. மத்ஹபைப் பின்பற்றக் கூடாது என்றும் பிறர் ஆய்வுகளை அப்படியே ஏற்பது தவறு என்றும் ஸைபுத்தீன் ரஷாதி பகிரங்கமாக அறிவித்தால் அப்போது தான் ஜைனுல் ஆபிதீனும், ஸைபுத்தீனும் நிலைபாட்டில் சம நிலையில் உள்ளார்கள் என்று கூற முடியும்.
ஆய்வு செய்பவர்கள் என்ற அடிப்படையில்
மத்ஹபு முன்னோடிகளும் அவர்களின் தவறுகளை நியாயப்படுத்தும் ஸைபுத்தீனும் ஒரு அணி என்பதும்,
ஜைனுல் ஆபிதீன் ஒரு அணி என்பதும் தான் சம நிலையாகும்.
மத்ஹபைப் பின்பற்ற வேண்டும், மத்ஹபு முன்னோடிகளின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று ஸைபுத்தீன் கூறுவது போல்,
பி.ஜே.யைப் பின்பற்ற வேண்டும், பி.ஜே.யின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று யாராவது கூறினால் அவரும் ஸைபுத்தீனும் சம நிலையில் உள்வர்களாக ஆவார்கள்.
எனவே மார்க்கத்தைக் கூறுபவர்களின் நம்பகத்தன்மை என்பதில் சமநிலை இருக்க வேண்டும்.
மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
மார்க்கத்தைச் சொல்பவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டியது முதலில் அவசியம் என்ற ஸைபுத்தீன் ரஷாதியின் தலைப்பை நாம் ஏற்றுக் கொண்டோம். அது சமநிலையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் நாம் வற்புறுத்துகிறோம்.
விவாதத்துக்கான நேரத்தையும் இடத்தையும் நீங்களே முடிவு செய்து அறிவியுங்கள் என்று நாம் முந்தைய கடிதங்களில் எழுதியிருந்தோம். இது குறித்து நீங்கள் (சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா) 23.08.2005 அன்று எழுதிய கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டீர்கள்.
இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எப்பொழுது வைத்துக் கொள்வது என்பது தெரிவியுங்கள். இத்துடன் எழுத்து மூலம் தொடர்பு கொள்வதை விட்டு நேரடி விவாதத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.
மேலும் ஸைபுத்தீன் ரஷாதி தனது 19.08.2005 அன்று எழுதிய கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
விவாத அமைப்பு பற்றிய விசயங்களைக் கலந்து பேசி முடிவெடுக்க எப்பொழுது அழைத்தாலும் நான் வரத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் பொறுப்பை எங்களிடமே விட்டு விட்டீர்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
எனவே விவாதம் செய்வது குறித்து ஒப்பந்தம் செய்வதற்காக 27.09.2005 செவ்வாய்க்கிழமை பகல் 2.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்.
இவ்வாறு பி.ஜே. தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பி.ஜே.யும் ஸைபுத்தீனும் எப்படிப்பட்டவர்கள் என்று விவாதம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?
இரண்டு அணியினரின் கொள்கை குறித்து விவாதிப்பது தான் சமநிலை என்ற சரியான விளக்கம் கொடுத்து நாம் கடிதம் எழுதிய பிறகு ஸைபுத்தீனிடமிருந்து சத்தமில்லை.
சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா சபையிடமிருந்து சுத்தமாக பதில் இல்லை.
நாம் சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவிற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது போல் 27.09.2005 அன்று நமது ஜமாஅத் சார்பாக எஸ். கலீல் ரசூல் உட்பட ஐவர் அடங்கிய குழு சிதம்பரத்திற்குச் சென்றது.
சரியாக மதியம் 12.30 மணி முதல் மாலை 6.45 வரை கடிதத்தில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தும் அவர்கள் தரப்பில் விவாத ஒப்பந்தத்திற்கு யாரும் வரவில்லை. மேலும் எந்தத் தகவலும் தரவில்லை.
விவாத ஒப்பந்தத்திற்குக் கூட வரத் திராணி இல்லாதவர்களா விவாதம் செய்ய வரப் போகின்றார்கள்? தலை சிறந்த பல மார்க்க அறிஞர்களை(?) வைத்திருக்கும் ஜமாஅத்துல் உலமாவிற்கு சவாலைச் சந்திக்கத் திராணியில்லாமல் போனது ஏனோ?
இதைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.
(அல்குர்ஆன் 21:18)
நாம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்கள் வர மாட்டார்களா? என்று விவாத ஒப்பந்தத்திற்காகக் காத்துக் கிடந்தோம். அப்போது வராத ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் சென்னையில் மீண்டும் சவால் விடத் துவங்கினர்.
தவ்ஹீது ஜமாஅத்துக்குப் பகிரங்க சவால் என்ற தலைப்பில் சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் பி.ஜே.க்கு பகிரங்க சவால் என்ற தலைப்பில் சென்னையிலுள்ள சு.ஜ. பள்ளிகளில் துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப் பட்டன. அதில் 1.10.2005 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை மண்ணடி, மூர் தெருவில் ஸைபுத்தீன் ரஷாதி உரையாற்றப் போவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
பொதுக் கூட்டம் என்றோ, மார்க்க சொற்பொழிவு என்றோ தலைப்பில் போஸ்டர் ஒட்டியிருந்தால் அதை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.
ஆனால் பகிரங்க சவால் என்றால் அதை நாம் சந்தித்தே தீர வேண்டும், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்ற அடிப்படையில் 1.10.2005 மாலை 6 மணிக்கு மண்ணடி மூர் தெருக்கு பி.ஜே. உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் சென்று காத்திருந்தனர். ஆனால் அங்கு ஸைபுத்தீன் ரஷாதியோ, ஜமாஅத்துல் உலமாவோ யாரும் வரவில்லை. மீட்டிங் கேன்சல் என்று அங்கு அறிவிக்கப்பட்டது.


பயந்து நடுங்கும் பாக்கியாத் விவாதங்கள் ஒய்வதில்லை
பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு
8.5.2005 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின் மகத்தான அருளால் குறிப்பிட்ட தேதியில் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் திரண்டு வந்து சத்திய மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசும் போது, "மார்க்க அறிஞர்களைத் தயார் செய்து தமிழகத்துக்கே வழங்கும் சிறப்பு பெற்றது வேலூர். மிகச் சிறந்த உலமாக்கள் இவ்வூரில் நிறைந்துள்ளனர். இத்தகைய உலமாக்கள் நிறைந்த இவ்வூரில் நான் அறைகூவல் விடுகின்றேன். மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு விரோதமானவை. மத்ஹபு நூற்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான சட்டங்களும் உளறல்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பட்டியலிடுகின்றேன்'' என்று குறிப்பிட்டார். மேலும் மத்ஹபு நூற்களில் உள்ள அபத்தங்களில் சிலவற்றையும் அரபு மூலத்துடன் பாகம், பக்கத்துடன் வாசித்துக் காட்டி, இதைச் சரியென நிரூபிக்க இயலுமா? என்று சவால் விட்டார்.
நான் கூறியது தவறு என்றால் பாக்கியாத் உலமாக்களோ, வேறு எந்த உலமாக்களோ பகிரங்கமான விவாதத்துக்கு முன் வரட்டும் என்றும் அறைகூவல் விட்டார்.
விவாதத்திற்கான பி.ஜே.யின் இந்த அழைப்பை ஏற்று, தாங்கள் போற்றி மதிக்கும் மத்ஹபுகளைச் சரி என்று நிரூபிக்க வேண்டியது உலமாக்களின் கடமையாகும். ஆனால் அவர்களோ, "பி.ஜே. பொய் சொல்கின்றார். அவரை நம்பாதீர்கள். பலமுறை விவாதத்திற்கு அழைத்தும் அவர் வர மறுக்கின்றார்'' என்று உள்ளூர் பிரமுகர்களைத் தேடிச் சென்று சமாதானப்படுத்த முயன்றனர்.
அவ்வாறு அவர்கள் சந்தித்த பிரமுகர்களில் முனவ்வர் என்ற சகோதரரும் ஒருவர். அவர் உண்மையை அறிய விரும்பி, பி.ஜே.யைத் தொடர்பு கொண்டு விபரம் கேட்டார். உடனே முனவ்வர் அவர்களுக்கு பி.ஜே. ஒரு கடிதம் எழுதுகின்றார்.
அந்தக் கடிதத்தில்...
பாக்கியாத் உலமாக்கள் என்னை விவாதத்திற்குப் பல முறை அழைத்ததாகவும், நான் அதை ஏற்காமல் பின்வாங்கி விட்டதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். அது உண்மையா? என்று கேட்டீர்கள்.
பாக்கியாத் உலமாக்களோ, ஜமாஅத்துல் உலமா சபையினரோ, தப்லீக் ஜமாஅத்தினரோ என்னை விவாதத்திற்கு ஒரு காலத்திலும் அழைத்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தர்கா வழிபா, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் மற்றும் நபி வழியின் அடிப்படையில் விவாதம் நடத்த நான் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாக்கியத் உலமாக்களிடம் இந்தக் கடிதத்தின் நகலைக் காட்டி அவர்கள் விவாதத்திற்குத் தயாரா? என்று கேட்டு எனக்குத் தகவல் தரவும்....
என்று பி.ஜே. குறிப்பிட்டிருந்தார்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், உலமா சபையினருக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளில் முதன்மையாக உள்ளது மத்ஹபு தான். வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பி.ஜே. பேசும் போதும், மத்ஹபுகள் குறித்து பேசிய கருத்துக்கள் தான் உலமாக்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது.
விவாதத்திற்கு ஒப்புக் கொண்டு நாம் கடிதம் கொடுத்தும் பாக்கியாத் அதைக் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது. ஆனால் பொது மக்கள் விடுவதாக இல்லை. வேலூர் மக்களின் நச்சரிப்பு தாங்காமல் இரண்டு மாதங்கள் கழித்து 12.07.05 அன்று பாக்கியாத் அரபிக் கல்லூரியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில்
ஹய்அத்தின் சார்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது. பி.ஜே. விவாதத்திற்கு வந்தால் பாக்கியாத் சார்பாக மவ்லானா மஹ்மூதுல் ஹஸன், மவ்லான இக்பால் காசிமி ஆகிய இருவருடன் ஹய்அத் விரும்பும் ஆலிம்களைச் சேர்த்துக் கொள்வது. இது சம்பந்தமாக ஹாஜி முனவ்வர் பாஷாவுடன் பேசி இதற்கான ஏற்பாடுகளைச் செய்வது.
என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
பொது மேடையில் பி.ஜே. விவாதத்திற்கு சவால் விட்டிருந்தும், அதை 10.05.05 அன்று எழுதிய கடிதத்தில் பி.ஜே. உறுதி செய்திருந்தும், "பி.ஜே. வந்தால் நாம் விவாதம் செய்வது'' என்று பாக்கியாத் வேண்டா வெறுப்பாக முடிவு செய்தது.
பொதுக் கூட்டத்தில் பி.ஜே. கூறிய மத்ஹபுகள் பற்றிய குற்றச்சாட்டு களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல்
அஹ்லு சுன்னத்தும் தக்லீதும்
குர்ஆன் ஹதீஸ் இருந்த போதும் இஜ்மா கியாஸ் அவசியம் என்ன?
கொள்கைக் குழப்பங்களும் தெளிவுகளும்
என்ற தலைப்புகளில் கே.ஏ. நிஜாமுத்தீன், முஹம்மத் இக்பால் காசிமி, கலீல் அஹ்மத் கீரனூரி ஆகியோரைக் கொண்டு மத்ஹபுகளை நியாயப்படுத்திப் பேசுவதற்கும் அதே கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இது சான்றல்லவா!
இதைத் தொடர்ந்து வேலூர் ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆகியோரின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் 12.07.05 அன்று அனுப்பப்பட்டது.
உருது மொழியில் அனுப்பப்பட்ட அந்த அழைப்பிதழில்...
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நம்முடைய ஊர் வேலூரில் அஹ்லெ சுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படையான கொள்கைகளையும் ஃபிக்ஹ் மஸாயில்களையும் எடுத்துக் கொண்டு சில தவறான ஜமாஅத்தார்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரில் இளைஞர்களை மூளைச் சலவை செய்ய அதிக முயற்சி செய்து வருகின்றனர்.
சங்கை மிகு ஸஹாபாக்களையும், மேன்மை மிக்க உலமாக்களையும் பிரபலமான பிக்ஹ் நூல்களையும் உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவது அவர்களுடைய பிரியத்திற்குரிய வேலையாக உள்ளது. பல இடங்களில் இவர்களது பிரச்சாரத்தின் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்....
என்று குறிப்பிட்டு அது தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது.
பிக்ஹ் மஸாயில்களை எடுத்துக் கொண்டு குழப்பம் செய்கிறார்கள்; பிரபலமான பிக்ஹ் நூல்களைப் பற்றி உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவதன் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றெல்லாம் நம்மைப் பற்றிக் குறிப்பிட்டு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தது ஏன்?
நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனையே மத்ஹபு தான் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
12.07.05 அன்று பாக்கியாத் ஆலோசனைக் கூட்டம்
16.07.05 அன்று ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆலோசனைக் கூட்டம்
21.07.05 அன்று ஹய்அத்து ஷரீஆ மற்றும் விஷேச அழைப்பாளர்கள் கூட்டம்
31.07.05 அன்று மத்ஹபு விளக்கக் கூட்டம் என்று அடுத்தடுத்துப் போடப்பட்ட கூட்டங்களும் அவற்றுக்கிடையே முக்கியஸ்தர்களைத் தனித்தனியே சந்தித்து மத்ஹபை நியாயப்படுத்தி விளக்கங்கள் அளித்ததும் எதற்காக?
நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகளாக உள்ளன.
ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் மத்ஹபுகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பதாலும் மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத் தனமான சட்டங்கள் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதாலும் பாக்கியாத் அந்தர் பல்டி அடிக்க முயற்சி செய்தது.
01.08.05 அன்று மத்ஹபைப் பற்றி விவாதிக்க மறுத்தும், வேறு ஒரு தலைப்பில் மட்டும் தான் விவாதம் செய்வோம் என்று கூறியும் முனவ்வர் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.
அந்தக் கடிதத்தில்....
"தர்கா வழிபாடு, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் விவாதம் நடத்த பி.ஜே. தயாராக உள்ளதாக''
தங்களுக்கு வந்த கடிதத்தை அனுப்பியிருந்தீர்கள். ஆனால் எங்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள அடிப்படைப் பிரச்சனையான பின்வரும் தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நிலையாகும்.
எனவே ஷரீஅத் பேரவை தலைமையில் பாக்கியாத் உலமாக்களும் இவ்விஷயத்தில் விவாதம் செய்யத் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவாதத் தலைப்பு: ஷரீஅத்துடைய அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன், ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா?
என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
நமக்கும் பாக்கியாத்திற்கும் இடையே ஒரேயொரு விஷயத்தைத் தவிர வேறு எதிலும் பிரச்சனை இல்லை என்பதைப் போல் எழுதியுள்ளனர்.
தர்ஹா, கத்தம் பாத்திஹா, தரீக்கா போன்ற விஷயங்களில் அவர்களுக்கு உள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகள். அந்தத் தலைப்புகளில் அவர்கள் விவாதிக்க ஒப்புக் கொண்டாலே பாக்கியாத் பல கூறுகளாகப் பிரிந்து விடும். ஷரீஅத் பேரவையும் பல துண்டுகளாகி விடும். ஜமாஅத்துல் உலமா சிதைந்து சின்னாபின்னமாகி விடும்.
எனவே மேற்கண்ட தலைப்புகளில் விவாதம் செய்வதால் உலமாக்களுக்கு இடையே பிளவுகள் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுவதில் நியாயம் இருக்கின்றது.
ஆனால் மத்ஹபைப் பற்றி அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ஜமாஅத்துல் உலமாவில் அங்கம் வகிக்கும் அனைத்து உலமாக்களும் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பதில் ஒருமித்தக் கருத்தில் தான் உள்ளனர். நாம் மட்டும் தான் மத்ஹபுகளைக் கடுமையாக எதிர்க்கிறோம்.
எனவே பாக்கியாத் குறிப்பிட்டுள்ள தலைப்பை விட, மத்ஹபைப் பற்றி விவாதிக்கத் தான் அவர்கள் முன் வந்திருக்க வேண்டும்.
குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள இயலும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் இதை விட முக்கியமான பிரச்சனையான மத்ஹபைப் பற்றியும் விவாதம் நடத்த அவர்கள் ஒப்புக் கொள்வது தான் முறையாகும்.
குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் ஒருவேளை நிரூபித்து விட்டாலும் அதனால் மத்ஹபு நூல்களில் உள்ள உளறல்கள் அனைத்தும் சரி என்று ஆகி விடாது. மத்ஹபு நூல்களில் எழுதப்பட்டது சரியா? தவறா? என்று தனி விவாதம் நடத்தித் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
எனவே நழுவுவதற்கான தந்திரங்களைக் கையாள்வதை விட்டு விட்டு பாக்கியாத் உலமாக்கள் கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அவற்றுள் முதன்மையான மத்ஹபு பற்றியும் விவாதிக்க முன் வர வேண்டும்.
பாக்கியாத்தின் திருப்திக்காக அவர்கள் கூறும் தலைப்பில் விவாதம் செய்ய நாம் தயார். அதே சமயம் மற்றொரு தலைப்பாக மத்ஹபும் விவாதிக்கப்பட வேண்டும்.
இதை ஒப்புக் கொள்வதே நியாயமானது என்று தெரிவிக்கிறோம்.
பாக்கியாத் உலமாக்கள் குறிப்பிட்டது போல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விவாதிக்கும் குழுவில் பி.ஜே.யும் இன்ஷாஅல்லாஹ் இடம் பெறுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நாம் பாக்கியாத்திற்குப் பதில் கடிதம் அனுப்பியிருந்தோம்.
நாம் அனுப்பிய இக்கடிதத்திற்குப் பதிலாக பாக்கியாத் சார்பில் 21.08.05 அன்று வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.
அதில், மத்ஹபைப் பற்றி நாம் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே அவர்கள் பதில் சொல்லி விட்டதாகவும், தற்போது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்பதை அந்தப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களது இந்த அறிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இறுதியாகக் கொடுத்த பதில் இதோ:
நாங்கள் தயார்!
நீங்கள் தயாரா?
ஹைஅத்துஷ் ஷரீஅத்தின் வெள்ளை அறிக்கையும் விவாத ஒப்பந்தமும் என்ற தலைப்பில் 21.08.05 அன்று பாக்கியாத் மத்ரஸா மூலம் வெளியிடப்பட்ட பிரசுரம் கிடைக்கப் பெற்றோம்.
ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்று நீங்கள் மிகவும் பிடிவாதமாக உள்ளீர்கள்.
நீங்கள் கூறிய தலைப்பிலும் விவாதிக்கத் தயார். ஆனால் அந்தத் தலைப்பு முழுமையாக இல்லை என்று நாங்கள் காரண, காரியங்களோடு விளக்கியிருந்தோம்.
ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளை குர்ஆன் ஹதீஸில் இருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? அல்லது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் மத்ஹபு நுôல்களி-ருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்று தலைப்பின் வாசகத்தை திருத்தம் செய்யக் கோரினோம்.
அதற்கு பதிலளிக்கும் வண்ணம்,
வாதத் தலைப்பு : "ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸி-ருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற மார்க்க அடிப்படையை நிர்ணயிக்கிற, இன்று இவர்கள் முன்வைக்கிற மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பை நாம் விவாதத்துக்குக் கொடுத்துள்ளோம். ஏனெனில் தனித்தனியே ஒவ்வொன்றையும் விவாதிப்பதென்பது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாக ஆகாது. நாம் கொடுத்துள்ள இந்தத் தலைப்பு எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒட்டு மொத்தமாகத் தீர்வு கிடைத்து விடுகிற ஓர் உயர்ந்த தலைப்பு. அவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கும் மத்ஹபு பற்றிய விவாதத்துக்கும் இறுதி முடிவு கிடைத்துவிடும்''
என்று நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.
நீங்கள் கொடுத்துள்ள விளக்கத்தை உள்ளடக்கிய மேற்கண்ட தலைப்பை ஏற்றுக் கொள்கிறோம்.
மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பு என்று நீங்கள் விளக்கம் தருகின்ற,
ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸி-ருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற அந்த தலைப்பிலேயே உங்களுடன் விவாதம் செய்ய நாங்கள் தயார்.
எவருடனும் விவாதம் செய்ய நாம் தயார் என்ற போதும் 8.05.2005ல் நாம் பாக்கியாத்திற்குத் தான் நேரடி அறைகூவல் விடுத்தோம். ஹைஅத்துஷ் ஷரீஅத் எங்களின் சவாலை ஏற்று பதிலளித்தது. நாங்களும் அதனை ஏற்றுக் கொண்டோம்.
எனவே இந்த விவாதம் பாக்கியாத் மற்றும் ஹைஅத்துஷ் ஷரீஅத் என்ற இரு அமைப்புகள் அடங்கிய ஒரு அணிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற மற்றொரு அணிக்கும் இடையில் நடக்கும் விவாதமாகும்.
எங்களது முந்தயை அறிக்கையில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்ற தேதியை அறிவிக்கும்படி உங்களைக் கேட்டிருந்தோம்.
அதற்கு நீங்கள் அளித்த பதிலில்
"நாங்கள் மேற்குறிப்பிட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரத்தக்க அத்தலைப்பில் எப்போதும், எங்கும் ஒளிவு மறைவின்றி விவாதிக்கவும், அதற்குரிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறோம்''
என்று தெரிவித்துள்ளீர்கள்.
எப்போதும் தயார் என்று எழுதி ஒப்பந்தத் தேதியை அறிவிக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டதற்கு மிக்க நன்றி.
நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விவாத ஒப்பந்தம் செய்வதற்காக 01.10.2005 திங்கட் கிழமை பகல் 12.00 மணிக்குக் கீழ்க்காணும் முகவரியில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். (இன்ஷாஅல்லாஹ்)
பசபஓ
மஸ்ஜிதே நூர் காம்பவுன்ட்
5, அப்துல் கலாம் நகர்,
ரஹ்மத் பாலா, வேலூர். 1
நேரடியாக 01.10.2005 அன்று சந்திப்பதைத் தவிர வேறு எதனையும் உங்களிடம் நாங்கள் எதிர் பார்க்கவில்லை. நீங்கள் இனியும் இழுத்தடிக்கும் கடிதங்களை எழுதினால் அவற்றை நாங்கள் அலட்சியப்படுத்தி விடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவாத ஒப்பந்தத்தில் பேசி இறுதி செய்வதற்காக எங்கள் தரப்பில் ஐந்து பேர் வருகிறோம். தாங்களும் ஐந்து பேருக்கு மிகாமல் வரவும்.
எங்கள் தரப்பில் வீடியோ பதிவு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து கொள்கிறோம். உங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நாம் பதில் எழுதியிருந்தோம். இதற்கு அவர்கள் இன்று வரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை.
நேரில் சென்றும் வரவில்லை
இறுதியாக நாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல் 01.10.05 அன்று கலீல் ரசூல், எம்.எஸ். சுலைமான் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழு வேலூருக்குச் சென்றது. சரியாக காலை 11.45 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காத்திருந்தும் பாக்கியாத் தரப்பிலிருந்து யாரும் விவாத ஒப்பந்தத்திற்கு வரவில்லை.
வெகு நேரமாகியும் யாரும் வராததைக் கண்ட நமது குழுவினர் பாக்கியாத் மதரஸாவிற்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். தொலைபேசியை பாக்கியாத் மதரஸாவின் வாட்ச்மேன் எடுத்தார். "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விவாத ஒப்பந்தத்திற்குக் கடிதத்தில் குறிப்பிட்டபடி நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் வரவில்லையா? உங்கள் முதல்வரைக் கூப்பிடுங்கள்'' என்று நமது குழுவினர் கூறினர். அங்கிருந்த பாக்கியாத் முதல்வரிடம் இது குறித்து வாட்ச்மேன் கேட்டு விட்டு, "முதல்வர் வர மறுத்து விட்டார்' என்று கூறி போனை வைக்கச் சொல்லி விட்டார்'' என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
பல அறிஞர்களை தமிழ்நாட்டிற்கு சப்ளை செய்யும் தமிழகத்தின் தாய்க் கல்லூரி என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் வேலூர் பாக்கியாத்தில் உள்ள ஒருவருக்குக் கூட விவாத ஒப்பந்தத்திற்கு வருவதற்குத் துணிவில்லாமல் போய் விட்டது தான் வேதனைக்குரிய விஷயம்.
மத்ஹபுகள் தான் இஸ்லாத்தின் வழிகாட்டி என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் விவாதத்திற்கு அழைத்ததை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதி அவர்கள் வந்திருக்க வேண்டும்.
நமது தரப்பில் எவ்வளவோ இறங்கிச் சென்றும், அவர்கள் சொல்லும் நிபந்தனைகள் அத்தனைக்கும் சம்மதித்தும், அவர்கள் சொல்லிய தலைப்பிலேயே விவாதிக்க ஒப்புக் கொண்ட பிறகும் விவாதம் செய்ய அவர்கள் வர மறுக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?
மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத்தனமான உளறல் களுக்கும், ஆபாசக் களஞ்சியத்திற்கும் அவர்களால் ஒரு போதும் பதில் சொல்ல முடியாது என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை.
மத்ஹபுகள் தான் மார்க்கத்தின் வழிகாட்டி என்று இவர்கள் பிரச்சாரம் செய்வது மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் என்பதையும், மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு முரணானவை என்று தெரிந்து கொண்டே தான் இந்த ஆலிம்கள் மார்க்கத்தை மறைக்கின்றார்கள் என்பதையும் பாக்கியாத் உலமாக்களின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்தி விட்டன.
உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எப்படியேனும் விவாதத்தை நடத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்த பிரமுகர்களும், பொதுமக்களும் பாக்கியாத் உலமாக்களிடம் உண்மையில்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
"மத்ஹபுகள் மார்க்க ஆதாரங்கள் அல்ல; குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்கள்'' என்ற சத்தியக் கருத்துக்கு அல்லாஹ் அளித்த மகத்தான வெற்றி இது என்றால் மிகையல்ல.




ஷம்ஷீல் ஹீதாவுடன் ஓர் சந்திப்பு விவாதங்கள் ஓய்வதில்லை
1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும், வீரியத்தையும் பார்க்க முடிந்தது. அங்கு தான் ஆலிம்களின் வெறித் தனத்தையும் காண முடிந்தது. காரணம் தமிழகத்திலேயே அதிகமான அரபி மதரஸாக்கள் தஞ்சையில் தான் நிறுவப்பட்டிருந்தன.
சோழ நாடு சோறுடைத்து என்ற தஞ்சையின் மண் வளத்தைப் போலவே அங்கு வாழும் முஸ்லிம்களின் மன வளமும் அமைந்திருந்தது. அத்துடன் அந்த மக்களின் சிங்கப்பூர், மலேஷிய பயணங்கள் அவர்களது செல்வச் செழிப்பை மேலும் வளமாக்கின.
அந்த வளத்திற்குத் தக்க, தான தர்மங்கள், விருந்தோம்பல்கள் இன்று வரை அந்த மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் அடையாளச் சின்னங்கள் தான் இந்த அரபி மதரஸாக்கள்.
நீடூர், கிளியனூர், அரங்கக்குடி, அத்திக்கடை, அதிராம்பட்டிணம், கூத்தாநல்லூர், பொதக்குடி, சங்கரன்பந்தல் போன்ற பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஊர்களில் அரபி மதரஸாக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆலிம்களின் சங்கமமாக தஞ்சை அமைந்து விட்டது.
இதனால் அங்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பலைகள் மிக வேகமாகக் கிளம்பின. இந்த மதரஸாக்களில் முக்கியமானதாக விளங்கியது நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா என்ற மதரஸாவாகும்.
எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா என்பவர் இந்த மதரஸாவின் அன்றைய முதல்வராக இருந்தார். அத்துடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் இருந்தார்.
இம்மாதிரியான பொறுப்பில் உள்ளவர்கள் மாறி விட்டால் மொத்த சமுதாயமும் மாறுவதற்கு வாய்ப்பாக அமையுமே என்று கருதி அன்னாரிடம் சந்திப்புக்கான நாள் கேட்டோம். அது போல் அவர் சந்திப்பதற்கு நாள் வழங்கினார்.
ஒரு நாள் இரவு நேரம். இஷாவுக்குப் பின் மவ்லவி பி.ஜே., நான், பொட்டல்புதூரைச் சார்ந்த ஒரு மவ்லவி ஆகிய மூவரும் ஷம்சுல்ஹுதா அவர்கள் நீடூரில் இமாமாகப் பணி புரியும் பள்ளியில் போய் சந்தித்தோம்.
ஷம்சுல்ஹுதா அவர்கள் முன்னிலையில் அவரது மாணவர்கள் சம்மணமிட்டு உட்காரக் கூடாது; மண்டியிட்டுத் தான் உட்கார வேண்டும். இது மாணவர்கள் அன்றிலிருந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை. இந்த நடைமுறையைப் பேண வேண்டுமே என்ற விவகாரம் வந்தது.
பி.ஜே.யைத் தவிர மற்ற இருவரும் ஷம்சுல்ஹுதா அவர்களின் மாணவராக இருந்தாலும், மண்டியிட்டு அமர்வதற்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்பதால் சம்மணமிட்டுத் தான் அமர வேண்டும் என்று கண்டிப்புடன் பி.ஜே. தெரிவித்திருந்தார். அதன் படி அவர் முன்னிலையில் முதன் முறையாக மண்டியிடாமல் சம்மணமிட்டு உட்கார்ந்தோம்.
சந்திப்பு துவங்கும் முன், கையில் எடுத்துச் சென்ற டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து கொள்ளலாமா? என்று அவரிடம் பி.ஜே. அனுமதி கேட்டார். அதற்கு அவர் கூடாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டார்.
பி.ஜே. தனது வாதத்தைத் தொடங்கினார்.
பி.ஜே. : ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பதற்கு என்ன ஆதாரம்?
ஷம்சுல்ஹுதா: உதாரணமாக மார்க்கத்தை பால் என்று எடுத்துக் கொண்டால் அதில் தயிர், மோர் என்று இருக்கின்றதல்லவா? அது போல் தான் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று மார்க்கம் நான்கு வகைகளில் அமைந்திருக்கின்றது.
பி.ஜே. : ஹஜ்ரத்! நான் உங்களிடம் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் கேட்கின்றேன். நீங்களோ உதாரணம் காட்டுகின்றீர்கள்.
ஷம்சுல்ஹுதா: ஏன் உதாரணம் கூறக் கூடாதா?
பி.ஜே. : உதாரணம் கூறக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆதாரத்தைக் கேட்கும் போது, குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறுமனே உதாரணத்தை மட்டும் கூறக் கூடாது என்கிறேன். சரி! இப்போது நான் மார்க்கத்தைத் தண்ணீர் என்கிறேன். நீங்கள் பிரித்துக் காட்டுங்களேன்.
ஷம்சுல்ஹுதா: (மவ்னம் - சிறிய இடைவெளிக்குப் பிறகு) குர்ஆன் ஏழு எழுத்துக்களில் அருளப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு வசனத்திற்கு ஒரு நேர்முகக் கருத்தும் ஓர் அந்தரங்கக் கருத்தும் இருக்கின்றது. (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு ஹிப்பான், மஜ்மவுஸ் ஸவாயித், முஸ்னதுல் பஸ்ஸார், அல்முஃஜமுல் அவ்ஸத் ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் உள்ளது) என்று வருகின்றதல்லவா? இந்த அடிப்படையில் தரீகத் என்ற மறைமுக ஞானம் இருக்கலாம் அல்லவா?
பி.ஜே. : அப்படியானால் நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். இதற்கு வெளிரங்க, அந்தரங்கக் கருத்தைக் கூறுங்கள்.
ஷம்சுல்ஹுதா : (மவ்னம்)
பி.ஜே. : அல்ஹம்துலில்லாஹி என்று சொல்லும் போது, புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது என்பது நேரடி அர்த்தம். எந்த ஒரு நன்மையான காரியத்தின் போதும் நாம் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று விளங்கிக் கொள்கிறோம் அல்லவா? இது மறைமுகக் கருத்து. அவ்வளவு தானே! இதல்லாத மறைமுகக் கருத்து இதில் என்ன இருக்கின்றது?
ஷம்சுல்ஹுதா: கிழ்ர் நபி, மூஸா (அலை) சம்பவத்தில் அல்லாஹ், "அல்லம்னாஹு மில்லதுன்னா இல்மா  - நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்'' என்று சொல்கின்றான். எனவே, "இல்ம லதுன்னி'' (இறைவனிடமிருந்து வந்த தனிப்பட்ட ஞானம் ஆகும். அதாவது வஹ்யீயைப் போன்று வெளிப்படையாக வராத, அந்தரங்கமாக வரும் அகமிய ஞானம் ஆகும்) என்ற அடிப்படையில் அந்தரங்க, அகமிய ஞானம் ஒன்று உள்ளதல்லவா?
பி.ஜே. : லதுன் என்று வருகின்ற வார்த்தையை வைத்து அகமிய ஞானம் என்று முடிவுக்கு வருகிறீர்கள். ஜக்கரியா நபி இறைவனிடம் பிரார்த்திக்கும் போது, லதுன் என்ற வார்த்தை தான் இடம் பெறுகின்றது. அவர்கள் கேட்டது போன்று யஹ்யா என்ற குழந்தையையும் அல்லாஹ் கொடுக்கிறான். அதனால் அந்தக் குழந்தைக்கு வலத் லதுன்னி அல்லது துர்ரியத் லதுன்னி "அல்லாஹ்விடமிருந்து வந்த தனிப்பட்ட குழந்தை'' என்று கொள்வோமா? நிச்சயமாகக் கொள்ள மாட்டோம். அது போல் தான் இந்த இல்ம லதுன்னி. இது தனிப்பட்ட ஞானத்தையெல்லாம் ஒரு போதும் குறிக்காது. எனவே கிழ்ர், மூஸா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்த அகமியக் கல்விக்கு எந்தவொரு ஆதாரமும் எடுக்க முடியாது.
ஷம்சுல்ஹுதா: (மவ்னம்)
பி.ஜே. : இறந்து விட்ட நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்ய ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? இறந்து போன நல்லடியார்கள் பதிலளிப்பார்களா?
ஷம்சுல்ஹுதா: நபி (ஸல்) அவர்கள் உஹத் போரின் போது, அதில் ஷஹீதானவர்களிடம் வழியனுப்புவது போன்று பேசிக் கொண்டிருந்தார்களே?
பி.ஜே. : நீங்கள் கூறும் அந்த நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்கள் தான் அங்கு பேசியிருக்கின்றார்கள். அங்கிருந்து ஏதேனும் பதில் வந்ததா?
ஷம்சுல்ஹுதா: அங்கிருந்து பதில் வரவில்லை.
பி.ஜே. : அங்கிருந்து பதில் வரவில்லை எனும் போது, இறந்தவர்களிடம் எப்படிக் கேட்க முடியும்? எனவே அது இணை வைப்பாகத் தான் அமையும்.
இதன் பிறகு சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் வெளியேறுகின்றோம்.
முடிவுரை
தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக, தலைமுறை தலைமுயைôகப் பேசப்பட்டு வரும் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற விஷயத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? என்று தமிழகத்தில் மாபெரும் மேதை என்று மதிக்கப்பட்ட ஷம்சுல்ஹுதா ஆலிமிடம் கேள்வி தொடுக்கப்பட்ட போது அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாமல் தலையைத் தொங்கப் போட்டார்.
இது ஷம்சுல்ஹுதா மீது நான் அளவு கடந்து கட்டி வைத்திருந்த மரியாதைக் கோட்டையை ஒரு நொடிப் பொழுதில் மடமடவென்று தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கி விட்டது.
ஷம்சுல்ஹுதா அவர்கள் பார்ப்பதற்கு எடுப்பான தோற்றத்தைக் கொண்டவர். தன்னை விட சிறியவராக இருந்தாலும், வாடா போடா என்றெல்லாம் பேசாமல், "தம்பி! வாங்க!'' என்று அழைத்துப் பேசுகின்ற தனிப் பாங்கைப் பெற்றிருந்தார்.
எப்போதும் வெள்ளை ஆடை தான் அணிவார். கவர்ச்சி மிக்க மேடைப் பேச்சு! காந்தத்தைப் போல் கவருகின்ற ரீங்காரக் குரல், கிராஅத்! பாடம் நடத்துவதிலும் தனக்கென தனி பாணியைத் தன்னகத்தே கொண்ட ஒருவர் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் விழி பிதுங்கியது, மொழி தடுமாறியது எல்லாம் இவர் சத்தியத்தில் இல்லை என்ற எண்ணத்தை என்னிடம் ஆழமாகப் பதிய வைத்தது. சத்தியத்தில் ஆணித்தரமாக அடியெடுத்து வைக்க உதவியது. இங்கு இதை நான் கூற முன் வருவதற்குக் காரணம் என்னுடைய மன மாற்றத்தைக் கூறுவதற்காக அல்ல!
ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற கருத்துக்கு இவர்களிடம் கடுகளவு கூட ஆதாரம் இல்லை. எனவே அவையெல்லாம் மாயாஜால, மந்திரக் கதைகளாக அமைந்து விட்டன.
அது போல் இறந்து விட்ட பெரியார்களிடம் உதவி தேடுவதற்கு, பிரார்த்தனை செய்வதற்கு எள்ளளவும் ஆதாரத்தை இந்த மாபெரும் மேதைகளால் சமர்ப்பிக்க இயலவில்லை என்பதை இந்தக் கலந்துரையாடல் வடிவில் அமைந்த விவாதம் தெரிவிக்கின்றது.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)
இந்த விவாதத்தை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மதீனாவில் கையேந்தும் காசுக்காக இங்கு வேலை செய்யும் வர்க்கத்தில் உள்ளவர்கள் இல்லை நாங்கள்! ஏகத்துவம் என்ற வெளிச்சம் 80களில் எங்கள் உள்ளங்களில் வெள்ளமாய் பாய்ச்சப்பட்ட மாத்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை சத்தியத்தைச் சொல்கிறோம். இன்ஷா அல்லாஹ் இறுதி மூச்சு வரை சொல்வோம் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
அடுத்து கிளியனூர் மத்ரஸாவின் முதல்வர் அப்துஸ்ஸலாம் அவர்களிடம் நடந்த விவாதத்தை இன்ஷா அல்லாஹ் காண்போம்.


இறந்தவர் எழுந்து வருவாரா? விவாதங்கள் ஒய்வதில்லை
இறந்து போன பெரியார்களிடம் பிரார்த்திப்பது முஸ்லிம்களிடம் அன்றிலிருந்து இன்று வரை நீடித்து வரும் வழக்கமாகும். இது கொடிய இணை வைப்பெனும் பெரும் பாவமாகும். இந்தப் பாவத்தை எதிர்த்து தான் அன்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் போர்க் கொடி தூக்கினோம்.
அவ்வாறு நாம் மட்டும் போர்க் கொடி தூக்கினால் போதாது. ஆலிம் பெருமக்களையும் அணி சேர்த்துக் கொண்டு களம் கண்டால் எளிதில் வெற்றியடையலாம் என்ற நோக்கில் அப்போதைய ஜமாஅத்துல் உலமாவின் மாநிலத் தலைவர் ஷம்சுல்ஹுதா ஆலிமைச் சந்தித்த விபரத்தைக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
நாம் எடுத்து வைத்த வாதங்களுக்கு - குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தொடுத்த கேள்விகளுக்கு அவர் பதில் தரவில்லை.
காரணம், அவர் இருந்தது அசத்தியம்! இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)
இவ்வாறு மவ்லானா மவ்லவி ஷம்சுல்ஹுதா மவ்னம் வகித்து அசத்தியத்திலேயே உறுதியாக இருந்து விட்டார். நாம் எதிர்பார்த்தது போன்று நம்முடன் சேர்ந்து சத்தியத்தைச் சொல்ல முன்வரவில்லை. கடைசி வரை சத்தியத்திற்கு வர மறுத்தது மட்டுமல்ல! அதற்கு எதிரான காரியங்கள் அனைத்தையும் செய்து கொண்டு இருந்தார்.  எனினும் நாங்கள் எங்கள் முயற்சியில் தளரவில்லை.
அப்துஸ்ஸலாம் ஆலிமுடன் ஒரு சந்திப்பு
அடுத்தக்கட்ட முயற்சியாக கிளியனூர் மத்ரஸாவின் முதல்வர் மவ்லானா மவ்லவி எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் அவர்களைச் சந்திப்பதற்கு முயற்சி எடுத்தோம். அதற்கு அவரும் இசைவு தெரிவித்தார். இங்கு அப்துஸ்ஸலாம் அவர்களைப் பற்றி சில விபரங்களைத் தருகின்றோம்.
அவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர். சிறந்த அறிஞர். ஷம்சுல்ஹுதா ஆலிமுடன் இணைந்து படித்தவர். கிளியனூரில் பி.ஜே. மளிகைக் கடை நடத்தி வந்தார். பி.ஜே.யின் சகோதரர் பி.எஸ். அலாவுதீன் கிளியனூருக்கும் சங்கரன்பந்தலுக்கும் இடையிலுள்ள ஒரு ஊரில் மளிகைக் கடை நடத்தி வந்தார்.
அப்போது அப்துஸ்ஸலாம் அவர்கள் பி.ஜே.யை அடிக்கடி சந்தித்து, "நீங்கள் இந்த மார்க்கத் துறைக்கு வர வேண்டும்'' என்று வலியுறுத்தி, தனது ரஹ்மானிய்யா மத்ரஸாவில் பி.ஜே.யை ஆசிரியராகப் பணியாற்றும் படி செய்தார். அந்த மத்ரஸாவில் பணியாற்றிய பிறகு தான் பி.ஜே. சங்கரன்பந்தல் மத்ரஸாவில் பணியாற்றினார். அப்போது தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஷம்சுல்ஹுதா ஆலிமைச் சந்திக்கச் சென்ற அதே குழுவினரில் ஒன்றிரண்டு பேர் அதிகமாக இதில் இடம் பெற்றிருந்தனர்.
ஷம்சுல்ஹுதாவைப் போன்று மறுக்காமல் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்வதற்கு அனுமதியளித்தார்.
ஒரு மாலை நேரத்தில் மத்ரஸாவின் மைய வளாகத்தில் அமர்வு தொடங்கியது. கூடவே மத்ரஸா மாணவர்களும் இருந்தனர்.
பி.ஜே.: இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யலாமா? இதற்கு ஆதாரம் இருக்கின்றதா?
அப்துஸ்ஸலாம்: குர்ஆனில் இதற்கு ஆதாரம் இருக்கின்றது.
பி.ஜே.: எங்கே இருக்கின்றது?
அப்துஸ்ஸலாம்: பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகின்றார். அந்த விவகாரம் மூஸா (அலை) அவர்களிடம் வருகின்றது. மாட்டின் ஒரு பகுதியைக் கொண்டு கொலையுண்டவரின் மீது அடிக்கப் படுகின்றது. அவர் எழுந்து வந்து பதில் சொல்கின்றார் அல்லவா?
(அப்போது தான் ஏகத்துவ சிந்தனையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்களுக்கு இது பெரிய ஆதாரமாகத் தோன்றியது.)
பி.ஜே.: நீங்கள் சொல்கின்ற அந்தச் சம்பவத்தில் கொலையுண்டு இறந்தவரின் உயிர் மட்டும் வந்ததா? அல்லது உயிருடன் உடலும் சேர்ந்து அப்படியே எழுந்து வந்தாரா?
அப்துஸ்ஸலாம்: (உடலும் உயிரும் சேர்ந்து) அப்படியே உயிர் பெற்று எழுந்து வந்தார்.
பி.ஜே.: இங்குள்ள நிலைமை அப்படி இல்லையே! முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பெயரால் நடத்தப்படும் யாகுத்பா எனும் திக்ர் சபையில் முஹய்யித்தீனின் உயிர் மட்டும் வருகின்றது என்று தானே மக்கள் நம்புகின்றார்கள். உடலுடன் சேர்ந்து வந்தால் தான் பிரச்சனையே இல்லையே! இதற்கு என்ன சொல்கின்றீர்கள்?
இதற்கு அப்துஸ்ஸலாம் ஆலிம் எந்தச் சரியான பதிலையும் தரவில்லை. பின்னர் யாகுத்பா, புர்தா போன்றவற்றில் வரும் ஷிர்க்கான, இறைவனுக்கு இணை கற்பிக்கும் கவிதை வரிகள் பற்றி பி.ஜே. கேட்டார். எல்லாவற்றுக்கும் "பார்த்துப் பதில் சொல்கின்றேன்'' என்று சொன்னார். அத்துடன் அமர்வு நிறைவு பெற்றது.
தமிழகத்தில் இதுவரை நடந்து வருகின்ற இந்த குத்பியத் திக்ர் எனும் இணை வைப்புப் பிரார்த்தனைக்கு தமிழகத்தில் மூத்த அறிஞர்களின் பட்டியலில் இருந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா, எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் போன்ற அறிஞர்களிடம் கூட ஆதாரமில்லை என்று அப்போது நன்கு தெளிவாகத் தெரிய வந்தது.
சத்தியம் என்று வருகின்ற போது அங்கு பதில்கள் நெத்தியடியாக இருக்க வேண்டும். அசத்தியத்தின் கபாலங்கள் தெறித்தோடி மூளையைத் துளைத்து எடுக்கும் சுத்தியல் அடியாக இருக்க வேண்டும். இதைத் தான் அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)
அந்த நெத்தியடி, சுத்தியல் அடி நம்மிடம் தான் இருக்கின்றது, அவர்களிடம் இல்லை என்பது உறுதியானது. அதுவே சத்தியப் பாதையில் கடுகளவும் சலனம், சஞ்சலமின்றி நடை போட வைத்தது.
இனிமேல் இந்தக் கருத்தை உலமாக்கள் மன்றத்தைத் தாண்டி மக்கள் மன்றத்தில் கொண்டு போவோம் என்று அல்லாஹ்வை நம்பி அடியெடுத்து வைத்தோம்; இடியென முழங்கினோம்; மழையெனப் பொழிந்தோம். விளைவு, நம் நெஞ்சை அள்ளி அரவணைக்கின்ற வகையில் கும்பகோணத்தில் சத்திய வயலில் ஏகத்துவ விளைச்சல்.
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)
"சத்தியமே வெல்லும்; அசத்தியம் அழிந்து போகும்'' என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிக் கொண்டிருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!






பேரணியின் பிரம்மாண்டங்கள்

மூப்பும், முதுமையும் எங்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு ஆப்பு வைத்து விட முடியாது'' என்பதை நிரூபிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, முக்காடு போட்ட மூதாட்டிகள் தள்ளாடித் தள்ளாடி, தளர் நடை போட்டு வந்த காட்சி நம்மை உலுக்கி விட்டது.
நான்கு மாதக் கைக்குழந்தையையும் தங்கள் கைகளில் ஏந்தியவாறு, கோரிக்கைக் கோஷங்களை வாயி-ருந்து சிந்தியவாறு அவ்வளவு தூரத்தையும் அலுப்புத் தட்டாமல் பெண்கள் அடியெடுத்து வைத்தது அடி மனதை ஆட்டியது. கண்களை அருவியாக்கியது. இனி மேலும் இந்த ஆட்சியாளர்கள் இதில் மெத்தனம் காட்டினால் அது அவர்களது அரசியல் வாழ்வின் அஸ்தமனம் தான் என்ற அச்சுறுத்தலை அளித்தது.
மக்களை நிரம்ப அடைத்துக் கொண்டு வயிறு புடைத்து வந்த பேருந்துகள் பாதை ஸ்தம்பித்து விட்டதால் ஆங்காங்கு நின்று விட்டன. பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற பேரவாவில் தங்கள் உடைமைகளை, உணவுகளைப் பேருந்துகளில் அப்படியே போட்டு விட்டு வந்து விட்டதன் விளைவு பசி, பட்டினி, கலைப்பு, தலைச்சுற்று, மயக்கம்! இத்தனையையும் தாண்டி மூன்றரை கி.மீ. தூரத்தை இம்மக்கள் தாண்டியது இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.
இது வரை பல பண்டங்களை, பதார்த்தங்களை, பலப்பல குளிர், சூடான பானங்களை கையகம் கொண்டு பாத யாத்திரை செய்த வரலாற்றைப் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். இப்படிப் பசியும், பட்டினியுமாய் தங்கள் பாதங்கள் நோக, பாத யாத்திரை நடத்தியது இது தான் முதல் தடவை! நபி (ஸல்) அவர்கள் பசியும், பட்டினியுமாய் தமது தோழர்களுடன் நடத்திய அகழ்ப் போரின் ஆழ, அகலத்தை உணர வைத்தது.
பால் மணம் மாறாத பாலகர்கள், சின்னஞ்சிறுமிகள் தங்கள் அன்னையரின் வேக நடைக்கு ஈடாக, இணையாக எட்டுகள் போட்டு, தாவித் தாவி வந்தது, "தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்'' என்ற பழமொழியை நிரூபித்தது. அவர்களது பிஞ்சுப் பாதங்கள் புழுதிப் படலத்தைக் கிளப்பியவாறு கொஞ்சும் மொழி பேசும் அந்தக் குயில்கள் எழுப்பிய கோஷங்கள் குடந்தை நகரம் முழுவதும் எதிரொ-த்து, அங்குள்ள மாற்று மதச் சகோதரர்களின் நெஞ்சைத் தொட்டு விட்டது.
உருவத்தில் இரண்டு வயது சிறுவனைப் போல் காட்சியளித்த 17 வயது இளைஞர் மீரான் என்பவர் பேரணிக்கு ஈடு கொடுத்து நடந்து வர முடியாததால் வேறொரு சகோதரர் கால் கடுக்க, கழுத்து வ-யெடுக்க அவரைத் தூக்கி வந்த நிகழ்வு, பேரணி வரலாற்றில் ஒரு புத்தம் புது அத்தியாயம்.
தலையில், தாடியில், நரை விழுந்தாலும் எங்கள் உணர்ச்சியில், உரிமைப் போராட்டத்தில் நரை விழவில்லை, திரை விழவில்லை என்று கூடிய முதியோர் கூட்டம் முன்னெப்போதும் கண்டிராத முன்னுதாரணமாகும். "அல்லாஹ் மலக்குகளைக் கொண்டு வந்து நிரப்பி விட்டான்'' என்று கண்களில் நீர் வழிய அவர்களில் ஒருவர் சொன்னது முற்றிலும் உண்மை என்பதற்குக் கூடிய கூட்டம் சான்று!
ஊனமுற்றவர்கள், மூன்று சக்கர வண்டிகளைப் பேருந்துகளில் கட்டி வந்து, "இந்த உரிமைப் போராட்டத்தில் எங்களுக்கு ஊனம் ஒரு தடையில்லை'' என்று உணர்த்தியது இந்தப் பேரணியின் தன்னந்தனிச் சிறப்பாகும்.
மது மயமில்லாமல் ஒரு மகாமகம்
"பகல் 2 மணி வரை ஒரு குருவி கூட இந்தத் திட-ல் இல்லை. ஒரு குஞ்சு கூட இல்லை. எப்படி அதற்குள் வந்து குவிந்தது இந்த மக்கள் கடல்? எங்கிருந்தது வந்து கூடியது இந்தக் கூட்டம்? நான் மகாமகத்தைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் மதுக் கடைகள் கா-யாகி விடும். ஆனால் இப்போதோ மதுக்கடைகள் எந்தவொரு சலனமும் இல்லாமல் கா-யாகக் கிடப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்தப் பேரணியில் வந்த எந்த ஒரு குடிமகனும் "குடி'மகனாக மாறாமல், மதுக் கடையின் பக்கம் அடியெடுத்து வைக்காமல் சென்ற காட்சி எனக்கு அதிசயமாக உள்ளது''
இப்படிக் கூறுவது, காவலுக்கு நின்ற மாற்று மதத்தைச் சார்ந்த ஒரு காவல் துறை அதிகாரி!
குடந்தை மக்களைக் குடைந்த அதிசயங்கள்
    திரைப்படத் துறையின் தொப்புள் பம்பரப் பிரபலங்கள் இல்லை!
    வெட்கத் தலங்களை வெளிச்சத்திற்கு விற்று விட்ட நட்சத்திர நடிகைகள் இல்லை!
    அறிமுகமான அரசியல் தலைவர்கள் இல்லை!
    ஆட்சியாளர்கள் இல்லை.
இப்படி யாருமே இல்லாமல் இப்படி ஒரு கூட்டமா? இது எப்படி வந்தது?
உணவு விடுதியில் சண்டைகள் இல்லை; வாய்த் தகராறுகள் இல்லை; சோடா பாட்டில்கள் உடைப்பு இல்லை; "வாடா ஒரு கை பார்த்திடுவோம்'' என்ற ஏச்சுப் பேச்சுக்கள் இல்லை.
குறிஞ்சி மலர் போல் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகத்தில் மரண ஓலங்களைக் கேட்டிருக்கிறோம். மகாமகத்தை மிஞ்சிய இந்த மகா மாநாட்டில் காயம் பட்ட ரண சப்தத்தைக் கேட்கவில்லை; கூச்சல் இல்லை; குழப்பம் இல்லை. இது எப்படி நடந்தது?
இது குடந்தை மக்களைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விக் கணையாகும்.
நகரம் கண்ட நாகரீக வரலாறு
ஒரு நூறு பேர் ஓரிடத்தில் ஒன்று கூடினால் போதும்! அவ்வளவு தான்! பார்க்கும் இடமெல்லாம் மலம் ஜலம்! நகரெங்கும் நாற்ற மயம்! காணும் இடம் எல்லாம் மனிதக் கழிவுகள் என முடை நாற்றங்கள் மூச்சைத் துளைத்தெடுக்கும்.
குடந்தை நகரத்தில் கூடிய மக்கள் எண்ணிக்கை பல இலட்சங்கள். ஆனால் கால்நடையிலும் கீழாய் கழிந்து தள்ளும் கலாச்சாரமின்றி, நரக-ன்றி, நாற்றமின்றி, நகரத்தை நரகமாக்காமல் பல லட்சம் பேர் நகர்ந்து சென்ற காட்சி குடந்தை நகர மக்களின் மனங்களில் நகர மறுக்கின்றது.
மாலைக் கண் நோய்
முஸ்-ம்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்த குடந்தையின் வெள்ளப் பெருக்கு சன் டிவியின் தமிழ் மாலைக்கு மறைந்து விட்டது. மாறனின் அலை வரிசைகளுக்கு ஏற்பட்ட மாலைக் கண் நோய் தான் காரணம். எங்கோ ராமநாதபுரத்தில் சில நூறு பேர் கூடிய குள்ள நரிக் கூட்டத்தைத் தன் செய்தியில் கூறும் இந்த மஞ்சள் அலைவரிசைகளின் குருட்டுக் கண்களுக்கு கும்பகோணம் குலுங்கியது தெரியவில்லையாம்.
முஸ்-ம்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த இந்த ஏகோபித்த ஆதரவை ஊடகங்களில் மறைத்ததன் மூலம் தனது முஸ்-ம் விரோதப் போக்கை அது உறுதி செய்து கொண்டது.
தமிழகம் மற்றும் வளைகுடா வாழ் இஸ்லாமிய சமுதாய மக்கள் இந்த மஞ்சள் அலைவரிசைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி விட்டனர்; இனிமேல் மாறனின் அலைவரிசைகள் மாலை நேர அஸ்தமனக் கதிர்களாக ஆகி விடும் என்பதை உணர்ந்து கொண்ட சூரியத் தொலைக்காட்சி பின்னர் நான்கு நாட்கள் கழித்து கடமைக்காக மாநாட்டுச் செய்தியை ஒளிபரப்பியது.
தவ்ஹீதுக்குக் கிடைத்த தனி மரியாதை
காவிரிக்குத் தடையாக கர்நாடகா இருப்பது போல் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாட்டுக்குத் தடையாக நின்றது பழைய சகாக்களின் முகாம்கள். ஒரு பக்கம் இட ஒதுக்கீடு கேட்டு தனது கூட்டத்தில் தீர்மானம் போட்டு விட்டு, மறு பக்கம் இட ஒதுக்கீடு கேட்பது அல்லாஹ்விடம் தான் என்று சந்தர்ப்பவாதம் பேசும் ஜாக் பரிவாரங்கள் இவர்களுக்குத் துணை நின்றனர்.
இவர்கள் நடத்திய இந்தக் கபட நாடகக் கதவுகளை உடைத்துக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரிலேயே மக்கள் காவிரி வெள்ளமாய் பெருக்கெடுத்தனர். இதில்..
தப்லீக் ஜமாஅத்தினர்
தர்ஹா வழிபாட்டினர்
தரீகா பக்தர்கள்
மத்ஹபுவாதிகள்
என்று இவர்கள் தரம் பிரித்து, இனம் காட்டி, தடை செய்த முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துக் கொண்டு தான் இந்த மக்கள் கூடினர். தவ்ஹீத் ஜமாஅத் என்ற தனிப் பெயரில் தான் கூடினர்.
கடந்த காலத்தில் தஞ்சைப் பேரணி இவர்களிடம் நஞ்சைப் பாய்ச்சியதற்குக் காரணம் அங்கு கூடிய மக்கள் கூட்டம் தான். அந்த மக்களைத் தக்க வைக்க அவர்கள் கண்டு பிடித்தத் தகுந்த வழியும், உபாயமும் "தவ்ஹீது' என்ற வாடை அந்தக் கூடாரத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.
தவ்ஹீதின் நிழலையே தங்கள் மீது படிய விடக் கூடாது என்று முடிவெடுத்தனர்.
அதன் விளைவாக தவ்ஹீது வாதிகளை, இவர்கள் ஏறிச் சென்ற தடந்தோள்களை வெளியே தள்ளினர்; விரட்டியடித்தனர்.
நன்றாக நினைவில் இருக்கின்றது. அந்த அரக்க நிகழ்வுகள் அரங்கேறிய காலம், ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவைத் தரும் துல்ஹஜ் மாதம் தான். "ஏகத்துவத்தைப் பின்பற்றுவதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் போன்று இருக்க வேண்டும்'' என்று பி.ஜே. ஆற்றிய பெருநாள் உரையைத் தான் விவாதப் பொருளாக ஆக்கினர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அதே மாதத்தில் - ஏகத்துவத்தை அகத்திலும், முகத்திலும், பெயரில் கூட மறைக்காத உங்களுக்காக, அதை விடப் பன்மடங்கு மக்களைக் கூட்டிக் காட்டுகின்றேன் என்று தவ்ஹீது வாதிகளுக்கு ஒரு வெற்றியை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான்.
இவர்கள் அனைத்துப் படைகளும் சேர்ந்து தீட்டிய சதிகளை முறியடித்து, மாபெரும் மக்கள் சக்தியை, அல்லாஹ் தனக்குப் பிடித்தமான தவ்ஹீதின் பெயரிலேயே ஒன்று திரட்டி, இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கைக்குத் தனியொரு மரியாதையைக் கொடுத்திருக்கிறான்.
தஞ்சையில் அன்று கூடிய கூட்டம் முகவரியில்லாத இவர்களுக்காகவும், இவர்கள் போடும் இரட்டை வேடங்களுக்காகவும் அல்ல என்ற உண்மை இப்போது நிரூபணம் ஆகி விட்டது.
நாங்கள் தவ்ஹீதுக்காரர்கள் தான் என்பதைப் பெயரிலும், செயல் பாட்டிலும் மறைக்காமல், ஒளிவு மறைவின்றி மக்களிடம் வைத்த உண்மையை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படி ஏற்றுக் கொண்டு கும்பகோணத்தில் கூடிய அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் என நிறைவான மனதுடன் கூறிக் கொள்கிறோம்.
கழுத்து மாலைகளும் கண்ணீர் மாலைகளும்
மற்ற மாநாடுகளில் மேடையில் இருப்போருக்கு, கீழே இருப்போர் கழுத்துக்கு மலர் மாலைகளை, கைத்தறித் துண்டுகளைப் பரிசாக அளிப்பார்கள்.
இந்த உரிமை மீட்புப் பேரணி மாநாட்டில் மேடையில் உள்ள தலைவர்களும், முன்னால் உள்ள தொண்டர்களும் அல்லாஹ்வின் அருளை எண்ணி, கண்ணீர் மாலைகளை மாறி, மாறிப் பரிமாறிக் கொண்டனர். இக்கூட்டம் அல்லாஹ்வுக்கு மட்டுமே நன்றிகளைச் சமர்ப்பிக்கும் கூட்டம் என்பதை இந்தக் கண்ணீர் மழை எடுத்துக் காட்டியது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites