அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

வரதட்சனைத் திருமணத்தில் கஷ்க்காமல் இருப்பதினால் உறவினர்களைத் துண்டித்ததாக ஆப்ôதா?

? வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது. வரதட்சணை வாங்குவது குற்றம் என்று தடுத்தும் மீறி செய்கின்றார்கள். அதே சமயம் நம் உறவினர்களையும் ஒட்டி வாழ வேண்டும். நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தால் நாம் உறவைத் துண்டித்ததாக ஆகாதா? விளக்கவும்.
ஆரிஃப்
புதுக்கோட்டை
உறவினர்களை ஆதரிப்பதாக இருந்தாலும், வேறு எந்த நன்மையான காரியமாக இருந்தாலும் ஒரு தீமையின் மூலம் தான் அதை நிறைவேற்ற முடியும் என்றால் அதை இஸ்லாம் அங்கீகரிக்காது.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
பாவமான காரியத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் தடை செய்து விட்டான். வரதட்சணை என்ற பெரும் பாவத்தைச் செய்பவர் உறவினர் என்பதால் அந்தத் திருமணத்தில் போய் கலந்து கொண்டு அந்தத் தீமையை அங்கீகரிக்க முடியாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தும் மீறி அந்தக் காரியத்தைச் செய்கின்றார்கள் என்றால் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி விட வேண்டும் என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70
இந்த ஹதீஸின் அடிப்படையில் தீமையைக் கண்டால் அதைத் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் அதை விட்டு விலகி ஒதுங்கி இருப்பது தான் ஈமானின் இறுதி நிலை.
நெருங்கிய உறவினராக இருந்தாலும், பெற்ற தாய், தந்தையராக இருந்தாலும் இது தான் நிலை.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, நபியவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச் சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, "எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 5256
நபி (ஸல்) அவர்கள் தனது மகளார் வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற போது, அங்கு உருவம் வரையப்பட்ட திரையைக் கண்டு திரும்பி விடுகின்றார்கள். எனவே நெருங்கிய உறவினராக இருந்தாலும் தீமை என்று வந்து விட்டால் அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites