அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

திருக்குர்ஆன் கூறும் மலைகள் அதிசயம்


திருக்குர்ஆன் மலைகளைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அல்லாஹ்வே வானத்தி­ருந்து தண்ணீரை இறக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட கனிகளை வெளியாக்கினோம். மலைகளில் வெண்மையும், சிவப்பும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டதுமான பாதைகள் உள்ளன. கருப்பு நிறமுடையவைகளும் உள்ளன.
35 : 27
இப்படி மலைகளைப்பற்றி திருக்குர்ஆன் கூறினாலும் இன்னும் அதிசயத்தக்க வகையில் யாரும் அறிந்திரா வகையில் பல உண்மைகளை திருக்குர்ஆன் சொல்­க்காட்டுகிறது.
இதோ அந்த அதிசயம்
பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!266 திருக்குர்ஆன் 17 : 37.
இந்த வசனத்தின் விளக்கத்தை தற்கால அறிஞர் பீ. ஜே அவர்கள் சொல்வதைப் பார்ப்போம்.
விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்­த் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் நீண்ட மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது.
இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பலரும் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர்.
”நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை” என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
ஆரம்ப காலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான்.
”நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை”
மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படியெல்லாம் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பது தான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.
நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.
இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.
மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய நிலவுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
பூமியின்  குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையி­ருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (குறுக்களவு) 12,756 கி.மீ. ஆகும்.
இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென்னாப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ்வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.
உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்தி­ருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்தி­ருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை.
உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்தி­ருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டாலே காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை.
மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.
இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறை வேதம் என்பது நிரூபணமாகின்றது.
திருக்குர்ஆன் சொல்வது உண்மைப்படுத்தும் வண்ணமாக தமிழ் விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர் சுஜாதா என்பவராகும். இவர் தன்னுடைய ஏன்? எதற்கு? எப்படி? என்ற புத்தகத்தில் பாகம் 2 ல் பக்கம் ல் ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு இப்படி பதில் தருகிறார்.
வானத்தில் செல்வதைப் போல பூமியில் அத்தனை ஆழம் செல்ல முடியாது. இரண்டு காரணங்கள். பூமியின் மேற்பரப்பை கடந்தாலே 1 500 டிகிரிக்கு     சூடு எகிரிவிடும். கோலார் தங்சக்சுரங்கம் 8600 அடி வரை சென்றிருக்கிறார்கள். பூமியின் மையமான 6500 கிலோ மீட்டரை அனுக அனுக கீழே போக போக பயங்கரமாக சூடு அதிகரிக்கும். இதற்கு காரணம் உள்ளே ஏற்படும் கதிர்வீச்சும். பூமி சூரியனி­ருந்து பிறந்த பின் இன்னும் ஆறாமல் உள்ளுகுள் கனன்று கொண்டிருப்பதும்.
இந்த விஞ்ஞான உண்மையை இப்;போதைய விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சொல்கிறார்கள். விஞ்ஞானம் என்ற வார்த்தையே கேள்வி பட்டிருக்கமாட்டார்கள் அரபு சமுதாயம் அந்த அரபு சமுதாயத்தில் தோன்றிய முஹம்மத் ஸல் அவர்கள் சொல்கிறார்கள் என்றால் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நிருபிப்பது மட்டுமில்லாமல் திருக்குர்ஆன் இறைவனுடைய வேதம்தான் என்பதை நிருபணம் செய்கிறது
thanks : www.kadayanalluraqsha.com

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites