அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

ரப்பு என்ற வார்த்தையை முதலாளியை அழைக்கும் போது சொல்லலாமா ?

 அரபு நாடுகளில்  முதலாளிகளை அர்பாப் என்று அழைக்கின்றார்கள்.  3:64 வசனத்தில் அர்பாப் என்ற சொல்லை இறைவனுக்குப் பயன்படுத்துகின்றான். எனவே மனிதர்களை அர்பாப் என்று அழைக்கலாமா?
கதீஜா ஜெஸ்மின், துபை
அர்பாப் என்பது ரப் என்பதன் பன்மையாகும்.
ரப் என்ற வார்த்தைக்கு பரிபாலிப்பவன், எஜமானன், தலைவன் என்று பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
ரப் என்ற வார்த்தையை அல்லாஹ் தனக்குப் பயன்படுத்தியிருப்பது போலவே மனிதர்களுக்கும் பயன்படுத்தியுள்ளான்.
என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப் படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 12:41)
இந்த வசனத்தில் எஜமானனுக்கு என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் ரப் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலாளிகளை அர்பாப் என்று அழைப்பதில் தவறில்லை.
எனினும் அல்லாஹ்வின் பண்புகளைக் குறிப்பிடும் பெயர்களை மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கூற வேண்டும்.
உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. இதற்கு செவியுறுபவன் என்று பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் உள்ளது. எனவே மனிதனும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)
தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் ஸமீவுன் என்று அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது அவனது தகுதிக்குத் தக்க அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன். எவ்வளவு தொலைவிலிருந்து அழைத்தாலும் கேட்பவன். அதாவது அனைத்தையும் செவியுறுபவன் என்று இதனைக் கூறலாம்.
ஆனால் மனிதனைச் செவியுறுபவன் என்று கூறும் போது, இந்தக் கருத்தில் விளங்கக் கூடாது. ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பேசுவதைக் கேட்டு விளங்கிக் கொள்ள மனிதனால் முடியாது. எனவே மனிதனுக்குத் தக்க பொருளில் விளங்க வேண்டும்.
அது போன்றே ரப் என்ற வார்த்தையை இறைவனுக்குப் பயன்படுத்தும் போது, அனைத்தையும் பரிபாலிப்பவன், அகிலங்கள் அனைத்திற்கும் எஜமானன் என்ற கருத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ரப் என்ற வார்த்தையை மனிதனுக்குப் பயன்படுத்தும் போது, சாதாரண எஜமானன், முதலாளி என்ற கருத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites