அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இங்கு கூறுகின்றார்கள்.

எனது சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்களைப் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 887
ஒவ்வொரு தொழுகையின் போதும், அதாவது ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து வேளையாவது தமது சமுதாயத்தினர் பல் துலக்க வேண்டும் என்பது அவர்களது ஆர்வம்; அவா!
இப்படி எந்த ஒரு தலைவரேனும் தம் சமுதாயத்திற்கு, பல் துலக்கலைப் பற்றிப் பாடம் நடத்தியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அப்படி நடத்த வேண்டிய அவசியமும் இல்லை! ஆனால் இந்தத் தலைவர் மட்டும் இப்படிப் பாடம் நடத்துகிறார்களே! அது ஏன்?
அவர்கள் இயற்கை மார்க்கத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர். அதனால் பால் நிறப் பற்களை சரியாகப் பராமரிக்கச் சொல்கிறார்கள்.
இன்று அறிவியல் சொல்கிறது: மனிதன் ஒரு நாளைக்கு, காலையில் எழுந்ததும், இரவில் படுக்கும் போதும், சாப்பிட்ட பிறகும் பல் துலக்க வேண்டும். ஏனெனில் மனிதன் சாப்பிட்ட உணவின் துகள்கள், குறிப்பாக இனிப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் பற்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றிலிருந்து சில பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகள் வாழத் துவங்கி விடுகின்றன.
வாய்க்குள் ஆக்ஸிஜன் கிடைக்காத போது அவை அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம், பல் எனாமலில் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸைக் கரைத்து விடுகின்றது. இதற்கு உங்ம்ண்ய்ங்ழ்ஹப்ண்ள்ஹற்ண்ர்ய் - கனிமச் சத்து அரிமானம் என்று பெயர். இது தான் பற்சிதைவுக்கு வழிவகுக்கின்றது.
நாவில் ஓடும் உமிழ் நீர் இதை ஓரளவுக்குச் சரி செய்கிறது. ஆனால் அதே சமயம் பாக்டீரியாக்கள் கொத்தாக பற்களில் படிமானத்தை ஏற்படுத்தி விட்டால் இந்த உமிழ் நீர் அதற்குள் ஊடுறுவ முடியாது. அப்போது பல்லைச் சிதைத்து வலியை ஏற்படுத்தும். அத்துடன் நிற்பதில்லை. நேரடியாக மூளையைப் பாதித்து விடுகின்றது. மனிதன் மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.
இது பற்கள் மூலம் ஏற்படும் அதிகப்பட்ச பாதகம்! வாய் துர்நாற்றம்
பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களில் குடித்தனம் நடத்தும் நுண்ணுயிரிகள் தான் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்மிடம் பேசுவோர் முகத்தைத் திருப்பிக் கொள்ள நேரிடுகிறது.
அது மட்டுமின்றி ஈறுகள் தொற்று நோய்க்குள்ளாகி இரத்தம் கசியவும், சீழ் வழியவும் ஆரம்பித்து விடுகிறது. இந்நோய்க்கு பயோரிய்யா என்று பெயர். இது பற்களால் ஏற்படும் குறைந்த பட்ச பாதகமாகும்.
இதனால் தான் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதில் இவ்வளவு கவனம் எடுத்துள்ளார்கள். தமது சமுதாயத்தையும் இதில் கவனம் எடுக்கச் சொல்கிறார்கள்.

பொருளாதாரம்
நாம் வாழ்கின்ற பூமியில் மேடு பள்ளங்கள் இருப்பது போலவே மனித வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. ஆம்! ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வு இயற்கையானது. மனித இனத்தின் செயல்பாட்டுக்காக இறைவன் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறான். இதை எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறுகின்றான்.
உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கையை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.
அல்குர்ஆன் 43:32
செத்துப் போன
செங்கொடி சித்தாந்தம்
இப்படி ஓர் ஏற்றத்தாழ்வு இல்லையெனில் மனித வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். இந்த இயற்கை நியதிக்கு எதிராகக் கிளம்பியது தான் செங்கொடி சித்தாந்தம், அதாவது கம்யூனிஸக் கொள்கை!
கிறித்தவர்கள் தங்களுடைய வேதத்தில் கைவரிசை காட்டியதால் அது கலப்படத்திற்கு உள்ளானது. அந்தக் கலப்பட, கரை பட்ட வேதத்தை பாதிரிகள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றியதுடன் மக்களின் சொத்துக்களைச் சூறையாடினர்.
மதப் பாதிரிமார்கள் ஒரு பக்கம் மக்களைச் சுரண்டினர். மறு பக்கத்தில் பணக்காரர்கள் மக்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். இதில் நிலவும் சுரண்டலை ஒழிப்பதற்குப் பதிலாக, பணக்காரர்களை ஒழிக்கப் பாடுபட்டதால் கம்யூனிஸ சித்தாந்தம் பெரும் தோல்வியைத் தழுவியது. வெகு சீக்கிரத்திலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும் சாவைத் தழுவியது.
இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம். ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியவன் அந்த இயற்கை விதியின் நாயனான எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா? அதனால் தான் ஏழை, செல்வந்தர் இரு சாராருக்கும் மத்தியில் ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துகிறான். இதன் மூலம் சுரண்டலைத் தடுக்கிறான். மூன்று விதமான வழிகளில் இவ்வாறு சுரண்டலைத் தடுக்கிறான்.
1. கட்டாய தர்மம் (ஜகாத்)
2. விரும்பி வழங்கும் தர்மம்
3. கடன் வழங்குதல்
"இஸ்லாமிய மார்க்கம் ஏழைகளின் மார்க்கம், அந்த ஏழைகளுக்கு எதுவுமில்லாமல் பணக்காரர்கள் மட்டும் பொருளாதாரத்தை அனுபவிக்க நினைத்தால் அந்தப் பொருளாதாரத்தை இறைவன் அழித்து விடுவான்' என்று திருக்குர்ஆன் அருளப்படத் துவங்கிய, ஆரம்ப காலத்திலேயே மக்களின் உள்ளங்களில் பதியச் செய்து விடுகின்றது.
தோட்டத்தைத் துடைத்தெடுத்த சோதனை
அந்தத் தோட்டத்துக்குரியோரை சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். "காலையில் அதை அறுவடை செய்வோம்'' என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.
இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.
எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.
அது காரிருள் போல் ஆனது.
"நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்'' என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரை ஒருவர் அழைக்கலானார்கள்.
தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள்.
அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தை கண்ட போது நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம் என்றனர்.
இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.
அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் "நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?'' என்று கேட்டார்.
"எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' என்றனர்.
அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.
"எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!'' என்றனர்.
"இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்'' (என்றும் கூறினர்.)
இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் 68:17-33
ஒரு குருணை அளவு கூட ஏழைகளுக்குப் போய் விடக் கூடாது என்று குறியாக இருந்த அவர்களது விளைச்சலை ஒரு நொடியில் ஓய்த்துக் கட்டி விடுகிறான்.
கஞ்சன் காரூன் வரலாறு
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).
"என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். "இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.
தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப் பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.
"உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.
அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.
"அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர் களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
அல்குர்ஆன் 28:76-83
ஏழைகளுக்குத் தர்மம் கொடுக்காதவர்களையும் அவர்களது சொத்துக்களையும் இந்தப் பூபாகத்தில் கூட வைத்திருக்க மாட்டேன் என்று பூமியில் புதையச் செய்து விடுகிறான்.
இவ்வாறு ஏழைகள் மீது அல்லாஹ் வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும், குர்ஆன் இறங்கிய ஆரம்ப கால கட்டத்திலேயே நன்கு உணர்த்தி விட்டான்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites