அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

உளூச் செய்து விட்டு சினிமா பாடல்கள் படித்தால் உளூ முறிந்து விடுமா ?

 என் நண்பர் ஒருவர் உளூச் செய்து விட்டு, சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்டு விட்டு மீண்டும் உளூச் செய்யாமல் தொழுகின்றார். கேட்டால் இதற்குத் தடையில்லை என்று கூறுகின்றார். இப்படிச் செய்தால் உளூ கூடுமா?

சினிமாப் பாடல்களைக் கேட்பது தவறு என்பதில் சந்தேகமில்லை. உளூவுடனோ, உளூ இல்லாமலோ எந்த நிலையிலும் சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்பது பாவம் தான்.
ஆனால் அதே சமயம் அதனால் உளூ முறியும் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.
மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், காற்றுப் பிரிதல், தூக்கம், மதீ வெளிப்படுதல் என உளூவை முறிக்கும் காரியங்கள் என்னென்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒரு தீமையைச் செய்தால் உளூ நீங்கி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites