அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக பேசாமல் இருப்பது குற்றமா ?

 நானும் ஒரு பெண்ணும் பள்ளிப் பருவத்திலிருந்தே தோழிகளாக இருந்தோம். சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் எங்களுக்கிடையே சண்டை வந்து கொண்டிருந்தது. அதனால் நான் அவளுடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். நான் பேசவில்லை என்பதால் அவளும் என்னுடன் பேசவில்லை. நான் பேசாமல் இருப்பதால் அல்லாஹ் என்னைத் தண்டிப்பானா?
பவுஜியா, திருச்சி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்.  எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப் பட்டதன்று!
அறிவிப்பவர்: அனஸ் பின்  மாலிக் (ரலி),  நூல்: புகாரி 6065
இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்காகப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் இறைக் கட்டளைக்கு மாற்றமாக நடக்கிறார் என்பதற்காக ஒருவருடன் பேசாமல் இருப்பது இதில் அடங்காது.
உதாரணமாக வரதட்சணைத் திருமணத்திற்கு நண்பர் அழைக்கும் போது நாம் மறுத்து விடுகிறோம். அல்லது மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஒருவர் ஈடுபடுகின்றார் என்பதற்காக அவருடன் பகைத்துக் கொள்கிறோம் என்றால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வுக்காக ஒருவரைப் பகைத்துக் கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"யார் அல்லாஹ்வுக்காக நேசித்தும், அல்லாஹ்வுக்காகக் கோபம் கொண்டும், அல்லாஹ்வுக் காகக் கொடுத்தும், அல்லாஹ்வுக்காக வெறுத்தும் வருகிறாரோ அவர் பூரணமான ஈமானை அடைந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் 4061

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites