அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மறுமை நாள் வரும் போது முஸ்லிம்கள், யூதர்களை ஓட ஓட விரட்டுவார்களா ?

 "மறுமை நாள் வரும் போது முஸ்லிம்கள், யூதர்களை ஓட ஓட விரட்டுவார்கள். அப்போது அவர்கள் மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் போது அந்த மரம் எனக்குப் பின்னால் ஒரு யூதன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கூறும், ஒரு மரத்தைத் தவிர'' என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளதா?
ஜஃபர் சாதிக்
சிக்கல்
உலகம் அழியும் இறுதிக் காலத்தில் தஜ்ஜால் என்று மாபெரும் பொய்யன் ஒருவன் வருவான். அவன் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களை நரகத்தின் பால் அழைப்பான். அந்நேரத்தில் ஈஸா (அலை) அவர்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்து தஜ்ஜாலைக் கொல்வார்கள். அப்போது முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்கள் பின்னாலும் யூதர்கள் தஜ்ஜால் பின்னாலும் செல்லுவார்கள். போர் கடுமையாகி யூதர்கள் தப்பிக்க கல்லுக்கும் மரத்திற்கும் பின்னால் ஒளிந்து கொள்வார்கள். ஆனால் அந்த கல்லும் மரமும், "எனக்கு பின்னால் ஒரு யூதன் ஒளிந்துள்ளான், அவனைக் கொல்'' என்று கூறும்.
(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், "அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ்பின்உமர்(ரலி)
நூல்கள்: புகாரீ (2925, 2926, 3593), முஸ்லிம் (5200)
முஸ்லிமின் (5237) அறிவிப்பில் உஸ்பஹான் பகுதி யூதர்கள் 70 ஆயிரம் பேர் தஜ்ஜால் பின்னால் இருப்பார்கள் என்று இடம் பெற்று இருக்கிறது.
முஸ்லிமின் அறிவிப்பில், "மரத்திற்குப் பின்னாலும் யூதர்கள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அந்தக் கல் அல்லது மரம், "அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும். "கர்கத்' என்ற மரம் மட்டும் இவ்வாறு சொல்லாது'' என்று இடம் பெற்றுள்ளது.
முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடும் வரை மறுமை நாள் வராது. எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால், மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், அல்லது மரம் "முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும். "கர்கத்' என்ற மரத்தைத் தவிர. ஏனெனில் இது யூதர்களின் மரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ்பின்உமர்(ரலி)
நூல்: முஸ்லிம் (5200)
"கர்கத்' என்ற மரம் கடுமையான முற்களை உடையது என்று லிஸானுல் அரப் உட்பட பல அகராதி நூல்களில் கூறப்பட்டுள்ளது. இது பைத்துல் மக்திஸ் (ஜெரூஸலம்) பகுதியில் இருக்கிறது என்று இமாம் நவவீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites